என் மலர்tooltip icon

    கேரளா

    • மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
    • இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    மேலும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

    மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நேற்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார். பகல் 12 முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடை பெற்றது.

    பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை முடிந்து இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறு கிறது.

    மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் அனும திக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மண்டல பூஜை காலத்தை போன்றே கடைபிடிக்கப்பட உள்ளது. மேலும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களையும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களையும் மெய்நிகர் வரிசை முறையில் அனும திக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.

    அந்த நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை.

    • மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்.
    • அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் ((91), இதய செயலிழப்பு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று இரவு காலமானார். மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர்.

    இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது கடந்த 1996-ம் ஆண்டு அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

    எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இதுவரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர்.
    • மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இநத ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    நேற்று முன்தினம் (23-ந்தேதி) வரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.46 லட்சம் அதிகமாகும்.

    இந்தநிலையில் மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    மண்டல பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்ய மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முறைப்படி இன்று 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இரண்டு நாட்களில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.

    மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணி விக்கப்படும். தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22-ந்தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.

    அந்த ஊர்வலம் இன்று பிற்பகலில் பம்பையை வந்தடைகிறது. அதனை கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்கிறார். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.

    மாலை 6.15 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஐயப்பன் தங்க அங்கியில் நாளை வரை பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பின்பு மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ஊர்வலம் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தங்க அங்கி ஊர்வலம் மாலை 5 மணிக்கு சரங்குத்தியை அடைந்ததும், பம்பையில் இருந்து மலையேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்பு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை நடைபெறும் தினத்திலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்பட உள்ளன.

    ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய புறப்பட்டார்.
    • கடந்த ஆண்டு பாருக்குட்டி தனது 100 வயதில் முதல்முறை சபரிமலை சென்று தரிசனம் செய்தார்.

    வயநாடு:

    வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதியை சேர்ந்தவர் பாருக்குட்டி (வயது 101). இவர் தனது பேரன், பேத்தி உள்ளிட்டோருடன் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய புறப்பட்டார்.

    முன்னதாக அவர் கோனேரி நாராயண குரு சண்முகா கோவிலில் நெய், தேங்காய் மூலம் இருமுடி கட்டினார். கடந்த ஆண்டு பாருக்குட்டி தனது 100 வயதில் முதல்முறை சபரிமலை சென்று தரிசனம் செய்தார். அப்போது வயது முதிர்வை கருத்தில் கொண்டு போலீசார், தேவசம்போர்டு அதிகாரிகள் கூட்டத்தில் சிக்கி விடாமல் தரிசனம் செய்ய வைத்தனர். இதனால் இந்தமுறை நான் சபரிமலை செல்ல விரும்புகிறேன் என்று பாருக்குட்டி தெரிவித்தார். அவர் சபரிமலை ஏறி கூட்டத்தில் நிற்காமல் தரிசனம் செய்ய போதுமான வசதிகளை செய்து கொடுக்க பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அந்த பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார்.
    • வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீப்போல பரவி வருகிறது.

    கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடந்தது. அப்போது சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்து வரும் 'புஷ்பா 2' பாடலுக்கு மாணவிகள் கூட்டம் ஒன்று துள்ளலாக ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதனிடையே அந்த பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை தலைவரான பார்வதி வேணு என்பவர் மாணவிகளின் நடனத்தை ரசித்து கொண்டிருந்தார். திடீரென அவர் தனது கையில் இருந்த பையை அருகே உள்ள நற்காலியில் வைத்துவிட்டு மாணவிகளுடன் சேர்ந்து நடனமாட தொடங்கினார்.

    ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அந்த பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். பச்சை நிற சேலையில் மாணவிகளே ஆச்சரியப்படும் வகையில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீப்போல பரவி வருகிறது.




    • கேரளாவிற்கு வெளியில் தோரியம் அடிப்படையிலான மின்சார உற்பத்தி நிலையம் அமைக்க கேரள கோரிக்கை
    • சீமேனி அணுமின் நிலையம் அமைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளது. இது மின்சார தட்டுப்பாட்டை தீர்க்கும்- மத்திய மந்திரி

    கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மின்சாரத்துறை மந்திரி கே. கிருஷ்ணன் குட்டி ஆகியோருடன் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் சந்தித்து பேசினார். அப்போது கேரள மாநிலத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான பரிந்துரையை முன்வைத்தார்.

