search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fast foods"

    • துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
    • துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.

    தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

     துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

    இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.

    • துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம்.
    • செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும்.

    இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன மையத்தை அப்பல்லோ ஆஸ்பத்திரி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இதுதொடர்பாகவும், இரைப்பை குடல் ரத்தப்போக்கு குறித்தும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இரைப்பை குடல் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாச்சலம், இரைப்பை குடல் சார்ந்த லண்டன் டாக்டர் மோ தபீக் ஆகியோர் விளக்கி கூறினார்கள். இதில் மூத்த டாக்டர் கே.ஆர்.பழனிசாமி கூறியதாவது:-

    இரைப்பை குடல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை வருகிற 18-ந்தேதி (நாளை மறுதினம்) அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதற்கு முன்னதாக இரைப்பை குடல் சார்ந்த நோய் குறித்த கருத்தரங்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் பின்னர், தென் இந்தியாவை சேர்ந்த 24 இளம் டாக்டர்களுக்கு செரிமானப்பாதையில் இரைப்பை குடல் ரத்தப்போக்குக்கான சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    இரைப்பை, குடல், ரத்தப்போக்கு பிரச்சினைகளில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரைப்பை குடல் ரத்தப்போக்கு என்பது செரிமான கோளாறு, வயிற்று புண்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அறிகுறிகளாக இருக்கிறது.

    தற்போதைய நாகரிக உலகில் துரித உணவுகள் (ஜங்க் மற்றும் பாஸ்ட் புட்) குடல் சார்ந்த நோய்களுக்கு ஆணி வேராக உள்ளது. ஏனென்றால் இந்த வகை உணவுகளால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. துரித உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை தொடர்ந்து சாப்பிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம். அதுவும் தற்போது கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    தாமதமாக இரவு உணவு சாப்பிடுவது, தூக்கமின்மை, ஆல்கஹால் அதிகம் எடுத்துக்கொள்வது, சிகரெட் பிடிப்பது போன்றவை காரணமாகவும் இரைப்பை குடல் நோய் பிரச்சினை வருகிறது. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடல் அழற்சிநோய் மேற்கத்திய நாடுகளில் அதிகம் இருந்தது. தற்போது மேற்கத்திய கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்க தொடங்கியதில் இருந்து, இங்கும் குடல் அழற்சிநோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது. அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    செரிமானம் சரியாக இருந்தாலே நம்முடைய உடல் சரியாக இருக்கும். அதில் பழைய சோறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாப்பிடுவதால் செரிமானம் சீராக உள்ளது. குடிநீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்து நன்றாக தூங்குவது, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலமும் நம் உடல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
    துரித உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தருபவை. அவை மூளையின் செயல்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் மோனிஷா கூறுகையில், ‘‘அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மூளையின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் ஞாபகத்திறனும் குறையும். தொடர்ந்து துரித உணவுகளை சுவைத்தால் டோகோமைன் என்ற ரசாயனம் சுரக்கும். இது துரித உணவுகளை சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் துரித உணவுகள் சாப்பிடுவதை குறைப்பது கடினமான காரியமாகிவிடும்.’’ என்கிறார்.

    மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். காலி பிளவரில் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. இவை மூளையின் நலனையும் பாதுகாக்கும். அதேபோல் தினமும் காலையில் ஆறு பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. அது நினைவாற்றலை அதிகப்படுத்த உதவும்.

    இதில் ஏ, டி ஆகிய வைட்டமின்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்பு போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த உதவும். பூண்டுவை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அது மூளை சுருங்குவதை தடுக்கும். முட்டைக்கும் மூளையை சுருங்காமல் பாதுகாக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட்டு வர வேண்டும். கோழி இறைச்சியும் மூளைக்கு நல்லது. அதில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளடங்கி இருக்கிறது. 
    இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாக துரித உணவுகள் இருக்கின்றன. என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது என்று அறிந்து கொள்ளலாம்.
    இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்சனைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.

    பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே, சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றன.

    இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடும் ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான
    ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

    எனவே, ஒரு நாளாக இருந்தாலும் சரி, பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர் என யாராக இருந்தாலும் இதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். ஆனால், அதனை அன்றாட பழக்கமாக மாற்றும் போது பல உடல்நலக் கோளாறுகள் வரும்.

    உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், Sleep Apnea ஏற்படும். அதாவது, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.

    இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாகி சுருங்கும் வாய்ப்பு உண்டு. மேலும் மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை தவிர, பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.



    இன்று இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ஃப்ரென்ச் ஃப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவு வகைகள் நம்முடைய வாழ்வில் என்றோ நுழைந்து விட்டன. பீட்சாவில் காய்கறிகள் குறைவாக இருக்கும்.

    பர்கர் என்று பார்க்கும்போது, இதை செய்வதற்குத் தினமும் சாப்பிடுகிற சிறிய பன் போதுமானது. ஆனால், அன்றாடம் நாம் சாப்பிடுகிற பன்னைவிட, பர்கர் செய்ய பயன்படுத்தப்படும் பன் 3 அல்லது 4 மடங்கு அளவில் பெரியதாக காணப்படும். இதிலும், மீன், மட்டன், பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் கொஞ்சமாகத்தான் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயில் பல தடவை நன்றாக பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட்டாக சாப்பிடுகிறோம்.

    பொதுவாக, இந்த வகை உணவுப்பண்டங்களில் மைதா, கொழுப்பு சத்து போன்றவைதான் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி (Cheese) கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது. பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் இவற்றுடன் குறைவாகவே சேர்த்து தரப்படுகின்றன.

    உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இந்த குளிர்பானங்களில் அதிக சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு, சில ரசாயன கலவைகள் போன்ற உடலுக்குக் கெடுதியான விஷயங்களே இருக்கின்றன. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதவர்களுக்கு இந்த குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பொதுவாக இருப்பதில்லை.

    இதன் காரணமாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. அந்த உணவுப் பழக்கத்துக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் சீராகும்.
    ×