என் மலர்
பொது மருத்துவம்
- சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும்.
- இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி உள்ளது.
திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான ௧௦ காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.
சத்துக்கள்
எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன.
மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.
பொட்டாசியம்
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ஆற்றல்
வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.
செரிமானம்
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வயிற்றுக் கோளாறு
வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.
இதய ஆரோக்கியம்
பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.
உடல் எடை
வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.
மனநிலை மேம்பாடு
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6 செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
சருமம்
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.
இயற்கை இனிப்பு
வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.
- யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
- யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
* உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.
* யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.
* இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.
* யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
* மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.
* யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்
* யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.
- துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம்.
- செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும்.
இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன மையத்தை அப்பல்லோ ஆஸ்பத்திரி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இதுதொடர்பாகவும், இரைப்பை குடல் ரத்தப்போக்கு குறித்தும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இரைப்பை குடல் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாச்சலம், இரைப்பை குடல் சார்ந்த லண்டன் டாக்டர் மோ தபீக் ஆகியோர் விளக்கி கூறினார்கள். இதில் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி கூறியதாவது:-
இரைப்பை குடல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை வருகிற 18-ந்தேதி (நாளை மறுதினம்) அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதற்கு முன்னதாக இரைப்பை குடல் சார்ந்த நோய் குறித்த கருத்தரங்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் பின்னர், தென் இந்தியாவை சேர்ந்த 24 இளம் டாக்டர்களுக்கு செரிமானப்பாதையில் இரைப்பை குடல் ரத்தப்போக்குக்கான சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இரைப்பை, குடல், ரத்தப்போக்கு பிரச்சினைகளில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரைப்பை குடல் ரத்தப்போக்கு என்பது செரிமான கோளாறு, வயிற்று புண்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அறிகுறிகளாக இருக்கிறது.
தற்போதைய நாகரிக உலகில் துரித உணவுகள் (ஜங்க் மற்றும் பாஸ்ட் புட்) குடல் சார்ந்த நோய்களுக்கு ஆணி வேராக உள்ளது. ஏனென்றால் இந்த வகை உணவுகளால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை தொடர்ந்து சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம். அதுவும் தற்போது கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
தாமதமாக இரவு உணவு சாப்பிடுவது, தூக்கமின்மை, ஆல்கஹால் அதிகம் எடுத்துக்கொள்வது, சிகரெட் பிடிப்பது போன்றவை காரணமாகவும் இரைப்பை குடல் நோய் பிரச்சினை வருகிறது. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடல் அழற்சிநோய் மேற்கத்திய நாடுகளில் அதிகம் இருந்தது. தற்போது மேற்கத்திய கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து, இங்கும் குடல் அழற்சிநோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது. அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும். அதில் பழைய சோறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாப்பிடுவதால் செரிமானம் சீராக உள்ளது. குடிநீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்து நன்றாக தூங்குவது, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலமும் நம் உடல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும்.
- ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது.
காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும். எனவே பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக பித்தத்தை அதிகரிக்கும் காபியை காலைநேரங்களில் அதிகம் எடுத்துக்கொள்கிறோம்.
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்களித்துக்கெண்டே இருக்குமா இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.
காலையில் சாப்பிடக்கூடிய கஷாயம் பித்தத்தை குறைப்பதாக இருந்தால் அது சிறப்பு. கரிசலாங்கன்னி, மொசுமொசக்கை, திரிகடுகம், ஆவாரம்பூ கசாயம். நெல்லிக்காய் குடிநீர் இந்த வகையான கஷாயங்களை காலையில் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
உணவுமுறைகள்
ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது. அவாரம்பூ குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. பித்தம் அதிகரிப்பதனால் வரக்கூடிய முதல் நோய் சர்க்கரை நோய். பித்தம் அதிகரித்து இருக்கும் போது கபம் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும். அரச மரக்குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
- சியாட்டிகா வலியால் கால் மரத்து விடும்.
- இடுப்பு பகுதியில் உள்ள தண்டு நரம்புகள் அதனை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.
