என் மலர்
மகாராஷ்டிரா
- திருமணம் ஆகாத இளஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி.
- முக்கிய போட்டியாளராக அம்மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதியில் உள்ள திருமணம் ஆகாத இளஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் ராஜேசாகேப் தேஷ்முக் அளித்த புது வகை வாக்குறுதி, கிராமப்புறங்களில் திருமண வயது ஆன ஆண்களுக்கு மணமகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேஷ்முக்கின் முக்கிய போட்டியாளராக அம்மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர் போட்டியிடுகிறார்.
பிரசாரத்தின் போது பேசிய சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜாசாகேப் தேஷ்முக், "நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், நான் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். நாங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம். திருமணம் செய்ய விரும்பும் ஆணுக்கு வேலை உள்ளதா, வியாபாரம் செய்கிறாரா என்று கேட்கின்றனர். அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கே வியாபாரம் இல்லையெனில், உங்களுக்கு என்ன கிடைத்துவிட போகிறது," என்று தெரிவித்தார்.
- மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம்.
- மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என்று பெயர்.
மகா விகாஸ் அகாடி தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியதாக குறிப்பிட்ட சரத் பவார், இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம். இன்று முதல் நான், கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த அதற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும். ராகுல் காந்தி சொல்வது போன்று நடந்தால் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
- உணவுப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மும்பை:
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் வருகிற 20-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா-பா.ஜ.க. துணை முதல்-மந்திரி அஜீத் பவாா் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற மகா யுதி கூட்டணிக்கும், எதிரணியான காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மும்பையில் காங்கிரஸ் கூட்டணியின் கூட்டு பிரசாரக் கூட்டம் நேற்று (புதன் கிழமை) நடைபெற்றது.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா், சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. 'மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநி லத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும்.
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவா்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டம் தொடங்கப்படும். கிருஷி சம்ருத்தி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும். மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
'நாட்டில் தற்போது நடைபெறும் அரசியல், பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கும் 'இந்தியா கூட்டணி' கட்சிகளுக்கும் இடையிலான போா்' என்று ராகுல் காந்தி பேசினாா்.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிரம் அனைத்து நிலையிலும் வீழ்ச்சிகண்டு விட்டது என்று சரத்பவாா் குற்றம்சாட்டினாா்.
மகாராஷ்டிரத்தில் சமையல் எண்ணெய், சா்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே உறுதியளித்தாா்.
மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு சாா்பில் பெண்களுக்கு ஏற்கெனவே மாதம் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதை ரூ.2,100-ஆக உயா்த்துவோம் என்று ஆளும் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவச கல்வி.
- அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே இன்று வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் மகா விகாஸ் அகாடியின் ஒட்டுமொத்த வாக்குறுதிகளின் ஒரு பகுதியாகும். ஆனால், சில கருத்துகள் சிறப்பு கவனம் பெறக்கூடியவை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவிகளுக்கு இலவச கல்வி பெறும் வசதி உள்ளது. மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாராவி மறுசீரமைப்பு திட்டம் கைவிடப்படும் போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட இருக்கிறது.
- சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.
- விசாரணையில், மிரட்டல் குறுந்தகவல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
மும்பை:
மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம் சல்மான்கானுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து நடிகர் சல்மான்கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவரிடம் ரூ.5 கோடி கேட்டு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், "சல்மான்கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் அவர் எங்களது பிஷ்னோய் சமுதாய கோவிலுக்கு சென்று பொதுமன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி தரவேண்டும். இதை செய்ய தவறினால், நாங்கள் அவரை கொலை செய்வோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி மும்பை ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மிரட்டல் குறுந்தகவல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹாவேரிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு வசித்து வந்த ஜல்ராம் பிஷ்னோய்(வயது35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் தான் மிரட்டல் விடுத்தது உறுதியானது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மும்பை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஜல்ராம் பிஷ்னோயின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்கு பிறகு மிரட்டல் பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- அன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய, மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இம்முறை ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பேசியதாவது:
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 அளிக்கப்படும். மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் .
விவசாயிகள் பயிர்க்கடன் ரூ.3 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். கடனை திருப்பிச் செலுத்தியர்களுக்கு ஊக்கத்தொகை 50,000 ரூபாய் வழங்கப்படும்.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க பாடுபடுவது.
ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை என தெரிவித்துள்ளார்.
- வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
- கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஆட்சியில் இல்லை. மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதா, இல்லையா என்பதை நான் ஆலோசிக்க வேண்டும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன்.
இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். எந்தத் தேர்தலிலும் நீங்கள் என்னை வீட்டுக்குப் போக விடவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். புதிய தலைமுறையை கொண்டுவர வேண்டும்.
நான் சமூக சேவையை விடவில்லை. எனக்கு அதிகாரம் வேண்டாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதை விடவில்லை என தெரிவித்தார்.
- சாதகமான தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியதால் தனித்து வேட்புமனு தாக்கல்.
- வேட்புமனுவை திரும்பப்பெற மறுப்பு தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு நடைபெற்றது. அப்போது மூன்று கட்சிகளில் உள்ள தலைவர்களில் சிலர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதியில் மனுதாக்கல் செய்தனர்.
