என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :
புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.
தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.
அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.
குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :
புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.
தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.
அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.
குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். தலைமுடிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்துவிதமான நோய் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பளபளப்பான, மென்மையான கூந்தலை பெறுவதற்கும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் தயிருடன், வெந்தயம், எலுமிச்சை சாறு சேர்த்து நிவாரணம் பெறலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். தொடர்ந்து வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

பெண்கள் சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். முதலில் 20 செம்பருத்தி இதழ்களையும், 10 வேப்பிலைகளையும் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ள வேண்டும் அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாக மின்னும்.
கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதற்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவ வேண்டும்.
பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் தயிருடன், வெந்தயம், எலுமிச்சை சாறு சேர்த்து நிவாரணம் பெறலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். தொடர்ந்து வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

பெண்கள் சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். முதலில் 20 செம்பருத்தி இதழ்களையும், 10 வேப்பிலைகளையும் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ள வேண்டும் அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாக மின்னும்.
கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதற்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவ வேண்டும்.
ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் இரும்பு சத்து போதுமானது. ஆனால் பெண்களுக்கு 18 மில்லி கிராம் தேவைப்படுகிறது. அதிலும் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் 27 மில்லி கிராம் வரை தேவைப்படும். கருவுற்றிருக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதற்காகவும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டவும் போதுமான அளவு இரும்பு சத்து உடலுக்கு அவசியப்படுகிறது.
மேலும் மாதவிடாய் சுழற்சியின்போது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கவும் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்சில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், செலீனியம் போன்றவைகளையும் உள்ளடக்கியது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவைகளில் இரும்பு சத்து அதிகம். 30 கிராம் முந்திரி பருப்பில் 2 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இறைச்சியிலும் இரும்பு சத்து அதிகம் கலந்திருக்கிறது. பூசணி விதை, இரும்பு சத்து நிரம்பப்பெற்றது. அதனை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம்.
உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவையும் இரும்பு சத்து அதிகம் கொண்டவை. வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவற்றில் இரும்பு சத்து மட்டு மின்றி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
மேலும் மாதவிடாய் சுழற்சியின்போது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கவும் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்சில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், செலீனியம் போன்றவைகளையும் உள்ளடக்கியது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவைகளில் இரும்பு சத்து அதிகம். 30 கிராம் முந்திரி பருப்பில் 2 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இறைச்சியிலும் இரும்பு சத்து அதிகம் கலந்திருக்கிறது. பூசணி விதை, இரும்பு சத்து நிரம்பப்பெற்றது. அதனை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம்.
உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவையும் இரும்பு சத்து அதிகம் கொண்டவை. வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவற்றில் இரும்பு சத்து மட்டு மின்றி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் செய்யப்படும் கோசுமல்லி என்கிற கோசும்பரி உடல் நலத்திற்கும் உகந்தது.
கோசுமல்லி அல்லது "கோசும்பரி" என்று அழைக்கப்படும் இது தென்னிந்திய திருமணம், விசேஷ விருந்துகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஊறவைத்த பயத்தம் பருப்பையும், பச்சை காய்கறிகளையும், அப்படியே பச்சையாக கலந்து சாலட் போல் பரிமாறுவார்கள்.
செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், கேரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.
தேவையானப்பொருட்கள் :
கேரட் (நடுத்தர அளவு) - 2
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை :
பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.
கேரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.
கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).
ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.
தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கேரட் கலவையில் கொட்டவும்.
ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, கேரட்டுடன் சேர்க்கவும்.
அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செய்வது மிகவும் சுலபம். உடல் நலத்திற்கும் உகந்தது. இதை காரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் செய்வார்கள். எல்லாக் காய்களையும் சேர்த்தோ அல்லது ஒரே காயை பயன்படுத்தியோ செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விருந்துகளில், கேரட் கோசுமல்லிதான் இடம் பெறும்.
தேவையானப்பொருட்கள் :
கேரட் (நடுத்தர அளவு) - 2
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மாங்காய் (துருவியது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பச்சை கொத்துமல்லி தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை :
பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்னீரில் ஊற வைக்கவும்.
கேரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மெல்லிய சிறு துண்டுகளாக் (தீக்குச்சி போல்) நறுக்கிக் கொள்ளவும்.
கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விடவும். (விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).
ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துண்டுகள், உப்பு போட்டுக் கலக்கவும்.
தாளிக்கும் கரண்டி அல்லது ஒரு சிறு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கேரட் கலவையில் கொட்டவும்.
ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, கேரட்டுடன் சேர்க்கவும்.
அத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.
யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட் களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.
கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும்போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.
