என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம்.
    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்த பேக், ராகுல் காந்தியின் உடைமைகளை சோதனையிட்டனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் யசோமதி தாகூர் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராகுல் காந்தி பேக்கை சோதனையிடும் அதிகாரிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரின் பேக்குகளை சோதனை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு முன்னதாக உத்தவ் தாக்கரே பேக்கை சோதனையை செய்தபோது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் பேக்குகளை ஏன் சோதனை செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

    பின்னர் ஏக்நாத் ஷிண்டு, பட்நாவிஸ், அஜித் பவார் போன்றோரின் பேக்குகளும் சோதனை செய்யப்படுவது போன்ற வீடியோ வெளியானது.

    • பொது வெளியில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக அவர்கள் பேசி வருகிறார்கள்.
    • அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவ்போது பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மகாராஷ்டிராவை பற்றி நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த நிலத்தில் சத்ரபதி சிவாஜி இழிவுப்படுத்தப்படுகிறார். மக்களாக நீங்கள் இழிவுப்படுத்தப்படுகிறீர்கள். பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் சிவாஜி பெயரை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அவருக்கு மரியாதை கொடுப்பது இல்லை.

    பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்த சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்டது. சிந்துதுர்க் பகுதியில் நிறுவப்பட்ட சிலை இடிந்து விழுந்தது. பழம்பெரும் மன்னர் பெயரை எடுத்துக்கொண்டு அந்த நபரை இழிவுபடுத்த வேண்டுமானால் என்ன பயன்.

    பொது வெளியில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக அவர்கள் பேசி வருகிறார்கள். மணிப்பூரில் இருந்து மும்பைக்கு நியாய யாத்திரை மேற்கொண்டவர், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று அவரைப் பற்றி சொல்கிறீர்கள்.

    ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நீதி கேட்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்காகவும் பயணம் செய்தார் என்று தெரிந்தும் பொது மேடைகளில் இருந்து பொய் சொல்கிறார்கள்.

    அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
    • 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கின்றனர்.

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் உள்ள பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

    அமராவதி பிரசாரத்தில் பேசிய ராகுல், அதானியின் தாராவி திட்டத்திற்காக கடந்த 2022 இல் மகாராஷ்டிர அரசையே பாஜக கவிழ்த்தது. மோடியும் அமித் ஷாவும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கிறனர்.

     

    இதனாலேயே மகாராஷ்டிர அரசு மக்களாகிய உங்களின் கைகளில் இருந்து பாஜகவால் பறிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிர அரசை திருடிய பாஜக அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக கூறிவது எப்படி.

    எனது சகோதரி [பிரியங்கா காந்தி] சமீபத்தில் தான் மோடி பேசியதை கேட்டது பற்றி கூறிக்கொண்டிருந்தார். தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார். எனக்கு தெரியவில்லை, ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கலாம்.

    அமெரிக்க முன்னாள் அதிபருக்கு தனக்கு பின்னல் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டுமாம், உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் [ஜோ பைடன்] அறிமுகப்படுத்தினார். அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதே போல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று ராகுல் விமர்சித்தார்.

    • வார்தா நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
    • இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களின் சம்மதத்துடன் கணவன் ஈடுபடும் பாலியல் உறவும் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த 2018 திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியின் சம்மதத்துடன் பல முறை பாலியல் உறவு வைத்து கொண்ட நபர் வீட்டில் வைத்து மாலை மாற்றி திருமணம் முடித்ததாக அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். கர்ப்பமான அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதைக் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் மீது வழிக்குத் தொடர்ந்தார்.

    இதன்படி அவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கின் கீழ் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வார்தா மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி கோவிந்த் சனாப் முன் கடந்த நவம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரின் வக்கீல் பெண் சம்மதித்தே இருவருக்கும் உறவு இருந்ததாக வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி கோவிந்த், பெண்ணின் சம்மதமோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி இருப்பதாலும் நடந்தது பலாத்காரம் அல்ல என்றாகிவிடாது.

