என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதைப் தவிர்க்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாகிறது.
உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கு உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம். நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதைப் தவிர்க்க வேண்டும். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. அவர்கள் படுக்கைக்குப் போகும் முன் உள்ளே தள்ளும், அளவுக்கு அதிகமான உணவானது, அவர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகின்றது.
இரவு உணவு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரவு நேரம் முழுவதும் அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு உணவிற்குப் பின் மேலும் அதிகமாக உணவை உட்கொள்ளுகின்றார்கள்.
இவர்கள் பகல் நேரத்தில் மிகக் குறைவாகவும், இரவு நேரத்தில் மிக அதிகமாகவும் உணவை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாகக் கூட தூங்க முடியாது. ஏனெனில் அவர்கள் தூக்கத்தில் கூட உணவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெறுப்புடனும், குற்ற உணர்ச்சியுடனும் காணப்படுவார்கள்.

ஏனெனில் அவர்கள் உணவு உட்கொள்ளும் பொழுதே அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி, அதைப் பற்றி பயப்படத் தொடங்கி விடுவார்கள். இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட நோய்கள், தூக்கக் கோளாறுகள் மற்றும் மனநிலை கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் உடையவர்கள், உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மாலை 6 மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டாலும், படுக்கைக்குச் நள்ளிரவு தான் செல்கின்றீர்கள் எனில் உங்களூடைய உணவிற்கும், படுக்கைக்கும் இடையே நீண்ட நேர இடைவெளி உள்ளது. அந்த நீண்ட இடைவெளி உங்களை அதிக உணவை உட்கொள்ளச் சொல்லி தூண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பலரும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கின்றார்கள். அது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிடுகின்றது என நினைக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், உங்களுடைய உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி உங்களுக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கத்தையும் தரும்.
இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. அவர்கள் படுக்கைக்குப் போகும் முன் உள்ளே தள்ளும், அளவுக்கு அதிகமான உணவானது, அவர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகின்றது.
இரவு உணவு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரவு நேரம் முழுவதும் அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு உணவிற்குப் பின் மேலும் அதிகமாக உணவை உட்கொள்ளுகின்றார்கள்.
இவர்கள் பகல் நேரத்தில் மிகக் குறைவாகவும், இரவு நேரத்தில் மிக அதிகமாகவும் உணவை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாகக் கூட தூங்க முடியாது. ஏனெனில் அவர்கள் தூக்கத்தில் கூட உணவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெறுப்புடனும், குற்ற உணர்ச்சியுடனும் காணப்படுவார்கள்.

ஏனெனில் அவர்கள் உணவு உட்கொள்ளும் பொழுதே அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி, அதைப் பற்றி பயப்படத் தொடங்கி விடுவார்கள். இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட நோய்கள், தூக்கக் கோளாறுகள் மற்றும் மனநிலை கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் உடையவர்கள், உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மாலை 6 மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டாலும், படுக்கைக்குச் நள்ளிரவு தான் செல்கின்றீர்கள் எனில் உங்களூடைய உணவிற்கும், படுக்கைக்கும் இடையே நீண்ட நேர இடைவெளி உள்ளது. அந்த நீண்ட இடைவெளி உங்களை அதிக உணவை உட்கொள்ளச் சொல்லி தூண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பலரும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கின்றார்கள். அது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிடுகின்றது என நினைக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், உங்களுடைய உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி உங்களுக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கத்தையும் தரும்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது தான் சிறந்தது என்று நினைக்கிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதுபோல... இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள். தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது, அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது, தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, மற்றவர்களை மன்னிப்பது, தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம். இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை. அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அது அவர்களுக்கு நல்லது.
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள். தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது, அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது, தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, மற்றவர்களை மன்னிப்பது, தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம். இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை. அதனால், 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அது அவர்களுக்கு நல்லது.
கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் நல்லது. இன்று எளிய முறையில் வரகு அரிசியில் கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி -100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து பொடிக்க :
உளுந்து - 20 கிராம்
கடலை பருப்பு - 20 கிராம்
மிளகு - 5 கிராம்
சீரகம் - 5 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
கொத்துமல்லி - 30 கிராம்
கறிவேப்பிலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க :
கடுகு - 5 கிராம்
பெருங்காய தூள் - சிறிதளவு

செய்முறை :
வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, உதிரியாக வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வரகு கறிவேப்பிலை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வரகு அரிசி -100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து பொடிக்க :
உளுந்து - 20 கிராம்
கடலை பருப்பு - 20 கிராம்
மிளகு - 5 கிராம்
சீரகம் - 5 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
கொத்துமல்லி - 30 கிராம்
கறிவேப்பிலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க :
கடுகு - 5 கிராம்
பெருங்காய தூள் - சிறிதளவு

செய்முறை :
வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, உதிரியாக வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வரகு கறிவேப்பிலை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குளிப்பதற்கு முன் சருமம் கடினமாகவும் வறண்டும் இருப்பதால் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் சருமத்தை நன்கு நனைத்துவிட்டு அதன் பிறகு முடியை நீக்க முயல வேண்டும். இது பெண்கள் கால்களை ஷேவ் செய்யும் போது பொதுவாகச் செய்யும் தவறு.
உங்கள் கால் சருமத்தை ஷேவ் செய்யும் முன் சுத்தம் செய்வது அவசியம். இதனால் வறண்ட மற்றும் இறந்த தோல் பகுதிகள் நீக்கப்பட்டு சரும எரிச்சலும் குறைக்கப்படும்.
சோப்பு உங்கள் சருமத்தை வறட்சியாகவும், அரிப்புடையதாகவும் செய்யும். எனவே சோப்பிற்கு பதிலாக ஷேவிங் பாம்மை உபயோகிப்பது அரிப்பைக் குறைத்து நல்ல பலன் தரும்.

பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது செய்யும் ஒரு பொதுவான விஷயம் பழைய ரேசரை உபயோகிப்பது. ரேசர்கள் காலப் போக்கில் மழுங்கிவிடுவதுடன் நெருக்கமான சேவை தருவதில்லை. மாறாக அவை சரும எரிச்சலையும் தரும் என்பதால் அவற்றை முதலில் தூக்கி எறியுங்கள்.
ஷேவ் செய்ய உகந்த வழி உங்கள் காலின் கீழ் பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செய்ய வேண்டும். இதனால் உங்கள் முடி வளர்ச்சி குறைவதுடன் மிருதுவான சருமமும் கிடைக்கும்.
உங்க ரேசரை இன்னொருத்தருக்குக் கொடுக்காதீங்க.. இல்ல அவங்களோடதை நீங்க உபயோகிக்காதீங்க… இது பல பெண்கள் செய்கிற தவறு. ஏனென்றால் இதில் பல நோய்த்தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும்.
கிரீம் ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறட்சி அடையும். எனவே ஒரு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. இது எரிச்சல் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.
குளிப்பதற்கு முன் சருமம் கடினமாகவும் வறண்டும் இருப்பதால் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் சருமத்தை நன்கு நனைத்துவிட்டு அதன் பிறகு முடியை நீக்க முயல வேண்டும். இது பெண்கள் கால்களை ஷேவ் செய்யும் போது பொதுவாகச் செய்யும் தவறு.
உங்கள் கால் சருமத்தை ஷேவ் செய்யும் முன் சுத்தம் செய்வது அவசியம். இதனால் வறண்ட மற்றும் இறந்த தோல் பகுதிகள் நீக்கப்பட்டு சரும எரிச்சலும் குறைக்கப்படும்.
சோப்பு உங்கள் சருமத்தை வறட்சியாகவும், அரிப்புடையதாகவும் செய்யும். எனவே சோப்பிற்கு பதிலாக ஷேவிங் பாம்மை உபயோகிப்பது அரிப்பைக் குறைத்து நல்ல பலன் தரும்.

பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது செய்யும் ஒரு பொதுவான விஷயம் பழைய ரேசரை உபயோகிப்பது. ரேசர்கள் காலப் போக்கில் மழுங்கிவிடுவதுடன் நெருக்கமான சேவை தருவதில்லை. மாறாக அவை சரும எரிச்சலையும் தரும் என்பதால் அவற்றை முதலில் தூக்கி எறியுங்கள்.
ஷேவ் செய்ய உகந்த வழி உங்கள் காலின் கீழ் பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செய்ய வேண்டும். இதனால் உங்கள் முடி வளர்ச்சி குறைவதுடன் மிருதுவான சருமமும் கிடைக்கும்.
உங்க ரேசரை இன்னொருத்தருக்குக் கொடுக்காதீங்க.. இல்ல அவங்களோடதை நீங்க உபயோகிக்காதீங்க… இது பல பெண்கள் செய்கிற தவறு. ஏனென்றால் இதில் பல நோய்த்தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும்.
கிரீம் ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறட்சி அடையும். எனவே ஒரு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. இது எரிச்சல் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும்.
காலணிகள் வாங்கும் போது நம் பாதத்தை காக்குமா, என்பதைப் பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, அது அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில் தான் போய் முடியும்.
நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா, நம் பாதங்களுக்கு செட் ஆகுமா என்பதைப் பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, அது நம்மை உயரமாகக் காட்டுமா, அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்.
குதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு பிளான்டர் பேசிட்டீஸ் (plantar fascicts) எனப்படும் குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குதிகால் செருப்பு அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கணுக்கால் அதிக அளவு அழுத்தத்துக்கு உண்டாகும். விளைவு, வலி ஏற்பட்டு, நரம்புகள் தன் சம நிலையை இழந்து சுளுக்கு ஏற்படும். கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெறுங்காலிலோ அல்லது தட்டையான செருப்புகள் அணியும்போதோ, நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும். ஆனால், குதிகால் செருப்பு அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும். இதனால், நம் உடலானது சற்று முன்னோக்கி வளைந்து இருக்கும். உடலின் ஒட்டு மொத்த எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால் மூட்டு வலி ஏற்படும். தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும்.

குதிகால் செருப்பு தொடர்ந்து அணிபவர்களுக்குச் சிலசமயம் குதிகால் சிவந்து, லேசான வலி இருக்கும். குதிகால் உள் எலும்புகள் சேதமடைந்ததின் அறிகுறி இது. இதை அறியாமல், ஆயில் மசாஜ், கால் நரம்புகளை உருவிவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.
குதிகால் செருப்பு தொடர்ந்து அணியும்போது, கால் விரல்கள் பாதத்துடன் சேரும் பகுதி அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்.
மேலும் குதிகால் செருப்பு அணியும்போது அதைப் பேலன்ஸ் செய்ய நம் உடல் நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும். இதனால், உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றவை ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்புகளும் ஏற்படலாம்.
குதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு பிளான்டர் பேசிட்டீஸ் (plantar fascicts) எனப்படும் குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குதிகால் செருப்பு அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கணுக்கால் அதிக அளவு அழுத்தத்துக்கு உண்டாகும். விளைவு, வலி ஏற்பட்டு, நரம்புகள் தன் சம நிலையை இழந்து சுளுக்கு ஏற்படும். கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெறுங்காலிலோ அல்லது தட்டையான செருப்புகள் அணியும்போதோ, நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும். ஆனால், குதிகால் செருப்பு அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும். இதனால், நம் உடலானது சற்று முன்னோக்கி வளைந்து இருக்கும். உடலின் ஒட்டு மொத்த எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால் மூட்டு வலி ஏற்படும். தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும்.

