என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்,
    பச்சை பயறு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 2
    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 4 கப்,
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :


    நெய் - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை :


    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற விடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    பாசிப்பருப்பை கழுவி பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.

    கம்பை மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.

    குக்கரில் நெய் விட்டு உருக்கியதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அரைத்த கம்பு, பாசிப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கிளறி மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

    வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கிச்சடியின் மேலே ஊற்றி கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள்.
    உலகத்திலேயே கலப்படம் இல்லாத பால் தாய்ப்பால். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வாழ்நாள் முழுவதும் சத்து குறைபாட்டில் கஷ்டப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2 1/2 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 40 சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 8 சதவீத குழந்தைகள் மிகவும் மெலிந்தும், எலும்பும் தோலுமாக பிறக்கின்றன. 30 சதவீத குழந்தைகள் உயரம் குறைவாக பிறக்கின்றன.

    தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தாய்ப்பால் அவசியம் அதன் நன்மைகள் குறித்து கூடுதல் பேராசிரியரும், குழந்தைகள் நல மருத்துவருமான டி.குணசிங் விளக்கம் அளித்துள்ளார். அவை வருமாறு:

    தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் இணை உணவுகளுடன் இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுவதுமேயாகும். தாய்ப்பால் எல்லா சத்துக்களும் உடைய ஒரு முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் நோயை எதிர்க்க கூடிய சக்தி உள்ளதால் குழந்தையை எந்த நோயும் நெருங்காது. தாய்ப்பாலில் மூ­ளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் அறிவுள்ள குழந்தைகளாக விளங்குகிறது.

    தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பது எப்போது?

    குழந்தை பிறந்தவுடன் ஈரத்தை துணியால் துடைத்து விட்டு தாயிடம் கொடுக்க வேண்டும். தாய் குழந்தையை உடலோடு சேர்த்து அனைத்து பிறந்தவுடன் பால் தர வேண்டும். பிறந்தவுடன் தாய்ப்பால் தர முடியாத சூழ்நிலையில் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும். பிறந்தவுடன் குழந்தையை குளிப்பாட்டக்கூடாது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பாட்ட வேண்டும்.

    ஏன் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?


    குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும், பால் சப்புவதற்கு ஆவலாகவும் இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கி விடும். அதன்பின் பால் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

    குழந்தை பிறந்தவுடன் குளுக்கோஸ் தண்ணீர், தேன், கழுதைப்பால் போன்றவை கொடுக்கலாமா?

    குழந்தை பிறந்தவுடன் சுரக்கும்பால் “சீம்பால்” என்று கூறுகிறோம். இது மஞ்சள் நிறத்தில், கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது. முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு போதுமானதாகும். குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்ப தால் குழந்தைக்கு தொற்று நோய் வருவதற் கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. மேலும் குழந்தைக்கு பசி அடங்கி பால் சப்பிட மறுத்து விடும். இதனால் தாய்க்கு பால் கட்டி பிரச்சினைகள் ஏற்பட்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. ஆகவே பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

    சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பால் கொடுப்பது?

    தாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்கு வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நலையிலேயே செவிலியர், உறவினர்கள் குழந்தையை மார்போடு அனைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும். அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். வேறு எந்தவித உணவும், பாலும் கொடுக்கக்கூடாது.

    குழந்தைக்கு தண்ணீர், கிரைப்வாட்டர் கொடுக்கலாமா?


    குழந்தை பிறந்த 6 மாதங்கள் முடியும்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலே குழந் தைக்கு வேண்டிய தண்ணீர் உள்ளது. ஆகவே குழந்தைக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரைப்வாட்டர் ஜீரணத்திற்காக கொடுக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தாய்ப்பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற ஒரு உணவாகும். ஆகவே கிரைப்வாட்டர் கொடுப்பதால் எந்த பயனும் கிடையாது. மேலும் அது கொடுப்பதால் பாக்டீரியா தொற்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.



    குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தர வேண்டும்?

    குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரத்திலும் தர வேண்டும். இரவில் குறைந்தது 2 முறையாவது தர வேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் குறைவான முறைகளும் சில குழந்தைகள் 15 தைல் 20 முறைகளும் பால் குடிக்கும்.