முன்னணி நலவாழ்வு மையம் ஒன்றின் நிறுவனர் நிகில் கபூர், இந்த யோகாசனத்தை மிக எளிமையாக செய்துவிடலாம் என்கிறார்.
‘‘தண்ணீர் யோகாசனமானது வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகிவருகிறது. யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம். வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது’’ என்று கூறு கிறார்.
தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசை களுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த யோகாசன ஆர்வலரான பார்பரா ஹாஸ், தண்ணீர் ஆசனத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவுக்குப் பறந்து வந்திருக்கிறார். இது உடல் ரீதியாக கொஞ்சம் சவாலான ஆசன முறை என்பது அவரது கருத்து.
‘‘இதில், சுவாசம் மற்றும் உடல் வலுவால் நமது சமநிலையைப் பராமரிப்பதுடன், தண்ணீர் இயக்கத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இது, போகப் போக சவாலாக மாறியது. ஆனால் இதைச் செய்துமுடிக்கும்போது, வெற்றிகரமான, மனமார்ந்த பயிற்சியாகத் தோன்றுகிறது. தரையில் செய்வதைவிட தண்ணீருக்குள் ஆசனம் செய்யும்போது கடினமாகத் தோன்றினாலும், முழு உடம்புக்கும் நல்ல பயிற்சி ஆகிறது’’ என்று பார்பரா கூறுகிறார்.

தண்ணீர் ஆசனம் போலவே, தண்ணீர் மீது மிதக்கும் பலகை மீது செய்யும் ஆசனமும் பிரபலமாகி வருகிறது.
இதுபற்றி நிகில் கபூர், ‘‘நீங்கள் யோகாசனத்தில் தேர்ந்தவராக இருந்தாலும் சரி, இப்போதுதான் தொடங்குகிறவராக இருந்தாலும் சரி, தண்ணீரில் மிதக்கும் பலகையில் கை வைத்ததுமே, இது வேறு மாதிரி என்று உணரத் தொடங்கிவிடுவீர்கள்’’ என்கிறார்.
அலைச்சறுக்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தண்ணீர்ப் பலகை யோகாசனம் பிடிக்கும் என்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல வெளிநாட்டவரும் அலைச்சறுக்குப் பிரியருமான மேரி டைசியாக், தான் இந்தியா வரும்போது இந்த யோகாசனத்தை கற்க இருப்பதாகக் கூறுகிறார்.
‘‘நான் இதை தண்ணீரில் செய்து பார்த்தபோது, எதிர்பார்த்ததைவிட கடினமாகவே இருந்தது. ஆனாலும் நான் அதை ரசித்தேன். தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களைச் செய்வதற்கு உடம்பின் அனைத்து தசைகளையும் பயன் படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது உடம்புக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் என உணர முடிகிறது’’ என்று சொல்கிறார்.
‘‘மிதக்கும் பலகையில் ‘பேலன்ஸ்’ செய்து ஆசனங்களை மேற்கொள்ளும்போது தசைகளின் வலுவையும் தன்மையையும் மேம்படுத்துகிறது, தசைப்பிடிப்பு தன்மையைக் குறைக்கிறது’’ என்றும் பயிற்சி பெற்றவர்கள் கூறுகிறார்கள்.
தண்ணீர் யோகா சனத்தைப் போலவே, ஜும்பா நடன அசைவுகளை தண்ணீருக்குள் மேற்கொள்ளும் அக்வா ஜும்பாவும் யோகாசனப் பிரியர்களை கவரத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாலத்தீவில் உள்ள ஒரு ரிசார்ட் செய்தித்தொடர்பாளரான தீவிகா நிஜாவன் கூறும்போது, ‘‘அக்வா ஜும்பாவை தண்ணீருக்குள் மேற்கொள்ளும்போது தண்ணீரின் எதிர்ப்புத்தன்மையானது தசைத் திரட்சியை அதிகரிக்கவும், உடம்பின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நெகிழ்வுத்தன்மையைக் கூட்டவும் உதவுகிறது’’ என்று சொல்கிறார்.
இனியென்ன, தண்ணீரில் தாராளமாய் மிதக்கலாம்! நீடித்த ஆயுளுடன் வாழலாம்!
கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும்போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.
முன்னணி நலவாழ்வு மையம் ஒன்றின் நிறுவனர் நிகில் கபூர், இந்த யோகாசனத்தை மிக எளிமையாக செய்துவிடலாம் என்கிறார்.
‘‘தண்ணீர் யோகாசனமானது வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகிவருகிறது. யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம். வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது’’ என்று கூறு கிறார்.
தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசை களுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த யோகாசன ஆர்வலரான பார்பரா ஹாஸ், தண்ணீர் ஆசனத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவுக்குப் பறந்து வந்திருக்கிறார். இது உடல் ரீதியாக கொஞ்சம் சவாலான ஆசன முறை என்பது அவரது கருத்து.
‘‘இதில், சுவாசம் மற்றும் உடல் வலுவால் நமது சமநிலையைப் பராமரிப்பதுடன், தண்ணீர் இயக்கத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இது, போகப் போக சவாலாக மாறியது. ஆனால் இதைச் செய்துமுடிக்கும்போது, வெற்றிகரமான, மனமார்ந்த பயிற்சியாகத் தோன்றுகிறது. தரையில் செய்வதைவிட தண்ணீருக்குள் ஆசனம் செய்யும்போது கடினமாகத் தோன்றினாலும், முழு உடம்புக்கும் நல்ல பயிற்சி ஆகிறது’’ என்று பார்பரா கூறுகிறார்.

தண்ணீர் ஆசனம் போலவே, தண்ணீர் மீது மிதக்கும் பலகை மீது செய்யும் ஆசனமும் பிரபலமாகி வருகிறது.
இதுபற்றி நிகில் கபூர், ‘‘நீங்கள் யோகாசனத்தில் தேர்ந்தவராக இருந்தாலும் சரி, இப்போதுதான் தொடங்குகிறவராக இருந்தாலும் சரி, தண்ணீரில் மிதக்கும் பலகையில் கை வைத்ததுமே, இது வேறு மாதிரி என்று உணரத் தொடங்கிவிடுவீர்கள்’’ என்கிறார்.
அலைச்சறுக்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தண்ணீர்ப் பலகை யோகாசனம் பிடிக்கும் என்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல வெளிநாட்டவரும் அலைச்சறுக்குப் பிரியருமான மேரி டைசியாக், தான் இந்தியா வரும்போது இந்த யோகாசனத்தை கற்க இருப்பதாகக் கூறுகிறார்.
‘‘நான் இதை தண்ணீரில் செய்து பார்த்தபோது, எதிர்பார்த்ததைவிட கடினமாகவே இருந்தது. ஆனாலும் நான் அதை ரசித்தேன். தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களைச் செய்வதற்கு உடம்பின் அனைத்து தசைகளையும் பயன் படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது உடம்புக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் என உணர முடிகிறது’’ என்று சொல்கிறார்.
‘‘மிதக்கும் பலகையில் ‘பேலன்ஸ்’ செய்து ஆசனங்களை மேற்கொள்ளும்போது தசைகளின் வலுவையும் தன்மையையும் மேம்படுத்துகிறது, தசைப்பிடிப்பு தன்மையைக் குறைக்கிறது’’ என்றும் பயிற்சி பெற்றவர்கள் கூறுகிறார்கள்.
தண்ணீர் யோகா சனத்தைப் போலவே, ஜும்பா நடன அசைவுகளை தண்ணீருக்குள் மேற்கொள்ளும் அக்வா ஜும்பாவும் யோகாசனப் பிரியர்களை கவரத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாலத்தீவில் உள்ள ஒரு ரிசார்ட் செய்தித்தொடர்பாளரான தீவிகா நிஜாவன் கூறும்போது, ‘‘அக்வா ஜும்பாவை தண்ணீருக்குள் மேற்கொள்ளும்போது தண்ணீரின் எதிர்ப்புத்தன்மையானது தசைத் திரட்சியை அதிகரிக்கவும், உடம்பின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நெகிழ்வுத்தன்மையைக் கூட்டவும் உதவுகிறது’’ என்று சொல்கிறார்.
இனியென்ன, தண்ணீரில் தாராளமாய் மிதக்கலாம்! நீடித்த ஆயுளுடன் வாழலாம்!
பெற்றோராக (அ) மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
என்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம்.
பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..
வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.
அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.
கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.
இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.
கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.
தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்!
பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..
வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.
அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.
கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.
இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.
கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.
தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்!
குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘பிரக்டோஸ்‘ எனும் சர்க்கரையும், கார்பன்டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை.
குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘பிரக்டோஸ்‘ எனும் சர்க்கரையும், கார்பன்டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை. முக்கியமாகத் தாகம் தணிவதும் இல்லை.
குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காபீன் சேர்க்கிறார்கள். இனிப்பை நிலைப்படுத்துவதற்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தை தரக்கூடியவை.
குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் குடிக்கிறோம். இதனால் இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்து, தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இந்த எண்ணம் முற்றிலும் தவறு. உண்மையில் குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும், மீண்டும் குளிர்ந்த மென் பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.