குதிகால் செருப்பு தொடர்ந்து அணிபவர்களுக்குச் சிலசமயம் குதிகால் சிவந்து, லேசான வலி இருக்கும். குதிகால் உள் எலும்புகள் சேதமடைந்ததின் அறிகுறி இது. இதை அறியாமல், ஆயில் மசாஜ், கால் நரம்புகளை உருவிவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.
குதிகால் செருப்பு தொடர்ந்து அணியும்போது, கால் விரல்கள் பாதத்துடன் சேரும் பகுதி அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்.
மேலும் குதிகால் செருப்பு அணியும்போது அதைப் பேலன்ஸ் செய்ய நம் உடல் நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும். இதனால், உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றவை ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்புகளும் ஏற்படலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் சூப்புகள் மிகவும் சத்தானவை. சூப்பை நம் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுவோம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
வெங்காயம் - 2
பீட்ரூட் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்கறி சத்து நீர் - 7 கப்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை :
கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும்.
இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 - 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.
சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
வெங்காயம் - 2
பீட்ரூட் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்கறி சத்து நீர் - 7 கப்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை :
கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும்.
இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 - 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.
சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு. ஆனால், இதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் நன்மைகளைப் பெற முடியும். ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
``ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டியது அவசியம்.
* ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையைத் துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது. ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைக் கண்டிப்பாகப் பின்பற்றவும்.
* முதன்முதலாக ட்ரெட்மில் உபயோகிப்பவர்கள், வேகத்தை எப்படிக் கூட்டிக்கொள்வது அல்லது குறைப்பது, எமெர்ஜென்சி ஸ்டாப் எப்படிச் செய்வது, பாடல் கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது எப்படி என்பதையெல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
* ட்ரெட்மில்லின் ப்ளஸ், அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.
* உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பதுச் சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும்.
* பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை, பயிற்சியை முடிக்கும்போது டீஹைட்ரேஷன் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’.
``ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டியது அவசியம்.
* ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையைத் துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது. ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைக் கண்டிப்பாகப் பின்பற்றவும்.
* முதன்முதலாக ட்ரெட்மில் உபயோகிப்பவர்கள், வேகத்தை எப்படிக் கூட்டிக்கொள்வது அல்லது குறைப்பது, எமெர்ஜென்சி ஸ்டாப் எப்படிச் செய்வது, பாடல் கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது எப்படி என்பதையெல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
* ட்ரெட்மில்லின் ப்ளஸ், அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.
* உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பதுச் சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும்.
* பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை, பயிற்சியை முடிக்கும்போது டீஹைட்ரேஷன் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’.
முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
மனிதனின் சில முறையற்ற வாழ்வு முறையினை காலம் அவனுக்கு உணர்த்தி திருத்தி விடும். ஆனால் அந்த காலம் சற்று நீண்டு இருக்கலாம். அதனால் பல இழப்புகளுக்குப் பிறகே நல்ல பலன்கள் கிடைக்கலாம். இது இயற்கையின் சூழல். இதன் போக்கினை மாற்றுவது கடினம். ஆனால் முடிவில் நல்லதே ஏற்படும். அவ்வகையில் இன்று ஆச்சர்யப்படும் படியான ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகின்றது.
வெளிநாடுகளில் காலம் காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. வயதானவர்கள், முதியோர்கள் ஆகியோர் முதியோர் இல்லங்களிலேயே இருப்பார்கள். அங்கு முதியோர் இல்லங்களும், அரசாங்கமும் அந்த முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும். அவர்களின் உடல்நலம், மனநலம் இவற்றுக்கு எந்த குறையும் இல்லாத கவனிப்பு இருக்கும்.
இவர்களின் பிள்ளைகளும், உறவினர்களும் முக்கிய பண்டிகை நாட்களிலும், பிறந்த நாட்களின் பொழுதும் சென்று இவர்களை பார்த்து வருவார்கள். வெளி நாடுகளில் வீடுகளுக்கு வேலை செய்ய உதவி ஆட்கள் கிடையாது. உதவி ஆட்கள் வந்தாலும் செலவு மிக அதிகம். அனைத்து வேலைகளையும் வீட்டு மனிதர்களே செய்துகொள்ள வேண்டும்.
அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் முதியோர்களை கவனித்துக் கொள்வது கடினம் என்ற காரணமே அநேக முதியோர் இல்லங்கள் தோன்றின. அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. அதனைப் பார்த்தே நம் நாட்டிலும் முதியோர் இல்லங்கள் தோன்றின. இங்கு பொருளாதார பிரச்சினை அதிகம்.
எனவே கூடுதல் செலவு செய்தாலே நல்ல முதியோர் இல்லங்கள் கிடைக்கும் நிலை உள்ளது. இவ்விடத்தில் நான் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற பேச்சினைப் பற்றி கூறவரவில்லை. நான் கூறவருவதெல்லாம் வெளிநாடுகளில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அநேக முதியவர்கள் தன் குடும்பத்துடனே வாழ முற்படுகின்றனர். குடும்பம் இல்லாதவர்கள் தன் போன்று இருக்கும் பிறருடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழும் முயற்சியினை மேற்கொள்கின்றனர் என்பது பற்றிதான்.

* பல வசதிகள் இருந்தாலும் உறவு, நட்பு இன்றி தனித்து இருப்பதே பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றதாம்.
* உடன், உறவுகள் இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவினை நன்கு சமைத்து உண்ண முடிகின்றதாம். தனித்து இருப்பவர்களுக்கு இது இயலுவதில்லை.
* உடன் இருப்பவர்களால் பல உதவிகளை பெற முடிகின்றது. உடைமாற்ற, மாத்திரை எடுத்துக் கொள்வது போன்றவை உடன். உறவுகள் இருக்கும் பொழுதே முடிகின்றதாம்.
* வேலைச் சுமை குறைவதால் எளிதில் சோர்வடையாமல் இருக்கச் செய்கின்றதாம்.
* வெளியில் துணையோடு சென்று வர முடிகின்றது.
* அவசரத்திற்கு அருகில் நம்பகமானவர்கள் இருப்பதால் அச்சமின்றி இருக்க முடிகின்றது.
மருத்துவ முன்னேற்றம் இன்று மனிதனுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளது. ஆனால் முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை வெளிநாட்டினர் நன்கு உணர ஆரம்பித்து விட்டனர். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
வெளிநாடுகளில் காலம் காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. வயதானவர்கள், முதியோர்கள் ஆகியோர் முதியோர் இல்லங்களிலேயே இருப்பார்கள். அங்கு முதியோர் இல்லங்களும், அரசாங்கமும் அந்த முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும். அவர்களின் உடல்நலம், மனநலம் இவற்றுக்கு எந்த குறையும் இல்லாத கவனிப்பு இருக்கும்.
இவர்களின் பிள்ளைகளும், உறவினர்களும் முக்கிய பண்டிகை நாட்களிலும், பிறந்த நாட்களின் பொழுதும் சென்று இவர்களை பார்த்து வருவார்கள். வெளி நாடுகளில் வீடுகளுக்கு வேலை செய்ய உதவி ஆட்கள் கிடையாது. உதவி ஆட்கள் வந்தாலும் செலவு மிக அதிகம். அனைத்து வேலைகளையும் வீட்டு மனிதர்களே செய்துகொள்ள வேண்டும்.
அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் முதியோர்களை கவனித்துக் கொள்வது கடினம் என்ற காரணமே அநேக முதியோர் இல்லங்கள் தோன்றின. அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. அதனைப் பார்த்தே நம் நாட்டிலும் முதியோர் இல்லங்கள் தோன்றின. இங்கு பொருளாதார பிரச்சினை அதிகம்.
எனவே கூடுதல் செலவு செய்தாலே நல்ல முதியோர் இல்லங்கள் கிடைக்கும் நிலை உள்ளது. இவ்விடத்தில் நான் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற பேச்சினைப் பற்றி கூறவரவில்லை. நான் கூறவருவதெல்லாம் வெளிநாடுகளில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அநேக முதியவர்கள் தன் குடும்பத்துடனே வாழ முற்படுகின்றனர். குடும்பம் இல்லாதவர்கள் தன் போன்று இருக்கும் பிறருடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழும் முயற்சியினை மேற்கொள்கின்றனர் என்பது பற்றிதான்.

