என் மலர்tooltip icon

    அசாம்

    • சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.

    இந்நிலையில், ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

    ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் எவரிடமேனும் இருந்தால், அதனை அவர்கள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 269 ரன்கள் எடுத்தது.

    கவுகாத்தி:

    13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஹர்லின் தியோல் ஜோடி 67 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 37 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்லின் தியோல் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின், பெய்த மழை காரணமாக போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 124 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

    7வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். 83 ரன்கள் சேர்த்த நிலையில் அமன்ஜோத் கவுர் 57 ரன்னில் வெளியேறினார். தீப்தி சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் ஸ்ரே ரானா அதிரடியாக ஆடி 15 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டும், பிரபோதினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.

    மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபீனின் இசைக்குழுவில் டிரம்மராக சேகர் இருந்து வந்தார்.

    சிங்கப்பூரில் ஜுபீனின் yacht படகு பயணத்தின்போது சேகர் அவருடன் இருந்தார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 

    முன்னதாக விசாரணைக் குழு சிங்கப்பூரில் ஜூபின் பங்கேற்ற விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் சுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோரின் வீடுகளில் ஆய்வு செய்தது.  

    • 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
    • கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    கவுஹாத்தி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.

    மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

    இந்த நிலையில், ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா தெரிவித்தார். 

    • அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
    • ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    அவரது உடல் சொந்த மாநிலமான அசாமுக்கு கொண்டுவரப்பட்டு தலைநகர் கவுகாத்தியில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறுபுறம் கார்க்கின் மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதனால் ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார்.

    மேலும் அவரது உடலுக்கு 2 வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    சிங்கப்பூரில் நடந்த முதல் பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவர்களால் இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஹிமாந்தா தெரிவித்தார்.

    கார்க்கின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 முதல் 10 மணிக்குள் சருசஜாய் மைதானத்தில் இருந்து இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.

    சிஐடி போலீசார் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்கும். இச்சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    • வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

    உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும்  பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

    • அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.

    இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.  

    • 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
    • ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.

    பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.

    இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,

    1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது நேரு அசாம் மக்கள் மீது ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.

    பாஜக இரட்டை எஞ்சின் அரசு அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் உறுதி பூண்டு உள்ளது.

    அசாமின் 13 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி பாரதம் கனவை நனவாக்குவதில் வடகிழக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

    காங்கிரஸ் அசாமை பல தசாப்தங்களாக ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்திரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் 6 பாலங்களைக் கட்டினோம்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நமது ராணுவம் மிக பலத்துடன் எதிர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ் நமது ஆயுதப்படைகளை அவமதித்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு நிலைப் பாட்டில் காங்கிரஸ் செயல் பட்டு வருகிறது.

    இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது.

    நாட்டின் மக்கள் தொகையை மாற்ற சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஊடுருவல்காரர்கள் உங்கள் நிலத்தை அபகரிக்க பாஜக அனுமதிக்காது. மக்கள் தொகையை மாற்றும் சதியை தடுப்போம்" என்று மோடி பேசினார்.

    இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைத்தார்.

    அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.  

    • பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி நேற்று மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங் களில் பங்கேற்றார்.

    இன்று காலை தர்ரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ. 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே குருவா-நரேன்கி பாலம், கவுகாத்தி ரிங் ரோடு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் பொது கூட்டத்தில் பேசியதாவது,

    ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக அசாம் வந்துள்ளேன். காமாக்யா அன்னையின் ஆசிர்வாதத்தால் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    பாரத ரத்னா விருது பெற்ற இந்த நாட்டின் மகத்தான புதல்வரும், அசாமின் பெருமையுமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன். நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு மோடி பாரத ரத்னாவை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியிருந்தார்.

    காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார். நீங்கள் என்னை எவ்வளவுதான் திட்டினாலும் தாங்கி கொள்வேன்.

    நான் சிவ பெருமானின் பக்தன். நான் அவதூறுகளின் விஷத்தையும் அருந்தி அதை அகற்றி விடுவேன். ஆனால் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது சரியா, தவறா என்று மக்களாகிய நீங்களே கூறுங்கள்" என்று பேசினார்.  

    இன்று மாலை பிரதமர் மோடி கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையிலான எத்தனால் ஆலையையும், ரூ.7,230 கோடி மதிப்புள்ள பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைக்கிறார்.

    அசாமில் மொத்தம் ரூ.18,530 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். 

    • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
    • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

    அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

    மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

    • அசாமில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
    • வரும் 2041-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் பேசுகையில், மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது. 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    ×