    அவர்கள் இடையில் நடந்தது திருமணம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு வைப்பது வன்கொடுமை என்றே கருதப்படும் என்று 10 வருட சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

    • அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.
    • பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பச் சட்டத்தை படித்திருக்க மாட்டார். அதனால் அவருக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது.

    அரசியலமைப்புப் புத்தகம் வெறுமையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகால சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இந்தியாவின் ஆன்மாவும், பிர்சா முண்டா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் முன்வைத்த கொள்கைகளும் அடங்கியுள்ளன.

    இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியாது. அதனால்தான் இதனை வெற்றுப் புத்தகம் என்கிறார்.

    ராகுல் சிவப்பு புத்தகத்தைக் காண்பிப்பதாக மோடி பேசுகிறார். இது எந்த வண்ணத்தில் உள்ளது என்பது முக்கியமல்ல. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

    மணிப்பூர் மாநிலம் ஒரு ஆண்டுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.

    பழங்குடியினரை ஆதிவாசிகளுக்குப் பதிலாக வனவாசிகள் என்று குறிப்பிட்டு அவமதிக்கிறார்கள்.

    காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.3,000 மாதாந்திர நிதி உதவி, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.
    • அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தலில் ஒருபுறம் சம்பாஜி மகாராஜை நம்பும் தேசபக்தர்களும், மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் உள்ளனர்.

    மஹாயுதி அரசாங்கம் இந்த நகரத்துக்கு சத்ரபதி சாம்பாஜி நகர் என்று பெயரிட்டது. உங்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றினோம், பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றினோம்.

    மஹாயுதி அரசு உருவான பிறகு அதிகபட்ச அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலீட்டால் மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அல்லாமல், பிரிவினையையே நம்பியுள்ளது.

    தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் முன்னோக்கிச் செல்வதை காங்கிரஸ் தடுக்கிறது. அதனாலேயே காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது.

    காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) வெளிநாடுகளுக்குச் சென்று இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்.

    இதற்காக, தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தை சிறு சிறு சாதிகளாகப் பிரிக்க சதி செய்கின்றனர்.

    ஓபிசியை சாதி ரீதியாகப் பிரித்துவிட்டால் அதன் பலம் குறையும். அது நிகழ்ந்தால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என அக்கட்சி கருதுகிறது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை நிறுத்திவிடும். எனவே, அதற்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மும்பை தாராவி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஜோதி கெய்க்வாட் ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.


    மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையின் போது தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார்.

    • அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    • அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 20-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் சுமார் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 1.85 கோடி இளம் வாக்காளர்கள் (வயது 18-29) உள்ளனர். இதில் 20.93 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (வயது 18-19) ஆவார்கள். அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரபல தேநீர் கடைக்காரரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான டோலி சாய்வாலா எனும் சுனில் பாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
    • விமான தொழில்நுட்ப பணியாளர்கள், வெடி குண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

    ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.

    இவை அனைத்தும் புரளி என்பதால் விமான நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து இன்று காலை 187 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இண்டிகோ விமானம் கொல்கத்தா புறப்பட்டது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து அந்த விமானம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காலை 9 மணியளவில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

    பயணிகள் அனைவரும் இறக்கிய பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டது. விமான தொழில்நுட்ப பணியாளர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    • மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இது தொடர்பாக மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று உறுதி செய்தது. இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு தாய் போன்றவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது மாமியாரிடம் மருமகன் சண்டை போட்டுள்ளார். பின்னர் மருமகனின் வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டிற்கு மாமியார் சென்றுள்ளார்.

    அந்த சமயத்தில் மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது மகளிடம் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த வழக்கை 2018 டிசம்பரில் விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தனது 55 வயது மாமியாரை பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 2022 மார்ச் மாதம் குற்றவாளி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    மேல்முறையீடு மனுவின் விசாரணையில், "தனது மாமியாருடன் நடந்த உடலுறவு சம்மதத்துடன் நடந்த உறவு என்றும் அது பலாத்காரம் இல்லை" என்றும் குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 55 வயதான அப்பெண் போலியான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஒருவேளை பரஸ்பர சம்மதத்துடன் இந்த சம்பவம் நடந்திருந்தால் அதை தனது மகளிடம் அவர் சொல்லியிருக்க மாட்டார், போலீசிலும் புகார் அளித்திருக்க மாட்டார் என்று தெரிவித்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.