* பல வசதிகள் இருந்தாலும் உறவு, நட்பு இன்றி தனித்து இருப்பதே பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றதாம்.
* உடன், உறவுகள் இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவினை நன்கு சமைத்து உண்ண முடிகின்றதாம். தனித்து இருப்பவர்களுக்கு இது இயலுவதில்லை.
* உடன் இருப்பவர்களால் பல உதவிகளை பெற முடிகின்றது. உடைமாற்ற, மாத்திரை எடுத்துக் கொள்வது போன்றவை உடன். உறவுகள் இருக்கும் பொழுதே முடிகின்றதாம்.
* வேலைச் சுமை குறைவதால் எளிதில் சோர்வடையாமல் இருக்கச் செய்கின்றதாம்.
* வெளியில் துணையோடு சென்று வர முடிகின்றது.
* அவசரத்திற்கு அருகில் நம்பகமானவர்கள் இருப்பதால் அச்சமின்றி இருக்க முடிகின்றது.
மருத்துவ முன்னேற்றம் இன்று மனிதனுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளது. ஆனால் முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை வெளிநாட்டினர் நன்கு உணர ஆரம்பித்து விட்டனர். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
பால்வினை நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்து வாழ்நாளை குறைக்கும் பல்வேறு நோய்களில், பால்வினை நோயும் ஒன்று. இந்நோய் உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் பால்வினை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
பொதுவாக பால்வினை நோய் பாதிப்புகளுக்கு முறையற்ற புணர்ச்சி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, பல துணைகளுடன் உடலுறவு, ஓரினச்சேர்க்கை போன்றவை காரணமாக இருக்கிறது. இந்நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை பால்வினை நோய் மருத்துவ அலுவலர் கலாவதி கூறியதாவது:-
பால்வினை நோய்கள்
ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பு உறுப்புகளில் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தான் பால்வினை நோய்கள் ஆகும். இதன் கிருமி தொற்று ஆண்களை பொறுத்தவரை, வெள்ளைப்படுதல், பிறப்பு உறுப்புகளில் புண் ஏற்படுதல், அரிப்புடன் கூடிய வீக்கம், தொடை இடுக்குகளில் வீங்குதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதுதவிர பிறப்பு உறுப்புகளில் மருக்கள் தோன்ற வாய்ப்புண்டு.
பெண்களை பொறுத்தவரை, மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இதுபோன்ற பால்வினை நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் அலட்சியப்படுத்தக்கூடாது. டாக்டரிடம் சென்று அதற்குரிய பரிசோதனை செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
10-க்கும் மேற்பட்ட...
பால்வினை நோய்களை பொறுத்தவரை, சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்றவை முக்கிய கிருமி தொற்று ஆகும். இதுதவிர டெனிடல் அல்சர் என்ற கிருமி தொற்றும் உண்டு. இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். பால்வினை நோய்களை கண்டறிய வி.டி.ஆர்.எல். என்ற பரிசோதனை இருக்கிறது.
இந்த பரிசோதனை செய்தால் பால்வினை நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய முடியும். ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டாலும் கூட இருவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
30 நாள் சிகிச்சை
ஒருவருக்கு பால்வினை நோய் கிருமி தாக்குதலை கண்டறிய வி.டி.ஆர்.எல். பரிசோதனை மேற்கொள்ளும் போது அதனுடன் எச்.ஐ.வி. (எய்ட்ஸ் கிருமி) உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோன்ற பரிசோதனையின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. பரிசோதனையின் முடிவில் பால்வினை நோய் கிருமி அல்லது எச்.ஐ.வி. நோய் கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.
பொதுவாக கிருமி தொற்றின் தாக்குதல் எந்த அளவுக்கு உள்ளதோ? அல்லது எந்த வகையான கிருமி தொற்றால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது? என்பதை பரிசோதனையின் கண்டறிந்தவுடன் குறைந்தபட்சம் 7 நாட்கள் அல்லது 21 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.
குணப்படுத்தக்கூடிய நோய்
பால்வினை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். ஆணும், பெண்ணும் ஒன்று சேராமல் விலகி இருத்தல் அவசியம். டாக்டர் கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் டாக்டரின் அறிவுரைப்படி நடக்காமல் போனால் சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி போகும்.