குளிர்பானங்களில் உள்ள ‘பிரக்டோஸ் கார்ன் சிரப்‘ எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. 250 மி.லி. குளிர்பானத்தில் 10 தேக்கரண்டி அளவுக்குச் சர்க்கரை உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை பல மடங்கு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கணையத்தில் இருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. மென் பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு இப்படி இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது.
இதன் விளைவால் இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் ‘டைப் டூ‘ நீரிழிவு நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்கு குளிர்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு. தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதயநோய், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது.
குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காபீன் சேர்க்கிறார்கள். இனிப்பை நிலைப்படுத்துவதற்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தை தரக்கூடியவை.
குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் குடிக்கிறோம். இதனால் இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்து, தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இந்த எண்ணம் முற்றிலும் தவறு. உண்மையில் குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும், மீண்டும் குளிர்ந்த மென் பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.

குளிர்பானங்களில் உள்ள ‘பிரக்டோஸ் கார்ன் சிரப்‘ எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. 250 மி.லி. குளிர்பானத்தில் 10 தேக்கரண்டி அளவுக்குச் சர்க்கரை உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை பல மடங்கு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கணையத்தில் இருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. மென் பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு இப்படி இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது.
இதன் விளைவால் இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் ‘டைப் டூ‘ நீரிழிவு நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்கு குளிர்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு. தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதயநோய், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது.
கிவி பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.
‘கிவி’ என்பது நாம் அதிகம் உட்கொள்ளாத கனி. இதன் விலையும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது, கிவி.
உதாரணமாக, இப்பழம் இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், அது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
மாரடைப்புக்கு முன் பலவகையான நோயியல் நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, கட்டியான அடைப்பாக மாறி, இதயத் தமனிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.
இவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது. இது வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும். இப்பழத்தில் ‘போலேட்’ என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட மிக அதிக அளவில் உள்ளன.
இந்தச் சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளவை ஆகும். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
கிவி பழத்தில் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
இப்பழத்தில் உள்ள வைட்டமின் இ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கத் துணைபுரிவதுடன், பெண்கள் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகிறது.
முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்தான மதிய உணவு முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
முருங்கை கீரை - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்,
காய்ந்த மிளகாய் - 1,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.
கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
முருங்கை கீரை - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்,
காய்ந்த மிளகாய் - 1,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.
கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறையை பார்க்கலாம்.
கழுத்து வலி வயதாகும்போது, முதுகுத்தண்டு, கழுத்து இவற்றை இணைக்கும் எலும்புகள், கார்டிலேஜ் எனப்படும் ஜவ்வுகள் ஆகியன பழுதடையும், கிழியும் நிலை ஏற்படலாம்.
முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம், மதுப்பழக்கம் காரணமாக வரலாம்; பரம்பரை காரணமாக வரலாம்; கழுத்தை ஒரே நிலையில் அதிகநேரம் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள தொழில் காரணமாக வரலாம்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதை கழுத்து எக்ஸ்ரேக்கள் காட்டுகின்றன. பலருக்கு இந்நோய் அதிக தீவிரமாகும் வரை, அறிகுறிகள் ஏதும் தென்படாது. திடீரென பாதிப்பு வரும். வலியும், இறுக்கமும் உண்டாகும்.
முதுகுத்தண்டுக்கும், அதனுடே பயணிக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால், நரம்போ, முதுகுத்தண்டோ அழுத்தப்படுவதால் வரலாம். அவ்வாறு அழுத்தப்படும்போது, கை, கால், தோள், பாதம் ஆகிய உறுப்புகளில் நடுக்கம், உணர்ச்சியின்மை, வலுவிழத்தல் ஆகியன நேரலாம். நடக்கச் சிரமம் ஏற்படும். உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு இணைப்பு பாதிக்கப்படலாம். சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழக்க நேரிடும்.
முதுகுத்தண்டின் ஒவ்வொரு கண்ணிக்கும் இடையே உள்ள வட்டு ஆனது அதிர்வைத் தடுக்கும் மெத்தை போல இயங்கும். 40 வயதாகும்போது, பெரும்பாலானவர்களின் முதுகுத்தண்டு வட்டு உலர்ந்து, சுருங்கி ஒரு வட்டு உடன் மற்றொன்று உராய்ந்து போகத் தொடர்கிறது.வட்டு இன் வெளிப்புறம் பாதிக்கப்படலாம். வெடிப்புகள் உண்டாகி, எலும்பு உப்பி விடுவோ அல்லது டிஸ்க் இடையே உள்ள ஜவ்வு இடம் பெயர்வதோ நடக்கிறது.
