என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.
நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது இப்போது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. குளியலறை, கழிவறை மற்றும் சமையலறை ஆகியவை இட நெருக்கடி காரணமாக குறுகிய அளவுகள் கொண்டதாகவும், நெருக்கமாகவும் கட்டமைக்கப்படுகின்றன. சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் கொண்ட சிறிய குடியிருப்புகளிலும் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவது சிக்கலான விஷயமாக உள்ளது.
மேற்கண்ட பிரச்சினையை தவிர்க்க உதவும் கண்டுபிடிப்பாக ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ என்ற சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, எளிதாக நகர்த்தவும், சுழலச்செய்யவும், இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும் உகந்த பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.
மேலை நாட்டு முறை
மேலை நாடுகளில் பரவலாக உபயோகத்தில் இருந்து வரும், அலமாரிகளுடன் இணைந்த சமையலறை ‘கான்செப்ட்’ இப்போது நமது நாட்டிலும் ஆங்காங்கே பரவி வருகிறது. 400-க்கும் குறைவான சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகளில் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவதில் உள்ள சிக்கலை இந்த நவீன அமைப்பு மூலம் தீர்க்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.
மின் இணைப்புகள்
இந்த அமைப்பை சமையல் வேலைகள் முடிந்த பிறகு சாதாரண பீரோவைப் போல மூடி வைத்துக் கொள்ள முடியும். இந்த மாடர்ன் கிச்சனில் ‘லைட்டிங்’, ‘எலட்ரிகல் சர்க்கியூட்’ போன்ற மின் அமைப்புகள் மற்றும் இணைப்புகள் கச்சிதமாக அமைக்கப்பட்டு ‘எலக்ட்ரிக் ஓவன்’, ‘மிக்சி’, ‘ஸ்டவ்’ போன்ற மின்சார சாதனங்களை உபயோகித்துக் கொள்ள தக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர் குழாய்கள்
மேலும், தண்ணீருக்கான பைப் லைன் மற்றும் உபயோகித்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சமையலறை பொருட்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்புக்குள் அதற்குரிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட அறையில் உள்ள பொருட்கள் அல்லது சாதனங்களை எடுத்து இந்த சமையலறையில் பயன்படுத்தும் வகையில் 180 டிகிரி முதல் 360 டிகிரி வரை சுழலும் அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்த எளிது
உட்புறம் முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் ஸ்டீல் மற்றும் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் ‘பினிஷிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பென்ச் டாப்’, மற்ற ‘பிட்டிங்ஸ்’, ‘பினிஷிங்’ மற்றும் அழகான வண்ணப்பூச்சு ஆகிய அம்சங்கள் கொண்டதாக உள்ள இந்த நவீன சமையல் கூண்டு அமைப்பு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன.
இந்த வகை குட்டி சமையல் அறைகளை சிறிய அளவு கொண்ட வீடுகளில் சமையல் அறைக்காக பிரத்தியேக அமைப்பு ஏதும் செய்யப்படாமலேயே அமைத்து பயன்படுத்த முடியும் என்பதோடு, மாணவர்கள் தங்கள் அறைகளில் அமைத்து எளிதாக சமையல் வேலைகளை செய்து கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
சிறிய இடம் போதும்
சாதாரண சமையலறை அமைக்க 20 சதுர அடி முதல் 30 சதுர அடிகளுக்கும் மேல் இடம் தேவைப்படும். ஆனால், 6 சதுர அடி மட்டும் தேவைப்படக்கூடிய இந்த ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ வீடுகளில் உள்ள குட்டி அலமாரி போன்ற தோற்றம் தரக்கூடியது. நமது பகுதியில் புதுமையாக உள்ள இந்த அமைப்பு ரெடிமேடாக நமது கடைகளில் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். இருப்பினும், கொஞ்சம் அதிகமான பட்ஜெட் கொண்ட, இந்த மொபைல் சமையலறையை செய்து தரக்கூடிய தனி நபர்கள் அல்லது பர்னிச்சர் நிறுவனங்கள் நமது பகுதியிலும் இருக்கலாம்.