சியாட்டிகா என்பது நரம்பின் பெயர் இது முதுகில் தொடங்கி குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலினுள் இருக்கும் ஒற்றை நரம்பும் சியாடிக் நரம்பை பாதிப்புக்குள்ளாக்கும் போது உண்டாகும் வலி. வலி என்று சொல்ல முடியாத அளவுக்கு தாங்க முடியாத உபாதையை உண்டாக்கும் இந்த வலியால் கால் மரத்து விடும். தொடையில் இருந்து பின்னங்கால் வரை வலியை ஏற்படுத்தும். இந்த வலியின் தீவிரமானது அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும்.
சியாட்டிகா வலி இடுப்பு பகுதியில் ஆரம்பித்து பிட்டப்பகுதி, தொடையின் பின்பகுதி, கால் முழுவதுமாக கால் பெருவிரல் வரை வலி இருக்கும். ஏனென்றால் இடுப்பு பகுதியில் இருந்து தான் சியாட்டிகா நரம்பு பகுதி அந்த இடுப்பு பகுதியில் இருந்து தொடங்குகிறது.
இடுப்பு பகுதியில் உள்ள தண்டு நரம்புகள் அதனை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது. அல்லது விட்டு விட்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் வலிக்கும். தொடைப்பகுதி மட்டும் வலிப்பது, கால் பெருவிரல் உணர்வற்று இருப்பது இவையெல்லாம் இந்த சியாட்டிகா நரம்புகள் அழுத்தப்படும்போது வலி ஏற்படுகிறது.
சியாட்டிகா நரம்பு பிரச்சினை இருப்பதை எளிதாக கண்டறியலாம். அதற்கு நன்ற படுத்துக்கொண்டு முட்டியை மடக்காமல் கால்களை உயர்த்தும்போது வலி ஏற்படும். பெருவிரலில் இருந்து இடுப்பு வரை வலி இருக்கிறது என்றால் நிச்சயமாக அது முதுகுத்துண்டு அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
உணவுமுறைகளின் இந்த வாதத்தன்மையை குறைப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுகளை புளிப்பு சுவை உள்ள பழங்கள், உணவுகளை ஆகியவற்றை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுமட்டுமில்லாமல் வாயு தரக்கூடிய உணவுகள் அதாவது மொட்ச்சை, கொண்டைகடலை, பயறுவகைகள் ஆகிவற்றை மூட்டு வலி இருப்பவர்கள் தவிர்த்துக்கொள்வது நல்லது.
பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சியாட்டிகாவுடன் தொடர்புடைய அழற்சி மற்றும் வலியை குறைக்க உதவும்.
ஒரு டம்ளர் பால், அரை டம்ளர் தண்ணீர் , 5 பூண்டு பல் எடுத்துகொள்ளவும். பூண்டை இடித்து பால் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு இறக்கி சிறிது நேரம் குளிர வைத்து சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கலாம். தினமும் ஒரு டம்ளர் பூண்டு பால் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
சியாட்டிகாவால் வலி இருக்கும் இடத்தில் சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் நிச்சயம் பலன் அளிக்கும். குளிர்ந்த நீர் அல்லது சற்று சூடாக இருக்கும் நீர் ஏதேனும் ஒன்றை எடுத்து மெல்லிய துணியை அதில் நனைக்கவும். வலி இருக்கும் இடங்களில் மெதுவாக ஒத்தடம் போல் வைத்து ஒற்றி எடுக்கவும். குறிப்பாக வலி அதிகம் இருக்கும் இடங்களில் தொடர்ந்து 5 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் வலி உபாதை குறையும்.
இஞ்சி எண்ணெய் முதுகுவலிக்கு தீர்வாக இருக்கும். இஞ்சியில் இருக்கும் ஜிங்கெரால் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது வலியை குறைக்க செய்யும்.
இஞ்சி எண்ணெயுடன் சில துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்துவிடுங்கள். இதை அடி முதுகின் நுனிவரை லேசாக மசாஜ் செய்வது போல் தேய்த்துவிடுங்கள். இஞ்சி எண்ணெய் எரிச்சலை ஆலிவ் எண்ணெய் தவிர்த்துவிடும்.
தினமும் காலையில் எழுந்ததும் பிறகு இரவு தூங்குவதற்கு முன்பும் இதை தடவினால் போதுமானது. இஞ்சி எண்ணெய்க்கு மாற்றாக புதினா எண்ணெயும் பயன்படுத்தலாம்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஆனது பயோ ஆக்டிவ் ஆக செயல்படுகிறது. இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது நரம்பு வலியையும் இடுப்பு மூட்டுகளில் உண்டாகும் வலியையும் குறைக்க செய்யும்.