    குழந்தை தேவையான அளவு தாய்ப் பால் குடிக்கிறதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

    ஒரு நாளில் குழந்தைக்கு குறைந்தது 8 முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை குறைந்தது ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தை மாதா மாதம் குறைந்தது 500 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    குறைமாத குழந்தை, எடை குறைவான குழந்தைக்குக்கூட 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதா?

    ஆம், குறை மாத குழந்தை மற்றும் எடை குறைவான குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானதாகும்.

    தாய் நோய்வாய் பட்டிருக்கும் போது மற்றும் மருந்துகள் சாப்பிடும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    பெரும்பான்மையான சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாம். அதுதான சமயங்களில் (உதாரணம்: தாய் புற்று நோய்க்கு மருந்து சாப்பிடுதல்) மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். இச்சமயங்களில் தாய்ப்பாலூட்டு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நடந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

    கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன செய்வது?

    தாய்ப்பால் போதவில்லை என்பது பேதைமையே. தைலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரி பார்க்க வேண்டும். சரியான அளவில் (500 கிராம் மாதம்) எடை கூடி உள்ளதா என சரிபார்க்க வேண்டும். குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும். (வேறு எந்த உணவோ, பாலோ, தண்ணீரோ கொடுக்காத நிலையில்) தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கவில்லை எனில், கீழ்க்கண்டவற்றை சரிபார்க்க.

    * குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?
    * பகல்-இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா?
    * புட்டிப்பால், சூப்பான் உபயோகிக்கப்படுகிறதா?
    * வேறு பாலோ, உணவோ கொடுக்கப்படுகிறதா?



    * குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை மற்றும் ஒட்டுதல் உள்ளதா?

    மேற்கூறியவற்றில் பிரச்சனை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தாய்க்கு ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். தாய்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

    தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு என்ன செய்வது?

    குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு பால் ஊறும். ஆகவே குழந்தை அதிக அளவு சப்ப வைத்தால் அதிக அளவு ஊறும். மேலும் தாய் நம்பிக்கையுடன் கொடுத்தால் தாய்ப்பால் கட்டாயம் தேவையான அளவு சுரக்கும்.

    குழந்தை பால் போதாமல் அழுது கொண்டே இருக்கிறதே?

    குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்லை. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது. ஆகவே ஏற்கனவே கூறியபடி தாய்ப்பால் போது மானதாக கிடைக்கிறதா என சரி பார்க்கவும். தாயிடம் குழந்தை எடை தேவையான அளவு கூடியிருப்பதை கூறி தாய்ப்பால் தேவையான அளவு கிடைப்பதை சொல்லி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

    குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு குழந்தை தாலாட்டவும், தோளில் போட்டு தட்டி கொடுக்கவும், வயிற்றில் கையால் சிறிதாக அழுத்தவும், உடை மாற்றவும், மற்றும் இடத்தை மாற்றி பார்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் வயிற்றுவலி மருந்து கொடுக்கலாம்.

    புட்டிபால் கொடுக்கலாமா?

    கட்டாயம் கொடுக்க கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்தி விடும். குழந்தை சப்பாத நிலையில் தாய்ப்பால் சுரப்பது படிப்படியாக குறைந்து நின்று விடும். மேலும் புட்டிபால் கொடுப்பதால் கிருமி தொற்று, பேதி, நிமோனியா ஏற்படவும் வாய்ப் புள்ளது. ஆகவே புட்டிப்பால் வேண்டவே வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாலாடையோ, கரண்டியோ உபயோகிக்கலாம்.

    தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடுமா?

    தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு அழகு குறையாது. அழகு கூடத்தான் செய்யும். உடல் மெலிந்து ‘சிலிம்’ஆக காணப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தால் மார்பக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
    செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.
    கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

    சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.

    திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.

    கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.
    நமது முதுகெலும்பே நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. வயது மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப முதுகெலும்பு சுருங்கிவிரியும் திறன் கொண்டது. முதுகெலும்பைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    உயிரினங்களில் மனிதன் மட்டுமே நிமிர்ந்து நடைபோடுகிறான். தண்டுவடம் தரையில் படும்படி மல்லார்ந்து படுத்து தூங்குகிறான். நமது முதுகெலும்பே நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. வயது மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப முதுகெலும்பு சுருங்கிவிரியும் திறன் கொண்டது. வயதான காலத்தில் இது சுருக்கம் அடைவதால் தான் தாத்தா, பாட்டிகள் குனிந்து நடைபோடுகிறார்கள். இளமைப்பருவத் தைவிட உயரம் குறைந்துவிடுகிறார்கள். முதுகெலும்பைப் பற்றிய சில தகவல்களை இந்த வாரம் அறிந்து கொள்வோமா குட்டீஸ்...

    * மனிதன் மட்டுமே செங்குத்தான முதுகெலும்பு கொண்டுள்ளான். இது அவன் நிமிர்ந்து நடைபோட காரணமாக இருக்கிறது. செங்குத்தாக இருந்தாலும், நமது முதுகெலும்பு 4 இடங்களில் வளைவு கொண்டிருப்பது குறிப்பிடத்க்கது. பெங்குயின்கள், சில குரங்கினங்கள் போன்றவை ஏறத்தாழ மனிதனைப்போல செங்குத்தான முதுகெலும்பு கொண்டிருக்கின்றன. பெரும்பாலான விலங்கினங்கள், கிடைமட்டமான, வளைந்த முதுகெலும்புகளையே பெற்றிருக்கின்றன.

    * நாம் பிறக்கும்போதே முதுகெலும்பு நல்ல வளர்ச்சி கண்டிருக்கும். அப்போது முதுகெலும்பில் 33 தனிப்பட்ட எலும்புகள் காணப்படும். இந்த 33 எலும்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். பெரியவர்களாக முதிர்ச்சி அடைந்ததும் 26 எலும்புகளாக மாறிவிடும். சில எலும்புகள் ஒன்றிணைவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

    * முதுகெலும்பின் அடிப்புறத்தில் இணைந்திருக்கும் முதல் நான்கு எலும்புகள் சிறு வால்போல வளைந்த தோற்றத்துடன் காணப்படும். இவை ‘காக்சிக்ஸ்’ எனப்படுகிறது.

    * அதற்கு மேலுள்ள 5 இணைந்த எலும்புகள் ‘சக்ரம்’ எனப்படுகிறது. அடுத்த 5 எலும்புகள் இணைந்த பகுதி ‘லாம்பர்’ எனப்படுகிறது.

    * லாம்பரைத் தொடர்ந்து ஏறத்தாழ செங்குத்தாக அமைந்த 12 எலும்புகள் இணைந்த பகுதி ‘தோராசிக்’ எனப்படுகிறது. அடுத் ததாக உச்சியில் கழுத்திற்கு நேர் பின்னால் அமைந்துள்ள 7 இணைந்த எலும்புப் பகுதியை ‘செர்விகல்’ என அழைக்கிறார்கள்.

    * மனிதனைத் தவிர ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம்ஆகியவற்றுக்கு மட்டுமே கழுத்து முதுகெலும்பு எண்ணிக்கை 7 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

    * செர்விகல் முதுகெலும்பு தலைப்பகுதியை தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் இதை ‘அட்லஸ் எலும்பு’ என்றும் கூறுவது உண்டு. கிரேக்க நம்பிக்கைப்படி உலகை தாங்கி நிற்கும் கடவுளாக அட்லஸ் கருதப்படுவதால் இதற்கு அந்த பெயர் ஏற்பட்டதாக சொல்வது உண்டு.

    * முதுகெலும்பில் 120 தசைகள் உள்ளன. 220 தசை நார்கள் அவற்றை முதுகெலும்புடன் இணைக்கிறது. இந்த இணைப்பே முதுகெலும்பிற்கு உறுதித்தன்மை தருகிறது. நரம்புகள் முதுகெலும்புடன் இணையவும், உணர்வுகள் கடத்தப்படவும் இது துணைபுரிகிறது.

    * நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதால் முதுகெலும்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் வளைந்து கொடுக்கிறது. இதுவே நமது பல்வேறு இயக்கத்திற்கு அடிப்படையாகவும் அமைகிறது.



    * நாம் நன்கு வில்போல வளைவதால் ஒரு வட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு வளைவை உருவாக்கும் அளவுக்கு முதுகெலும்பு வளைந்து கொடுக்கக்கூடியதாகும். இது அதன் நெகிழ்வுத்தன்மையின் பலத்தை காட்டுகிறது.

    * இவ்வளவு நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தாலும் அது உறுதியானது. 100 கிலோவுக்கு மேலான எடையையும், அழுத்தத்தையும் தாங்கும் திறன்கொண்டது முதுகெலும்பு.

    * முதுகெலும்பில் இருந்து குருத்தெலும்பு உருவாகிறது. பஞ்சு போன்ற இந்த எலும்பு தண்டுவடத்துடன் இணைந்ததாக அதன் பின்னால் அமைந்திருக்கும்.

    * குருத்தெலும்பு வளர்ச்சி அடையக்கூடியதாகும். ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளியில் இது வேகமாக விரிவடையும். விண்வெளியில் நீண்டகாலம் தங்கியிருந்து திரும்புபவர் உயரம் அதிகரித்திருப்பதற்கு குருத்தெலும்பு விரிவடைந்திருப்பதே காரணமாகும்.

    * முதுகுவலி பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளில் ஒன்றாகும். அமெரிக்கர்களில் 80 சதவீதம் பேருக்கு முதுகுவலி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது அவர்களின் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்பாக கருதப்படுகிறது.

    * பெரும்பாலான முதுகுவலி பிரச்சினைகளுக்கு (சுமார் 80 சதவீதம்) சிகிச்சை தேவையில்லை. தானாக ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும். அப்படி சரியாகாமல் தொடரும் முதுகுவலி மற்றும் கடுமையான பிரச்சினை களுக்கு மருத்துவர்களின் சிகிச்சையை நாடலாம்.

    * விபத்துகளில் ஏற்படும் தண்டுவட அதிர்ச்சியால் அதிகமானவர்கள் முதுகுவலியை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலும் லாம்பர் பகுதியில்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

    * ஒருவர் காலையிலும், மாலையிலும் உயரம் கூடி குறைவதற்கு தண்டுவடத்தில் ஏற்படும் நீட்சியும், தளர்ச்சியும் காரணமாகும்.

    * புகைப்பழக்கம், நுரையீரல் மட்டுமல்லாது முதுகெலும்பையும் தீவிரமாக பாதிக்கக்கூடியது. புற்று நோய், தண்டுவட உறுதி குறைவது, முதுகுவலி உள்பட பல பின்விளைவுகளை அது உருவாக்கலாம்.

    * தண்டுவட சிகிச்சை அளிப்பதற்கான ரோபோக்கள் தயாராகி வருகின்றன.

    * முதுகுத்தண்டு வலிமையாக இருந்தால் ஞாபக சக்தியும் நன்றாக இருக்கும். இளம் வயதில் தண்டு வடத்திற்கும், முதுகு தசைகளுக்கும் நன்கு பயிற்சி அளித்து கவனித்துக் கொண் டால் முதுகெலும்பு நலம் பெறுவதுடன், நாமும் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் நிமிர்ந்து நடைபோடலாம். 
    வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.
    தேவையான பொருட்கள் :    

    துவரம்பருப்பு - கால் கப்,
    பாசிப்பருப்பு - கால் கப்  
    தக்காளி - 2  
    கேரட் - ஒன்று,
    கத்திரிக்காய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)  
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  
    சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்  
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  
    தோலுரித்த சின்ன வெங்காயம் - 10  
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :     

    கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்  
    வெந்தயம் - கால் டீஸ்பூன்  
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :    

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    துவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான டிபன் சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.
    கல்வி...! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. கல்வி என்ற அளவுகோலே ஒருவரின் அறிவு, ஆற்றலை நிர்ணயிக்கிறது. அந்த அறிவு, ஆற்றலே வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகிறது. காரணம், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே வேலை, அதை வைத்தே ஊதிய அளவும் மாறுபடுகிறது.

    இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கல்வியின் நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வேதனையான கட்டத்தில் பரிதவித்துக்கொண்டு அல்லவா இருக்கிறது.

    ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கல்லூரியிலும், அதன் பின்பு பணிதளத்திலும் ஜொலிக்க முடியும் என்ற நிலையில், பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை வசதியாக பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகை வசூல் செய்து கல்வித்துறையில் கல்லாக்கட்டத் தொடங்கிவிட்டன.

    இன்னொருபுறம், தாய் மொழியிலான தமிழ் வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் விருப்பம் ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இருப்பதால், புற்றீசல் போல தனியார் பள்ளிகள் முளைக்கின்றன. தமிழ் வழியிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த நேரத்தில் ஆங்கில கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புவதற்கான காரணங்களை புறந்தள்ளிவிடவும் முடியாது. இதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன. அதாவது, 12-ம் வகுப்புக்கு பிறகு, உயர்கல்வி படிக்க மாணவர்கள் கல்லூரிகளை நாடும்போது, அனைத்து வகை பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகளிலும் பெரும்பாலும் ஆங்கிலமே மேலோங்கி நிற்கிறது.

    உயர் கல்வியில் தமிழ் மங்கிப்போய் விடுவதால், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கஷ்டப்படுகிறார்கள். இதை உணர்ந்த பெற்றோர், என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, கடன் வாங்கியாவது பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துணிகிறார்கள். இதுதான் தனியார் பள்ளிகளின் எழுச்சிக்கும், அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்.

    இது தொடர்பாக, தமிழக பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசின் குழு ஒன்று, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 820 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை அவர்களே சொல்லிக் கொடுப்பதாகவும் அந்த குழுவின் அறிக்கை தகவல் தருகிறது.

    ஆரம்ப பள்ளிகளை எடுத்துக்கொண்டால், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு ஆசிரியரே பள்ளி முழுவதையும் கவனித்துக்கொள்ளும் நிலை வந்ததற்கான காரணம், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது தான்.

    தமிழக அரசும் இதே காரணத்தை சொல்லி, இன்றைக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த தயாராகிவிட்டது. காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும், மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டதால், 1,950 பள்ளிகளின் கதவுகளை அடைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீட்டுக்கட்டு போல ஆண்டுதோறும் சரிந்துகொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

    அதாவது, இங்கு சேர வேண்டிய மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியை பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.

    நிலைமை இவ்வாறு இருக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களும், பெற்றோரும் விரும்பும் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவதற்கு அரசு தயங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம், தமிழகத்தில் கல்வியும் அரசியல் என்ற மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறதே!

    ஒருவேளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கினால், இங்குள்ள எதிர் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள். ‘தமிழ் மடிந்துபோகுமே...!’ என்றெல்லாம் அவர்கள் கவலை தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க களம் அமைத்துக்கொள்வார்கள். அதை தடுத்து நிறுத்தும் செயலிலும் அவர்கள் குதித்துவிடுவார்கள்.

    ஆனால், அவர்களின் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தார்களா?, படிக்கிறார்களா? அல்லது படிப்பார்களா? என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

    எனவே, முதலில் அரசியல் வலையில் சிறைபட்டு கிடக்கும் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். தாய் மொழி கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் பிரதானம் என்றாலும், உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஆங்கில வழிக்கல்வியும் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆங்கில வழிக்கல்வி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்றில்லை. தமிழை பாதுகாத்து ஆங்கில அறிவையும் ஊட்ட அரசு முன்வர வேண்டும்.

    தமிழக அரசுக்கு ஆங்கிலத்தின் அவசியம் தெரிந்தாலும், தமிழை காப்பதாக நினைத்துக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பெற்றோருக்குத்தான் பிள்ளைகளின் கல்வி பாரமாகிக் கொண்டிருக்கிறது. ‘நாம் அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தது வரை செலவான தொகையை, இன்றைக்கு நம் பிள்ளைக்கு எல்.கே.ஜி.யிலேயே செலவழிக்க வேண்டியது இருக்கிறது’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும் பணத்திற்கு என்ன செய்வது? என விடை தெரியாமல் தினமும் திகைக்கிறார்கள்.