மேற்கண்ட பிரச்சினையை தவிர்க்க உதவும் கண்டுபிடிப்பாக ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ என்ற சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, எளிதாக நகர்த்தவும், சுழலச்செய்யவும், இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும் உகந்த பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.
மேலை நாட்டு முறை
மேலை நாடுகளில் பரவலாக உபயோகத்தில் இருந்து வரும், அலமாரிகளுடன் இணைந்த சமையலறை ‘கான்செப்ட்’ இப்போது நமது நாட்டிலும் ஆங்காங்கே பரவி வருகிறது. 400-க்கும் குறைவான சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகளில் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவதில் உள்ள சிக்கலை இந்த நவீன அமைப்பு மூலம் தீர்க்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.
மின் இணைப்புகள்
இந்த அமைப்பை சமையல் வேலைகள் முடிந்த பிறகு சாதாரண பீரோவைப் போல மூடி வைத்துக் கொள்ள முடியும். இந்த மாடர்ன் கிச்சனில் ‘லைட்டிங்’, ‘எலட்ரிகல் சர்க்கியூட்’ போன்ற மின் அமைப்புகள் மற்றும் இணைப்புகள் கச்சிதமாக அமைக்கப்பட்டு ‘எலக்ட்ரிக் ஓவன்’, ‘மிக்சி’, ‘ஸ்டவ்’ போன்ற மின்சார சாதனங்களை உபயோகித்துக் கொள்ள தக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர் குழாய்கள்
மேலும், தண்ணீருக்கான பைப் லைன் மற்றும் உபயோகித்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சமையலறை பொருட்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்புக்குள் அதற்குரிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட அறையில் உள்ள பொருட்கள் அல்லது சாதனங்களை எடுத்து இந்த சமையலறையில் பயன்படுத்தும் வகையில் 180 டிகிரி முதல் 360 டிகிரி வரை சுழலும் அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்த எளிது
உட்புறம் முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் ஸ்டீல் மற்றும் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் ‘பினிஷிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பென்ச் டாப்’, மற்ற ‘பிட்டிங்ஸ்’, ‘பினிஷிங்’ மற்றும் அழகான வண்ணப்பூச்சு ஆகிய அம்சங்கள் கொண்டதாக உள்ள இந்த நவீன சமையல் கூண்டு அமைப்பு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன.
இந்த வகை குட்டி சமையல் அறைகளை சிறிய அளவு கொண்ட வீடுகளில் சமையல் அறைக்காக பிரத்தியேக அமைப்பு ஏதும் செய்யப்படாமலேயே அமைத்து பயன்படுத்த முடியும் என்பதோடு, மாணவர்கள் தங்கள் அறைகளில் அமைத்து எளிதாக சமையல் வேலைகளை செய்து கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
சிறிய இடம் போதும்
சாதாரண சமையலறை அமைக்க 20 சதுர அடி முதல் 30 சதுர அடிகளுக்கும் மேல் இடம் தேவைப்படும். ஆனால், 6 சதுர அடி மட்டும் தேவைப்படக்கூடிய இந்த ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ வீடுகளில் உள்ள குட்டி அலமாரி போன்ற தோற்றம் தரக்கூடியது. நமது பகுதியில் புதுமையாக உள்ள இந்த அமைப்பு ரெடிமேடாக நமது கடைகளில் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். இருப்பினும், கொஞ்சம் அதிகமான பட்ஜெட் கொண்ட, இந்த மொபைல் சமையலறையை செய்து தரக்கூடிய தனி நபர்கள் அல்லது பர்னிச்சர் நிறுவனங்கள் நமது பகுதியிலும் இருக்கலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. இது நரம்புகளுக்கு வலுவூட்டும்.
பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன.
இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றிற்கு ஏதேனும் ஒரு காரணத்துடன் தான் பெயர் வைத்துள்ளனர். அந்த வகையில் “மாப்பிள்ளை சம்பா” விற்கு ஓர் பெயர் காரணம் உள்ளது.
முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து வைப்பர். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை தருவதால் இந்த அரிசிக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை குடித்தாலே அந்த ஆண் மகன் இளவட்டகல்லை சுலபமாக தூக்கி விடுவானாம். அந்த அளவிற்கு உடலுக்கு பலத்தை தருவதில் மாப்பிள்ளை சம்பா தனித்து நிற்கிறது.
மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்
“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்திற்கு உண்பது வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.
மாப்பிள்ளை சம்பா நீராகாரம்
மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.
பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.
இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் பலவற்றிற்கு ஏதேனும் ஒரு காரணத்துடன் தான் பெயர் வைத்துள்ளனர். அந்த வகையில் “மாப்பிள்ளை சம்பா” விற்கு ஓர் பெயர் காரணம் உள்ளது.
முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து வைப்பர். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை தருவதால் இந்த அரிசிக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயர். மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை குடித்தாலே அந்த ஆண் மகன் இளவட்டகல்லை சுலபமாக தூக்கி விடுவானாம். அந்த அளவிற்கு உடலுக்கு பலத்தை தருவதில் மாப்பிள்ளை சம்பா தனித்து நிற்கிறது.
மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்
“மாப்பிள்ளை சம்பா” அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்திற்கு உண்பது வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.
மாப்பிள்ளை சம்பா நீராகாரம்
மாப்பிள்ளை சம்பா அரிசி-¼ கிண்ணம், மோர்-கொஞ்சம், சின்னவெங்காயம்-5, உப்பு-தேவையான அளவு.
பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும். நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும். காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, மோர், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து பருகவும். காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் மேலும் நாம் தினம் உண்ணும் இட்லி, தோசை போன்றவைகளும், கலவை சாதம், சாம்பார் சாதம் போன்றவைகள் செய்தும் உண்ணலாம். மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவாறு இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்து சாப்பிடலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. இயற்கை விவசாய முறையில் தற்போது பாரம்பரிய தன்மை மாறாத மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டிலும் பல்வேறு மருத்துவ குணநலன்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தை எந்த வகையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
* வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
* வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
* வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
* சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
ராஜஸ்தான் உணவுகளில் மால்புவா இனிப்பு மிகவும் பிரபலம். இன்று இந்த மால்புவாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
ரவை/ சூஜி - 1 கப்
துருவிய பன்னீர் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
பருப்புகள் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 டீக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 டீக்கரண்டி

செய்முறை :
பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் சர்க்கரைப் பாகினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவு வறண்ட பதத்தில் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த இந்த மாவை 4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.
அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.
சூப்பரான மால்புவா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
ரவை/ சூஜி - 1 கப்
துருவிய பன்னீர் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய்
பருப்புகள் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 டீக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 டீக்கரண்டி

செய்முறை :
பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் சர்க்கரைப் பாகினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவு வறண்ட பதத்தில் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த இந்த மாவை 4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.
அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.
சூப்பரான மால்புவா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.
குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.
உங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.
கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.
பூண்டு
உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.
உங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.
கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.
பூண்டு
உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.
எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.
உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடற்பயிற்சியைச் சில நாட்கள் செய்ததும் மனம் அதைவிட்டுவிட ஏதாவது காரணங்கள் தேடும். சளிப்பிடித்திருக்கிறது, மழை பெய்கிறது, வானிலை மோசம், வேலை நேரத்தில் உடல் சோர்வாகிறது, உடல் வலிக்கிறது, நேர மேலாண்மை பாதிக்கப்படுகிறது எனக் காரணங்களை உருவாக்கி உடற்பயிற்சி செய்வதை நிறுத்தத் தூண்டும்.
உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.
உடற்பயிற்சி என்பது வாழ்வில் ஒரு அங்கம் என்று மாறும்போது நம் உடல் வலுவாக இருக்கும். நம்மை நாமே நேசிக்கத்தொடங்குவோம். அனைத்துவிதமான பாசிட்டிவ் மாற்றங்களுக்கும் உடற்பயிற்சி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வது என்பதைப் பாதியில் நிறுத்த வேண்டாம்.
உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.
உடற்பயிற்சி என்பது வாழ்வில் ஒரு அங்கம் என்று மாறும்போது நம் உடல் வலுவாக இருக்கும். நம்மை நாமே நேசிக்கத்தொடங்குவோம். அனைத்துவிதமான பாசிட்டிவ் மாற்றங்களுக்கும் உடற்பயிற்சி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வது என்பதைப் பாதியில் நிறுத்த வேண்டாம்.
இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிரச்சனைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது.
கர்ப்ப காலத்தில் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும்.
இதைத் தவிர்க்க பிரச்சனைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது. அதே நேரம், பிற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது உங்கள் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.
இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.

அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.
இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் பாதுகாப்பற்றவை.
சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.
இதைத் தவிர்க்க பிரச்சனைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது. அதே நேரம், பிற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது உங்கள் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.
இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.

அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.
இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் பாதுகாப்பற்றவை.
சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கம்பு உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 கப்,
தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் - தலா 1 கப்,
ஏலப் பொடி - சிறிது,
நெய், உப்பு- தேவைக்கு.

செய்முறை :
கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.
இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி.
வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கம்பு மாவு - 1 கப்,
தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் - தலா 1 கப்,
ஏலப் பொடி - சிறிது,
நெய், உப்பு- தேவைக்கு.

செய்முறை :
கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.
இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி.
வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் தங்கள் சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் முதுமை தள்ளிப் போட உதவும்.
முதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் தோற்றத்தைப் பெறும்.
இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
* தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சி அடைவதை தடுத்து சருமம் சுருங்குவதை தடுக்கலாம்.
* கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி, முதுமை தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.
* விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும். அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.
* தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முதுமை தள்ளிப் போடப்படும்.
* பாதாம் எண்ணெயிலும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
* தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சி அடைவதை தடுத்து சருமம் சுருங்குவதை தடுக்கலாம்.
* கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி, முதுமை தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.
* விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும். அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.
* தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முதுமை தள்ளிப் போடப்படும்.
* பாதாம் எண்ணெயிலும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பெண்கள் தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.
இந்தியர்கள் அனைவரும் தங்க நகைகள் மீது கொண்டிருக்கும் மாறாக்காதலுக்கு, அவை அவசரப் பணத் தேவையில் உடனடியாகக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையும் முக்கியக் காரணம். ஆனால், தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.
சரி, தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளைப் பார்க்கலாம்...
தங்க நகைகள்:
தங்க நகைகளை வாங்குவதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக நாம் பின்பற்றும் வழி. தங்க நகைகள் வாங்கும்போது மொத்தக் கொள் முதல் செலவுடன், தயாரிப்புச் செலவுகளும் சேர்ந்திருக்கும். அது மொத்தச் செலவில் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம். அதாவது, செய்கூலி, சேதாரம் என்று நாம் கணிசமானதொரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
வாங்கிய நகையை அதே நகைக்காரரிடம் விற்கும்போது அவர் சந்தை விலைக்கு அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்றாலும் சேதாரம் அல்லது அழுக்கு என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கழித்துவிடுவார். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு குறையும். ஆனால் பலர் இதை உணர்வதில்லை.
