என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிந்த கொள்ள ஸ்கேன் பரிசோதனை உதவுகின்றன.
ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால் பொதுவாக கருவுற்ற 11-14 வாரங்களில் எடுக்கலாம். ஆனால், கருவுற்றிருப்பவர்களுக்கு வயிற்றுவலி இருந்தாலோ சிறிய அளவிலான உதிரக்கசிவு இருந்தாலோ உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். 5, 6 வாரங்களில் டேட்டிங் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.
ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ அபார்ஷன் செய்திருந்தாலோ இதற்கு முன்பான கர்ப்பத்தில் குழந்தை சரியாக கருப்பையில் அமராமல் டியூபிலேயே தங்கியிருந்தாலோ கர்ப்பம் அடைந்தவுடன் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பம் அடையும் முன் மாதவிடாய் சுழற்சி சரியாக மாதா மாதம் வராமல் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் கர்ப்பம் அடைந்தவுடன் ஸ்கேன் எடுப்பது நல்லது.
இதன் மூலம் பிரசவ தேதியை சரியாகக் குறிக்க முடியும். சிலருக்கு வயிறு வழியாக அல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாய் இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு அவர்கள் உடல்வாகு, கருவின் உடல் நிலைக்கு ஏற்ப முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம்.
சில சமயங்களில் முதல் முறை பார்க்கும்போது குழந்தையின் இதயத்துடிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது இருக்கும். தொடர்ந்து சிறிய அளவிலான உதிரக் கசிவு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு ஆகியவற்றைப் பார்க்க முடியும். சென்ற பகுதியில் சொன்னது போல முதல் மும்மாதத்திலேயே இந்த உறுப்புகள் எல்லாம் உருவாகிவிடும்.
இதற்குப் பிறகான மாதங்களில் இவை வளர்ச்சி அடையத் தொடங்கும் என்பதால் முதல் மும்மாத ஸ்கேனிலேயே குழந்தைக்கு உடல் ஊனம் ஏதும் இருந்தாலும் கண்டறிய இயலும். முதல் மும்மாதத்தில் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (Nucheal thickness).
தோலின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ அபார்ஷன் செய்திருந்தாலோ இதற்கு முன்பான கர்ப்பத்தில் குழந்தை சரியாக கருப்பையில் அமராமல் டியூபிலேயே தங்கியிருந்தாலோ கர்ப்பம் அடைந்தவுடன் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பம் அடையும் முன் மாதவிடாய் சுழற்சி சரியாக மாதா மாதம் வராமல் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் கர்ப்பம் அடைந்தவுடன் ஸ்கேன் எடுப்பது நல்லது.
இதன் மூலம் பிரசவ தேதியை சரியாகக் குறிக்க முடியும். சிலருக்கு வயிறு வழியாக அல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாய் இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு அவர்கள் உடல்வாகு, கருவின் உடல் நிலைக்கு ஏற்ப முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம்.
சில சமயங்களில் முதல் முறை பார்க்கும்போது குழந்தையின் இதயத்துடிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது இருக்கும். தொடர்ந்து சிறிய அளவிலான உதிரக் கசிவு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு ஆகியவற்றைப் பார்க்க முடியும். சென்ற பகுதியில் சொன்னது போல முதல் மும்மாதத்திலேயே இந்த உறுப்புகள் எல்லாம் உருவாகிவிடும்.
இதற்குப் பிறகான மாதங்களில் இவை வளர்ச்சி அடையத் தொடங்கும் என்பதால் முதல் மும்மாத ஸ்கேனிலேயே குழந்தைக்கு உடல் ஊனம் ஏதும் இருந்தாலும் கண்டறிய இயலும். முதல் மும்மாதத்தில் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (Nucheal thickness).
தோலின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.
குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது.
செய்முறை :
கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கை நடுப்பகுதியில் தொட வேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடிக்க வேண்டும்.
தரையில் விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றியோ செய்யலாம். ஒரு நாளைக்கு இருவேளை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். படுத்துக்கொண்டு செய்யக் கூடாது.
பலன்கள் :
நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.
மூக்கில் அடைப்பு, குளிரால் மூச்சுவிட முடியாதது, மூச்சுத் திணறல், சளி, சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகள் சரியாகும்.
குழந்தைகள் ஒரு மாதத்துக்கு 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி, நினைவுத்திறன் அதிகரிக்கும். வளர் இளம் பருவத்தினர் செய்ய, நல்ல எண்ணங்கள் உருவாகும்.
மூளையை ஆல்ஃபா நிலைக்குக் கொண்டுசெல்வதால், மனதில் எண்ணும் காட்சிகள் ஆழ்மனதில் பதியும்; நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்; உயர்ந்த லட்சியங்களை அடைய உறுதுணையாக இருக்கும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
செய்முறை :
கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கை நடுப்பகுதியில் தொட வேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடிக்க வேண்டும்.
தரையில் விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றியோ செய்யலாம். ஒரு நாளைக்கு இருவேளை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். படுத்துக்கொண்டு செய்யக் கூடாது.
பலன்கள் :
நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.
மூக்கில் அடைப்பு, குளிரால் மூச்சுவிட முடியாதது, மூச்சுத் திணறல், சளி, சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகள் சரியாகும்.
