என் மலர்tooltip icon

    குஜராத்

    • நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர்.
    • கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2-ந்தேதி காலை அவர், தனது மனைவி மற்றும் சில தொழிலாளர்களுடன் விவசாய வேலைக்காக காலையிலேயே சென்று விட்டார். அவர்களை நிலத்தின் உரிமையாளரே அழைத்து சென்றார்.

    நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள், தொழிலாளியின் 4 குழந்தைகளும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.

    நீண்ட நேரம் பூட்டிய காருக்குள் இருந்த 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் நடந்த விபரீதம் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று. சிறிது நேரத்தில் குழந்தைகள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தொழிலாளி தனது குழந்தைகளை தேடியபோது அவர்கள் காருக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் கார் கதவை உடைத்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பலியான 4 குழந்தைகளும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    இந்த சம்பவம் குறித்து அம்ரேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குஜராத் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மெரில்(MERIL) கையொப்பமிட்டிருந்தது.
    • இதன்மூலம் இன்றியமையாத மருத்துவ சாதனங்களின் இறக்குமதியை கணிசமாக குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வாபி, குஜராத், இந்தியா- [29.10.2024] –மருத்துவதொழில்நுட்பதுறையில் (MEDTECH) உலகளவில் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாக இயங்கிவரும் மெரில் (MERIL)– ன் சாதனை பயணத்தில் இன்றைய தினம் ஒரு முக்கியமான மைல் கல் நிகழ்வாகும். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI), திட்டத்தின்கீழ், மெரில் (MERIL) நிறுவியிருக்கும் ஒரு மிக நவீன உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்.

    குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் பட்டேல், வாபியில்அமைந்துள்ள மெரில் (MERIL) நிறுவனத்தின் தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்ற இத்தொடக்கவிழா நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டார்.

    மருத்துவ சாதனங்களின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என புகழ்பெற்றிருக்கும் மெரில் (MERIL), மருத்துவ தொழில்நுட்பதுறையில் இந்நாட்டின் சிறப்பான சாத்தியத்திறனை வெளிப்படுத்தும் வகையில், தனது ஏற்றுமதியின் மூலம் உலகமெங்கும் இந்தியாவின் கால்தடத்தை வலுவாகப் பதித்திருக்கிறது.

    வெளிநாடுகளிலிருந்து மருத்துவ சாதனங்களின் இறக்குமதி மீது இந்தியாவின் சார்ந்திருப்பு நிலையை மெரில் (MERIL) தனது தயாரிப்பு செயல்பாட்டின் மூலம் தீவிரமாக குறைத்து வருகிறது. அத்துடன்சுயநிறைவுள்ளஇந்தியாஎன்றகுறிக்கோளுக்கும், செயல்திட்டத்திற்கும் வலுவான ஆதரவை வழங்கி வருகிறது.

    2024 துடிப்பான குஜராத் உச்சி மாநாட்டின்போது மருத்துவ சாதனங்கள் துறையில் ரூ.910 கோடி புதிய முதலீடுகள் செய்யப்படும் என்ற பொறுப்புறுதியை வழங்கி குஜராத் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மெரில்(MERIL) கையொப்பமிட்டிருந்தது.

    இன்றைய நாள் வரை 1400 கோடிக்கும் அதிகமான தொகையை மெரில் (MERIL)முதலீடு செய்திருப்பது, இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்பதுறையில் இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த மிகப்பெரிய முதலீடு தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த முதலீடானது, 5000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மற்றும் இதன்மூலம் இன்றியமையாத மருத்துவ சாதனங்களின் இறக்குமதியை கணிசமாக குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    "சுகாதார பராமரிப்பு துறையில் சுயசார்ப்பிற்கான இந்தியாவின் தொலைநோக்குதிட்டத்திற்கு இணக்கமானதாக, பிஎல்ஐ செயல் திட்டத்தின்கீழ், அங்கீகரிக்கப்பட்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய உற்பத்தி ஆலை, புதிய தொழில்நுட்பம் மற்றும் தரம் மீது மெரில் (MERIL) கொண்டிருக்கும் பொறுப்புறுதியை பிரதிபலிக்கிறது.

