என் மலர்
நீங்கள் தேடியது "பால்வினை நோய்கள்"
- மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாகும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஆவார் .
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாகும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில்அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்குப் பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
2013-இல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் பில் கேட்ஸ் குறித்து இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மெலிண்டாவிற்குத் தெரியாமல் இருக்க எப்ஸ்டீனின் உதவியுடன் பில் கேட்ஸ் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மின்னஞ்சல்களை அழித்துவிடுமாறு பில் கேட்ஸ் தன்னிடம் கோரியதாகவும் எப்ஸ்டீன் தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.

இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளைப் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
எப்ஸ்டீனுடன் பழகியது தனது வாழ்வின் மிகப்பெரிய தவறு என்று பில் கேட்ஸ் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
2021-இல் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா விவாகரத்து செய்தபோது, எப்ஸ்டீனுடனான கேட்ஸின் நட்பும் ஒரு முக்கிய காரணமாக மெலிண்டாவால் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பால்வினை நோய் பாதிப்புகளுக்கு முறையற்ற புணர்ச்சி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, பல துணைகளுடன் உடலுறவு, ஓரினச்சேர்க்கை போன்றவை காரணமாக இருக்கிறது. இந்நோயின் பாதிப்பில் இருந்து எவ்விதம் தற்காத்து கொள்வது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை பால்வினை நோய் மருத்துவ அலுவலர் கலாவதி கூறியதாவது:-
பால்வினை நோய்கள்
ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பு உறுப்புகளில் கிருமி தொற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தான் பால்வினை நோய்கள் ஆகும். இதன் கிருமி தொற்று ஆண்களை பொறுத்தவரை, வெள்ளைப்படுதல், பிறப்பு உறுப்புகளில் புண் ஏற்படுதல், அரிப்புடன் கூடிய வீக்கம், தொடை இடுக்குகளில் வீங்குதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதுதவிர பிறப்பு உறுப்புகளில் மருக்கள் தோன்ற வாய்ப்புண்டு.
பெண்களை பொறுத்தவரை, மேற்கூறிய அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இதுபோன்ற பால்வினை நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் அலட்சியப்படுத்தக்கூடாது. டாக்டரிடம் சென்று அதற்குரிய பரிசோதனை செய்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
10-க்கும் மேற்பட்ட...
பால்வினை நோய்களை பொறுத்தவரை, சிபிலிசு, கொணோறியா, கிளமிடியா போன்றவை முக்கிய கிருமி தொற்று ஆகும். இதுதவிர டெனிடல் அல்சர் என்ற கிருமி தொற்றும் உண்டு. இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். பால்வினை நோய்களை கண்டறிய வி.டி.ஆர்.எல். என்ற பரிசோதனை இருக்கிறது.
இந்த பரிசோதனை செய்தால் பால்வினை நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய முடியும். ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவருக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டாலும் கூட இருவரும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
30 நாள் சிகிச்சை
ஒருவருக்கு பால்வினை நோய் கிருமி தாக்குதலை கண்டறிய வி.டி.ஆர்.எல். பரிசோதனை மேற்கொள்ளும் போது அதனுடன் எச்.ஐ.வி. (எய்ட்ஸ் கிருமி) உள்ளதா? என்பதை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபோன்ற பரிசோதனையின் முடிவுகள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. பரிசோதனையின் முடிவில் பால்வினை நோய் கிருமி அல்லது எச்.ஐ.வி. நோய் கிருமி தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக தொடங்க வேண்டும்.
பொதுவாக கிருமி தொற்றின் தாக்குதல் எந்த அளவுக்கு உள்ளதோ? அல்லது எந்த வகையான கிருமி தொற்றால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது? என்பதை பரிசோதனையின் கண்டறிந்தவுடன் குறைந்தபட்சம் 7 நாட்கள் அல்லது 21 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும்.
குணப்படுத்தக்கூடிய நோய்
பால்வினை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் மாத்திரைகளை தவறாமல் உண்ண வேண்டும். ஆணும், பெண்ணும் ஒன்று சேராமல் விலகி இருத்தல் அவசியம். டாக்டர் கூறிய அனைத்து சிகிச்சை முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நாட்களில் டாக்டரின் அறிவுரைப்படி நடக்காமல் போனால் சிகிச்சை எடுத்தும் பலன் இன்றி போகும்.

பொதுவாக பால்வினை நோய் என்பது தீர்க்க முடியாத நோய் அல்ல. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.
அலட்சியம் கூடாது
ஒருவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டு சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்தால் அது எச்.ஐ.வி. நோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்று எச்.ஐ.வி. நோய்கிருமி தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர் சிகிச்சையையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து விட்டால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக 100-ல் 99 சதவீதம், ஆண், பெண் முறையற்ற புணர்ச்சியால் மட்டுமே பால்வினை நோய் தாக்க வாய்ப்புண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு சதவீதம் மட்டுமே, பால்வினை நோய் உள்ள ஒருவரின் ரத்தத்தை அடுத்தவருக்கு செலுத்துவதால் அந்நோய் அவருக்கு வர வாய்ப்பு உண்டு. ஆனாலும் இப்போது பலவகையான பரிசோதனைகளுக்கு பிறகே ஒருவரின் ரத்தம் அடுத்தவருக்கு செலுத்தப்படுகிறது. அதனால் அந்த வகையிலும் பால்வினை நோய் தாக்குவதற்கும் வாய்ப்பு குறைந்து விட்டது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
பொதுவாக பால்வினை நோயை பொறுத்தவரை பெண்களுக்கு கூடுதலாக ஒரு பிரச்சினை ஏற்படக்கூடும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதல் ஆகும். பால்வினை நோய் தாக்கிய பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது நாளடைவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் பெண்கள் இதில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலை கண்டறிந்து விட்டால் அதனை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
மீண்டும் பரிசோதனை
பொதுவாக பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளானவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் முற்றிலும் நோய் தாக்குதலில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. சிகிச்சை நாட்கள் முடிந்த பிறகு டாக்டரை அணுகி மீண்டும் பரிசோதனை செய்து கொள்வதும், அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பதும் அவசியம்.
பொதுவாக ஆண், பெண் சேர்க்கையில் ‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்று முன்னோர்கள் கூறிய நல்லொழுக்க முறையை கடைபிடித்து வந்தால் இதுபோன்ற பால்வினை நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