அவை நரம்பு/முதுகுத்தண்டை அழுத்த நேரலாம். டிஸ்க் தேய்மானம் காரணமாக, நமது நோய் எதிர்ப்புத் திறன் சக்தியானது, முதுகுத்தண்டை பலப்படுத்தும் நோக்கில் கால்சியத்தை படியச் செய்யும். அது சரியான இடத்தில் படியாமல் அதிகப்படியான வளர்ச்சியாக உருவாகி, நரம்புகளை அழுத்தும். ஓர் எலும்பை மற்றொன்றுடன் இணைக்கும் திசுக்கள் வயதாவதால் இறுகிவிடும். அதனால் கழுத்தின் அசைவு சிரமமாகும். அதிகம் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்போது நிரந்தரமான பழுது/ பாதிப்பு ஏற்படும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை:
அடிப்படையில், ஆயுர்வேத சிகிச்சை முறையானது வாத, பித்தம் எனப்படும் 3 தோஷங்களையும் சமநிலையில் வைப்பதே ஆகும். ஆரோக்கியமான ஒருவருக்கு, இந்த 3 தோஷமும் சமநிலை ஆக இருக்கும். இவற்றின் முக்கிய வேலைகள், அசைவுகளில் மற்றும், வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், ஸ்திரத்தன்மையைக் காத்தல் ஆகியன ஆகும்.
இந்த 3 தோஷங்களின் சமநிலையில் மாறுதல் ஏற்படும் போது, ஆரோக்கியம் கெடுகிறது; நோய் வருகிறது சோதனா (சுத்திகரிப்பு/கழிவுநீக்கம்) சமனா. யோகா ஆகிய சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் தோஷங்களின் சீர்குலைவை மாற்றி, சமநிலைக்கு கொண்டுவருவதே ஆகும்.
உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம் ஆகியனவற்றில் மாறுதல் கொண்டு வருவதன் மூலம் ஆன்மிகம், மனம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நல்லமுறையில் காக்கவும், முன்னேற்றம் காணவும் முடிகிறது.
மூன்றுவித சிகிச்சை முறைகள்:
சமன சிகிச்சை:
பல்வேறு மருந்துகள், மூன்று தோஷங்களைச் சமநிலைப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதானவர்கள், உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாதவர்கள், நடைமுறை மாற்றங்களை அனுசரிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு பஞ்சகர்மா சிகிச்சை தர முடியாது; பஞ்சகர்மா சிகிச்சை தரமுடியாத போது, மருந்துகள் மூலமாக மட்டுமே, நோயைத் தீர்க்க முடியும்.
சோதனா சிகிச்சை முறை:
பஞ்சகர்மா சிகிச்சை மூலம், உடலில் இருக்கும், அதிகப்படியான தோஷங்களை நீக்குவதே சோதனா சிகிச்சை, இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், விரைந்து குணம் கிடைக்கும் தவறு நேரும் பட்சத்தில் மிகுந்த பிரச்சனைகள், குழப்பங்கள் வரும்.
பஞ்சகர்மா சிகிச்சை முன்பும், மருத்துவம் கூறும் உணவுமுறை, வாழ்வியல் முறையை அனுசரிக்க வேண்டும். பஞ்சகர்மா சிகிச்சை முறை சரியாக மேற்கொள்ளப்பட்டு, உணவுமுறை, பிறவாழ்வியல் முறை மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், குழப்பங்கள் வரும்.

ரசாயன சிகிச்சை:
உடல் இயற்கையான உறுதி நிலைப்பாடு பெற்று, திசுக்கள் புத்துணர்ச்சி அடைந்து, அவற்றின் இயல்பான வேலைகளை மாற்றிவிடும் காரணிகளைச் சரி செய்வதே இந்த சிகிச்சை ஆகும்.வாத தோஷம் உடலில் இருக்கும் அசைவுகளுக்கானது நரம்பு மண்டலம், தசைநார் மண்டலம் ஆகியவற்றோடு முக்கியமான தொடர்பு உடையது. வாத தோஷ நிலைப்பாட்டில் மாறுதல் வரும்போது, இவ்விரு மண்டலங்களிலும் நோய் வருகிறது.
வாத தோஷ மாறுபாடு இருவகைகளில் ஏற்படலாம்.
(1) வாத தோஷம் தன்னிச்சையாக அதிகமாவது.
(2) பித்தம், கபம் ஆகிய தோஷங்களில் ஏற்படும் மாறுபாட்டால் வாதம் தடைப்படுதல் என்பன அவை.
வாதம் தடைப்படுவதால் நீர்கோர்த்து, பலூன்போல உடல் உப்பிவிடும். எங்கே வலி இருக்கிறது என்பதே தெரியாமல் ஒருவிதவலி உண்டாகும். வாதம் மிகமிக அதிகமாகும்போது, எலும்பு வட்டுகளுக்கிடையேயான தாறுமாறான வளர்ச்சி ஆகியன உண்டாகும்.