    இப்பொறுப்புறுதியே உலகமெங்கும் 150 நாடுகளில், மேம்பட்ட, நவீன சுகாதார பராமரிப்பு தீர்வுகளை நாங்கள் வழங்குவதை ஏதுவாக்கி வருகிறது. இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் 12 மெரில் (MERIL) அகாடமிகளை கொண்டிருக்கும் நாங்கள் உலகெங்கிலும் உள்ள சுகாதார பராமரிப்பு தொழில் முறை பணியாளர்கள் திறனதிகாரம் பெறுவதற்காக கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மீதும் சமஅளவிலான அர்ப்பணிப்புடன் நாங்கள் செயல்படுகிறோம்." என்று மெரில் (MERIL) நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கூறினார்.

    பிஎல்ஐ திட்டத்தின்கீழ், அமைப்பு ரீதியிலான இதய, இரத்தநாள இடையீட்டுசெயல்பாடுகள், எலும்பு முறிவியல் மற்றும் எண்டோசர்ஜரி ஆகிய பிரிவுகளில் மெரில் (MERIL) குழுமத்தின் நான்கு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உள்நாட்டிலேயே சுகாதாரதுறைக்கு மிக அத்தியாவசியமான சாதனங்கள் உற்பத்திக்கு இதன் மூலம் ஆதரவளித்து வருகின்றன.

    மெரில் (MERIL)குறித்து: 2007-ம் ஆண்டில், நிறுவப்பட்ட மெரில் (MERIL) நிறுவனம், இதய இரத்தநாளம், எலும்புமுறிவியல், எண்டோசர்ஜரி, அறுவை சிகிச்சைக்கான ரோபோட்டிக்ஸ் மற்றும் நோயறிதல் சாதனங்கள் என ஐந்து முக்கியமான பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

    10,000– க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் 150-க்கும் கூடுதலான நாடுகளில் செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மெரில் (MERIL), 31 நாடுகளில் நேரடியான துணை நிறுவனங்களை நிறுவியிருக்கிறது. 12 நாடுகளில் இயங்கிவரும் இதன் கல்விசார் பிரிவான மெரில் (MERIL) அகாடமி, சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நேரடி பயிற்சியினை வழங்கிவருகிறது.

    உலகளவில் சுகாதாரப் பராமரிப்பு செயல்பாடுகளை முன்னேற்றம் காணச்செய்வதில் மெரில் (MERIL) கொண்டிருக்கும் பொறுப்புறுதியை வலுப்படுத்துவதாக இந்த கல்விசார் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

    விவரங்களுக்கு: corpcomm@merillife.com

    • ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
    • அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்.

    இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள். இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நாடுகள் பிரிந்து செல்கின்றன, ஆனால் இந்தியாவை நெருங்கி வருகின்றன. இது சாதாரண விஷயமல்ல, புதிய வரலாறு எழுதப்படுகிறது. இந்தியா தனது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. எனவே நாம் நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்."

    "இந்தியாவின் எழுச்சியைப் பற்றி சில வக்கிர சக்திகள் கவலைப்படுகின்றன. இந்தியாவிற்குள்ளும், அதற்கு வெளியேயும் இத்தகையவர்கள் நிலையற்ற தன்மை மற்றும் அராஜகத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்."

    "இவர்களின் இலக்கு பெரும் சக்திகள் ஆகும், அவர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் சாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் சமூகத்தையும், ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்."

    "'ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா' என்ற அரசியல் அவர்களுக்குப் பொருந்துவதால், இந்தியா வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

    • இந்தியா- ஸ்பெயின் உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ். எல்) ஆலை அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த வளாகத்தில் ராணுவத் துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ. எஸ். எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும்.


