என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • காந்தார படத்தின் மூலமாக பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
    • ஜரந்தய தெய்வா கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது

    கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காந்தார படத்தின் மூலமாக கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.

    இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை ஆர்சிபி தக்க வைத்தது.
    • புதிய கேப்டன் யார் என்பதை ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று அறிவிக்கிறது.

    பெங்களூரு:

    10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.

    ஆர்சிபி அணியை கடந்த சில சீசன்களாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார். நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டூ பிளெசிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    இந்நிலையில், மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நிலவுகிறது.

    ரஜத் படிதார் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். பெங்களுரு அணி கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என வெளிப்படையாகவும் படிதார் பேசியிருக்கிறார்.

    ஆனால் பெங்களூரு அணியின் தேர்வாக விராட் கோலி இருக்கக் கூடும். அவர் இதற்கு சம்மதிக்க வேண்டும்.

    இன்று காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறது

    • பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானைகள் அதிகம் உள்ளது.
    • யானையின் முன் நின்று இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    தமிழ்நாடு - கர்நாடகா இடையே பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.

    இந்நிலையில், பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையின் முன் நின்று இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து, அமைதியாக இருந்த யானையை துன்புறுத்திய நபருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

    • ஜுமர் என்ற இளைஞர், சிறுமி ஒருவரை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.
    • சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    கர்நாடகாவில் பள்ளி செல்லும் சிறுமியை தொடர்ந்து பின்தொடர்ந்து துன்புறுத்திய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    மங்களூரு மாவட்டத்தில் ஜுமர் என்ற 24 வயது இளைஞர், சிறுமி ஒருவரை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் அச்சமடைந்த சிறுமி வகுப்புகளுக்கு செல்வதையே புறக்கணித்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜுமருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது.
    • திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது.

    பெரு நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பது குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகும். அதுபோன்று பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில், மிகச்சிறிய அளவு கொண்ட ஒரு அறையை காட்டுகிறார்.

    அந்த அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது. திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது. அந்த அளவுக்கு மிகச்சிறிய தீப்பெட்டி வடிவில் இருக்கும் இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ.25 ஆயிரம் என கூறுகிறார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வீட்டு வாடகை தொடர்பாக தங்களது கருத்தக்களை பதிவிட்டதால் அவரது இந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.



    • காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார்.

    பெங்களூருவை அடுத்த இந்திரா நகரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்குள் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் பெங்களூருவில் சீரியல் கில்லர் வலம் வருவதாக கூறப்பட்டது. கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், கத்திக்குத்து சம்பவங்களின் பின்னணியில் சீரியல் கில்லர் யாரும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவங்களில் ஒரு நபர் தான் ஈடுபாட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    துணை காவல் ஆணையர் தேவராஜா கடந்த 8-ம் தேதி நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் கொலை முயற்சி செய்த நபர் மதுபோதையில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ததாகவும், கோபத்தில் நான்கு பேரை கத்தியால் குத்தியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    இந்த சம்பவத்தை செய்தவர் மீது சிறு சிறு திருட்டு வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர். இந்திய சட்டங்கள் சீரியல் கில்லர்களுக்கென எந்த வரையறையும் குறிப்பிடவில்லை. பொதுப்படையில் ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்தால் அவரை சீரியல் கில்லர் என்று குறிப்பிடப்படுகிறது.

    பெங்களூரு கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தை கடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து இந்திராநகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • வீட்டு முன்பு கியாஸ் குழாயில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மக்கள் அனைவருமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

    உப்பள்ளி:

    கர்நாடகத்தில் உப்பள்ளி, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கியாஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உப்பள்ளி டவுனில் ராஜட்கிரி முதுல் கிராசில் உள்ள கியாஸ் குழாயில் திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

    இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கியாஸ் குழாய் வீட்டு முன்பாக செல்கிறது. இதனால் வீட்டு முன்பு கியாஸ் குழாயில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அலறியடித்தப்படி சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியேறினர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அனைவருமே தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே இதுபற்றி கியாஸ் வினியோக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கியாஸ் வினியோகத்தை நிறுத்தினர்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி உப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் ரசாயன நுரையை பயன்படுத்தி கியாஸ் குழாயில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

    இந்த தீவிபத்தால் சில வீடுகளின் முன்பு நின்ற மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. பின்னர் கியாஸ் வினியோக அதிகாரிகள், ஊழியர்கள் வந்து கசிவு ஏற்பட்ட இடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஆவது சர்வதேச விமான கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

    பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.