தங்க நாணயம், தங்கக் கட்டிகள்:
தங்க நகைகள் வாங்குவதைவிட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்வது சிறந்தது. நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வங்கிகள் தங்க நாணயங்களை விற்றாலும், அவற்றை அவை திரும்ப வாங்கிக்கொள்வதில்லை. நகைக் கடைகள் திரும்ப வாங்கிக் கொண்டாலும், பணமாக திரும்பக் கிடைக்காது. மீண்டும் நகையாகவே வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்துவார்கள். தங்கக் கட்டிகளைப் பொறுத்தவரை, மிக அதிகமான பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும்.
தங்க நகைகளாக இருந்தாலும் சரி அல்லது தங்க நாணயம் மற்றும் கட்டிகளாக இருந்தாலும் சரி அவற்றின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
கோல்டு ஈ.டி.எப்:
மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருக்கும் பலவகையான முதலீட்டு முறைகளில் இந்த கோல்டு ஈ.டி.எப்.பும் ஒன்று. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கி வைக்கப்படும். தங்கத்தின் விலை உயர்வு அல்லது குறைவுக்கேற்ப நம் முதலீட்டின் மதிப்பு மாறும்.

பொதுவாக, யூனிட் கணக்கில் (ஒரு யூனிட்- ஒரு கிராம் தங்கம்) இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். டீமேட் பராமரிப்புக் கட்டணத்தை நாம் கட்ட வேண்டும். மேலும், இதை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகருக்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். வாங்கிய யூனிட்களை விற்றால் பணமாகத்தான் கிடைக்கும், தங்கமாகக் கிடைக்காது.
கோல்டு பண்டு:
கோல்டு பண்டும் கோல்டு ஈ.டி.எப். போன்றதுதான். தங்களுக்கு டீமேட் கணக்கு இல்லை, டிரேடிங் கணக்கு இல்லை என்பவர்கள் இந்த கோல்டு பண்டு மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒருமுறை முதலீடு செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்தபட்சத் தொகையாகும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரூ. 500, ரூ. 1000 என்கிற அளவில் செய்யலாம்.
கோல்டு ஈ.டி.எப் மற்றும் கோல்டு பண்டு திட்டங்கள் காகித வடிவில் இருப்பதால் பராமரிப்பது எளிது. திருடு போய்விடும் என்கிற பயமில்லை. மேலும் செய்கூலி, சேதாரம் என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லை. வேண்டும் என்கிறபோது உடனே விற்கவும் முடியும்.
பங்கு அடிப்படையிலான தங்க முதலீடு:
நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்கச் சுரங்க நிறுவனங்கள் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே நமக்குக் கிடைப்பது லாபமா அல்லது நஷ்டமா என்பது முடிவாகும்.
ஆனால் மேற்சொன்ன முதலீட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப உங்கள் லாப, நஷ்டம் அமையும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். அதற்கு ஆண்டு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டும்.
‘ரிஸ்க்’ வேண்டாம் என்பவர்கள் கோல்டு ஈ.டி.எப். அல்லது கோல்டு பண்டு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நல்லது.
அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்போதும் தங்கம் ஒரு நல்ல முதலீடுதான். எனவே நாம் விரும்பும் விதத்தில் தங்கம் வாங்கலாம்.
சரி, தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளைப் பார்க்கலாம்...
தங்க நகைகள்:
தங்க நகைகளை வாங்குவதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக நாம் பின்பற்றும் வழி. தங்க நகைகள் வாங்கும்போது மொத்தக் கொள் முதல் செலவுடன், தயாரிப்புச் செலவுகளும் சேர்ந்திருக்கும். அது மொத்தச் செலவில் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம். அதாவது, செய்கூலி, சேதாரம் என்று நாம் கணிசமானதொரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
வாங்கிய நகையை அதே நகைக்காரரிடம் விற்கும்போது அவர் சந்தை விலைக்கு அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்றாலும் சேதாரம் அல்லது அழுக்கு என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கழித்துவிடுவார். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு குறையும். ஆனால் பலர் இதை உணர்வதில்லை.
