search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair care tips"

    மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
    இஞ்சி உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.

    1. இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ  வைக்கவும்.

    2. பொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.

    3. அடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.

    4. நன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.

    5. இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும்.

    6. அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். 
    குளிர்க் காலத்தில் நம் கூந்தல் மற்றும் அழகைப் பாதுகாக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்... என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குளிர் காலத்தில் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை கால் வறண்டு போகும். கூந்தல் வறண்டு உடையத் தொடங்கும். குளிர்க் காலத்தில் நம் அழகைப் பாதுகாக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம்... என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும். ரொம்ப சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது உங்கள் தலைமுடியை பாதித்து பலவீனமாக்கிவிடும், மற்றும் தோலையும் பாதிக்கும்.

    * ரசாயன கலப்பு அதிகமில்லாத ஊட்டச்சத்து மிகுந்த ஷாம்புவையும் கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும்.

    * இறுக்கமாக பின்னல் போடுவதோ அல்லது இறுக்கிக் கட்டுவதோ வேண்டாம். முடியை தளர்வாக பின்னலிடலாம்.

    * மழையில் நனைந்துவிட்டால் அப்படியே தலையை காயப்போடாமல் தலைக்குக் குளித்துப் பின் முடியை நன்கு துவட்டி விடுவது நல்லது.

    * நம் உடலைப் போலவே தலைக்கும் நீர்ச்சத்து தேவை. அதனால் தண்ணீர் அதிகம் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைப்பது தலைமுடிக்கும் நல்லது.



    * மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மண்டையோட்டை எண்ணெய் பசை உடையதாகவும், முடியை சிக்காக்கும் தன்மையும் கொண்டது. எனவே ஈரப்பதமற்ற தலை முடி இருப்பவர்கள், அரிப்பு மற்றும் பொடுகு பிரச்னை இருப்பவர்கள், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் வேப்பெண்ணெய் (வேப்பெண்ணெய் ஒரு ஆன்டிபாக்டீரியல்) கலந்து தலைமுடிக்குத் தேய்த்து வரவேண்டும்.

    * மழை நேரத்தில் முடி உடையாமல் இருக்க, பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.

    * இந்த சீசனில் தலை முடி மிகவும் எளிதில் உடைய அல்லது உதிரக்கூடிய நிலையில் மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே தலைமுடியை காய வைக்க மிக அதிகமான சூட்டைப் பயன்படுத்தாதீர்கள். மிதமான சூட்டில் வைத்து ஹேர் ட்ரையரை பயன்படுத்தவும். அல்லது முடி பாதி உலர்ந்ததும் ட்ரையரை நிறுத்திவிடவும்.

    * மழை சீசனை பொறுத்த மட்டில் முடி பலவீனமாவது மட்டுமில்லாமல் சிக்காகிவிடும். எனவே தலைக்குக் குளிக்கும் முன் தலையில் எண்ணெய் வைத்து ஊற வைக்க வேண்டும். உங்கள் முடிக்கு ஊட்டச்சத்தளிக்க பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி உச்சந்தலை மற்றும் தலைமுடியின் முழு நீளத்துக்கும் அதாவது முழுமையாக தடவி 45 நிமிடங்களுக்கு ஊற வைத்துப் பின் தலைக்குக் குளிக்க வேண்டும். பொடுகை தவிர்க்க சிறிதளவு வேப்பெண்ணெயும் கலந்து கொள்ளலாம். தலையின் ஈரப்பதத்தை தவிர்க்க சலூனுக்குச் சென்று ஹேர் ஸ்பா அல்லது ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். இது மண்டையோடு மற்றும் முடியின் ஆரோக்யத்திற்கு உதவும்.

    * நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

    * வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சருமத்திற்கான ஈரப்பதம் கிடைக்கும். 
    40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.
    40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்களை பார்க்கலாம்.

    பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

    அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும். ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

    ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

    இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. 40 வயதில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். மீன், நட்ஸ், பீன்ஸ், இறைச்சி, கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். பயோடின்- முட்டை, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ் போன்றவற்றை அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள்.
    கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தலைமுடியைப் பொறுத்தவரை அது கழுத்தளவோ, இடுப்பளவோ... நீளத்தைவிட அடர்த்தியாக, நுனி வெடிப்பில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. கொஞ்சம் மெனக்கெட்டால், எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

    * சின்ன வயதில் நரை வராமல் இருக்க, உடம்பில் பித்தம் பேலன்ஸாடாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் உடம்பு பித்தம் அதிகம்கொண்டதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் கரிசிலாங்கண்ணி சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு, தலையில் தடவி வந்தால் பித்தம் கன்ட்ரோல் ஆகும். இளநரை தள்ளிப்போகும்.