    • 40 வயதான பெண் ஒருவர் 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கியுள்ளார்.
    • இதனையடுத்து அப்பெண் டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 40 வயதான பெண் ஒருவர் பல் துலக்கும்போது எதிர்பாராத விதமாக 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கியுள்ளார்.

    இதனையடுத்து அப்பெண் டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அப்பெண்ணின் வயிற்றில் எந்த காயமும் ஏற்படாமல் டூத் பிரஷை வெற்றிகரமாக அகற்றி அவரின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    உலகளவில் இதுவரை 30க்கும் குறைவான நபர்களே இவ்வாறு டூத் பிரஷை விழுங்கியுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது
    • சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ. 5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் பாடல் எழுதிய, 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியருக்கும் மிரட்டல் வந்தது. மேலும், கடந்த சில வாரங்களாக, மும்பை போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனுக்கு பல மிரட்டல் செய்திகள் வந்துள்ளன.

     

    அந்த நம்பரை டிரேஸ் அவுட் செய்த போலீசார் அது கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் நாராயண் என்பவரது நம்பர் என்று தெரிய வந்தது. ஆனால் அவரது போனில் இன்டர்நெட் வசதி இல்லை என்று தெரியவந்தது. அவரை விசாரித்ததில் மார்க்கெட்டில் வைத்து ஒருவருக்கு தனது போனை பயன்படுத்தக் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அவரது போனில் ஒடிபி ஒன்றும் கண்டறியப்பட்டது.

    விசாரித்ததில் சோஹைல் பாஷா என்ற நபர் அந்த நபரின் போனை வாங்கி அதில் ஓடிபி நம்பர் பெற்று அந்த நம்பர் மூலம் தனது போனில் வாட்சப் செயலி பதிவிறக்கம் செய்து இந்த மிரட்டலை விடுத்ததாக கண்டறியப்பட்டது. டிவிஸ்ட் என்னவென்றால் இந்த சோஹைல் பாஷாதான் 'மெயின் சிக்கந்தர் ஹூன்' பாடலின் பாடலாசிரியர் என்றும் என்றும் தனது பாடல் பிரபலமடைய வேண்டும் என்று விரும்பி சல்மான் கானுக்கும் தனுக்கு தானேயும் இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

     

    லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்த்து தொடர் மிரட்டல் வந்துகொண்டிருப்பதால் இதையும் அந்த கும்பலே விடுத்திருக்கும் என்று நம்பிவிடுவார்கள் என சோஹைல் நினைந்துள்ளார். ஆனால் தற்போது குட்டு வெளிப்பட்ட நிலையில் ராய்ச்சூரில் வைத்து அவரை கைது செய்த போலீஸ் மேற்கொண்டு விசாரணை நடந்த மும்பைக்கு அழைத்துச் சென்றது.

    லாரன்ஸ் பிஷனோய் - சாலமன் கான் பகை 

     சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்கின்போது கரும்புள்ளி [blackbuck] மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தினர் பிளாக்பக் மான்களை புனித விலங்காக கருதுவதால் சல்மான் கான் அவற்றை வேட்டையாடியது அவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்தது.

    இந்நிலையில் இதற்காக லாரான்ஸ் பிஷ்னோய் என்ற பிரபல ரவுடியின் கும்பல் சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. அவரது வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் இறங்கிய அந்த கும்பல் சல்மானுக்கு நெருக்கமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் வைத்து சுட்டுக்கொலை செய்தது.

    மேலும் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் என மிரட்டல் விடுத்தது.எனவே சல்மான் கானுக்கு Y கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று வாட்ஸ் அப் செயலி மூலம் வந்தது. 

    ×