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து குழைத்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். இதை வலி இருக்கும் இடங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் வலியின் தீவிரத்தை கட்டுபடுத்தலாம்.
வெந்தயம் வலி நிவாரணியாக செயல்படும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சியாட்டிகா வலியின் தீவிரத்தை குறைக்க செய்யும். வெந்தயத்தை பொடியாக்கி பாலில் கலந்து குழைத்து பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும்.
இதை வலி இருக்கும் இடங்களில் தடவி உலரும் வரை விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். தினமும் காலையில் குளியலுக்கு முன்பும், இரவு தூங்கும் போதும் இதை செய்து வந்தாலே பலன் கிடைக்கும்.
- நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது.
- சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான்.
வளர்ந்து விட்ட நாகரிக உலகில் நோய்களும் அதிகரித்தபடியே உள்ளது. புதிது புதிதாக பரவுகின்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பரிசோதிக்க முதலில் எலிக்கு செலுத்துவதே வாடிக்கையாக உள்ளது. ஏனெனில் தயாரிக்கப்படும் மருந்து மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.
அதனால் என்ன என்கிறீர்களா? உலகில் தற்போது பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், அது வராமல் தடுக்கவும் அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்காக சில யோசனைகளையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். ஆனால் பெரும்பாலும் இந்த சர்க்கரை நோய் உருவாகுவதற்கு காரணம் மைதாவில் தயாராகும் உணவுகள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சர்க்கரை நோய் தடுப்புக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதிப்பதற்காக எலிக்கு முதலில் சர்க்கரை நோயை உருவாக்குகின்றனர். இதற்காக அவர்கள் அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் அதன் உடலில் செலுத்துவதாகவும், இந்த ஊசியை செலுத்திய மறுநாள் எலிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்த அலாக்சாம் ஊசி தயாரிக்க பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா உணவு வழங்கி வருகின்றனர். மக்களும் இதை ஆர்வத்துடன் சாப்பிட்டு செல்கின்றனர். இந்த பரோட்டாவுக்கு பயன்படும் மைதாவை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அதில் எலிக்கு செலுத்தப்படும் அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பதாக மதுரை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தானோ என்னவோ கேரளாவில் உள்ள உணவகங்களில் பரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகு வதற்கு இதுபோன்ற உணவு பொருட்களே 70 சதவீதம் காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சுகர், கேன்சர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க பரோட்டா போன்ற மைதா உணவுகளை தவிர்க்கலாமே! பரோட்டா பிரியர்கள் உஷார்!
- அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று.
- களாக்காயை அப்படியே சாப்பிடலாம்.
தென்னிந்தியாவில் சுரைக்காய், தாய்லாத்தில் ஈரரம்பா, அங்கத்தில் திராட்சை வத்தல், மலேசியாவில் கெரெண்டா, விஞ்ஞான ரீதியாக கரோண்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் களாக்காய், தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.
இது புளிப்பு, இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொரி பழத்தை ஒத்த வடிவத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களாக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று. இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
களாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், ஜிங்க், காப்பர், ஆன்டிஆக்சிடன்டுகளான பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டான்னின்ஸ், கரீஸ்சோன், ட்ரை டெர்பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. களாக்காயை அப்படியே சாப்பிடலாம். அதை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போட சருமத்தின் நிறமிழப்பை குறைத்து. கருந்திட்டுக்களை போக்கி, முதிர்வைத் தடுக்கும். சரும பிரச்சினைகளை போக்க இயற்கை மருத்துவத்தில் களாக்காய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
களாக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. மேலும், உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுத்து, உடலின் உள்உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களும், ஆக்சிஜனும் கிடைக்க உதவுகிறது.
களாக்காயில் உள்ள புரதச்சத்துக்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதுடன், கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது. முடி உதிர்வு, முடி உடைவு போன்ற பிரச்சினைகள் வருவதையும் தடுக்கிறது. களாக்காயில் உள்ள புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுதவிர, சீரற்ற மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து செயல்படுகிறது.
களாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானமின்மையால் உண்டாகும் வாயுத்தொல்லை, எரிச்சல் மற்றும் வலியை தீர்க்கிறது. மேலும், குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளையும் சரிசெய்கிறது.
