என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
    • இலவச நேரடி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது.

    திருப்பதி, மே. 23-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர். இதனால் இலவச நேரடி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது.

    திருப்பதியில் நேற்று 80,048 பேர் தரிசனம் செய்தனர். 35,403 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார்.
    • இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.

    இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மாச்சர்லா தொகுதியின் எம்.எல்.ஏ.பால்வாய் கேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றார். அப்போது அங்கு ஒரு தேர்தல் அதிகாரி அவரை வரவேற்க எழுந்து நிற்கிறார்.

    ஒரு வார்த்தை கூட பேசாமல், எம்.எல்.ஏ, ஈ.வி.எம். வைக்கப்பட்டுள்ள மூடப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, விவிபேட்-ஐ எடுத்து, தரையில் பலமாக வீசுகிறார்.

    இயந்திரம் உடைந்து ஒரு பாகம் வெளியேறுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவர் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார்.

    எம்.எல்.ஏ அருகே சென்று தடுத்து நிறுத்தும் முன்பு, எம்.எல்.ஏ., அலட்சியமாக வெளியே செல்கிறார். அவர் வெளியே செல்வதற்கு முன் தனது உதவியாளரை தாக்கியவரை எச்சரிக்கை செய்து செல்கிறார். 

    இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி, மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களைகளை சேதப்படுத்துவது கேமராவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இதுபோன்ற அனைத்து வாக்குச்சாவடிகளின் வீடியோ காட்சிகளையும், பல்நாடு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்து, நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் தேர்தல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் காரணமாக, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும், 25 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.
    • உண்டியல் காணிக்கையாக ரூ.3.67 கோடி வசூலானது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 945 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 35 ஆயிரத்து 844 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    உண்டியல் காணிக்கையாக ரூ.3.67 கோடி வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 26 மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொருவரின் விவரங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டில் பதிவு செய்யப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தன.

    இந்த நிலையில் முழுவதும் உள்ள 26 மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

    மேலும் வெளி ஆட்கள் மையத்திற்குள் செல்லாதவாறு இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில ஆய்த படை போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்பகுதிக்கு வரும் ஒவ்வொருவரின் விவரங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டில் பதிவு செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வேட்பாளரின் முகவர்களும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றிலும் இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆக்டோபஸ் கட்டிடம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, பால், டீ, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோடை விடுமுறை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

    பக்தர்கள் வாகனங்களில் தரிசனத்திற்கு வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலைக்கு செல்ல மணி கணக்கில் காத்திருந்தனர். மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

    இதனால் ஆக்டோபஸ் கட்டிடம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் கர்திருந்து தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு முறையில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 12 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, பால், டீ, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 86,721 பேர் தரிசனம் செய்தனர். 39,859 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கே.ஆர்.கே. காலனியை சேர்ந்தவர் அப்துல் அதீக் (வயது 32). இவருடைய மனைவி ஜாஸ்மின் கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அதீக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜாஸ்மின் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அதீக் வாட்ஸ் அப்பில் முத்தலாக் ஆடியோ பதிவு செய்து ஜாஸ்மினுக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் அதீக்கை கைது செய்தனர்.

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் கல்யாண கட்டாகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து நின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வார விடுமுறை நாள் என்பதால் இன்று பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் கல்யாண கட்டாகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து நின்றனர்.

    போதிய அளவு பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்தவெளியில் தங்கினர். திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்வதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி மலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-வது நாளான நேற்று இரவு ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் கோவில் வளாகத்தில் சுற்றி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 90, 721 பேர் தரிசனம் செய்தனர். 50, 599 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்துக்கு 36 மணி நேரமானது.


    • டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.

    திருப்பதி, மே.18-

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.

    அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.

    உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

     சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.

    அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.

    சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-

    நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.

    சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திருப்பதியில் நேற்று 71,510 பேர் தரிசனம் செய்தனர். 43, 199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள அறைகள் முழுவதிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிருஷ்ண தேஜாவிலிருந்து ஷீலா தோரணம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,510 பேர் தரிசனம் செய்தனர். 43, 199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.

    • நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
    • பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.

    அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.

    இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.
    • திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கோடை விடுமுறை மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்தல்கள் முடிந்ததால் 2 மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் மற்றும் நாராயணகிரி பூங்காவில் உள்ள அறைகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சீலா தோரணம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.

    திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 76 369 பேர் தரிசனம் செய்தனர். 41,927 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கீழ் திருப்பதிக்கு கார் ஒன்று வந்தது. அப்போது காரில் திடீரென புகை வரவே, டிரைவர் காரை ஓரங்கட்டியதால் அனைவரும் கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×