சிகிச்சை முறைகள்:
சோதன, சமன சிகிச்சைகள் மூலம் தடைப்பட்ட அதிகப்படுத்தப்பட்ட வாத தோஷத்தை சமநிலைப்படு-த்தி பாதிக்கப்பட்ட திசுக்களை, புத்துணர்வு பெறச்செய்வதே சிகிச்சையின் நோக்கம். இந்நோய் காரணமாக மன அழுத்தம் ஆகியன நேர வாய்ப்பு இருப்பதால் உணவு முறை மாற்றம், குறைந்த அளவிலாவது உடற்பயிற்சிகள், யோகா ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.
வாத தோஷ சீர்குலைவு இரண்டு வகையில் நேர்வதால் அதற்கான சிகிச்சை முறையும் வெவ்வேறாக இருக்கிறது. பிற தோஷங்களால் வாத, தோஷ மாறுபாடு நேரும்போது, அதைச் சரி செய்ய சோதன, சமன சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.வாதம் தன்னிச்சையாக மாறும்போது, பாதிப்புகளைக் குறைக்கும் புத்துணர்வு தரும் சிகிச்சைகள் தரப்படும்.
சிகிச்சை முறைகளை வைத்து இவ்வியாதி 3 நிலைகளாக வகைப்படுத்தப்படும்.
முதல் நிலை
ஆரம்ப நிலையில் அவ்வப்போது லேசானவலி இருக்கும்; அவ்வப்போது இறுக்கமாக இருப்பது போல உணரப்படும். அப்போது வாத, கப, சமன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரப்படவேண்டும்.
இரண்டாம் நிலை
இந்நிலையில் கழுத்தை அசைக்கும் போது வலி மற்றும் இறுக்கம், கழுத்தின் பின்பகுதியில் வலி, அங்கிருந்து தோள், தோள்பட்டை ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுதல் ஆகிய காணப்படும். அதற்கு வாத-பித்த சமன மருந்துகள் மற்றும் வாத-பித்த சமன சிகிச்சை தரப்படும்.
மூன்றாம் நிலை
வாந்தி வருவது போன்ற உணர்வு, நடக்கும் நடை மாறிப்போதல், மயக்கம், சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஆகியன காணப்படும். இதற்கு வாதசமன மருந்துகளும், வாத சமன சிகிச்சையும் தரப்படும்.
- டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-2367200, 2313188, 2313194)
முதுகுத்தண்டின் வட்டுக்களின் இடையே உள்ள திரவம் குறைந்து சுருங்கி விடுகிறது. கழுத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாக இந்நோய் வரலாம், மதுப்பழக்கம் காரணமாக வரலாம்; பரம்பரை காரணமாக வரலாம்; கழுத்தை ஒரே நிலையில் அதிகநேரம் வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள தொழில் காரணமாக வரலாம்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதை கழுத்து எக்ஸ்ரேக்கள் காட்டுகின்றன. பலருக்கு இந்நோய் அதிக தீவிரமாகும் வரை, அறிகுறிகள் ஏதும் தென்படாது. திடீரென பாதிப்பு வரும். வலியும், இறுக்கமும் உண்டாகும்.
முதுகுத்தண்டுக்கும், அதனுடே பயணிக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால், நரம்போ, முதுகுத்தண்டோ அழுத்தப்படுவதால் வரலாம். அவ்வாறு அழுத்தப்படும்போது, கை, கால், தோள், பாதம் ஆகிய உறுப்புகளில் நடுக்கம், உணர்ச்சியின்மை, வலுவிழத்தல் ஆகியன நேரலாம். நடக்கச் சிரமம் ஏற்படும். உறுப்புகளுக்கிடையேயான தொடர்பு இணைப்பு பாதிக்கப்படலாம். சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இழக்க நேரிடும்.
முதுகுத்தண்டின் ஒவ்வொரு கண்ணிக்கும் இடையே உள்ள வட்டு ஆனது அதிர்வைத் தடுக்கும் மெத்தை போல இயங்கும். 40 வயதாகும்போது, பெரும்பாலானவர்களின் முதுகுத்தண்டு வட்டு உலர்ந்து, சுருங்கி ஒரு வட்டு உடன் மற்றொன்று உராய்ந்து போகத் தொடர்கிறது.வட்டு இன் வெளிப்புறம் பாதிக்கப்படலாம். வெடிப்புகள் உண்டாகி, எலும்பு உப்பி விடுவோ அல்லது டிஸ்க் இடையே உள்ள ஜவ்வு இடம் பெயர்வதோ நடக்கிறது.