தங்க நாணயம், தங்கக் கட்டிகள்:
தங்க நகைகள் வாங்குவதைவிட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்வது சிறந்தது. நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வங்கிகள் தங்க நாணயங்களை விற்றாலும், அவற்றை அவை திரும்ப வாங்கிக்கொள்வதில்லை. நகைக் கடைகள் திரும்ப வாங்கிக் கொண்டாலும், பணமாக திரும்பக் கிடைக்காது. மீண்டும் நகையாகவே வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்துவார்கள். தங்கக் கட்டிகளைப் பொறுத்தவரை, மிக அதிகமான பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும்.
தங்க நகைகளாக இருந்தாலும் சரி அல்லது தங்க நாணயம் மற்றும் கட்டிகளாக இருந்தாலும் சரி அவற்றின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
கோல்டு ஈ.டி.எப்:
மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருக்கும் பலவகையான முதலீட்டு முறைகளில் இந்த கோல்டு ஈ.டி.எப்.பும் ஒன்று. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கி வைக்கப்படும். தங்கத்தின் விலை உயர்வு அல்லது குறைவுக்கேற்ப நம் முதலீட்டின் மதிப்பு மாறும்.

பொதுவாக, யூனிட் கணக்கில் (ஒரு யூனிட்- ஒரு கிராம் தங்கம்) இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். டீமேட் பராமரிப்புக் கட்டணத்தை நாம் கட்ட வேண்டும். மேலும், இதை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகருக்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். வாங்கிய யூனிட்களை விற்றால் பணமாகத்தான் கிடைக்கும், தங்கமாகக் கிடைக்காது.
கோல்டு பண்டு:
கோல்டு பண்டும் கோல்டு ஈ.டி.எப். போன்றதுதான். தங்களுக்கு டீமேட் கணக்கு இல்லை, டிரேடிங் கணக்கு இல்லை என்பவர்கள் இந்த கோல்டு பண்டு மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒருமுறை முதலீடு செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்தபட்சத் தொகையாகும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரூ. 500, ரூ. 1000 என்கிற அளவில் செய்யலாம்.
கோல்டு ஈ.டி.எப் மற்றும் கோல்டு பண்டு திட்டங்கள் காகித வடிவில் இருப்பதால் பராமரிப்பது எளிது. திருடு போய்விடும் என்கிற பயமில்லை. மேலும் செய்கூலி, சேதாரம் என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லை. வேண்டும் என்கிறபோது உடனே விற்கவும் முடியும்.
பங்கு அடிப்படையிலான தங்க முதலீடு:
நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்கச் சுரங்க நிறுவனங்கள் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே நமக்குக் கிடைப்பது லாபமா அல்லது நஷ்டமா என்பது முடிவாகும்.
ஆனால் மேற்சொன்ன முதலீட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப உங்கள் லாப, நஷ்டம் அமையும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். அதற்கு ஆண்டு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டும்.
‘ரிஸ்க்’ வேண்டாம் என்பவர்கள் கோல்டு ஈ.டி.எப். அல்லது கோல்டு பண்டு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நல்லது.
அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்போதும் தங்கம் ஒரு நல்ல முதலீடுதான். எனவே நாம் விரும்பும் விதத்தில் தங்கம் வாங்கலாம்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால் இதுதொடர்பான ஆராய்ச்சிகள், வேறு சில ஆச்சரியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால் இதுதொடர்பான ஆராய்ச்சிகள், வேறு சில ஆச்சரியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அவை பற்றி...
இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டையர்களான கில்லியன்- ஜாக்கி ஆகியோரில் ஒருவர் அடுத்தவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் தனது ஆய்வின் ஒருபகுதியாக, இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.
அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு, குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கியக் காரணம் என நம்புகிறார் அவர்.
‘‘ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உங்கள் உடலில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை’’ என்கிறார் அவர்.
இருவரின் மலத்தையும் ஆராய்ந்தபோது, மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில நுண்ணுயிரி இனங்களே காணப்பட்டன.