குழந்தைகள் ஒரு மாதத்துக்கு 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி, நினைவுத்திறன் அதிகரிக்கும். வளர் இளம் பருவத்தினர் செய்ய, நல்ல எண்ணங்கள் உருவாகும்.
மூளையை ஆல்ஃபா நிலைக்குக் கொண்டுசெல்வதால், மனதில் எண்ணும் காட்சிகள் ஆழ்மனதில் பதியும்; நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்; உயர்ந்த லட்சியங்களை அடைய உறுதுணையாக இருக்கும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனினும் ஒருசில வகை காய்கறி, பழ வகைகளில் சர்க்கரை அளவும், ஸ்டார்ச் அளவும் அதிகம் இருக்கின்றன. அதனால் நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமின்றி தமக்கும் அத்தகைய பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிறைய பேர் காய்கறி, பழ வகைகளை சாப்பிட தயங்குகிறார்கள். சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.
* தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.
* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.
* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.
* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.
* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.
* தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.
* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.
* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.
* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.
* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.
காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலை அந்த இட்லியை வைத்து மஞ்சூரியன் செய்யலாம். இன்று சுவையான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி - 8
மைதா - 2 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார்(சோளமாவு) - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு
சமையல் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - மாவு கலக்க
முட்டைகோஸ் - 1 கப் (விரும்பினால்)
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சாஸ் தயாரிக்க :
பூண்டு - 1+1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
குடை மிளகாய் - 1 பெரியது
ரெட் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
லைட் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் - 1+1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு

செய்முறை :
இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத் துண்டுகளை தனித்தனி இதழ்களாக பிரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு, சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கிய முட்டைகோஸை பிரட்டி எண்ணெயில் பொரித்து அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1+1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை, சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.
உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.
கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து கொடுத்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.
இட்லி - 8
மைதா - 2 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார்(சோளமாவு) - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு
சமையல் சோடா - 1 சிட்டிகை
தண்ணீர் - மாவு கலக்க
முட்டைகோஸ் - 1 கப் (விரும்பினால்)
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சாஸ் தயாரிக்க :
பூண்டு - 1+1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
குடை மிளகாய் - 1 பெரியது
ரெட் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
லைட் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் - 1+1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
வெங்காயத்தாள் - 1/4 கப்

செய்முறை :
இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத் துண்டுகளை தனித்தனி இதழ்களாக பிரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு, சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கிய முட்டைகோஸை பிரட்டி எண்ணெயில் பொரித்து அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1+1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயை சேர்த்து வதக்கவும்.
பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை, சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.
உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.
கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து கொடுத்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.
சூப்பரான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும்.
முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.
மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். முதலில் முதுகுவலி குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் ஜிம்முக்கு சென்று அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதற்காக இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகும்போது முதுகுவலி தோன்றும்.
உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக எடை அல்லது உடல்பருமனாக இருக்கும்போது அந்த கூடுதல் எடையை தாங்குவதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்திவிடும்.
இரு கால்களின் நீளத்தில் வேறுபாடு கொண்டவர்களும் முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள். கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால்கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.
தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகுவலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும்போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும். அது வலியை அதிகப்படுத்திவிடும்.
புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.
மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். முதலில் முதுகுவலி குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் ஜிம்முக்கு சென்று அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதற்காக இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகும்போது முதுகுவலி தோன்றும்.
உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக எடை அல்லது உடல்பருமனாக இருக்கும்போது அந்த கூடுதல் எடையை தாங்குவதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்திவிடும்.
இரு கால்களின் நீளத்தில் வேறுபாடு கொண்டவர்களும் முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள். கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால்கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.
தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகுவலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும்போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும். அது வலியை அதிகப்படுத்திவிடும்.
உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
உடல் பருமன்தான் பலவித நோய்களுக்கு காரணியாக இருந்தாலும் பெண்கள் கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணிகளில் மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் பருமன் அதிகமாவதால் கருமுட்டைகளின் உற்பத்தி திறன் பாதிப்பு, வளர்வதில் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் மாறுபாடு, கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி, வெளியாகும் திறன், கருவாக்கும் திறன் ஆகியவை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
உடல் பருமன் அதிகமாவதால் கரு உருவாகும் போது ஹார்மோன் குறைகள் ஏற்பட்டு, அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு பலமடங்கு அதிகரித்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளான கருவில் குறைபாடு, கரு வளரும் போது கருவின் இதயம், மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் கை, கால்களில் குறைபாடுகள் போன்றவை கருவிற்கு ஏற்படுவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
உடல் பருமன் அதிகரிப்பதால் திடீரென்று குழந்தை கருவிலே இறப்பது கூட ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் உப்பு சத்து மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பது இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அதிகமாகலாம். இரத்த அழுத்தம் அதிகமாவதால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம், வயிற்றிலேயே குழந்தை இறந்து போதல், தாய்க்கு நஞ்சு பிரிதல், வலிப்பு நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான பின்விளைவுகளும் ஏற்படலாம்.