    * ஆயில்பாத்தை கடமைக்குச் செய்யாமல் அனுபவித்துச் செய்யுங்கள். நல்லெண்ணெய்யோ, தேங்காயெண்ணெய்யோ தலையில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். அதற்கு மேல் ஊறினால், சிலருக்குத் தலைவலி வந்துவிடும். 15 நிமிடங்கள் கழித்து சீயக்காய்த்தூளுடன் செம்பருத்தி இலையை அரைத்து, வடிகட்டிய சாற்றைச் சேர்த்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். கண்டிஷனரே தேவையில்லாமல் கூந்தல் பளபளக்கும்; ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால், சீயக்காய் தேய்த்துக் குளிக்கும்போது, நிறையத் தண்ணீர்விட்டு முடியை அலச வேண்டும். இல்லையென்றால் பொடுகு வரலாம்.



    * வறண்ட கூந்தல் உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை கொப்பரைத்தேங்காயைத் துருவி, மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் சீயக்காயோ அல்லது ஷாம்பூவோ போட்டு அலசிய பிறகு, அரைத்த கொப்பரை விழுதை வேர்க்காலில் ஆரம்பித்து நுனி வரை தடவவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு தண்ணீரில் அலசி விடுங்கள். கூந்தலில் எண்ணெய்ப்பசையும் இருக்கும்; அதேநேரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தலைமுடி வலுவாகவும் இருக்கும்.

    * தலைக்குக் குளித்தவுடன், வெகு நேரத்துக்கு தலையில் டவலை கட்டிக்கொண்டே இருக்காதீர்கள். தலையில் நீர் கோர்த்துக்கொள்வதோடு, முடியின் வேர்க்கால்களும் பலவீனமாகும்.

    * இரவிலேயே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, காலையில் குளிக்கிற வழக்கத்தை இன்றைக்கு நிறைய இளம்பெண்கள் செய்கிறார்கள். இது முடிக்கு நல்லது என நினைக்கிறார்கள். இது தவறு, உண்மையில் இந்தப் பழக்கம் தலைமுடியை வலுவிழக்கச் செய்து மெதுமெதுவாக கொட்டிப் போகவே செய்யும்.

    * ஹென்னா பேக் இன்றைக்கு எல்லாப் பெண்களுமே போடுகிறார்கள். அப்படிப் போடும்போது, நெல்லிகாய்ப்பொடி, செம்பருத்திப்பொடி, வெந்தயப்பொடி, துளசிப்பொடி, வேப்பம்பொடி, லெமன் ஆகியவற்றைச் சேர்த்து போட்டால், ஹென்னாவால் உடம்பு ரொம்பவும் குளிர்ச்சியாவதைத் தடுப்பதோடு தலைமுடிக்கும் நல்லது.
    தற்போது, `ஸ்பா ட்ரீட்மென்ட்' பல்வேறு பார்லர்களில் பரவலாகச் செய்யப்படுகிறது. ‘ஹேர் ஸ்பாவை வீட்டில் செய்யலாமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தற்போது, `ஸ்பா ட்ரீட்மென்ட்' பல்வேறு பார்லர்களில் பரவலாகச் செய்யப்படுகிறது. இந்த ஸ்பாவில், இரண்டு வகை இருக்கிறது.

    1. பாடி ஸ்பா

    2. ஹேர் ஸ்பா

    பாடி ஸ்பாவைவிட, ஹேர் ஸ்பாவையே பலரும் விரும்புகிறார்கள். ஹேர் ஸ்பா என்பது, அவரவரின் ஸ்கால்ப் அல்லது முடிக்கு ஏற்ப செய்யப்படுவது. முதலில் எந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னரே, ஸ்பா ட்ரீட்மென்டை ஆரம்பிக்க வேண்டும்.

    முடி வளரவே இல்லை எனச் சிலர் சொல்வார்கள். எதனால் முடி வளரவில்லை என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, பொடுகினால் பிரச்னை ஏற்படலாம். அல்லது ஸ்கால்பில் வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம். இன்னும் சிலருக்கு, முடி டிரையாக இருக்கும். ஷைனிங் இல்லாமல் இருக்கலாம். அல்லது முடி பிளவு இருக்கலாம். பிரச்னையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செய்ய வேண்டும்.