‘‘பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையைக் கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்தில் இருக்காது’’ என்கிறார் ஸ்பெக்டர். இதே போன்ற தன்மையை தான் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப் பேராசிரியர்.
ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட உணவுமுறையை கடைப்பிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும் எனத் தெரியவந்திருக்கிறது.
மக்களில் சிலர் கவனமாக உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள், அத்துடன் உடற்பயிற்சியும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான பலன் கிடைப்பதில்லை. அதேவேளையில் சிலர் குறைவாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விரும்பிய உணவையும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே, அது ஏன்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உடல் எடை விவகாரத்தில் 40 முதல் 70 சதவீதம், பாரம்பரியமாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது எனக் கருதுகின்றனர்.
‘‘மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை ஏற்படுத்த போதுமானதாக இருக்கலாம்’’ என்கிறார், பேராசிரியர் சதாப் பரூக்கி.
குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வைப் பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ண விரும்புகிறார், என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பதில் மரபணுக்களின் பங்கு இருக்கிறது. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம், எப்படி நமது உடல் கொழுப்பைக் கையாளுகிறது என்பன போன்ற விஷயங்களிலும் மரபணுக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் எம்சி4ஆர் மரபணு முக்கியமான ஒன்று.
ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த மரபணு, குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
‘‘நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை அதிகரிப்பதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களைச் செய்துகொள்ள உதவலாம்’’ என்கிறார் பேராசிரியர் பரூக்கி.
உடல் எடைக்கும் சாப்பிடும் நேரத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘‘எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலை செய்கிறோம் என்பதால் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதல்ல. நமது உடல் கடிகாரத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறு சாப்பிட வேண்டியிருக்கிறது. பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாளுவதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது’’
இக்காரணத்தினால், ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளைத் தவிர்ப்பதே நாம் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.
காலை உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக உண்பது சரியல்ல என்கிறார் பிரவுன்.
அதாவது, காலைவேளையில் புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான சக்தியையும் தரும்.
அதைத்தொடர்ந்து, ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும், சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்போதும் கலோரியை கணக்கிட்டு உணவுகளை உட்கொள்வதைவிட, உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வருவது நல்லது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உணவு தொடர்பான காட்சித் தூண்டு தலைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர் களின் அறிவுரை. ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை நமது சமையலறையில் வைத்திராமல், பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக உணவைத் தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.
உடல்பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெறுமனே இரைப்பையின் அளவைக் குறைப்பது மட்டுமல்ல, ஹார்மோன்கள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நமது பசியுணர்வு ஹார்மோன் களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடலில் பசியுணர்வை கட்டுப் படுத்தவும் தூண்டவும் இருவேறு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பசியார்வத்தில் மாறுதல்களை உண்டாக்கும் குடல் நாள ஹார்மோன்களை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். தற்போது இது புதிய மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
மூன்று ஹார்மோன்களின் கலவையானது ஊசி வழியே தினமும், எடை அதிகமானோருக்கு சுமார் நான்கு வாரங்கள் வரை போடப்பட்டது.
‘‘அவர்கள் தற்போது குறைவான பசி உணர்வு கொண்டிருக்கிறார்கள். குறைவாக உண்ணுகிறார்கள். 28 நாட்களில் 28 கிலோ வரை குறைத்திருக்கிறார்கள். இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் ஒருவர் ஆரோக்கியமான எடையை எட்டும் வரை இதைப் பயன்படுத்த முடியும்’’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவை பற்றி...
இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டையர்களான கில்லியன்- ஜாக்கி ஆகியோரில் ஒருவர் அடுத்தவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் தனது ஆய்வின் ஒருபகுதியாக, இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.
அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு, குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கியக் காரணம் என நம்புகிறார் அவர்.
‘‘ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உங்கள் உடலில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை’’ என்கிறார் அவர்.
இருவரின் மலத்தையும் ஆராய்ந்தபோது, மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில நுண்ணுயிரி இனங்களே காணப்பட்டன.
‘‘பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையைக் கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்தில் இருக்காது’’ என்கிறார் ஸ்பெக்டர். இதே போன்ற தன்மையை தான் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப் பேராசிரியர்.
ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட உணவுமுறையை கடைப்பிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும் எனத் தெரியவந்திருக்கிறது.
மக்களில் சிலர் கவனமாக உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள், அத்துடன் உடற்பயிற்சியும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான பலன் கிடைப்பதில்லை. அதேவேளையில் சிலர் குறைவாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விரும்பிய உணவையும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே, அது ஏன்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உடல் எடை விவகாரத்தில் 40 முதல் 70 சதவீதம், பாரம்பரியமாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது எனக் கருதுகின்றனர்.
‘‘மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை ஏற்படுத்த போதுமானதாக இருக்கலாம்’’ என்கிறார், பேராசிரியர் சதாப் பரூக்கி.
குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வைப் பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ண விரும்புகிறார், என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பதில் மரபணுக்களின் பங்கு இருக்கிறது. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம், எப்படி நமது உடல் கொழுப்பைக் கையாளுகிறது என்பன போன்ற விஷயங்களிலும் மரபணுக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் எம்சி4ஆர் மரபணு முக்கியமான ஒன்று.
ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த மரபணு, குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
‘‘நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை அதிகரிப்பதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களைச் செய்துகொள்ள உதவலாம்’’ என்கிறார் பேராசிரியர் பரூக்கி.
உடல் எடைக்கும் சாப்பிடும் நேரத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘‘எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலை செய்கிறோம் என்பதால் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதல்ல. நமது உடல் கடிகாரத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறு சாப்பிட வேண்டியிருக்கிறது. பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாளுவதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது’’
இக்காரணத்தினால், ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளைத் தவிர்ப்பதே நாம் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.
காலை உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக உண்பது சரியல்ல என்கிறார் பிரவுன்.
அதாவது, காலைவேளையில் புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான சக்தியையும் தரும்.
அதைத்தொடர்ந்து, ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும், சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்போதும் கலோரியை கணக்கிட்டு உணவுகளை உட்கொள்வதைவிட, உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வருவது நல்லது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உணவு தொடர்பான காட்சித் தூண்டு தலைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர் களின் அறிவுரை. ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை நமது சமையலறையில் வைத்திராமல், பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக உணவைத் தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.
உடல்பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெறுமனே இரைப்பையின் அளவைக் குறைப்பது மட்டுமல்ல, ஹார்மோன்கள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நமது பசியுணர்வு ஹார்மோன் களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடலில் பசியுணர்வை கட்டுப் படுத்தவும் தூண்டவும் இருவேறு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பசியார்வத்தில் மாறுதல்களை உண்டாக்கும் குடல் நாள ஹார்மோன்களை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். தற்போது இது புதிய மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
மூன்று ஹார்மோன்களின் கலவையானது ஊசி வழியே தினமும், எடை அதிகமானோருக்கு சுமார் நான்கு வாரங்கள் வரை போடப்பட்டது.
‘‘அவர்கள் தற்போது குறைவான பசி உணர்வு கொண்டிருக்கிறார்கள். குறைவாக உண்ணுகிறார்கள். 28 நாட்களில் 28 கிலோ வரை குறைத்திருக்கிறார்கள். இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் ஒருவர் ஆரோக்கியமான எடையை எட்டும் வரை இதைப் பயன்படுத்த முடியும்’’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 10
எலுமிச்சம்பழம் - 5
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.
நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும்.
தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.
சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரிய நெல்லிக்காய் - 10
எலுமிச்சம்பழம் - 5
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.
நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும்.
தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.
சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