உடல் பருமன் அதிகமாவதால் கரு உருவாகும் போது ஹார்மோன் குறைகள் ஏற்பட்டு, அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு பலமடங்கு அதிகரித்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளான கருவில் குறைபாடு, கரு வளரும் போது கருவின் இதயம், மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் கை, கால்களில் குறைபாடுகள் போன்றவை கருவிற்கு ஏற்படுவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
உடல் பருமன் அதிகரிப்பதால் திடீரென்று குழந்தை கருவிலே இறப்பது கூட ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் உப்பு சத்து மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பது இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அதிகமாகலாம். இரத்த அழுத்தம் அதிகமாவதால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம், வயிற்றிலேயே குழந்தை இறந்து போதல், தாய்க்கு நஞ்சு பிரிதல், வலிப்பு நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான பின்விளைவுகளும் ஏற்படலாம்.
இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.
* வீட்டின் வரவேற்பறையைக் கண்டு உங்கள் உறவினர், தோழிகள் வியக்கிறார்களா? அல்லது முகம் சுழிக்கிறார்களா?
* மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது?
* தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா? வைத்த இடம் தெரியவில்லையா?
* வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம் அடைகிறீர்களா?
எல்லாவற்றுக்கும் ஒரே வழி அழகாக அடுக்கிவைப்பதுதான். ஆம்... வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் ஆனந்தம் அடையலாம். செல்வம் செழிக்க வைக்கலாம். நிம்மதியைக் கொண்டு வரலாம். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
வீட்டை அழகுற வடிவமைத்து கட்டுவது பொறியாளரின் வேலையாக இருக்கலாம். ஆனால் அழகுடன் வைத்துக் கொள்வது நாம்தான். வரவேற்பறை அலமாரி முதல் படுக்கை அறை பரண் வரை எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அழகுபடுத்தி பயன்படுத்துவது ஒரு கலை.
வரவேற்பறை அலமாரியை அழகிய பொம்மைகள் கொண்டுதான் அலங்கரிக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாலே போதும். இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் வீடுகளில் பொருட்கள், அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் அழுக்கும், வேண்டாத பொருட்களும் அடைந்து கிடப்பது, பிள்ளைகள் ஓடி விளையாடும் இடத்தில் பூச்சிகள் ஓடி விளையாடுவது, ஆங்காங்கே ஒட்டடை தோன்றுவது போன்ற வீடுகளில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்படும். செல்வமும் தங்காது என்ற கருத்து உண்டு.
அடுக்கிவைக்கும் கலைக்கு ஜப்பானில் மதிப்பு அதிகம். அதை அவர்கள் ‘5 -எஸ் ஒழுங்குமுறை’ என்கிறார்கள். அங்கே பள்ளிகள், வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் இந்த 5-எஸ் ஒழுங்குமுறையை கட்டாய மாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் அந்த நாட்டின் பெயருக்கும், புகழுக்கும் காரணம். அதன் வளர்ச்சியும் வியக்கும் விதத்தில் இருக்கிறது.
‘5-எஸ்’ என்பது, பொருட்களுக்கு ஏற்ற இடம் ஒதுக்குதல்- தேவையற்றதை களைதல்- குறைகளை நிவர்த்திசெய்தல்- உற்பத்தியை பெருக்குதல்- வளர்ச்சியை அதிகரித்தல் என்பதாகும். இதை வீடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். செல்போனில் இருந்து அதை தொடங்குவோம். நமது அடிப்படைத் தேவையான செல்போனை எங்கே வைக்கிறோம்? உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா? அல்லது கைப்பையிலா எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கைப்பையில்கூட செல் போனுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்த ரெயின்கோட், மப்ளர் குல்லா அடுத்த குளிர்காலம் வரும்போது எங்கே கிடக்கிறதென்று தெரியாது அல்லது பத்திரப்படுத்தாததால் பாசாணம் பிடித்தும், நைந்தும் போயிருக்கும். அதுபோலவே எமெர்ஜென்சி விளக்கு, டார்ச் விளக்கு, கொசுமட்டை எல்லாம் தேவையான நேரத்தில் எடுக்கும்போது (சார்ஜ் ஏற்றாமல் வைத்திருப்பதால்) வீணாகிப் போயிருக்கும். இதுபோல அவசரத் தேவைக்கு, எப்போதோ தேவைப்படும் என்று வாங்கி வைத்த பொருட்கள் பல பராமரிப்பின்றி வீணாகப் போகவும், காணாமல்போகவும் கூடும். இவையெல்லாம் உங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

முதலில் எதை எங்கே வைக்க வேண்டும், எதை முன்னே வைக்க வேண்டும், எதைப் பின்னே வைக்க வேண்டும், எதை உயரத்தில் வைக்க வேண்டும், எதை கீழே வைக்க வேண்டும். மூலையில் எதை வைக்க வேண்டும், மூட்டைக்குள் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய் வதுதான் இந்த அடுக்கி வைத்தல் முறையின் முதல் படி.
அதன்படி பொருட்களின் நீளம், உயரம், அகலத்திற்கு ஏற்பவும், பயன்பாட்டைப் பொருத்தும் அதை அடுக்கத் தீர்மானிக்க வேண்டும். தினசரி பயன்படுத்தும் பொருட்களை கைவாக்கிலும், குறைவாக பயன் படுத்தும் பொருட்களை அருகிலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை உயரத்திலும் அல்லது அடியிலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை சேமிப்பு அறையில் அல்லது பரணிலும் பத்திரப்படுத்த வேண்டும்.
உடையாத பொருட்களை மட்டுமே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.