    இந்திய பாதுகாப்பு படைகளுக்காக சி-295 ரக விமானங்களை தயாரிக்க உள்ள டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசும் இன்று காலை கூட்டாக திறந்து வைத்தனர். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

    எனது நண்பரும், ஸ்பெயின் பிரதமருமான பெட்ரோ சான்செஸ் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா- ஸ்பெயின் இடையேயான உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலையானது இந்தியா-ஸ்பெயின் இடையேயான உறவை வலுப்படுத்துவதுடன், 'இந்தியாவில் தயாரிப்பு' 'உலகத்துக்கான தயாரிப்பு' ஆகிய திட்டங்களை வலுப் படுத்தியுள்ளது.

    சமீபத்தில் நாட்டின் மிகச் சிறந்த மகனான ரத்தன் டாடாவை நாம் இழந்தோம். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால், அவரது ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

    நான் குஜராத் முதல்-மந்திரியாக இருக்கும்போது தொடங்கப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலை மூலம், இன்று வெளிநாடுகளுக்கு ரெயில்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அது போன்று இந்த ஆலையில் இருந்து எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யும் என்று நம்பிக்கை உள்ளது.

    நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி அமைப்பில், இந்தியா புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. 10 ஆண்டுகளுக்கு முன், உறுதியான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த உச்சத்தை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

    நாம் எடுத்த முடிவுகளுக்கான பலன் நம் கண்முன் இருக்கிறது. பொதுப் பணித்துறையை வலுப்படுத்த, பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்தோம்.

    உத்தரபிரதேசம், தமிழகத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாடங்கள், உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்து துறையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம். வருங்காலத்தில் இந்தியாவிலேயே பயணிகள் விமானங்களும் தயாரிக்கப்படும்.

    தற்போது, இந்திய விமான நிறுவனங்கள் 1,200 விமானங்கள் வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. விரைவில் இந்த ஆலை, இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக தேவை களையும் பூர்த்தி செய்யும் வகையில் முக்கியப் பங்காற்ற போகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசும்போது, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தில் இருந்து முதல் விமானம் 2026-ல் வெளிவர தயாராகும் என்றார்.

    முன்னதாக வதோரா வந்த மோடியும், பெட்ரோ சான்செசும் வாகன பேரணியில் பங்கேற்றனர். அவர்களுக்கு மக்கள் சாலையின் இருபுறமும் கூடி வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிற்பகல் அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

    • பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.
    • ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும்.

    குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ்.எல்) வளாகத்தை மோடி- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ.எஸ்.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கும்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி லட்சுமி விலாஸ் அரண்மனையை பார்வையிட்டார். மதியம் 2.45 மணிக்கு அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த ராணுவ விமான ஆலை மூலம், விமானப்படைக்குத் தேவையான 'சி-295' ரக போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன.

    • சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது.
    • ராணுவ விமானத்தை தயாரிக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (28-ந்தேதி) குஜராத் செல்கிறார். காலை 10 மணிக்கு வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டி.ஏ.எஸ்.எல்) வளாகத்தை மோடி-ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.

    இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டி.ஏ.எஸ்.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

    ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கும்.

    11 மணிக்கு அங்குள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். மதியம் 2.45 மணிக்கு அம்ரேலிக்கு செல்லும் அவர் பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்கிறார்.

    இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    • 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்
    • தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார்

    குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை, போலி அரசு அலுவலகங்கள் அமைத்து நடத்தப்பட்ட மோசடிகள் அம்பலமாகின. இந்நிலையில் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் போலி நீதிமன்றம் நடத்தப்பட்டு குஜராத்தில் மோசடி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    குஜராத் காந்திநகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்ற 37 வயது நபர் கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு தீர்ப்பாயத்தின் நீதிபதி போலக் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிய இவர் நிலத்தகராறு பிரச்னைகளுக்கு ஒரு பக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

     

    சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் சாமுவேல், இருதரப்பு மனுதாரர்களையும் தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சனையைத் தீர்க்க அரசு தன்னை நியமித்துள்ளதாகக் கூறுவார். அவர்களை காந்திநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைப்பார்.