அவை நரம்பு/முதுகுத்தண்டை அழுத்த நேரலாம். டிஸ்க் தேய்மானம் காரணமாக, நமது நோய் எதிர்ப்புத் திறன் சக்தியானது, முதுகுத்தண்டை பலப்படுத்தும் நோக்கில் கால்சியத்தை படியச் செய்யும். அது சரியான இடத்தில் படியாமல் அதிகப்படியான வளர்ச்சியாக உருவாகி, நரம்புகளை அழுத்தும். ஓர் எலும்பை மற்றொன்றுடன் இணைக்கும் திசுக்கள் வயதாவதால் இறுகிவிடும். அதனால் கழுத்தின் அசைவு சிரமமாகும். அதிகம் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்போது நிரந்தரமான பழுது/ பாதிப்பு ஏற்படும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை:
அடிப்படையில், ஆயுர்வேத சிகிச்சை முறையானது வாத, பித்தம் எனப்படும் 3 தோஷங்களையும் சமநிலையில் வைப்பதே ஆகும். ஆரோக்கியமான ஒருவருக்கு, இந்த 3 தோஷமும் சமநிலை ஆக இருக்கும். இவற்றின் முக்கிய வேலைகள், அசைவுகளில் மற்றும், வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், ஸ்திரத்தன்மையைக் காத்தல் ஆகியன ஆகும்.
இந்த 3 தோஷங்களின் சமநிலையில் மாறுதல் ஏற்படும் போது, ஆரோக்கியம் கெடுகிறது; நோய் வருகிறது சோதனா (சுத்திகரிப்பு/கழிவுநீக்கம்) சமனா. யோகா ஆகிய சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் தோஷங்களின் சீர்குலைவை மாற்றி, சமநிலைக்கு கொண்டுவருவதே ஆகும்.
உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைமாற்றம் ஆகியனவற்றில் மாறுதல் கொண்டு வருவதன் மூலம் ஆன்மிகம், மனம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நல்லமுறையில் காக்கவும், முன்னேற்றம் காணவும் முடிகிறது.
மூன்றுவித சிகிச்சை முறைகள்:
சமன சிகிச்சை:
பல்வேறு மருந்துகள், மூன்று தோஷங்களைச் சமநிலைப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதானவர்கள், உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாதவர்கள், நடைமுறை மாற்றங்களை அனுசரிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு பஞ்சகர்மா சிகிச்சை தர முடியாது; பஞ்சகர்மா சிகிச்சை தரமுடியாத போது, மருந்துகள் மூலமாக மட்டுமே, நோயைத் தீர்க்க முடியும்.
சோதனா சிகிச்சை முறை:
பஞ்சகர்மா சிகிச்சை மூலம், உடலில் இருக்கும், அதிகப்படியான தோஷங்களை நீக்குவதே சோதனா சிகிச்சை, இதை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், விரைந்து குணம் கிடைக்கும் தவறு நேரும் பட்சத்தில் மிகுந்த பிரச்சனைகள், குழப்பங்கள் வரும்.
பஞ்சகர்மா சிகிச்சை முன்பும், மருத்துவம் கூறும் உணவுமுறை, வாழ்வியல் முறையை அனுசரிக்க வேண்டும். பஞ்சகர்மா சிகிச்சை முறை சரியாக மேற்கொள்ளப்பட்டு, உணவுமுறை, பிறவாழ்வியல் முறை மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், குழப்பங்கள் வரும்.

ரசாயன சிகிச்சை:
உடல் இயற்கையான உறுதி நிலைப்பாடு பெற்று, திசுக்கள் புத்துணர்ச்சி அடைந்து, அவற்றின் இயல்பான வேலைகளை மாற்றிவிடும் காரணிகளைச் சரி செய்வதே இந்த சிகிச்சை ஆகும்.வாத தோஷம் உடலில் இருக்கும் அசைவுகளுக்கானது நரம்பு மண்டலம், தசைநார் மண்டலம் ஆகியவற்றோடு முக்கியமான தொடர்பு உடையது. வாத தோஷ நிலைப்பாட்டில் மாறுதல் வரும்போது, இவ்விரு மண்டலங்களிலும் நோய் வருகிறது.
வாத தோஷ மாறுபாடு இருவகைகளில் ஏற்படலாம்.
(1) வாத தோஷம் தன்னிச்சையாக அதிகமாவது.
(2) பித்தம், கபம் ஆகிய தோஷங்களில் ஏற்படும் மாறுபாட்டால் வாதம் தடைப்படுதல் என்பன அவை.