ஊசி, பாசி, நூல், பசை, டேப் என்று ஒவ்வொரு சின்னப் பொருட்களும் நமக்கு அவசியமானவைதான். ஆனால் அவற்றை தேவைக்கேற்ப பிரித்து தனித்தனி பெட்டியில் போட்டு அடைத்து வைத்து, அடுக்கி யும் வைத்துவிட வேண்டும். இவற்றைத் தேடித் தீர்ப்பதில்தான் உங்கள் நேரம் வீணாவதுடன், எரிச்சலும் தொற்றிக் கொள்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
கத்தரிக்கோல், கத்தி, சுத்தி போன்ற கருவிகளையும் தனியே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவற்றை மூட்டைகட்டி மூலையில் போடுவதைவிட ஒரு ஆணி அடித்த ஸ்டாண்டில் வைத்துப் பராமரித்தால், அவை தொலைந்துபோவதைத் தடுக்கலாம். அவசியமான நேரத்தில் உடனடியாக எடுத்து பயன் படுத்தவும் செய்யலாம்.
எடை அதிகமான பொருட்களை உயரத்தில் வைக்கக்கூடாது. அது கையாளுவதற்கு சிரமத்தைத் தருவதுடன், கவனக்குறைவாக செயல்பட்டால் உடையவும், காயம் ஏற்படுத்தவும் கூடும்.
மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும். அவற்றை கண்பார்வையில் வைத்து கெட்டுப்போகும் முன் பயன்படுத்தவும், குழந்தைகளுக்கும் அதன் ஆபத்தை உணர்த்தவும் வேண்டும்.
பொருட்களை அடுக்கி வைக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து காகிதம் அல்லது பிளாஸ்டிக் விரிப்பு விரித்துவிட்டு அடுக்கி வைக்கலாம். இது எளிதில் தூசுபடிவதைத் தடுக்கும்.
பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற இடத்தில் வைக்காமல் இருப்பதையும் வழக்கமாக்கவேண்டும். காணாமல்போன பல பொருட்களை நிறைய வீடுகளில் மேஜை டிராயர் எனும் புதையல் கிடங்கில் இருந்துதான் தோண்டி எடுக்கிறார்கள். அல்லது அலமாரியை அலசி ஆராய்கிறார்கள். அடுக்கி வைத்தால் இதற்கு அவசியமில்லை.
இப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதால் வீடே அழகாக மாறிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு பொருளைத் தேடுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் போதுமென்றால் உங்களுக்கு வீணான எரிச்சல் வரப்போவதில்லை. அதுவே பெரிய நிம்மதியைக் கொண்டு வரும். ஒருபொருளை எடுக்கும்போது அது அடுத்த பொருளை தள்ளிவிடத் தேவையில்லை என்றால் உங்களுக்கு பணம் மிச்சமாகும், சேதம் குறையும். பயன் படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தினால் இடம் மிச்சமாகும், குப்பையால் உண்டாகும் சீரழிவும், ஆரோக்கிய குறைபாடும், அதனால் ஏற்படும் வீண் பணச் செலவும் தடுக்கப்படும்.
எல்லாம் சரிதான், “அடுக்கி வைப்பது என் ஒருத்தியால் ஆகுமா?” என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் கேட்கலாம். உங்களுக்கு சில வார்த்தை. சிறு குழந்தைகள்தான் சில நேரங்களில் சேட்டை செய்வார்கள். மற்றபடி அவர்கள் உங்கள் வார்ப்பு போலவே வளர்ந்து வருவார்கள். சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், வளர்ந்த பிள்ளைகள் எளிதில் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.
* மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது?
* தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா? வைத்த இடம் தெரியவில்லையா?
* வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம் அடைகிறீர்களா?
எல்லாவற்றுக்கும் ஒரே வழி அழகாக அடுக்கிவைப்பதுதான். ஆம்... வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் ஆனந்தம் அடையலாம். செல்வம் செழிக்க வைக்கலாம். நிம்மதியைக் கொண்டு வரலாம். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
வீட்டை அழகுற வடிவமைத்து கட்டுவது பொறியாளரின் வேலையாக இருக்கலாம். ஆனால் அழகுடன் வைத்துக் கொள்வது நாம்தான். வரவேற்பறை அலமாரி முதல் படுக்கை அறை பரண் வரை எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அழகுபடுத்தி பயன்படுத்துவது ஒரு கலை.
வரவேற்பறை அலமாரியை அழகிய பொம்மைகள் கொண்டுதான் அலங்கரிக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாலே போதும். இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் வீடுகளில் பொருட்கள், அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் அழுக்கும், வேண்டாத பொருட்களும் அடைந்து கிடப்பது, பிள்ளைகள் ஓடி விளையாடும் இடத்தில் பூச்சிகள் ஓடி விளையாடுவது, ஆங்காங்கே ஒட்டடை தோன்றுவது போன்ற வீடுகளில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்படும். செல்வமும் தங்காது என்ற கருத்து உண்டு.
அடுக்கிவைக்கும் கலைக்கு ஜப்பானில் மதிப்பு அதிகம். அதை அவர்கள் ‘5 -எஸ் ஒழுங்குமுறை’ என்கிறார்கள். அங்கே பள்ளிகள், வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் இந்த 5-எஸ் ஒழுங்குமுறையை கட்டாய மாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் அந்த நாட்டின் பெயருக்கும், புகழுக்கும் காரணம். அதன் வளர்ச்சியும் வியக்கும் விதத்தில் இருக்கிறது.