    இந்த அலுவலகத்தை நீதிமன்றம் போன்று செட் அப் செய்துள்ள அவர், மனுதாரர்களை விசாரணை செய்வதுபோல் பாவலா செய்து தனக்கு யார் பணம் கொடுத்தாரோ அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவார். சாமுவேலின் கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் நடிப்பார்கள். இதை உண்மையான நீதிமன்றம் என்று நம்பி பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

    பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அவரிடம் பணம் பெற்ற சாமுவேல் இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதாவது, தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார். ஆனால் அந்த உத்தரவு போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். 

    • மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
    • ஒவ்வொருவராக போன் நம்பரை கேட்டு OTP நம்பரை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்துள்ளனர்.

    இந்தியா முழுவதும் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்கோடு பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் உ.பி.யில் 2 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாக பாஜக கணக்கு காட்டியது. ஆனால் இது மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

    அதிக உறுப்பிடர்களை சேர்க்க கட்சி மேலுடம் அழுத்தம் கொடுப்பதாலும், எந்த பகுதியில் அதிகம் உறுபினர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற போட்டியும் கட்சிக்குள் உள்ளது. அந்த வகையில் குஜராத்தில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ரன்சோதாஸ் பாபு டிரஸ்ட் கண் மருத்துவமனையில் நடு இரவில் புகுந்த பாஜகவினர் அங்கு கேடராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்து  படுத்து தூக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரையும் எழுப்பி அவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். 

    அவர்களை எழுப்பி ஒவ்வொருவராக போன் நம்பரை கேட்டு OTP நம்பரை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்துள்ளனர். மேலும் அவர்களின் போன்களில் கட்சி உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதன் கன்பர்மேஷன் மெசேஜ் வந்த பிறகே பாஜகவினர் அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய மருத்துவமனை டிரஸ்ட் தலைவர்,  தங்கள் டிரஸ்ட்  மூலம்  இலவச  கண்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதை தவறாக பயன்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தில் எங்களது டிரஸ்ட் உறுப்பினர் யாருக்கேனும் தொடர்பிருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருவதாக  ராஜ்கோட் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை பலர் நகைக்கத்தக்க விஷயமாக பார்த்தாலும், இந்த பிரச்சனையின் தீவிரம் குறித்தும் சிலர்  எச்சரிக்கின்றனர். 

    • வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார்.
    • ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் இறந்துபோன பாம்பிற்கு இளைஞர் ஒருவர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்பவர் செய்து வருகிறார். ஒரு அடி நீளமுள்ள ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக தத்விக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    அந்த இடத்தில் எவ்வித அசைவும் இல்லாமல் விசமில்லாத பாம்பு ஒன்று இருந்துள்ளது. உடனே பாம்பின் வாயில் வாய் வைத்து தத்வி மூச்சுக்காற்று கொடுத்துள்ளார். முதல் 2 முறை மூச்சுக்காற்று கொடுத்தபோதும் அசைவில்லாமல் இருந்து பாம்பு மூன்றாவது முறை மூச்சுக்காற்று கொடுத்தபின்பு உயிர் பிழைத்துள்ளது.

    உயிர்பிழைத்த பாம்பு பின்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து தத்வி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதலனை கரம் பிடிப்பதில் ராமி கேசரியா உறுதியாக இருந்தார்.
    • ராமியின் செல்போன், காலணி இருப்பதையும் பார்த்த அவரது குடும்பத்தினர் ராமி தற்கொலை செய்து கொண்டதாக கருதி உள்ளனர்.

    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராமி கேசரியா (வயது27). இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் கங்கல் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

    இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் காதலனை கரம் பிடிப்பதில் ராமி கேசரியா உறுதியாக இருந்தார். இதனால் இருவரும் ஓடிச்சென்று திருமணம் செய்ய திட்டமிட்டனர்.