வாதம் தடைப்படுவதால் நீர்கோர்த்து, பலூன்போல உடல் உப்பிவிடும். எங்கே வலி இருக்கிறது என்பதே தெரியாமல் ஒருவிதவலி உண்டாகும். வாதம் மிகமிக அதிகமாகும்போது, எலும்பு வட்டுகளுக்கிடையேயான தாறுமாறான வளர்ச்சி ஆகியன உண்டாகும்.
சிகிச்சை முறைகள்:
சோதன, சமன சிகிச்சைகள் மூலம் தடைப்பட்ட அதிகப்படுத்தப்பட்ட வாத தோஷத்தை சமநிலைப்படு-த்தி பாதிக்கப்பட்ட திசுக்களை, புத்துணர்வு பெறச்செய்வதே சிகிச்சையின் நோக்கம். இந்நோய் காரணமாக மன அழுத்தம் ஆகியன நேர வாய்ப்பு இருப்பதால் உணவு முறை மாற்றம், குறைந்த அளவிலாவது உடற்பயிற்சிகள், யோகா ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நல்லது.
வாத தோஷ சீர்குலைவு இரண்டு வகையில் நேர்வதால் அதற்கான சிகிச்சை முறையும் வெவ்வேறாக இருக்கிறது. பிற தோஷங்களால் வாத, தோஷ மாறுபாடு நேரும்போது, அதைச் சரி செய்ய சோதன, சமன சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.வாதம் தன்னிச்சையாக மாறும்போது, பாதிப்புகளைக் குறைக்கும் புத்துணர்வு தரும் சிகிச்சைகள் தரப்படும்.
சிகிச்சை முறைகளை வைத்து இவ்வியாதி 3 நிலைகளாக வகைப்படுத்தப்படும்.
முதல் நிலை
ஆரம்ப நிலையில் அவ்வப்போது லேசானவலி இருக்கும்; அவ்வப்போது இறுக்கமாக இருப்பது போல உணரப்படும். அப்போது வாத, கப, சமன மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரப்படவேண்டும்.
இரண்டாம் நிலை
இந்நிலையில் கழுத்தை அசைக்கும் போது வலி மற்றும் இறுக்கம், கழுத்தின் பின்பகுதியில் வலி, அங்கிருந்து தோள், தோள்பட்டை ஆகிய பகுதிகளுக்கு வலி பரவுதல் ஆகிய காணப்படும். அதற்கு வாத-பித்த சமன மருந்துகள் மற்றும் வாத-பித்த சமன சிகிச்சை தரப்படும்.
மூன்றாம் நிலை
வாந்தி வருவது போன்ற உணர்வு, நடக்கும் நடை மாறிப்போதல், மயக்கம், சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஆகியன காணப்படும். இதற்கு வாதசமன மருந்துகளும், வாத சமன சிகிச்சையும் தரப்படும்.
- டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-2367200, 2313188, 2313194)
உடலில் இரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.
மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தாங்கமுடியாத வலி; அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்; அசெளகரியமாக உணர்தல், இவற்றோடு உடலில் ரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.
அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள் தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.
அதிக ரத்தப்போக்கு எடுத்துச்சொல்லும் எச்சரிக்கைகள்...
வயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்துகொள்ளலாம்.
20 - 25 வயதுள்ளவர்கள் `Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.
25 முதல் 35 வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.
45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு) அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது.

எதனால் ஏற்படுகிறது?
* ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.
* மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.
* கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.
* தைராய்டு பிரச்சனைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.
இரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் பெண்களே. பருவமடைதல், மாதவிடாய், பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையோடு சத்து மாத்திரைகளும் உட்கொள்ளலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாக அறிந்துகொள்வதே, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.
அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள் தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.
அதிக ரத்தப்போக்கு எடுத்துச்சொல்லும் எச்சரிக்கைகள்...
வயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்துகொள்ளலாம்.
20 - 25 வயதுள்ளவர்கள் `Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.
25 முதல் 35 வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.
45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு) அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது.

எதனால் ஏற்படுகிறது?
* ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.
* மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.
* கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.
* தைராய்டு பிரச்சனைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.
இரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் பெண்களே. பருவமடைதல், மாதவிடாய், பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையோடு சத்து மாத்திரைகளும் உட்கொள்ளலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாக அறிந்துகொள்வதே, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.
அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 2 கப்
புளிக்காய்ச்சல்...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பொடி செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி (தனியா) - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சூப்பரான ஐயங்கார் புளியோதரை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம் - 2 கப்
புளிக்காய்ச்சல்...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பொடி செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி (தனியா) - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சூப்பரான ஐயங்கார் புளியோதரை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