‘5-எஸ்’ என்பது, பொருட்களுக்கு ஏற்ற இடம் ஒதுக்குதல்- தேவையற்றதை களைதல்- குறைகளை நிவர்த்திசெய்தல்- உற்பத்தியை பெருக்குதல்- வளர்ச்சியை அதிகரித்தல் என்பதாகும். இதை வீடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். செல்போனில் இருந்து அதை தொடங்குவோம். நமது அடிப்படைத் தேவையான செல்போனை எங்கே வைக்கிறோம்? உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா? அல்லது கைப்பையிலா எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கைப்பையில்கூட செல் போனுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்த ரெயின்கோட், மப்ளர் குல்லா அடுத்த குளிர்காலம் வரும்போது எங்கே கிடக்கிறதென்று தெரியாது அல்லது பத்திரப்படுத்தாததால் பாசாணம் பிடித்தும், நைந்தும் போயிருக்கும். அதுபோலவே எமெர்ஜென்சி விளக்கு, டார்ச் விளக்கு, கொசுமட்டை எல்லாம் தேவையான நேரத்தில் எடுக்கும்போது (சார்ஜ் ஏற்றாமல் வைத்திருப்பதால்) வீணாகிப் போயிருக்கும். இதுபோல அவசரத் தேவைக்கு, எப்போதோ தேவைப்படும் என்று வாங்கி வைத்த பொருட்கள் பல பராமரிப்பின்றி வீணாகப் போகவும், காணாமல்போகவும் கூடும். இவையெல்லாம் உங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

முதலில் எதை எங்கே வைக்க வேண்டும், எதை முன்னே வைக்க வேண்டும், எதைப் பின்னே வைக்க வேண்டும், எதை உயரத்தில் வைக்க வேண்டும், எதை கீழே வைக்க வேண்டும். மூலையில் எதை வைக்க வேண்டும், மூட்டைக்குள் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய் வதுதான் இந்த அடுக்கி வைத்தல் முறையின் முதல் படி.
அதன்படி பொருட்களின் நீளம், உயரம், அகலத்திற்கு ஏற்பவும், பயன்பாட்டைப் பொருத்தும் அதை அடுக்கத் தீர்மானிக்க வேண்டும். தினசரி பயன்படுத்தும் பொருட்களை கைவாக்கிலும், குறைவாக பயன் படுத்தும் பொருட்களை அருகிலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை உயரத்திலும் அல்லது அடியிலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை சேமிப்பு அறையில் அல்லது பரணிலும் பத்திரப்படுத்த வேண்டும்.
உடையாத பொருட்களை மட்டுமே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.
ஊசி, பாசி, நூல், பசை, டேப் என்று ஒவ்வொரு சின்னப் பொருட்களும் நமக்கு அவசியமானவைதான். ஆனால் அவற்றை தேவைக்கேற்ப பிரித்து தனித்தனி பெட்டியில் போட்டு அடைத்து வைத்து, அடுக்கி யும் வைத்துவிட வேண்டும். இவற்றைத் தேடித் தீர்ப்பதில்தான் உங்கள் நேரம் வீணாவதுடன், எரிச்சலும் தொற்றிக் கொள்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
கத்தரிக்கோல், கத்தி, சுத்தி போன்ற கருவிகளையும் தனியே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவற்றை மூட்டைகட்டி மூலையில் போடுவதைவிட ஒரு ஆணி அடித்த ஸ்டாண்டில் வைத்துப் பராமரித்தால், அவை தொலைந்துபோவதைத் தடுக்கலாம். அவசியமான நேரத்தில் உடனடியாக எடுத்து பயன் படுத்தவும் செய்யலாம்.
எடை அதிகமான பொருட்களை உயரத்தில் வைக்கக்கூடாது. அது கையாளுவதற்கு சிரமத்தைத் தருவதுடன், கவனக்குறைவாக செயல்பட்டால் உடையவும், காயம் ஏற்படுத்தவும் கூடும்.
மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும். அவற்றை கண்பார்வையில் வைத்து கெட்டுப்போகும் முன் பயன்படுத்தவும், குழந்தைகளுக்கும் அதன் ஆபத்தை உணர்த்தவும் வேண்டும்.
பொருட்களை அடுக்கி வைக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து காகிதம் அல்லது பிளாஸ்டிக் விரிப்பு விரித்துவிட்டு அடுக்கி வைக்கலாம். இது எளிதில் தூசுபடிவதைத் தடுக்கும்.
பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற இடத்தில் வைக்காமல் இருப்பதையும் வழக்கமாக்கவேண்டும். காணாமல்போன பல பொருட்களை நிறைய வீடுகளில் மேஜை டிராயர் எனும் புதையல் கிடங்கில் இருந்துதான் தோண்டி எடுக்கிறார்கள். அல்லது அலமாரியை அலசி ஆராய்கிறார்கள். அடுக்கி வைத்தால் இதற்கு அவசியமில்லை.
இப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதால் வீடே அழகாக மாறிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு பொருளைத் தேடுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் போதுமென்றால் உங்களுக்கு வீணான எரிச்சல் வரப்போவதில்லை. அதுவே பெரிய நிம்மதியைக் கொண்டு வரும். ஒருபொருளை எடுக்கும்போது அது அடுத்த பொருளை தள்ளிவிடத் தேவையில்லை என்றால் உங்களுக்கு பணம் மிச்சமாகும், சேதம் குறையும். பயன் படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தினால் இடம் மிச்சமாகும், குப்பையால் உண்டாகும் சீரழிவும், ஆரோக்கிய குறைபாடும், அதனால் ஏற்படும் வீண் பணச் செலவும் தடுக்கப்படும்.