    ஆனால் தனது குடும்பத்தினர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என அச்சம் அடைந்த ராமி கேசரியா தான் இறந்து விட்டது போல நடிக்க திட்டமிட்டுள்ளார்.

    அதற்காக கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி ராமி கேசரியா தனது காதலன் அனில் கங்கலுடன் சேர்ந்து அப்பகுதியில் யாசகம் எடுத்து கொண்டிருந்த அப்பாவி முதியவர் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை தீ வைத்து எரித்துள்ளார்.

    மேலும் அவரது உடல் எரிக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு அருகே ராமி தனது செல்போன், காலணி ஆகியவற்றை விட்டு சென்று உள்ளார்.

    மறுநாள் எரிந்த நிலையில் உடல் கிடப்பதையும், அங்கு ராமியின் செல்போன், காலணி இருப்பதையும் பார்த்த அவரது குடும்பத்தினர் ராமி தற்கொலை செய்து கொண்டதாக கருதி உள்ளனர்.

    அதன் பிறகு ராமியும், அவரது காதலனும் வெளியூர் சென்று வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனாலும் ராமி அப்பாவி முதியவரை கொன்ற குற்ற உணர்ச்சியில் மூழ்கினார்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 29-ந்தேதி அவர் வீட்டுக்கு திரும்பி தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை கூறி மன்னிப்பு கேட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமியின் தந்தை, மகளின் மன்னிப்பை ஏற்க மறுத்ததோடு இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து ராமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமி மற்றும் அவரது காதலன் அனில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ராமியிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை 3-ந்தேதி இரவு அப்பகுதியில் யாசகம் எடுத்து கொண்டிருந்த ஒருவரை தனது காதலனுடன் சேர்ந்து வேனில் கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

    பின்னர் முதியவரின் உடலை சணல் பையில் அடைத்து கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர். ஜூலை 5-ந்தேதி அனில் 20 லிட்டர் டீசல் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு வந்து முதியவர் உடல் மீது ஊற்றி எரித்துள்ளார்.

    மேலும் ராமி தற்கொலை செய்து கொள்வது போலவே வீடியோ எடுத்து அதனை அவரது தந்தைக்கும் அனுப்பி உள்ளனர். இதனால் இறந்து கிடந்தது தனது மகள் ராமிதான் என அவரது பெற்றோர் கருதி வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

    கைது செய்யப்பட்ட ராமி, அவரது காதலன் அனில் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் ராமி கொலை செய்த அப்பாவி முதியவர் யார்? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    • குஜராத்தில் 518 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதன் சர்வதேச மதிப்பு 5,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    டெல்லி போலீசார் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    போதை பொருட்களுக்கு எதிரான பூஜ்ய சகிப்புதன்மை கொள்கை அடிப்படையில் போலீசார் கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்படி, அங்லேஷ்வர் பகுதியில் உள்ள ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 518 கிலோ எடை கொண்ட கொகைன் என்ற போதை பொருள் பறிமுதல் இன்று கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.5,000 கோடி என கூறப்படுகிறது.

    கடந்த 1-ம் தேதி மஹிபால்பூர் பகுதியில் துஷார் கோயல் என்பவரின் குடோனில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் சோதனை நடத்தி 562 கிலோ எடை கொண்ட கொகைன் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் மரிஜுவானா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், டெல்லி ரமேஷ் நகரில் உள்ள கடை ஒன்றில் இருந்து கடந்த 10-ம் தேதி 208 கிலோ எடை கொண்ட கொகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில், கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருளானது பார்மா சொல்யூஷன் சர்வீஸ் என்ற மருந்து விற்பனை நிறுவனத்திற்கு உரியது என்பதும், இவை ஆவ்கார் என்ற மருந்து நிறுவனத்தில் இருந்து வந்துள்ளதும் தெரிய வந்தது. கடந்த 2 வாரத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
    • ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

    ×