பொதுவாக பால்வினை நோய் என்பது தீர்க்க முடியாத நோய் அல்ல. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.
அலட்சியம் கூடாது
ஒருவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டு சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்தால் அது எச்.ஐ.வி. நோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்று எச்.ஐ.வி. நோய்கிருமி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர் சிகிச்சையையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக 100-ல் 99 சதவீதம், ஆண், பெண் முறையற்ற புணர்ச்சியால் மட்டுமே பால்வினை நோய் தாக்க வாய்ப்புண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு சதவீதம் மட்டுமே, பால்வினை நோய் உள்ள ஒருவரின் ரத்தத்தை அடுத்தவருக்கு செலுத்துவதால் அந்நோய் அவருக்கு வர வாய்ப்பு உண்டு. ஆனாலும் இப்போது பலவகையான பரிசோதனைகளுக்கு பிறகே ஒருவரின் ரத்தம் அடுத்தவருக்கு செலுத்தப்படுகிறது. அதனால் அந்த வகையிலும் பால்வினை நோய் தாக்குவதற்கும் வாய்ப்பு குறைந்து விட்டது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
பொதுவாக பால்வினை நோயை பொறுத்தவரை பெண்களுக்கு கூடுதலாக ஒரு பிரச்சினை ஏற்படக்கூடும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதல் ஆகும். பால்வினை நோய் தாக்கிய பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது நாளடைவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் பெண்கள் இதில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலை கண்டறிந்து விட்டால் அதனை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
மீண்டும் பரிசோதனை
பொதுவாக பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளானவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் முற்றிலும் நோய் தாக்குதலில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. சிகிச்சை நாட்கள் முடிந்த பிறகு டாக்டரை அணுகி மீண்டும் பரிசோதனை செய்து கொள்வதும், அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பதும் அவசியம்.
பொதுவாக ஆண், பெண் சேர்க்கையில் ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்று முன்னோர்கள் கூறிய நல்லொழுக்க முறையை கடைபிடித்து வந்தால் இதுபோன்ற பால்வினை நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக பால்வினை நோய் பாதிப்புகளுக்கு முறையற்ற புணர்ச்சி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, பல துணைகளுடன் உடலுறவு, ஓரினச்சேர்க்கை போன்றவை காரணமாக இருக்கிறது. இந்நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை பால்வினை நோய் மருத்துவ அலுவலர் கலாவதி கூறியதாவது:-
பால்வினை நோய்கள்
ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பு உறுப்புகளில் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தான் பால்வினை நோய்கள் ஆகும். இதன் கிருமி தொற்று ஆண்களை பொறுத்தவரை, வெள்ளைப்படுதல், பிறப்பு உறுப்புகளில் புண் ஏற்படுதல், அரிப்புடன் கூடிய வீக்கம், தொடை இடுக்குகளில் வீங்குதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதுதவிர பிறப்பு உறுப்புகளில் மருக்கள் தோன்ற வாய்ப்புண்டு.
பெண்களை பொறுத்தவரை, மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இதுபோன்ற பால்வினை நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் அலட்சியப்படுத்தக்கூடாது. டாக்டரிடம் சென்று அதற்குரிய பரிசோதனை செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
10-க்கும் மேற்பட்ட...
பால்வினை நோய்களை பொறுத்தவரை, சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்றவை முக்கிய கிருமி தொற்று ஆகும். இதுதவிர டெனிடல் அல்சர் என்ற கிருமி தொற்றும் உண்டு. இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். பால்வினை நோய்களை கண்டறிய வி.டி.ஆர்.எல். என்ற பரிசோதனை இருக்கிறது.
இந்த பரிசோதனை செய்தால் பால்வினை நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய முடியும். ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டாலும் கூட இருவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
30 நாள் சிகிச்சை
ஒருவருக்கு பால்வினை நோய் கிருமி தாக்குதலை கண்டறிய வி.டி.ஆர்.எல். பரிசோதனை மேற்கொள்ளும் போது அதனுடன் எச்.ஐ.வி. (எய்ட்ஸ் கிருமி) உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோன்ற பரிசோதனையின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. பரிசோதனையின் முடிவில் பால்வினை நோய் கிருமி அல்லது எச்.ஐ.வி. நோய் கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.
பொதுவாக கிருமி தொற்றின் தாக்குதல் எந்த அளவுக்கு உள்ளதோ? அல்லது எந்த வகையான கிருமி தொற்றால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது? என்பதை பரிசோதனையின் கண்டறிந்தவுடன் குறைந்தபட்சம் 7 நாட்கள் அல்லது 21 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.
குணப்படுத்தக்கூடிய நோய்
பால்வினை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். ஆணும், பெண்ணும் ஒன்று சேராமல் விலகி இருத்தல் அவசியம். டாக்டர் கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் டாக்டரின் அறிவுரைப்படி நடக்காமல் போனால் சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி போகும்.

பொதுவாக பால்வினை நோய் என்பது தீர்க்க முடியாத நோய் அல்ல. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.
அலட்சியம் கூடாது
ஒருவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டு சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்தால் அது எச்.ஐ.வி. நோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்று எச்.ஐ.வி. நோய்கிருமி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர் சிகிச்சையையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக 100-ல் 99 சதவீதம், ஆண், பெண் முறையற்ற புணர்ச்சியால் மட்டுமே பால்வினை நோய் தாக்க வாய்ப்புண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு சதவீதம் மட்டுமே, பால்வினை நோய் உள்ள ஒருவரின் ரத்தத்தை அடுத்தவருக்கு செலுத்துவதால் அந்நோய் அவருக்கு வர வாய்ப்பு உண்டு. ஆனாலும் இப்போது பலவகையான பரிசோதனைகளுக்கு பிறகே ஒருவரின் ரத்தம் அடுத்தவருக்கு செலுத்தப்படுகிறது. அதனால் அந்த வகையிலும் பால்வினை நோய் தாக்குவதற்கும் வாய்ப்பு குறைந்து விட்டது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
பொதுவாக பால்வினை நோயை பொறுத்தவரை பெண்களுக்கு கூடுதலாக ஒரு பிரச்சினை ஏற்படக்கூடும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதல் ஆகும். பால்வினை நோய் தாக்கிய பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது நாளடைவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் பெண்கள் இதில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலை கண்டறிந்து விட்டால் அதனை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
மீண்டும் பரிசோதனை
பொதுவாக பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளானவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் முற்றிலும் நோய் தாக்குதலில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. சிகிச்சை நாட்கள் முடிந்த பிறகு டாக்டரை அணுகி மீண்டும் பரிசோதனை செய்து கொள்வதும், அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பதும் அவசியம்.
பொதுவாக ஆண், பெண் சேர்க்கையில் ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்று முன்னோர்கள் கூறிய நல்லொழுக்க முறையை கடைபிடித்து வந்தால் இதுபோன்ற பால்வினை நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டீ, காபியுடன் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். இன்று மொறுமொறு சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த சேமியா - 200 கிராம்
வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
அரிசி மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.
மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வறுத்த சேமியா - 200 கிராம்
வெங்காயம் - கால் கப்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
அரிசி மாவு - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.
மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம்.
உலகளவில் மருத்துவத்துக்கு சவால் விடும் நோய்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. பொதுவாக பால்வினை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. இந்நோய் கிருமிகளை அழிக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இந்நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை.
எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் மாலா கூறியதாவது:-
மனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய வைரஸ் கிருமிகளுக்கு எச்.ஐ.வி. என்று பெயர். இந்த கிருமிகளின் தாக்கத்தால் உண்டாகும் நோய் தான் எய்ட்ஸ் ஆகும். பொதுவாக எய்ட்ஸ் நோய் 4 வழிகளில் பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, எச்.ஐ.வி. கிருமி உள்ள ஒருவரின் ரத்தத்தை பிறருக்கு செலுத்துதல், கருவுற்று இருக் கும் தாயின் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவுதல், சுத்தம் செய்யப்படாத ஊசிகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய 4 காரணங்களால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
பொதுவாக ரத்தத்தை நன்கு பரிசோதித்த பிறகுதான் அந்த ரத்தம் பிறருக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு முறை பயன்படுத்திய ஊசியை இப்போதெல்லாம் மீண்டும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த 2 முறைகளிலும் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைந்து விட்டது. மேலும் கருவுற்று இருக்கும் தாயின் மூலம் எய்ட்ஸ் பரவுதலும் குறைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பற்ற உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் நோய் இப்போது பரவி வருகிறது.
பொதுவாக ஒருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று ஏற்பட்டவுடன் ரத்த பரிசோதனை செய்தால் அந்த ரத்தத்தில் கிருமிகள் இருப்பது உடனே தெரியாது. அதற்கு பிறகு 3 முதல் 6 மாதங்கள் கழித்தே பரிசோதனையின் முடிவில் எச்.ஐ.வி. கிருமிகள் உள்ளது தெரியவரும். இதுதவிர ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டாலும் அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால் 8 அல்லது 10 ஆண்டுகள் வரை எய்ட்ஸ் நோய் குறித்த அறிகுறியோ, தொந்தரவோ இருக்காது. அதன்பிறகே எய்ட்ஸ் குறித்த பிரச்சினைகள் வெளியில் தெரியும்.
அதேபோல் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும் அது சாதாரண காய்ச்சல் என்று நினைக்க கூடாது. இதுதவிர அடிக்கடி சுவாசக்கோளாறு, பல்வேறு தொந்தரவுகள் வந்தாலும் அதற்கு சிகிச்சை எடுக்கும்போது அதனுடன் எச்.ஐ.வி. பரிசோதனையையும் அவசியம் செய்ய வேண்டும்.
எச்.ஐ.வி. கிருமி பாதிப்பால் தொடர்ந்து இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடலின் எடை குறைதல், தோல் வியாதிகள், பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஏற்படுதல், கை, கால் இடுக்குகள் மற்றும் கழுத்தில் கட்டி உருவாகுதல், வாயில் புண் உண்டாகுதல், நுரையீரல் பாதிப்பு, இதயத்தை சுற்றியுள்ள சதை பகுதி பாதிப்பு, மூளை, சிறுநீரகம், கண், உணவு குழாய் பாதிப்பு உள்பட அனேக நோய்களின் அறிகுறிகள் தோன்றும்.
இதுதவிர பெண்களாக இருந்தால் மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுடன் கர்ப்பப்பை புற்றுநோயும் கூடுதலாக வர வாய்ப்புண்டு.
பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் கிருமி தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய முதலில் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கிருமி தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டால் சி.டி-4 பரிசோதனை என்னும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்பிறகு வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை தெரியவரும்.

எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி என்னும் கூட்டு மருந்துடன் கூடிய வாழ்நாள் சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த கூட்டு மருந்தில் 2 நிலை மாத்திரைகள் உள்ளன. முதலில் 1-வது நிலை மாத்திரைகள் வழங்கப்படும். அந்த மாத்திரைக்கு எய்ட்ஸ் கிருமி கட்டுப்படவில்லையென்றால் அடுத்ததாக 2-ம் நிலை மாத்திரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு சிகிச்சையை தொடங்கியவர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை சி.டி-4 பரிசோதனை செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்றும், வைரஸ் பரிசோதனை செய்து வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என்றும் பார்க்க வேண்டும்.
அதேபோல் கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி தாக்குதல் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இருக்கும். இதனை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தொடங்கும் போதே, அந்த பெண்ணுக்கும், கணவனுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் யாருக்கு எய்ட்ஸ் கிருமி தொற்று உள்ளது என்று தெரிந்து விடும். அப்போதே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இதுதவிர அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 1½ வயது வரை 3 முறை ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். குழந்தை பிறந்த 45-வது நாளில் முதல் ரத்த பரிசோதனையும், 6 முதல் 1 வருடத்துக்குள் 2-வது முறையும், 1½ வயதில் 3-வது முறையாக ரத்த பரிசோதனை செய்து எய்ட்ஸ் தாக்குதல் உள்ளதா? என்பது கண்டறியப்படும். அவ்வாறு கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்படும்.
பொதுவாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஐ.சி.டி.சி என்னும் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம். அங்கு இருக்கும் ஆலோசகர்களிடம் இந்நோய் குறித்த விவரங்களை முற்றிலும் அறிந்து கொள்ளலாம். இந்நோய் குறித்து சிறிய அளவில் அறிகுறிகள் தோன்றினாலும் கண்டிப்பாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய வேண்டும்.
வாழ்வில் ஒருமுறை கூட எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாதவர்களுக்கு கண்டிப்பாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும். அதனால் இந்நோயால் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல் திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் ஏ.ஆர்.டி. மையத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வழங்கப்படும் மாத்திரைகளுடன் நல்ல சத்தான, உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் உண்ணலாம். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வாழ்நாள் அதிகரிக்கும்.
எய்ட்ஸ் நோய் தாக்கிய ஒருவரை தொடுவதாலோ, அவருடன் நெருங்கி பழகுவதாலோ, அவரின் உடைகளை உடுத்துவதாலோ, அவர் இருமும், தும்மும் போதோ, அவருடன் இருப்பதாலோ, அவர்கள் பயன்படுத்திய கழிவறையை பிறர் பயன்படுத்தும் போதோ எய்ட்ஸ் நோய் பரவாது. அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் பயமின்றி பழகலாம். மேலும் அவர்களை அலட்சியப்படுத்தாமல், அன்பு காட்டி, ஆதரவு கொடுக்க வேண்டும்.
சமூகத்தால் அவர்களை ஒதுக்கக்கூடாது. எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். நாள்தோறும் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். இதுதவிர பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்துவதும், நல்லொழுக்கமான வாழ்வும் இந்நோயிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எய்ட்ஸ் நோய் எதனால் பரவுகிறது. இதன் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? அவ்வாறு தாக்கினால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் மாலா கூறியதாவது:-
மனிதனின் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய வைரஸ் கிருமிகளுக்கு எச்.ஐ.வி. என்று பெயர். இந்த கிருமிகளின் தாக்கத்தால் உண்டாகும் நோய் தான் எய்ட்ஸ் ஆகும். பொதுவாக எய்ட்ஸ் நோய் 4 வழிகளில் பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, எச்.ஐ.வி. கிருமி உள்ள ஒருவரின் ரத்தத்தை பிறருக்கு செலுத்துதல், கருவுற்று இருக் கும் தாயின் மூலம் பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவுதல், சுத்தம் செய்யப்படாத ஊசிகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் ஆகிய 4 காரணங்களால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
பொதுவாக ரத்தத்தை நன்கு பரிசோதித்த பிறகுதான் அந்த ரத்தம் பிறருக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு முறை பயன்படுத்திய ஊசியை இப்போதெல்லாம் மீண்டும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த 2 முறைகளிலும் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைந்து விட்டது. மேலும் கருவுற்று இருக்கும் தாயின் மூலம் எய்ட்ஸ் பரவுதலும் குறைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பற்ற உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் நோய் இப்போது பரவி வருகிறது.
பொதுவாக ஒருவருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று ஏற்பட்டவுடன் ரத்த பரிசோதனை செய்தால் அந்த ரத்தத்தில் கிருமிகள் இருப்பது உடனே தெரியாது. அதற்கு பிறகு 3 முதல் 6 மாதங்கள் கழித்தே பரிசோதனையின் முடிவில் எச்.ஐ.வி. கிருமிகள் உள்ளது தெரியவரும். இதுதவிர ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டாலும் அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால் 8 அல்லது 10 ஆண்டுகள் வரை எய்ட்ஸ் நோய் குறித்த அறிகுறியோ, தொந்தரவோ இருக்காது. அதன்பிறகே எய்ட்ஸ் குறித்த பிரச்சினைகள் வெளியில் தெரியும்.
அதேபோல் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும் அது சாதாரண காய்ச்சல் என்று நினைக்க கூடாது. இதுதவிர அடிக்கடி சுவாசக்கோளாறு, பல்வேறு தொந்தரவுகள் வந்தாலும் அதற்கு சிகிச்சை எடுக்கும்போது அதனுடன் எச்.ஐ.வி. பரிசோதனையையும் அவசியம் செய்ய வேண்டும்.
எச்.ஐ.வி. கிருமி பாதிப்பால் தொடர்ந்து இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடலின் எடை குறைதல், தோல் வியாதிகள், பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஏற்படுதல், கை, கால் இடுக்குகள் மற்றும் கழுத்தில் கட்டி உருவாகுதல், வாயில் புண் உண்டாகுதல், நுரையீரல் பாதிப்பு, இதயத்தை சுற்றியுள்ள சதை பகுதி பாதிப்பு, மூளை, சிறுநீரகம், கண், உணவு குழாய் பாதிப்பு உள்பட அனேக நோய்களின் அறிகுறிகள் தோன்றும்.
இதுதவிர பெண்களாக இருந்தால் மேற்கூறிய அனைத்து அறிகுறிகளுடன் கர்ப்பப்பை புற்றுநோயும் கூடுதலாக வர வாய்ப்புண்டு.
பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் கிருமி தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய முதலில் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கிருமி தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டால் சி.டி-4 பரிசோதனை என்னும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறித்த பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்பிறகு வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை தெரியவரும்.

எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி என்னும் கூட்டு மருந்துடன் கூடிய வாழ்நாள் சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த கூட்டு மருந்தில் 2 நிலை மாத்திரைகள் உள்ளன. முதலில் 1-வது நிலை மாத்திரைகள் வழங்கப்படும். அந்த மாத்திரைக்கு எய்ட்ஸ் கிருமி கட்டுப்படவில்லையென்றால் அடுத்ததாக 2-ம் நிலை மாத்திரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு சிகிச்சையை தொடங்கியவர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை சி.டி-4 பரிசோதனை செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்றும், வைரஸ் பரிசோதனை செய்து வைரஸ் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என்றும் பார்க்க வேண்டும்.
அதேபோல் கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி தாக்குதல் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இருக்கும். இதனை தவிர்க்க அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கு கர்ப்பகால சிகிச்சைகள் தொடங்கும் போதே, அந்த பெண்ணுக்கும், கணவனுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் யாருக்கு எய்ட்ஸ் கிருமி தொற்று உள்ளது என்று தெரிந்து விடும். அப்போதே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இதுதவிர அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 1½ வயது வரை 3 முறை ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். குழந்தை பிறந்த 45-வது நாளில் முதல் ரத்த பரிசோதனையும், 6 முதல் 1 வருடத்துக்குள் 2-வது முறையும், 1½ வயதில் 3-வது முறையாக ரத்த பரிசோதனை செய்து எய்ட்ஸ் தாக்குதல் உள்ளதா? என்பது கண்டறியப்படும். அவ்வாறு கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்படும்.
பொதுவாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் ஐ.சி.டி.சி என்னும் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம். அங்கு இருக்கும் ஆலோசகர்களிடம் இந்நோய் குறித்த விவரங்களை முற்றிலும் அறிந்து கொள்ளலாம். இந்நோய் குறித்து சிறிய அளவில் அறிகுறிகள் தோன்றினாலும் கண்டிப்பாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய வேண்டும்.
வாழ்வில் ஒருமுறை கூட எச்.ஐ.வி. பரிசோதனை செய்யாதவர்களுக்கு கண்டிப்பாக எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும். அதனால் இந்நோயால் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதேபோல் திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும் ஏ.ஆர்.டி. மையத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வழங்கப்படும் மாத்திரைகளுடன் நல்ல சத்தான, உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் உண்ணலாம். அதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வாழ்நாள் அதிகரிக்கும்.
எய்ட்ஸ் நோய் தாக்கிய ஒருவரை தொடுவதாலோ, அவருடன் நெருங்கி பழகுவதாலோ, அவரின் உடைகளை உடுத்துவதாலோ, அவர் இருமும், தும்மும் போதோ, அவருடன் இருப்பதாலோ, அவர்கள் பயன்படுத்திய கழிவறையை பிறர் பயன்படுத்தும் போதோ எய்ட்ஸ் நோய் பரவாது. அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் பயமின்றி பழகலாம். மேலும் அவர்களை அலட்சியப்படுத்தாமல், அன்பு காட்டி, ஆதரவு கொடுக்க வேண்டும்.
சமூகத்தால் அவர்களை ஒதுக்கக்கூடாது. எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். நாள்தோறும் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். இதுதவிர பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்துவதும், நல்லொழுக்கமான வாழ்வும் இந்நோயிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம்.
இது டிஜிட்டல் யுகம். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் செல்போன், கணினி திரையில் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்தவொரு விஷயத்தையும் முன் பின் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவர்கன் கருத்துகளையும் அறிந்து கொள்வதோடு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவிக்க முடிகிறது. அந்த அளவிற்கு சமூகவலைத்தளங்கள் சமூகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.
‘ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளலாம். முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். பண உதவி, அவசர உதவி, ரத்ததானம் என எந்தவொரு உதவியாக இருந்தாலும் நொடிப்பொழுதில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நிறை வேற்றிவிடலாம்’ என நவீன தொழில்நுட்பங்களின் வரப்பிரசாதமாக சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
ஆனால் இன்று சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி வாழ்வின் ஒரு அங்கமாக பாவிப்பவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆரம்பத்தில் செல்பி மோகத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களின் ‘லைக்’ கிடைப்பதற்காக ஏங்கினார்கள். இப்போது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று யாரும் நினைப்பதில்லை. நிறைய பேர் இதை ஒரு சமூக அந்தஸ்தாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
சமூக வலைத்தளங்களால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம் என்று சர்வே கூறுகிறது. சாதாரணமாகவே ஊர்வம்பு பேசுவதில் விருப்பம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் அடுத்தவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்தைக் கண், காது, மூக்கு வைத்து உண்மை போலவே சித்தரித்து விடுவார்கள். இது பின்னாளில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் நான்கு பேர் கூடி ஊர் வம்பு பேசும் வேலையை இப்போது சமூக வலைத்தளங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
நிறைய பேர் எதைத் தான் சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்ற வரம்பே இல்லாமல் மனம் போன போக்கிலே விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உருவாகும் பின்விளைவுகள் அவர்களுக்கே தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.