எல்லாம் சரிதான், “அடுக்கி வைப்பது என் ஒருத்தியால் ஆகுமா?” என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் கேட்கலாம். உங்களுக்கு சில வார்த்தை. சிறு குழந்தைகள்தான் சில நேரங்களில் சேட்டை செய்வார்கள். மற்றபடி அவர்கள் உங்கள் வார்ப்பு போலவே வளர்ந்து வருவார்கள். சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், வளர்ந்த பிள்ளைகள் எளிதில் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேரட், மிளகு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மிளகு - 1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 100 கிராம்
பிரியாணி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
கேரட் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்,
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பிரியாணி இலையை போட்டு கிளறவும்.
அதனுடன் வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்.
மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி போதுமான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
4 விசில் வந்ததும் இறக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு இறக்கி மிதமான சூட்டில் பருகலாம்.
மிளகு - 1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 100 கிராம்
பிரியாணி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
கேரட் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்,
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவைக்கு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பிரியாணி இலையை போட்டு கிளறவும்.
அதனுடன் வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்.
மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி போதுமான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
4 விசில் வந்ததும் இறக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு இறக்கி மிதமான சூட்டில் பருகலாம்.
சூப்பரான கேரட் - மிளகு சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அஞ்சலி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. இந்து முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :
தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.
10 - 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள் :
மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும். விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.
இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும். நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.
விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.
தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.
10 - 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள் :
மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும். விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.
இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும். நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.
விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.
இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...
காட்சி உலகம்...
இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.
பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.
இணையக் கல்வி அவசியம்
வகுப்பறை நிர்வாகம்
ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.
நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.
வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.
தேவை சுயபரிசோதனை
மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.
வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...
ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.
கற்பித்தலும், கற்றலும்...
கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.
கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...
காட்சி உலகம்...
இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.
பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.
இணையக் கல்வி அவசியம்
பயிற்சி வகுப்புகளையும், தகவல் தொடர்பையும் தற்காலத்திற்கு ஏற்றபடி இணைய வழிக்கு மாற்றினால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் கவனம் செலுத்துவார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைத்து தகவல்களையும் இணைய தரவுகளாக மாற்றவும், பாடங்கள் மற்றும் பயிற்சிமுறைகளை கணினி- இணைய நுட்பத்திற்கு எளிதாக மாற்றவும் முடியும். மாணவர்களுக்கு தகவல்களை கடத்தவும், கருத்துகளை பகிரவும் இது ஏற்றது.
வீட்டுப்பாடப் பயிற்சிக்கான தகவல்களையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இணையத்தில் பதிவேற்றினால் எந்த மாணவரும் குழப்பமடையாமல் தெரிந்து கொள்வார்கள். கூச்சம் தவிர்த்து தங்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவும் இணைய தகவல் தொடர்பு வசதியாக இருக்கவும், இதன் வழியே ஒவ்வொரு மாணவரின் திறமையை பாராட்டவும், குறைநிறைகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து அவர்களை வழிநடத்தவும் முடியும். இதனால் சராசரி மாணவர்கள் மற்றவர் முன்னிலையில் அவமானம் அடைவதையும், கூச்சம் கொண்டு ஒதுங்கிச் செல்வதையும் தவிர்க்கலாம். தங்களுக்கென எளிமையான இணையப்பக்கத்தை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சுலபமானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
வகுப்பறை நிர்வாகம்
ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.
நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.
வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.
தேவை சுயபரிசோதனை
மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.
வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...
ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.
கற்பித்தலும், கற்றலும்...
கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.
கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!
மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
“மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்” என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நாம் மனநலம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளோமா? என்பது ஐயமே. உடல் நலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்தை நாம் மன நலத்திற்குக் கொடுப்பதில்லை. மனமும் உடலும் ஒன்றை யொன்று சார்ந்தவை. மனம் நலமாக இருந்தால்தான் உடலும் நன்றாக இருக்கும்.
தானே சிரித்துக் கொண்டும் தானே பேசிக் கொண்டும் தன்னைப் பற்றிய மனத்தெளிவு இல்லாமல் இருப்பவர்களை மட்டுமே மனநலக் குறைபாடுடையவர்கள் என்று எண்ணுகிறோம். வீட்டில் வன்முறையான செயல்களில் ஈடுபட்டாலோ, மற்றவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தினாலோ பயந்து அரண்டு உறவினர்கள், மனநல மருத்துவரிடம் அழைத்து வருகின்றனர், மேலும் மனநலக் குறைபாடுகளெல்லாம் பேய், பிசாசுத் தொல்லைகள். மாந்திரிகம், செய்வினை போன்ற காரணங்களாலும் வருகிறது என்ற தவறான கருத்துகள் மக்களிடையே பரவியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மனநல மருத்துவரை அணுகுவதே கேவலமானது என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது.
மனநலக் குறைபாடுகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் உடலில் உள்ள சுரப்பிகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களாலும் வருகிறது. பரம்பரையாக வருவதும் ஒரு காரணமாகும். இதைத்தவிர குழந்தைகளின் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை, போதைப் பொருட்களின் பயன்பாடு, போன்ற காரணங்களாலும் வருகிறது.