    நாடு சுதந்திரம் அடைந்தபோது, தனியார் வங்கிகள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த வங்கிகள் எல்லாம் இன்றைக்கு மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுபோல், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து பள்ளிகளையும், கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, ஆங்கில வழியில் கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

    அதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும். அதே நேரத்தில், தாய் மொழியான தமிழ் மொழியை காட்டாய பாடமாக்கி, பாகுபாடின்றி அனைவரும் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், நம் இனத்தின் அடையாளம். ஆங்கிலம், நிகழ் காலத்தின் கட்டாயம். எனவே, தாய்த்தமிழை காத்து, ஆங்கிலத்தையும் கற்பிக்க அரசு முன்வர வேண்டும்.

    -ஆர்.கே. 
    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
    உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.



    எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

    முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது. 
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தலாம். மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை இன்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
    இஞ்சி- சிறிய துண்டு ஒன்று
    பால் - ஒரு டம்ளர்
    கருப்பட்டி - சிறிய துண்டு
    மிளகு  அரை டீஸ்பூன்
    தண்ணீர்  ஒரு கப்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி அத்துடன் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நிறம் மாறியதும், பால் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

    பாலைத் தவிர்த்துவிட்டும் குடிக்கலாம்.

    சூப்பரான ஆவாரம்பூ - கருப்பட்டி டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீரபத்ராசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மேலும் கால்கள், தோள்பட்டைகள் வலுப்பெறும்.
    செய்முறை :

    விரிப்பில் நேரகா நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம். இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது குதிகாலும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

    இப்போது உடலை வலது புறம் திருப்ப வேண்டும். கைகளை மேலே கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்குங்கள். வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக இருக்க வேண்டும்.

    உடல் சற்றே பின்னால் வளைய வேண்டும். தலை சற்றுப் பின்புறம் சாய வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம். உடலில் வலி ஏற்பட்டால் ஒரு சில விநாடிகள் மட்டும் நின்றுவிட்டுப் பழைய நிலைக்கு வரலாம். சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டலாம்.

    இதே போல் இடது பக்கம் செய்யவும். இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யலாம். இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி இருக்கும்போது இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். இந்த ஆசனம் செய்யும் போது கழுத்தும் உடலும் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

    பலன்கள் :

    இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையும். மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாகும். கால்கள் வலுப்பெறும். தோள்பட்டைகள் வலுப்பெறும். மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
    ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியமல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
    ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியமல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், பல் சிதைவு, பல்சொத்தை, பல்வலி போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும். ஒருசில உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் பற்களுக்கு நலம் சேர்க்கும்.

    உடலின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க பழ வகைகள் சாப்பிடுவது நல்லது. எனினும் அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் அசிட்டிக் அமிலங்களை உள்ளடக்கிய பழங்களான ஆப்பிள், திராட்சை போன்றவை பற்களின் எனாமலை பாதிக்க செய்பவை. அவைகளை சாப்பிட்டதும் உடனே வாய் கொப்பளித்து பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

    காபி பருகுவது பற்களுக்கு கேடு விளைவிக்கும். பல் சொத்தை மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும். அதனால் காபி குடித்து முடித்ததும் வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வது நல்லது.



    ரொட்டிகளில் இனிப்பு சுவை குறைவாக இருந்தாலும் அவை பல் இடுக்குகளில் சிக்கிவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்தும். எந்த உணவை சாப்பிட்டாலும் உணவு துகள்கள் பல் இடுக்குகளில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சாக்லேட்டுகளை கடித்து ஆசுவாசமாக சுவைப்பது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதும் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஆதலால் அவைகளை சாப்பிடும்போது பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    தண்ணீர் அதிகம் பருகுவது பற்களுக்கு நல்லது. அதேவேளையில் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் பற்களுக்கு கேடு விளைவிக்கும். வாய் பகுதியையும் உலர்வடைய செய்துவிடும். பற்களின் எனாமலும் பாதிப்புக்குள்ளாகும்.