    அணுமின் நிலையத்திற்கு 150 ஏக்கர் நிலையம் ஏற்பாடு செய்து தந்தால் இந்த திட்டம் முன்னோக்கி எடுத்து செல்லப்படும். சீமேனி மற்றும் அதிரபள்ளி ஆகிய இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    அப்போது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரயும், திருச்சூர் எம்.பி.யுமான சுரேஷ் குாபி, அதிரபள்ளி முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது எனத் தெரிவித்தார். இதனால் சீமேனி அணுமின் நிலையம் தொடங்குவதற்கு விருப்பமான இடமாக தேர்வு செய்யப்பட இருக்கிறது.

    தோரியம் அடிப்படையிலான மின்உற்பத்தி நிலையத்தை கேரளாவிற்கு வெளியில் நிறுவி, கேரளாவிற்கு குறிப்பிடத்தகுந்த மின்சாரம் வழங்க மத்திய அரசு உதவிட வேண்டும் என மத்திய மத்திரியிடம் கேரள மாநில மின்சாரத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

    NTPC Talcher plant-ல் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை 400 மெகாவாட் மின்சார வழங்க வேண்டும். தற்போதுள்ள விலையில் அடுத்த ஐந்தாண்டுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும்.

    NTPC Barh வழங்கும் 177 மெகாவாட் மின்சாரம் ஜூன் 2025 வரை நீட்டிக்கப்பட வேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் 400 மெகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். Rajasthan Atomic Power Station-ல் இருந்து முன்னுரிமை அடிப்படையில் 350 மெகாவாட் மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது கேரள அரசின் முக்கிய கோரிக்கை ஆகும்.

    நான்கு நீண்டகால மின் ஒப்பந்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் தலையிடுமாறும், மாநிலத்திற்கு 465 மெகாவாட் மின்சாரத்தை கூட்டாக உறுதி செய்வதற்கும் மத்திய மந்திரியிடம் கேரளா அரசு உறுதி வலியுறுத்தியுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மனோகர் கட்டார் உறுதி அளித்துள்ளார்.

    • மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.
    • இன்றுடன் கெடு முடிவடையும் நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள், கோழிக் கழிவுகள் இரு மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கேரள மாநிலத்தினர் கொட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

    இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நடக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 6 இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புகார் அளிக்க, தேசிய பசுமை தீர்பாயம் கழிவுகளை இன்னும் 3 நாட்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் கெடு இன்றுடன் முடிவடைகிறது.

    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இது தொடர்பாக விசாரண நடத்தியது.

    அப்போது மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வியைடந்து விட்டது. மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    பசுமை தீர்பாயத்தியன் உத்தரவை தொடர்ந்து கேரள அரசு கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவை அனுப்பியது. இந்த குழு ஆய்வு செய்த நிலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் அபாயகரமானது அல்ல எனத் தெரிவித்தது. இந்த குழு அரசிடம் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கலாம்.

    • மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
    • மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும் நிலையில், இரவில் மண்டல பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட உள்ளது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 25-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 26-ந்தேதி 60 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் புக்கிங்) மூலமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' இருக்காது என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த 2 நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' அப்படையில் 5 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மண்டல பூஜை முடிவுக்கு வர உள்ள நிலையில், மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ந்தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.

    இந்நிலையில் மகர விளக்கு பூஜை காலத்துக்கான மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முடிந்துவிட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று மகர விளக்கு பூஜையையொட்டி ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய 3 நாட்களும் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆனால் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மகரவிளக்கு பூஜை நெருங்கியதும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    சபரிமலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 21-ந்தேதி வரை மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சத்து 4 ஆயிரத்து 703 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரியங்கா காந்தியை தகுதிநீக்கம் செய்யக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த நவ்யா ஹரிதாஸ், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:

    பிரியங்கா காந்தி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவரது சொத்துகள் குறித்தும், குடும்ப சொத்துகள் குறித்தும் தவறான தகவல்களை வழங்கி உள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது, ஊழல் குற்றச்சாட்டுக்கு சமமானது.