மனநலம் என்றால் என்ன?
சிந்தனை, உணர்ச்சிகள், நினைவு ஆற்றல், புரிந்துகொள்ளும் தன்மை, முடிவெடுக்கும் ஆற்றல், நடத்தை, குணநலன் ஆகிய அனைத்தும் சரியாக இருப்பது மனநலம் ஆகும்.
இவற்றுள் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ பாதிக்கப்பட்டு அதனால் அவர் தனக்கும், தன்னைச் சார்ந்தவருக்கும் இடையூறாக இருக்கும் பட்சத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார்.
ஏழை, பணக்காரர்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள், சாதி, மத, இன வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினரிடமும் மனநலக் குறைபாடுகள் காணப்படுகின்றன.
உடல் நோயைப் போன்றே மனநலக் குறைபாடுகளும் பலவகைப்படும். காய்ச்சல் என்றால் வைரஸ் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்று பலவகை இருப்பதைப் போலவே மனநலக் குறைபாடுகளிலும் பலவகையான மனநலக் குறைபாடுகள் உண்டு.
மனிதர்களுக்குப் பலவிதமான சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுதல் இயல்பே. இல்லறவாழ்க்கையிலும் அலுவலகத்திலும் பலவகைச் சிக்கல்களும் அவற்றால் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இவற்றுக்குரிய தீர்வுகளைப் பற்றிய சிந்தனைக்கு நேரமும் வாய்ப்பும் கிட்டுகின்றனவா?

தேவையில்லாமலும் கோழைத்தனத்தாலும் வீண் கோபத்தாலும் தற்கொலைக்குப் பலர் முயல்வதும் வீணே மடிந்து போவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. தற்கொலை முயற்சிகளும், போதைப் பொருட்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாவதும், மனநலக்குறைபாட்டின் வெளிப்பாடுகளே.
மனநோயை மனநலக்குறைப்பாட்டை தீவிரமான நோய், மிதமான மனநோய் என இருவகையாகப் பிரிக்கலாம். உலக மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் தீவிர மன நோய்களாலும் 20 சதவீத மக்கள் மிதமான மனநோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டில் மனநோயானது குறிப்பாக மனச்சோர்வு நோயானது உடல் சார்ந்த நோய்களைக் காட்டிலும் அதிக அளவு மக்களைப் பாதிக்கும் எனவும் உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்ற மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூட்டு வலிகள், தீராத தலைவலி, வயிற்றுப்புண், தீராத வயிற்றுப் போக்கு, வாந்தி, முதலியன மனநலக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. சிறு வயதில் மனதில் உண்டாகும் அதிர்ச்சிகளும், அன்றாடம் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அணுகும் முறைகளாலும் இவை ஏற்படுகின்றன.
மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு இரையான ஆண்களும் பெரும்பாலான பெண்களும் மிதமான மன நோய்க்கு ஆளாகின்றனர். எனவே வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் முறையான வழிகளைக் கையாள வேண்டும். குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம்.
குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள உரிய வழிகாட்டி உதவ வேண்டும் தமது குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அவர்களுக்கான முடிவை எடுக்கும் முன் அவர்களுடன் ஆலோசித்து அவர்களுக்குச் சரியான புரிதலை உண்டாக்கவேண்டும். அவர்களது மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.
விடலைப்பருவம் மனநலக் குறைபாடுகளுக்கு வித்திடும் பருவமாகும், இப்பருவத்தை எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டால் அவர்களின் வாழ்வில் மனநலக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க இயலும். உடல்ரீதியாக வெளிப்படும் மன நோய்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து உமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி, உடலின் சில பாகங்களில் வலி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பல அறிகுறிகளுக்கு உடல் ரீதியாகக் காரணங்கள் இல்லாத போது அவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதே மன அமைதிக்கும், மனநலத்திற்கும் வழி வகுக்கும், தனிப்பட்ட மனிதனின் குணநல மேம்பாடு, சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ மாற்றம், சமுதாய மேம்பாடு போன்ற பல காரணங்களும் இதற்குத் துணையாக இருக்கும். மன மகிழ்வோடு, மனநலத்தோடு வாழ உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாகும்.
மனநலமே மனித நலம். மனநலமே சமூகநலம். மனநலமே உலகநலம். இதனைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவே உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.
மருத்துவர் செல்வமணி தினகரன்
தானே சிரித்துக் கொண்டும் தானே பேசிக் கொண்டும் தன்னைப் பற்றிய மனத்தெளிவு இல்லாமல் இருப்பவர்களை மட்டுமே மனநலக் குறைபாடுடையவர்கள் என்று எண்ணுகிறோம். வீட்டில் வன்முறையான செயல்களில் ஈடுபட்டாலோ, மற்றவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தினாலோ பயந்து அரண்டு உறவினர்கள், மனநல மருத்துவரிடம் அழைத்து வருகின்றனர், மேலும் மனநலக் குறைபாடுகளெல்லாம் பேய், பிசாசுத் தொல்லைகள். மாந்திரிகம், செய்வினை போன்ற காரணங்களாலும் வருகிறது என்ற தவறான கருத்துகள் மக்களிடையே பரவியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மனநல மருத்துவரை அணுகுவதே கேவலமானது என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது.