நம்மைப் பற்றி நம் குடும்பத்தை பற்றி பொது இடத்தில் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதைப் போல தான் இதுவும். எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் தோன்றாது. சைபர் கிரைம்கள் உருவாக இது போன்ற தகவல் பரிமாற்றங்கள் வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க மக்களிடையே போதுமான விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மனோரீதியாக இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் பல. எந்த ஒரு விஷயத்தையும் நேரில் சொல்ல தயங்குபவர்கள் கூட இப்படி சமூகவலைத்தள குழுக்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். மற்றவர்கள் பதிவு செய்யும் விஷயங்களுக்கு இணையாக தங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். மனதில் பூட்டிவைத்திருந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதால் மனம் ‘ரிலாக்ஸ்’ ஆவதாக உணர்கிறார்கள். அப்படி பகிர்ந்து கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது? என்று யாரும் யோசிப்பதில்லை.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிடமுடியாது. இயந்திரத்தனமாக ஓடோடி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நண்பர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கான சூழல் உருவாகாதபோது மன அழுத்தத்தை போக்க சமூகவலைத்தள குழுக்கள் உதவுகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் சம்பந்தமான விஷயங்கள், முக்கிய ஆலோசனைகள், சாதனைகள், மதிப்புரைகள், வாழ்த்துகள், பாராட்டுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கருத்துக்கள் என்று பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்போது சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க நேரிட்டால் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். கருத்து மோதல்கள் உருவாக வழிவகுத்துவிடக்கூடாது. ஒரு விஷயத்தை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்வது வேறு, பலரோடு பகிர்ந்து கொள்வது வேறு. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
சமீபகால ஆய்வின் படி சமூகவலைத்தளங்கள் பல உறவுகளைப் பிரித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்களால் பயனடையலாம். மாறாக அதை தவறாக பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது.
மின்சாரம் பயனுள்ளது தான். ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மீறி பயன்படுத்தினால் உயிருக்கே உலை வைத்துவிடும். எல்லா தொழில் நுட்பமும் அப்படித்தான். ஒருபோதும் அவை மனித உணர்வுகளை பாதித்து விடக்கூடாது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதை சரி செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள். தங்களின் தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே அவர் களின் பாதுகாப்புக்கு உலைவைத்துவிடும்.
‘ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக் கொள்ளலாம். முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் பலருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். பண உதவி, அவசர உதவி, ரத்ததானம் என எந்தவொரு உதவியாக இருந்தாலும் நொடிப்பொழுதில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நிறை வேற்றிவிடலாம்’ என நவீன தொழில்நுட்பங்களின் வரப்பிரசாதமாக சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதனை நாம் நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
ஆனால் இன்று சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி வாழ்வின் ஒரு அங்கமாக பாவிப்பவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆரம்பத்தில் செல்பி மோகத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மற்றவர்களின் ‘லைக்’ கிடைப்பதற்காக ஏங்கினார்கள். இப்போது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று யாரும் நினைப்பதில்லை. நிறைய பேர் இதை ஒரு சமூக அந்தஸ்தாகவே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
சமூக வலைத்தளங்களால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம் என்று சர்வே கூறுகிறது. சாதாரணமாகவே ஊர்வம்பு பேசுவதில் விருப்பம் உடையவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் அடுத்தவரைப் பற்றி பேசுவதாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்தைக் கண், காது, மூக்கு வைத்து உண்மை போலவே சித்தரித்து விடுவார்கள். இது பின்னாளில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தெருவில் நான்கு பேர் கூடி ஊர் வம்பு பேசும் வேலையை இப்போது சமூக வலைத்தளங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
நிறைய பேர் எதைத் தான் சொல்ல வேண்டும், பேச வேண்டும் என்ற வரம்பே இல்லாமல் மனம் போன போக்கிலே விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உருவாகும் பின்விளைவுகள் அவர்களுக்கே தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வீட்டு விஷயங்களை எழுதுவது, சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதல்ல. சமீபகாலமாக அதிகரித்துவரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களுக்கு இதுவே காரணம் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.

நம்மைப் பற்றி நம் குடும்பத்தை பற்றி பொது இடத்தில் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதைப் போல தான் இதுவும். எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் தோன்றாது. சைபர் கிரைம்கள் உருவாக இது போன்ற தகவல் பரிமாற்றங்கள் வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க மக்களிடையே போதுமான விழிப்புணர்வு தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மனோரீதியாக இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் பல. எந்த ஒரு விஷயத்தையும் நேரில் சொல்ல தயங்குபவர்கள் கூட இப்படி சமூகவலைத்தள குழுக்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். மற்றவர்கள் பதிவு செய்யும் விஷயங்களுக்கு இணையாக தங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். மனதில் பூட்டிவைத்திருந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதால் மனம் ‘ரிலாக்ஸ்’ ஆவதாக உணர்கிறார்கள். அப்படி பகிர்ந்து கொள்வதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து விட்டால் அதை எப்படி சரி செய்வது? என்று யாரும் யோசிப்பதில்லை.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிடமுடியாது. இயந்திரத்தனமாக ஓடோடி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நண்பர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கான சூழல் உருவாகாதபோது மன அழுத்தத்தை போக்க சமூகவலைத்தள குழுக்கள் உதவுகிறது. அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் சம்பந்தமான விஷயங்கள், முக்கிய ஆலோசனைகள், சாதனைகள், மதிப்புரைகள், வாழ்த்துகள், பாராட்டுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கருத்துக்கள் என்று பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்போது சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க நேரிட்டால் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். கருத்து மோதல்கள் உருவாக வழிவகுத்துவிடக்கூடாது. ஒரு விஷயத்தை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்வது வேறு, பலரோடு பகிர்ந்து கொள்வது வேறு. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.
சமீபகால ஆய்வின் படி சமூகவலைத்தளங்கள் பல உறவுகளைப் பிரித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீனத் தொழில் நுட்பங்களால் பயனடையலாம். மாறாக அதை தவறாக பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது.
மின்சாரம் பயனுள்ளது தான். ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மீறி பயன்படுத்தினால் உயிருக்கே உலை வைத்துவிடும். எல்லா தொழில் நுட்பமும் அப்படித்தான். ஒருபோதும் அவை மனித உணர்வுகளை பாதித்து விடக்கூடாது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதை சரி செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள். தங்களின் தனிப்பட்ட விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே அவர் களின் பாதுகாப்புக்கு உலைவைத்துவிடும்.






