திருப்பதி மலை அடிவாரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
திருப்பதி மலை அடிவாரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கீழ் திருப்பதிக்கு கார் ஒன்று வந்தது. அப்போது காரில் திடீரென புகை வரவே, டிரைவர் காரை ஓரங்கட்டியதால் அனைவரும் கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com