களாக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. நோய்த்தொற்றுகள், கிருமித்தொற்று, வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் உடல் உபாதைகளையும், அழற்சிகளையும் சரி செய்கிறது. களாக்காயில் உள்ள வைட்டமின்கள். பார்வைத் திறன் மற்றும் செவித்திறனை மேம்படுத்துகிறது. மூட்டு எலும்புகளை பலப்படுத்தி, தசைகளையும் வலுப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் உண்டாகும் மற்ற உடல் பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.
களாக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் ட்ரிப் டோபான் சத்துக்கள் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, நரம்பியல் மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. ஹேப்பி ஹார்மோன் சுரப்பை தூண்டுவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது.
- சாக்லேட் கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
- டார்க் சாக்லெட் மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும்
உலகம் எங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப்பொருட்களில் ஒன்றாக சாக்லெட் விளங்குகிறது. இது கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சாக்லெட்டில் பிளாவனாய்டுகள், காபின், தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்களும் கலந்துள்ளன. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. சாக்லெட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும்.
ஏனெனில் டார்க் சாக்லெட்டை பொறுத்தவரை மற்ற சாக்லெட்டுகளை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அதிக கோகோ உள்ளடங்கி இருக்கும். மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.
எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். அதேவேளையில் டார்க் சாக்லெட் சிலருக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிடக்கூடாது.
டார்க் சாக்லெட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லெட் மற்றும் ஒயிட் சாக்லெட் இவை இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். வெறும் வயிற்றில் இந்த இரண்டு சாக்லெட்டுகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் இந்த சாக்லெட்டுகளை குறைவாக சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு குமட்டல், செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் பருகிவிட்டு அதன் பிறகு சாக்லெட் சாப்பிடுவது சிறந்தது.
- பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது.
- புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை.
உலக அளவில் புற்றுநோய் மரணங்களில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மனித உடலில் பெருங்குடலானது உணவை உறுஞ்சி கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் உறுப்பாக உள்ளது. பொதுவாக பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் தோன்றினால் முதலில் எந்தவிதமான அறிகுறிகளும் தோன்றாது. இருந்தாலும் வலி ஏற்படும்போது கட்டாயம் மருத்துவ நிபுணரை சந்திப்பது அவசியம். இதில் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது.
இந்த வகை புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை. இருந்தாலும் மலக்குடலில் இருந்து ரத்தபோக்கு அல்லது மலத்தில் ரத்தம் ஏற்பட்டால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் ரத்தசோகை காரணமாக சிலருக்கு மலக்குடலில் ரத்தபோக்கு இருக்காது. இவர்களுக்கு சோர்வு அல்லது வெளிர்நிறத்தில் தோலின் நிறம் மாறும்.
அதேபோல் வயிற்றில் கடுமையான வலி வருவது புற்றுநோயின் அறிகுறியாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பலவீனம், சோர்வு, வயிற்றில் வீக்கம், எதிர்பாராத எடையிழப்பு போன்ற அறிகுறிகள் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகும். பெருங்குடலில் புற்றுநோயானது பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
உலகில் பெருங்குடல் புற்றுநோய்தான் புற்றுநோய் இறப்புகளில் 2-வது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாதிப்பாக உள்ளது. சிகரெட் புகைப்பது, தினமும் மது அருந்துவது, அதிக எடை, வழக்கமான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவைகள் இந்த புற்றுநோய் வருவதை அதிகரிக்க கூடிய காரணிகளாகும். எனவே பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க 45 வயதுக்கு பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியை தினமும் செய்யவேண்டும். உடலில் சரியான எடையை பராமரிக்க வேண்டும். உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்ணுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
- கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் இதனால் வரக்கூடிய உடல்பரும் போன்ற தொந்தரவுகள் இருந்தால் இந்த மருந்தை தொடர்ந்து 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் நோய்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் தான். உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. நாம் இப்போது சாப்பிடக்கூடிய உணவுகள் நமக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்தை கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது.
ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும், கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் அதனுடைய விளைவு நிச்சயமாக நோய்கள் தான். இதனால் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அலைவதை நிறுத்திவிட்டு முதலில் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய மருந்தை 11 நாட்களுக்கு சாப்பிடும் போது பல நோய்கள் குணமாகும். அதாவது உங்களுக்கு மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். அதேபோல் உங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் சிக்கல்களை இந்த மருந்து தீர்க்கும். இந்த எளிதான குடிநீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
தண்ணீர்-250 கிராம்
வெந்தயம் -ஒரு டீஸ்ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
பட்டை- ஒருதுண்டு
இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 250 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த 250 கிராம் தண்ணீர் 150 கிராம் அளவுக்கு குறுகி வரும் அளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பொருட்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி வரும் அளவுக்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை மிதமான தீயில் வைத்தே இந்த மருந்தை காய்ச்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு இதனை வடிகட்டியில் வடிகட்டி இந்த தண்ணீரை 11 நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.