    எனவே பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்துசெய்து, அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    கேரள ஐகோர்ட்டிற்கு இன்று முதல் ஜனவரி 5-ம் தேதி வரை விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சி, இது பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியல் என தெரிவித்துள்ளது.

    • தங்க ஆபரணங்கள் பத்தனம் திட்டா ஆரன்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.
    • விழா முடிந்ததும் அங்கி ருந்து ஆரன்முலா கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்படும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய இந்த தங்க ஆபரணங்கள் பத்தனம் திட்டா ஆரன்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.

    மண்டல பூஜைக்காக இங்கிருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சபரிமலை அய்யப்பனுக்கு அணி விக்கப்படும். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்து ஆரன்முலா கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்படும்.

    இந்த ஆண்டு மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணி விக்கப்பட வேண்டிய தங்க அங்கி மற்றும் நகைகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது.

    சபரிமலை கோவிலை போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேருக்கு தங்க ஆபரணங்கள் வந்ததும் ஊர்வலமாக தேர் புறப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் தங்க அங்கியை வழிபட்டனர்.

    இந்த ஊர்வலம் வரும் 3 நாட்களில் ஓமநல்லூர் ஸ்ரீரக்த கண்டசுவாமி கோவில், கொன்னி முரிங்கமங்கலம் ஸ்ரீ மகா தேவர் கோவில், ரன்னி-பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவில்களில் நிறுத்தப் பட்டு வழிபாடு நடத்தப்படும்.

    25-ந் தேதி நிலக்கல் ஸ்ரீசிவன் கோவில் மற்றும் பம்பை கணபதி கோவில்களில் தங்க அங்கி ஊர்வலத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு சன்னிதானம் சென்றடையும் தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் (26-ந் தேதி) மண்டல பூஜை வழிபாடு நடைபெறும். மறுநாள் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி நடை திறக்கப்படும்.

    • அருவி தடாகத்தில் அக்சா ரெஜி, டொனால் ஷாஜி ஆகியோர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் தாளவூரைச் சேர்ந்தவர் அக்சா ரெஜி (வயது 18), இவர் தொடுபுழா முட்டம் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இதே பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு கணிணி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் டொனால் ஷாஜி (22). இவர் இடுக்கி முறிக்காச்சேரியை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரையும் நேற்று காணாததால் சக மாணவ-மாணவிகள் தேடினர். அவர்களது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இடுக்கி அருவிக்குத்து அருவி அருகே அவர்களது செல்போன் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அருவி தடாகத்தில் அக்சா ரெஜி, டொனால் ஷாஜி ஆகியோர் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

    அவர்கள் அருவி தடாகத்தில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு புதிய நடைமுறைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமல்படுத்தியது.
    • மண்டல பூஜையில் பங்கேற்கவும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். அதுபோன்று நடக்காமல் இருக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமல்படுத்தியது.

    இதன் காரணமாக கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடை பெறுகிறது. அன்றையதினம் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதற்கு முன்னதாக நடைபெறக்கூடிய தங்க அங்கி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் மண்டல பூஜையில் பங்கேற்கவும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    இதனால் சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதனை தவிர்க்கும் விதமாக வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில், சபரிமலைக்கு குறைந்த அளவிலான பக்தர்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த இரு நாட்களும் ஸ்பாட் புக்கிங் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

    மேலும் மெய்நிகர் வரிசை மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. மண்டல பூஜைக்கு முந்தைய நாளான வருகிற 25-ந் தேதி 50 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை நடைபெறும் 26-ந்தேதி 60 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்த ஆண்டு சீசனில் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் புக்கிங்) மற்றும் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படும் திட்டம் அமலில் இருக்கிறது. அதே நேரத்தில் அதற்கு மேல் பக்தர்கள் வந்தாலும், 'ஸ்பாட் புக்கிங்' முறையில் அனுமதி வழங்கி சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த இரு தினங்களாக 'ஸ்பாட் புக்கிங்' மூலமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்றிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மண்டல பூஜை தினத்தில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    இதன் காரணமாக 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களும் 'ஸ்பாட் புக்கிங்' நிறுத்தப்படுகிறது. மண்டல பூஜை சீசன் 26-ந்தேதியுடன் முடிவடைவதால், ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ×