என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    ஸ்மார்ட்போன் என்பது அதனை பயன்படுத்துபவருக்கு சிறந்த நண்பனாக விளங்குகிறது என்றால், அவர்களை ரகசியமாக உளவுபார்க்கும் உளவாளியும் அதுவே என்றால் அது மிகையாகாது.

    தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலி மூலம் 80 பெண்களை ரகசியமாக கண்காணித்து அவர்களின் அந்தரங்கத்தை திருடி வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்தார் என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களுக்கு முழுமுதற்காரணம் பெண்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை பிறரின் கையில் கொடுப்பது. இதுவே பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஒருவர் உங்களை ரகசியமாக கண்காணிக்க நினைத்தால் ஒரு செயலி (ஆப்) மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

    பெண்களை கண்காணிப்பதற்கான பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கின்றன. அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா, போன் கால்கள், குறுஞ்செய்திகள், இருப்பிடம் மற்றும் அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்க முடியும்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கண்காணிக்கும் செயலி, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஆன் செய்து விடும் என்பது தான். அதிலும் கேமரா ஆன் ஆகி இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இதுபோன்ற செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் மறைத்து வைக்கவும் முடியும்.

    இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் கண்காணிக்கும் செயலிகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.



    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் ஏதேனும் செயலிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள “பிரி ஸ்பைவேர் ஆன்டு மால்வேர் ரீமுவர்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் ஸ்மார்ட்போனை முழுவதும் ஸ்கேன் செய்தால் ஏதேனும் கண்காணிக்கும் செயலி இருந்தால் காட்டிவிடும்.

    நம் ஸ்மார்ட்போனை யாரிடமும் கொடுக்கவில்லை என்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது அது கேட்கும் அனுமதி அனைத்திற்கும் படித்து பார்க்காமல் ‘ஐ அக்ரி’ என்பதை கிளிக் செய்துவிடுகிறோம். இது நம்மை அறியாமல் நாமே நமது தகவல்கள் திருட வழி ஏற்படுத்தி விடும். இது மிக பெரிய தவறு.

    ஒரு செயலி நமது ஸ்மார்ட்போனில் எதனையெல்லாம் அனுமதி கேட்கின்றது என்று கவனிக்காமல் ஐ அக்ரி என்பதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்வதால் அந்த செயலியை உருவாக்கியவர் உங்களை கண்காணிக்க முடியும் மற்றும் உங்களை பற்றிய தகவல்களை உங்கள் அனுமதியுடன் திருடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

    ஒரு செயலி கேட்கும் அனுமதிகளை படித்து பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தான செயலி என்பதை உணர முடியும். மேலும் அந்த செயலியை உருவாக்கியவர் முதலிலே அவர்கள் என்ன தகவல்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்கிறார்கள் மற்றும் அதனை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக அவர்களின் பிரைவசி பாலிசியில் கூறிவிடுவார்கள். ஆனால் அதையும் நாம் கவனிக்காமல் இன்ஸ்டால் செய்கிறோம். இது நமக்கும், நம் ஸ்மார்ட்போனுக்கும் பாதுகாப்பு இல்லை.

    கூகுள் ப்ளே ஸ்டோரில் பல போலியான மற்றும் ஆபத்தான செயலிகளும் கொட்டிக்கிடக்கின்றன. முதலில் ஒரு செயலி பதிவிறக்க செய்யும் முன் அந்த செயலியின் ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை பார்க்க வேண்டும். ஏனென்றால் அதனுடைய ரேட்டிங் வைத்து அதனை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

    ரிவ்யூ மூலம் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியவரின் கருத்துகளை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் டெவலப்பர்ஸ் பெயரை கவனியுங்கள். டெவலப்பர்ஸ் பெயர் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பழுது நீக்க கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து, பின்னர் அவற்றை நீக்கி இருப்பீர்கள். ஆனால் மென்பொருள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டு எடுத்துவிட முடியும்.

    எனவே ஸ்மார்ட்போனை பழுது நீக்குபவர்கள் அது பெண்ணின் ஸ்மார்ட்போனாக இருந்தால் அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்க வாய்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கு இத்தனை இன்னல்களை தரும் ஸ்மார்ட்போனால் அவர்களுக்கு ஒரு சில பயன்களும் இருக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறார்கள் சில விஷக்கிருமிகள். கண்களுக்கே தெரியாத சிறிய ரகசிய கேமராவெல்லாம் வந்துவிட்டது.

    பெண்கள் ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே ஏதேனும் கேமரா இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தால் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி அதனை கண்டுபிடித்து விடலாம். கூகுள் ப்ளே ஸ்டாரில் “ஹிட்டன் கேமரா டிடெக்டர்” என்று செயலி கிடைக்கிறது. ரகசிய கேமரா இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் அந்த இடத்தில் இந்த செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ஏதேனும் சிறிய ரகசிய கேமரா இருந்தால் கூட பிப் சத்தத்தை எழுப்பும். அதை வைத்து எளிதாக அந்த இடத்தில் கேமரா இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம். இன்றைக்கு பெண்கள் அவர்களுடைய ஸ்மார்ட்போனில் ஏராளமான செயலிகளை வைத்திருப்பார்கள். மிக முக்கியமாக வைத்திருக்க வேண்டிய செயலி “பீ சேப்” என்ற செயலி. இது பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள போது உதவும்.

    எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் உள்ள ஆபத்தினால் அதனை கைவிடுவது அறியாமை ஆகும். அதனை விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது நமது கைகளில் தான் இருக்கிறது. இன்றைக்கு தொழில் நுட்பம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் நாம் தான் பாதுகாப்பற்ற மற்றும் விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

    ப.பொன்விக்னேஷ்,
    கல்லூரி மாணவர்
    வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள், சிகிச்சை முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கம், இதர காரணிகளால் வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். மருத்துவ வளர்ச்சியால் இந்த நோய்க்கு உயர் சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்பதே உண்மை.

    இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறை பற்றியும் விளக்குகிறார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு நிபுணர் சிதம்பரம்.

    ரத்த நாளங்கள் இதயத்திற்கு வேண்டிய ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன. இதயம், இடைவிடாது துடிப்பதற்கு வேண்டிய சக்தியை ரத்தநாளங்கள் மூலமே பெறுகிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால், இதய தசைகளுக்கு தேவையான ரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.

    நெஞ்சுவலி என்பது நீண்டகாலமாக இருக்கக்கூடிய நிலையான வலி என்றும் புதிய அல்லது சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையற்ற வலி என்றும் கூறலாம். மூன்றாவது வலியாக ரத்தநாளத்தை சுற்றியுள்ள தசையில் ஏற்படும் திடீர் சுருக்கத்தால் தோன்றும் மாறுபட்ட நெஞ்சுவலி ஆகும். ரத்த நாளத்தில் தோன்றும் ரத்த உறைகட்டிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

    முதல்வகை மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம். 2-வது வகை வலி ஏற்பட்டால் ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும். மாறுபட்ட நெஞ்சுவலியின் அறிகுறிகள். உணர்ச்சி வயப்பட்ட அழுத்தம், குளிர் தாக்குதல், புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் கூட ஏற்படலாம். இந்த வலி சிறிது நேரமே இருப்பதோடு பொதுவாக உறக்கம் கலையும் விதத்தில் இரவு நேரத்தில் ஏற்படும். ரத்த ஒட்டம் தடைபடும் போது ஒழுங்கற்ற நாடித்துடிப்பும் ஏற்படலாம்.

    மாரடைப்பு நிகழ்கின்ற நேரத்தில் ரத்த ஓட்டத்தில் எந்தவிதமான அறிகுறியை கூட காட்டாமலும் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைவதால் வலியை உணரும் தன்மை குறைந்திருக்கும். சில சமயம் இருதயம் பாதிப்படைகின்ற போது உடல் அசதியும், படுக்கும் போது மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

    ரத்த நாளத்தில் நிரந்தரமாகவோ, 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரையோ அடைப்பு நீடித்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது, பொதுவாக 15 நிமிடங்கள் வரை கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தும், சில நேரத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவும் வரவும் வாய்ப்புண்டு. உடைந்த அல்லது விரிசலான ரத்த நாள கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் ரத்த உறைவு, அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு வருகிறது. இந்த உறைக்கட்டியை கரைக்கும் மருந்துகளை மாரடைப்பு நோய் சிகிச்சை முறையின்போது பயன்படுத்துகிறோம்.

    இந்த நோயால் இருதய தசைகள் மீண்டும் செயல்படமுடியாத அளவுக்கு சேதமடைதல், நாடிதுடிப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாலும் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் மரணத்திலிருந்து உயிர் பிழைத்து வருகிறார்கள்.

    கடுமையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய நெஞ்சுவலி, இடது தோளுக்கும், இடது பக்க முதுகுக்கும் சில சமயம் இடது தாடைக்கும் பரவும், வயிற்றின் மேல்பகுதியில் வலி, மூச்சுத்திணறல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, அதிகமாக வியர்த்தல், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும்.

    இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். முடிந்தால் மென்று சாப்பிடுகிற ஆஸ்ப்ரின் மாத்திரையையும், சப்பி சாப்பிடுகிற சார்பிட்ரேட் மாத்திரையையும் உடனே சாப்பிடவேண்டும்.

    நம்முடன் இருக்கும் நபருக்கு மூச்சு நின்றுவிட்டால், உடனே இருதய நுரையீரல் முதலுதவி செய்யவேண்டும். மூச்சுநின்ற சில விநாடிகள் மட்டுமே ஒருவர் உயிர்த்திருக்க முடியும். எனவே, இந்த குறுகிய நேரத்திற்குள் இதை செய்யவேண்டும். எனவே, அனைவரும் இதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    மாரடைப்பு ஏற்பட்ட ஒருமணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவது மிக, மிக அவசியம். அவ்வாறு செய்தால் உயிரைக்காப்பாற்றலாம்.

    இவ்வாறு டாக்டர் சிதம்பரம் கூறினார்.

    டாக்டர் சிதம்பரம்
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. வீட்டையும், நம்மையும் சுத்தமாக வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. தினமும் நான் பெருக்கி, துடைத்து, தூசு தட்டி செய்தாலும் சில அழுக்குகள் கறைகள் நீங்கவே இல்லையே என்று அலுத்துக் கொள்பவர்களுக்கான சில குறிப்புகள்.

    * எவர்சில்வர் வாஷ்பேசின் மற்றும் ஷெல்ப் உடையவர்கள் எத்தனை சுத்தம் செய்தாலும் சுத்தமாகத் தெரிவதில்லையே என்று அலுத்துக் கொள்கின்றீர்களா? பேபி எண்ணெய், ஆலிவு எண்ணெய் என்ற மிக மென்மையான எண்ணெய் சிறிது எடுத்து பேப்பர் டவல் கொண்டு நன்கு துடையுங்கள். பொருட்கள் பளிச்சிடும். இப்படியா குறிப்பு சொல்வது எனக் கூற வேண்டாம். சில துளி எண்ணெயே போதும்.

    * காய்கறி வெட்டும் போர்டை எத்தனை சுத்தம் செய்தாலும் ஒருவித வாடையுடன் இருக்கின்றதா, ஒரு எலுமிச்சையினை பாதியாக நறுக்கி அதில் ஒரு பாதியினை போர்டில் நன்கு தேய்த்து ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை நீரில் நன்கு கழுவி விட்டால் எந்த துர்நாற்றமும் இன்றி கறைகளும் இன்றி இருக்கும்.

    * காய்கறிகளும், பழங்களும் ‘பிரஷ்சாக’ இருக்க வேண்டும். பப்பிரேப் அல்லது இதற்கான பிரத்யேக உறைகளில் பழங்களையும், இதற்கான உறையில் காய்கறிகளையும் போட்டு வையுங்கள்.

    * வாஷ்பேசினில் ஆப்ப சோடா மாவு போட்டு ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றுங்கள். வாஷ்பேசின், பாத்திரம் சுத்தம் செய்யும் இடம் இவை துர்நாற்றம் இன்றி இருக்கும்.

    * வெள்ளை வினிகர் கொண்டு பிரிட்ஜ் உள்ளே நன்கு துடைத்து விடுங்கள் ஒரு கல் ஆப்ப சோடாவினை பிரிட்ஜினுள் வையுங்கள். பிரிட்ஜ் வாடை இன்றி இருக்கும்.



    * மிக முக்கியமான, குழந்தைகள் தொடக்கூடாத மருந்துகளை சிகப்பு பேனாவில் ஒரு அட்டை பெட்டியில் போட்டு உயரே வையுங்கள்.

    * ஷர்ட், பேண்டில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டு விட்டதா? முதலில் துணியினை நன்கு தோய்த்து சுத்தம் செய்து காய வையுங்கள். பின்னர் அத்துணியினை பிரிட்ஜ் மேல் பிரீசரில் சிறிது நேரம் வையுங்கள். பிறகு எடுத்தவுடன் எளிதாய் சூயிங்கம் பிரிந்து வந்து விடும்.

    * ஒரு ஸ்பிரே பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வீட்டின் கறை படிந்த மூலைகளில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் சென்று பஞ்சு போட்டு துடைக்க அழுக்கு கறைகள் நீங்கி விடும்.

    * உங்கள் ஷூக்களுக்குள் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ஷூக்குள் அவ்வப்போது சிறிது பேக்கிங் சோடா தூவி வையுங்கள். சிறிது நேரம் சென்று நன்கு தட்டி விடுங்கள். ஷீ வாடை இன்றி இருக்கும்.

    * ஜன்னல்கள் பிசுபிசுவென அழுக்கால் இருக்கின்றதா? சிறிது வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து ஜன்னலில் நன்கு தடவி பஞ்சு கொண்டு துடைத்து விடுங்கள்.

    * மைக்ரோவேவ் சுத்தம் செய்ய மைக்ரோவேவ் பாத்திரத்தில் நீர் ஊற்றி எலுமிச்சை துண்டுகளை அதில் வெட்டி போட்டு உள்ளே வைத்து 5 நிமிடம் நன்கு சுட வையுங்கள். பிறகு உள்ளே சுத்தமான துணி கொண்டு துடையுங்கள். சுத்தம் செய்யும்போது தகுந்த கையுறைகளை அணிந்து செய்யுங்கள்.