    நொறுக்கு தீனி வகைகளையும் தவிர்க்க வேண்டும். அவை உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு பற் சிதைவுக்கும் காரணமாகிவிடும்.

    மது குடிப்பதும் பற்களுக்கு கேடானது. மதுவில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உமிழ்நீர் சுரப்பின் அளவை குறைத்துவிடும். பற்களில் பாக்டீரியா தொற்றுகள், ஈறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். 
    கொலஜென் பிரச்சனை குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகின்றது. பெண்கள் மாதவிடாய் முன்பு, கர்ப்பகாலம் ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.
    வயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். 70 சதவீதம் சருமம், முடி, நகம் மற்றும் 100 சதவீதம் இணைப்பு தசைகளுக்கு இந்த கொலஜென் புரதமே முக்கியமானதாகின்றது. தலைமுடி முதல் ஒவ்வொரு அங்குல சருமத்திலும், மூட்டு அசைவிலும், உணவு பாதை சீராய் இருப்பதிலும் இப்புரதம் பெரும் பங்கு வகிக்கின்றது.

    வயது கூடும் பொழுது இந்த கொலஜென் உருவாக்கம் நம் உடலில் குறைகின்றது. வயது 25-ஐ கடக்க ஆரம்பிக்கும் பொழுது உடலில் கொலஜென் அளவு குறையத் தொடங்குகின்றது. இதன் காரணமே உடல், சருமம் இவை முதுமைத் தோற்றத்தினை காட்ட ஆரம்பிக்கின்றன. சத்தமிடும் மூட்டுகள், மெலிந்த முடி, உடையும் நகம், வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படத் தொடங்குகின்றன.

    * ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 1.2 சதவீதம் கொலஜென் குறைய ஆரம்பிக்கின்றது.
    * அநேகமாக அது 25 வயதிற்கு மேல் ஆரம்பிக்கின்றது.
    * இது 40-50 வயதுகளில் அதிகமாகின்றது.
    * பொதுவில் ஒரு பெண் 40 வயதில் தன் உடலில் 20 சதவீதம் கொலஜென் இழந்திருப்பாள்.
    * இது 50 வயதில் கூடுதலாகத் தெரியும்.
    * 80 வயதில் 75 சதவீதம் கொலஜென் குறைந்திருக்கும்.

    இதற்கு வயது கூடுவது மட்டுமே காரணம் இல்லை. முறையான உடல் உழைப்பின்மை, எடை அதிகம் போன்றவை கூட காரணம் ஆகின்றது.
    மேலும் கொலஜென் வெகு சீக்கிரம் உடலில் குறைவதற்கான கராணங்களாக

    * போதிய நேரம் தூக்கமின்மை, * அதிக சர்க்கரை உள்ள உணவு சாப்பிடுதல், * அடிபடுதல், * பலவீன மூட்டுகள், * அதிக கொலஸ்டிரால், * அதிகம் வெய்யிலில் இருத்தல், * நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத உணவு, * நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பது, * உணவுப் பாதை பாதிப்பு, * வைட்டமின் சி, ஸிங்க குறைபாடு ஆகியவைகளும் ஆகும்.

    வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு, பூண்டு, வெங்காயம், மஞ்சள், கிரீன் டீ போன்றவை கொலஜென் பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு பகுதியே அவரது உடலின் ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதே இந்த நோயாகும். கடுமையான சுயபாதிப்பு உடன் இணைந்த திசு குறைபாடு ஆகும். இது உடலின் எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும். மூட்டு, சருமம், சிறுநீரகம், ரத்த அணுக்கள், இருதயம், மூளை என எந்த பாகத்தினையும் பாதிக்கக் கூடும்.

    15-45 வயதிற்குட்பட்டவரை அதிகமாய் இந்நோய் பாதிக்கின்றது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகின்றது. இந்நோய் தாக்கத்திற்கான காரணங்கள் இன்னமும் ஆய்வு நிலையில் தொடர்ந்து இருக்கின்றது. பரம்பரை, ஹார்மோன்கள், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவைகள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

    இந்த பாதிப்பினை அடையும் 10 பேரில் 9 பேர் பெண்களாக இருக்கின்றனர். பாதிப்புடைய பெண்கள் மாதவிடாய் முன்பு, கர்ப்பகாலம் ஆகிய நேரங்களில் இந்த பாதிப்பினை அதிகம் அடைகின்றனர்.