    ஹேர் வாஷ் செய்ய, அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பு வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    1. பியூரிஃபையிங் ஷாம்பு (Purifying Shampoo)

    2. டீடாக்ஸ் ஷாம்பு (detox shampoo)

    பியூரிஃபையிங் ஷாம்பு என்பது, அதிகம் பொடுகு இருப்பவர்களுக்குப் பயன்படுத்துவது. டீடாக்ஸ் ஷாம்பு என்பது, மற்ற அனைத்து முடிப் பிரச்சனைக்குமானது.

    ஷாம்புவைப் பயன்படுத்தி முடியை அலசியதும், அவர்களுக்குத் தேவையான கிரீம் மற்றும் கான்சென்ட்ரேட் (concentrate) இரண்டையும் கலந்து மசாஜ் செய்ய வேண்டும். கிரீம் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் அவசியம்.



    நரேஷிங் கிரீம் பாத் (nourishing cream bath), ஹைடிரேட்டிங் கிரீம் பாத்  hydrating cream bath) போன்ற பல கிரீம் பாத்கள் இருக்கின்றன. அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.

    முடி கடினமா இருக்கிறதா, அதிகமாகச் சிதைவடைந்து இருக்கிறதா, அல்லது ஹேர் டிரையாக இருக்கிறதா, இதையெல்லாம் கவனித்து, கிரீமைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ஸ்கெல்ப்பில், பொடுகு இருக்கிறதா, ஸ்கெல்ப் காய்ந்து அரிப்பு ஏற்படுதா, அல்லது நீர்ச்சத்து குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

    ஸ்கேனரைப் பயன்படுத்தியோ அல்லது மேக்னிஃபையிங் மிரர் ( magnifying mirror) பயன்படுத்தியோ ஸ்கால்ப் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ளலாம். இவை அனைத்தையும் பரிசோதித்துவிட்டு, பிரச்னைகளுக்கு ஏற்ப ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும். இது புரொபஷனல் ட்ரீட்மென்ட். இதை வீட்டில் செய்யவே கூடாது. பார்லரில் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.

    கடைகளில் ஸ்பா ஷாம்பு, கண்டிஷனர் கிடைக்கும். அவற்றை வீட்டில் பயன்படுத்தலாம். ஆனால், புரொபஷனல் ட்ரீட்மென்ட் செய்தால் தீர்வு கிடைக்கும் எனில், நிச்சயம் புரொபஷனலையே அணுக வேண்டும்.

    ஹேர் ஸ்பா எடுத்த பின்னர், அவர்கள் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால், தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப, இரண்டு வாரத்துக்கு ஒருமுறையோ, நான்கு வாரத்துக்கு ஒருமுறையோ, ஸ்பா ட்ரீட்மென்ட் செய்துகொள்ள வேண்டும். அன்றாட பராமரிப்புக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஸ்பா ட்ரீட்மென்ட் மேற்கொள்ளலாம்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. இன்று கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

    * வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.



    * கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

    * பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    * மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
    கூந்தல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.
    கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்தவோ அல்லது உதிர்தலின் அளவை குறைக்கவோ முடியும்.

    இதற்கு இயற்கை முறைகளே சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய பொருட்கள் என்னவென்பதையும் அவை எவ்வறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

    2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

    3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

    4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

    5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

    6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.



    7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

    8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும்.

    9. வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

    9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.

    10. ஆலிவ் எண்ணெயை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

    12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

    13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணெய் தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

    14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது  நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

    15. கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.

    உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம்.
    உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். தலைமுடிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்துவிதமான நோய் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பளபளப்பான, மென்மையான கூந்தலை பெறுவதற்கும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் தயிருடன், வெந்தயம், எலுமிச்சை சாறு சேர்த்து நிவாரணம் பெறலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். தொடர்ந்து வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.



    பெண்கள் சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். முதலில் 20 செம்பருத்தி இதழ்களையும், 10 வேப்பிலைகளையும் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ள வேண்டும் அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாக மின்னும்.

    கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதற்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவ வேண்டும். 
    உங்கள் தலைமுடி வளராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

    இங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

    * மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.

    * உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற்கான காரணங்களுள் மற்றொன்று டென்சன். ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப்பட்டால், அது முடியின் வளர்ச்சியை தான் பாதிக்கும். மேலும் தலைமுடியின் வேர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.



    * தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால், அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படும். அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலைமுடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

    * தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது

    * தலைமுடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்துவார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தினால், அவை முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக தடுத்துவிடும்.

    * தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம். எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.
    ×