    இன்று பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய விமான கண்காட்சி பிப்ரவரி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.

    விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    விமான கண்காட்சியைக் காண பலரும் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் எப் 35, எஸ்யூ 35 போர் விமானங்களும் எஸ்யூ 57,எப் 16 விமானங்களும் வான்வெளி சாகசங்களில் ஈடுபட உள்ளன.

    • விமான கண்காட்சி தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
    • இன்று தொடங்கி வரும் 14-ம் தேதி வரை என 5 நாட்கள் இந்த விமான கண்காட்சி நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. 10-ம் தேதி தொடங்கும் விமான கண்காட்சி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது.

    விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்நிலையில், சர்வதேச விமான கண்காட்சியானது இன்று முதல் தொடங்க உள்ளது. விமான கண்காட்சியைக் காண பலரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
    • பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.

    அவர் தனது பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    வடிவேலு காமெடி ஒன்றில் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கணவன் தனது குடும்பத்தை பார்சலில் அனுப்பி வைப்பார். அதுபோல இந்த இளைஞர் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமானம் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு அருகில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் இங்கு வந்து செல்பவர்கள் பெங்களூரு விமான நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உலகின் பலநாடுகளுக்கும் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதையடுத்து ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்நாடக அரசும் பெங்களூருவில் 2-வதாக புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.

    பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 2033-ம் ஆண்டுக்குள் பயணிகள் வருகை 90 மில்லியனை எட்டும் என்று கணித்துள்ளதால் புதிய விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பெங்களூரு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நெலமங்களா, கனகபுரா பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • போலீசாரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர்.
    • விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை.

    கர்நாடக மாநில பெங்களூரு கோனனகுண்டே கனகபுரா ரோட்டில், ஆயத்த ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் புதர் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சென்ற கோனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இறந்து போன வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. வாலிபரின் பிணம் கிடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடைத்தது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.

    அப்போது பிணமாக கிடந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணமாக கிடந்த வாலிபரின் உருவப்படத்தை கோனனகுண்டே போலீசார், கேரளா போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். இதில் இறந்தவர் கேரளாவை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது தாயை கண்டுபிடித்த போலீசார், விஷ்ணு பிரசாத்தின் உடலை அடையாளம் காண வரும்படியும், உடலை பெற்றுச் செல்லும்படியும் கூறினர். ஆனால் தனது மகன் திருடன், அவன் நல்லொழுக்கம் இல்லாதவன், அவனது உடலை பார்க்க வர மாட்டேன் என அவரது தாய் கூறி பிடிவாதம் பிடித்துள்ளார். ஒரு வழியாக அவரை போலீசார் சமாதானப்படுத்தி பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவரும் மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்த உடலை பார்த்து, இது தனது மகன் விஷ்ணு பிரசாத் தான் என அடையாளம் காட்டினார்.

    ஆனால் அவரது உடலை சொந்த ஊரான கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அவர் மறுத்துவிட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் நல்லொழுக்கம் இல்லாமல் திருடி வந்த இவனது உடலை நான் சொந்த ஊர் எடுத்துச் செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக கூறி அங்கிருந்து தாய் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் போலீசாரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர். மேலும் விஷ்ணு பிரசாத்தின் பின்னணி பற்றி விசாரித்தனர். இதில் அவர் பிரபல திருடன் என்பதும், இவர் மீது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை. அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×