    * அதிக ஒளி, * சில வகை கிருமிகள், வைரஸ், * அதிக மனஉளைச்சல், * சில வகை மருந்துகள், * சில காயங்கள் போன்றவையும் பாதிப்பிற்கு காரணங்கள் ஆகின்றன.



    நோயின் அறிகுறிகள்.

    இதன் அறிகுறிகள் மற்ற சில நோய்களின் அறிகுறிகள் போலும் இருக்கும்.

    * பூச்சி வடிவில் உடலில் திட்டுகள், கன்னத்தில் மற்றும் மூக்கில் இருக்கும்,
    * அதிக சோர்வு,
    * மிகவும் வீங்கிய மூட்டுகள்,
    * முடி கொட்டுதல்,
    * அடிக்கடி ஜீரம்,
    * வெய்யிலில் சென்றாலே சரும பாதிப்பு அதிகரித்தல்,
    * அதிக மனஉளைச்சல், குளிர் இருக்கும் பொழுது கை, கால் விரல்கள் வெளுப்பது  (அ) வெளிர் நீலம் ஆவது,
    * ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது நெஞ்சுவலிப்பது,
    * வறண்டவாய், வறண்ட கண்கள்,
    * பசியின்மை, வயிற்றுப் பிரட்டல், வாந்தி

    ஆகியவை இருக்கும். மருத்துவர் ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையே இதற்கு தீர்வாக அமையும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் உங்களைப் பற்றி சொல்லி விடும்.

    நமது மரபணுக்கள் நம் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் உங்கள் உடல் நலத்தோடு சம்பந்தப்பட்டது. அவற்றில் சிலவற்றினை பார்ப்போம்.

    முகப்பருக்கள்: அநேகர் இதன் தாக்குதலால் கஷ்டப்படுகின்றனர். உங்கள் பெற்றோருக்கு இருக்கின்றதா? உங்கள் சரும பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். சிறிய பாதிப்பு ஏற்படும் பொழுதே சரும நிபுணரின் ஆலோசனைப் பெறுங்கள்.

    * பல் சொத்தை,
    * பெரிய மருத்துவ காரணமின்றி மனஉளைச்சல் ஏற்படும் பொழுது மயங்குதல்,
    * நெஞ்செரிச்சல்,
    * படிப்பதில் சில குறைபாடுகள்,
    * அலர்ஜி,
    * அடிக்கடி தலைவலி (மைக்ரேன்),
    * ஈறுகளில் ரத்த கசிவு,
    * எடை,
    * நீரிழவு நோய்,
    * மனச்சோர்வு,
    * கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகள்,
    * அதிக மது பழக்கம்,
    * இரட்டை குழந்தை,
    * இருதய பாதிப்பு,
    * வெகு சீக்கிரம் மாத விடாய் நிற்பது,
    * ஆஸ்துமா,
    * உணவுக் குழாய் பாதிப்பு,
    * அதிக கொழுப்பு,
    * மார்பக புற்றுநோய்.

    இவையெல்லாம் பெற்றோருக்கும் மற்றும் தாத்தா, பாட்டிக்கு இருந்ததென்றால் அவர்களது வாரிசுகளும் மேற்கூறியவற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதற்கு போதுமான ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.

    ஏற்கனவே கட்டிய கட்டிடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். அதற்கு கட்டிட என்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    ஜன்னல் கண்ணாடிகளின் மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசி படலம் தடுக்கும். அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ண கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும்.

    சுவர்களில் பூசும் பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மை. அழுத்தமான வண்ணங்களை சுவர்களுக்கு பூசினால், அதன் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்புகள் போதுமானது.



    மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தை குறைத்தால், மின்சாரம் குறைவாக செலவாகுமா? என்பதுதான். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மின்விசிறியை சுற்றவிடலாம்.

    எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தை செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

    வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் சி.எப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தை தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தை செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
    ×