இது கூட்டணி கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்தியது. என்றபோதிலும் இவைகள் அனைத்தும் பேசி தீர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறினர்.
கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவர்களுடைய கட்சியில் எதிர்த்து மனுதாக்கல் செய்த தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல தலைவர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற சம்மதித்தனர்.
ஆனால், சில எதிர்ப்பு தலைவர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். அப்படி திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த ஐந்து தலைவர்களை உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து விலக்கியளளார். பிவாண்டி கிழக்கு எம்.எல்.ஏ. ரூபேஷ் மத்ரே, விஷ்வாஸ் நந்தேகர், சந்திரகாந்த் குகுல், சஞ்சய் அவாரி, பிரசாத் தாக்கரே ஆகிய தலைவர்களை நீக்கியுள்ளார்.
- இன்று காலை 2 மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 1,100-க்கு அதிக புள்ளிகள் சரிவு.
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது சரிவுக்கு முக்கிய காரணம்.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வர்த்தகம் ஆனதால் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் 7.37 லட்சம் கோடி ரூபாயை காலை 2 மணி நேரத்திற்குள் இழந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கியதில் நேர் தலைகீழாக இறங்கிய வண்ணமாகவே இருந்தது.
வெள்ளிக்கிழமை சிறப்பு வர்த்தகம் சென்செக்ஸ் 79724.12 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 79713.14 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இன்று காலை 11.26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 78.400.46 புள்ளிகளுடடன் வர்த்தகம் ஆகியது. சுமார் 1323.66 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
இதனைத் தொடர்ந்து 7.37 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்கள் தங்களுடைய பங்குகளை தடையின்றி விற்பனை செய்ததும், மெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அடுத்த வாரம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்க இருப்பது ஆகிய காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சன் ஃபார்மா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டைடன் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
அதேவேளையில் மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, ஹெ.சி.எல். டெக்னாலாஜிஸ் மற்றும் இந்தூஸ் இண்ட் பேங்க் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. வெளிநா்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 211.93 கோடி ரூபாய் அளவில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குகளை விற்றனர். அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்றுள்ளனர்.
- தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரைச் சார்ந்தது? சரத் பவரை சார்ந்தது.
- ஒருநாள், அஜித் பவார் வந்தார். அவர் சரத்பவாரை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவருடைய கடிகாரம் சின்னத்தை பறித்துக் கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து ஏக்நாத் ஷிண்டே அந்த கட்கியை தனக்காக்கி கொண்டார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல் சரத்பவாரின் தேசியவாத கட்சியை பிரித்தது மட்டுமல்லாமல் அந்த கட்சியை தனக்காக்கி கொண்டார் அஜித் பவார். கட்சி மற்றும் கட்சி சின்னம் கடிகாரம் இரண்டும் அவரது பக்கம் உள்ளது. ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக உள்ளார்.
இதனால் இரண்டு கட்சிகளிலும் கட்சியை பிரித்துச் சென்றவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு பிரிந்து சென்றவர்களும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த வகையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை-கல்வா தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து போட்டியிட்டு வருபவர் ஜிநே்திர அவாத், அஜித் பவார் கட்சியை பிக்பாக்கெட் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஜிதேந்திர அவாத் இது தொடர்பாக கூறும்போது "தேசியவாத காங்கிரஸ் கட்சி யாரைச் சார்ந்தது? சரத் பவரை சார்ந்தது. ஒருநாள், அஜித் பவார் வந்தார். அவர் சரத்பவாரை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவருடைய கடிகாரம் சின்னத்தை பறித்துக் கொண்டார். இது பிக்பாக்கெட் கும்பல். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், தைரியம் உள்ளவராக இருந்தால், நீங்கள் வெறு சின்னத்தில் நின்று போட்டியிட்டிருக்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில் ஜிதேந்திர அவாத் விமர்சனத்திற்கு அஜித் பவார் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுராஜ் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார் "ஜிதேந்திர அவாத் மனநிலை தொடர்பாக பாதிப்பு அடைந்துள்ளார். அவருடைய தோல்வியை அவர் பார்கக் முடியும் என நினைக்கிறேன். அவருடைய சிகிச்சைக்கு நாங்கள் நிதி அளிக்க தயாராக இருக்கும். இதன் மூலம் அவர் விளம்பர தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
கடிகாரம் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இரு கட்சிகள் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடிகாரம் சின்னத்தை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
- நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தீபாவளி அன்று அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நடந்துள்ளது.
தீபாவளி அன்று மக்கள் இரவில் சாலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்தனர். அப்போது, 35 வயதான சோஹம் படேல் என்பவர் சாலையின் நடுவில் பட்டாசுகளை வைத்து கொளுத்த முயன்றார்.
அப்போது திடீரென வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில், அந்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் வீடியோ வெளியாகியுள்ளது. பட்டேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காண இந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்றது.
- நியூசிலாந்து 3 போட்டிகளிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.
மும்பை:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 3-வது நாள் முடிவதற்குள் இந்தப் போட்டியில் நியூசிலாந்து 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆட்டநாயகன் விருது அஜாஸ் படேலுக்கும், தொடர் நாயகன் விருது வில் யங்குக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை நியூசிலாந்து படைத்தது.