மனநலக் குறைபாடுகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் உடலில் உள்ள சுரப்பிகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களாலும் வருகிறது. பரம்பரையாக வருவதும் ஒரு காரணமாகும். இதைத்தவிர குழந்தைகளின் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை, போதைப் பொருட்களின் பயன்பாடு, போன்ற காரணங்களாலும் வருகிறது.
மனநலம் என்றால் என்ன?
சிந்தனை, உணர்ச்சிகள், நினைவு ஆற்றல், புரிந்துகொள்ளும் தன்மை, முடிவெடுக்கும் ஆற்றல், நடத்தை, குணநலன் ஆகிய அனைத்தும் சரியாக இருப்பது மனநலம் ஆகும்.
இவற்றுள் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ பாதிக்கப்பட்டு அதனால் அவர் தனக்கும், தன்னைச் சார்ந்தவருக்கும் இடையூறாக இருக்கும் பட்சத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார்.
ஏழை, பணக்காரர்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள், சாதி, மத, இன வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினரிடமும் மனநலக் குறைபாடுகள் காணப்படுகின்றன.
உடல் நோயைப் போன்றே மனநலக் குறைபாடுகளும் பலவகைப்படும். காய்ச்சல் என்றால் வைரஸ் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்று பலவகை இருப்பதைப் போலவே மனநலக் குறைபாடுகளிலும் பலவகையான மனநலக் குறைபாடுகள் உண்டு.
மனிதர்களுக்குப் பலவிதமான சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுதல் இயல்பே. இல்லறவாழ்க்கையிலும் அலுவலகத்திலும் பலவகைச் சிக்கல்களும் அவற்றால் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இவற்றுக்குரிய தீர்வுகளைப் பற்றிய சிந்தனைக்கு நேரமும் வாய்ப்பும் கிட்டுகின்றனவா?

தேவையில்லாமலும் கோழைத்தனத்தாலும் வீண் கோபத்தாலும் தற்கொலைக்குப் பலர் முயல்வதும் வீணே மடிந்து போவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. தற்கொலை முயற்சிகளும், போதைப் பொருட்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாவதும், மனநலக்குறைபாட்டின் வெளிப்பாடுகளே.
மனநோயை மனநலக்குறைப்பாட்டை தீவிரமான நோய், மிதமான மனநோய் என இருவகையாகப் பிரிக்கலாம். உலக மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் தீவிர மன நோய்களாலும் 20 சதவீத மக்கள் மிதமான மனநோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டில் மனநோயானது குறிப்பாக மனச்சோர்வு நோயானது உடல் சார்ந்த நோய்களைக் காட்டிலும் அதிக அளவு மக்களைப் பாதிக்கும் எனவும் உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்ற மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூட்டு வலிகள், தீராத தலைவலி, வயிற்றுப்புண், தீராத வயிற்றுப் போக்கு, வாந்தி, முதலியன மனநலக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. சிறு வயதில் மனதில் உண்டாகும் அதிர்ச்சிகளும், அன்றாடம் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அணுகும் முறைகளாலும் இவை ஏற்படுகின்றன.
மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு இரையான ஆண்களும் பெரும்பாலான பெண்களும் மிதமான மன நோய்க்கு ஆளாகின்றனர். எனவே வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் முறையான வழிகளைக் கையாள வேண்டும். குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம்.
குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள உரிய வழிகாட்டி உதவ வேண்டும் தமது குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அவர்களுக்கான முடிவை எடுக்கும் முன் அவர்களுடன் ஆலோசித்து அவர்களுக்குச் சரியான புரிதலை உண்டாக்கவேண்டும். அவர்களது மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.
விடலைப்பருவம் மனநலக் குறைபாடுகளுக்கு வித்திடும் பருவமாகும், இப்பருவத்தை எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டால் அவர்களின் வாழ்வில் மனநலக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க இயலும். உடல்ரீதியாக வெளிப்படும் மன நோய்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து உமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி, உடலின் சில பாகங்களில் வலி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பல அறிகுறிகளுக்கு உடல் ரீதியாகக் காரணங்கள் இல்லாத போது அவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதே மன அமைதிக்கும், மனநலத்திற்கும் வழி வகுக்கும், தனிப்பட்ட மனிதனின் குணநல மேம்பாடு, சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ மாற்றம், சமுதாய மேம்பாடு போன்ற பல காரணங்களும் இதற்குத் துணையாக இருக்கும். மன மகிழ்வோடு, மனநலத்தோடு வாழ உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாகும்.
மனநலமே மனித நலம். மனநலமே சமூகநலம். மனநலமே உலகநலம். இதனைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவே உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.
மருத்துவர் செல்வமணி தினகரன்
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்து சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.
முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
மேலும் முட்டைகோஸ் வேக வைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் ஆகியவற்றை தினமும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்திடும். தொடர்ந்து உடல் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் இதனை தினமும் பின்பற்றி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சரியான நிலையில் பரமாரிக்கப்படும்.
இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.
நரம்புகளுக்கு வலுகொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். மேலும் சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
உடலில் இவை நல்ல வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். மேலும் தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.
இதில் உள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.மேலும் எலும்புகள் எப்பொழுதும் வலுமையுடன் இருக்க பெரிதும் உதவுகின்றன.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.