இதில் சுவைக்காக எதுவும் சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை 11 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே பிரம்மித்து போகிற அளவுக்கு உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.
அதாவது நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் முதற்கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளும் நீங்கி நரம்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். அதேபோல் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கபநோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.
வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தக்கூடிய ஆற்றல் இந்த குடிநீருக்கு உள்ளது. உங்களை நீங்கள் கட்டுடலாக வைத்துக்கொள்ளவும் இந்த குடிநீர் உதவியாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
- துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
- கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.
மூலவியாதியை விரட்டும்
துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும். இதை செய்யும் முறை மிகவும் எளிதானது. சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அளவில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும். மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து. இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
உடல் பருமன் குறைக்கும் துளசி
துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். பெண்கள் மாதவிடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.
சிறுநீரகக்கற்கள் நீங்கும்
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும். இவ் வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.
பெண்களுக்கு...
துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.
- வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
துளசி தீர்த்தம் 400-க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. துளசியில் உடனடி பலன் பெறும் சில நோய்கள் விவரம் வருமாறு:
1. உண்ட விஷத்தை முறிக்க உதவுகிறது.
2. விஷஜுரம் குணமாகும்.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக உதவுகிறது.
4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்கும்.
5. காது குத்து வலி குணமாக உதவுகிறது.
6. காது வலி குணமாகும்.
7. தலைசுற்று குணமாக உதவுகிறது.
8. பிரசவ வலி குறைய உதவுகிறது.
9. அம்மை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.
10. சிறுநீரக துவார வலி குணமாக உதவுகிறது
11. வண்டு கடி குணமாகும்.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக உதவுகிறது
13. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக உதவுகிறது
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற உதவுகிறது
16. அஜீரணம் குணமாகும்.
17. கெட்ட ரத்தம் சுத்தமாக உதவுகிறது
18. குஷ்ட நோய் குணமாகும்.
19. குளிர்காய்ச்சல் குணமாகும்.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக உதவுகிறது
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க உதவுகிறது.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க உதவுகிறது.
23. வலிப்பு குணமாகும்
24. ஜலதோஷம் குணமாகும்
25. ஜீரண சக்தி உண்டாக உதவுகிறது
26. தாதுவைக் கட்ட உதவுகிறது
27. சொப்பன ஸ்கலிதம் குணமாக உதவுகிறது
28. இடிதாங்கியாகப் பயன்பட உதவுகிறது
29. தேள்கொட்டு குணமாக உதவுகிறது
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக உதவுகிறது
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற உதவுகிறது
32. வாதரோகம் குணமாக உதவுகிறது
33. காய்ச்சலின் போது தாகம் தணிய உதவுகிறது
34. பித்தம் குணமாகும்.
35. குழந்தைகளுக்கு வாந்தியை நிறுத்த உதவுகிறது
36. குழந்தைகள் வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுகிறது
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக உதவுகிறது
38. மாலைக்கண் குணமாகும்
39. எலிக்கடி விஷம் நீங்க உதவுகிறது
40. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த உதவுகிறது
41. வாந்தியை நிறுத்த உதவுகிறது
42. தனுர்வாதம் குணமாகும்
43. வாதவீக்கம் குணமாகும்
44. மலேரியா காய்ச்சல் குணமாக உதவுகிறது
45. வாயுப் பிடிப்பு குணமாக உதவுகிறது
46. இருமல் குணமாகும்.
47. இன்புளூயன்சா காய்ச்சல் குணமாகும்.
48. காய்ச்சலால் ஏற்படும் வாந்தியை நிறுத்த உதவுகிறது
59. இளைப்பு குணமாகும்
50. பற்று, படர்தாமரை குணமாக உதவுகிறது
51. சிரங்கு குணமாக உதவுகிறது
52. கோழை, கபக்கட்டு நீங்க துளசியை பயன்படுத்தலாம்.