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் மாங்காய் சாதம் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சாதம் - 1 கப்
    துருவிய தேங்காய் - 3/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - 1/2 கப்
    வேர்க்கடலை - 1/2 கப்
    பச்சை மிளகாய் -  தேவையான அளவு
    மாங்காய் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    கடுகு - 1/2 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1/2  ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    மஞ்சள் - 1/2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வடித்துக்கொள்ளவும்.

    * ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள் வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக பொடி செய்து கொள்ளுங்கள்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * பின்னர் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.



    * அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதங்கியதும் இறக்கிவிட்டு அதில் சாதம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.

    * கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும்

    * கடைசியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.

    சுவையான மாங்காய் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    இளைஞர்களைவிட, முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது.
    ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு 'போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாகத் தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில், இளைஞர்களைவிட, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. சிறுவர்கள் புத்தகப்பை மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூடை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது தோளும், முதுகும்தான். ஆனால், நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பு அல்ல.

    நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டை போல் கூடுதல் சுமையை தாங்கும் எலும்பு அல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும்.

    இதன் அறிகுறியாக, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, இரவில் தூங்கும்போது எந்தப் பக்கம் வலி இருக்கிறதோ, அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலி போன்றவை ஏற்படும்.

    இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்களில், ஐந்து பேரில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரிசெய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை (ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி) மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்தும்போது, கையை முன் பின்னாக சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.

    இதுதவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்தும் போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது.

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் கிடைக்கும் ஃபிஷ் டிக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
    தயிர் - 1 கப்,
    கடுகு பவுடர் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    பெருஞ்சீரக தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகு பவுடர், உப்பு, சீரகத் தூள், பெருஞ்சீரக தூள், மிளகாய்த் தூள், கடுகு, மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பிறகு ஸ்க்யூவர் குச்சியில் ஒவ்வொரு துண்டுகளாக குத்தி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஃபிஷ் டிக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மன உளைச்சல், குழப்பம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதனை காட்டுகின்றது.
    பிரோபயாடிக் என்றால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் குறிப்பது. கெட்ட பாக்டீரியா என்பது கிருமி. நோய்களைக் குறிப்பது.

    * வைட்டமின் கே, பிபோளேட், சில வைட்டமின்கள் இவைகளை உருவாகி செயல்பட உதவுவது.
    * நோய் எதிர்ப்புச் சக்திக்கு பெரிதும் உதவுவது.
    * ஜீரண சக்திக்கும், சத்துகள் உறிஞ்ச படவும் உதவுகின்றது.
    * நல்ல கவனம், தெளிவான அறிவு, ஞாபக சக்தியினை அளிப்பது.
    * கெட்ட கிருமிகள், பாக்டீரியாக்களை அழிப்பது போன்ற அநேக செயல்களைச் செய்கின்றன.

    * நமக்கு பிரோபயாடிக் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதனை எப்படி அறிவது?
    * வயிற்றில் பிரச்சினை - காற்று, உப்பிசம், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி.
    * தூக்கம் சரிவர இன்மை
    * சரும பிரச்சினை
    * எடையினை பராமரிப்பதில் பிரச்சினை
    * எப்போதும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதில் விருப்பம்.

    மன உளைச்சல், குழப்பம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதனை காட்டுகின்றது.
    தயிர், மோர் இரண்டுமே நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் பிரோபயாடிக்ஸ், தினமும் ஒரு கிளாஸ் மோர் அருந்துங்கள். குறைபாடு இருப்பின் மருத்துவ ஆலோசனைப்படி பிரோபயாடிக் சத்துணவு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * தயிர் * அடர்ந்த சாக்லேட் * ஊறுகாய் * இட்லி, தோசை * ஆப்பிள் * சோயாபால் * ஆலிவ் * சீஸ் * டோகரை இவை அனைத்தும் பிரோபயாடிக் உணவுகளே.
    வெளிநாடுகளில் அதிக ஆய்வுகள் மருத்துவ துறையில் தொடர்ந்தவாறே உள்ளன. அதிக மருத்துவ முன்னேற்றங்களை கண்டும் சில உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள் ஏன் சிறிய இளவயதிலேயே ஏற்படுகின்றன என்பதனைப் பற்றி ஆய்வு செய்தனர். அதன் முடிவுகளாக சில கருத்துக்களை அவர்கள் கூறியுள்ளனர். இவைகளில் பல கருத்துகள் நம் முன்னோர்கள் கூறியதுதான்.

    * பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே நல்ல உணவு, ஸ்நாக்ஸ் இவைகளில் பழக்க வேண்டும் என்று வெகுவாய் வலியுறுத்துகின்றனர். கேழ்வரகு, சிறு தானியம், கடலை உருண்டை, பொட்டு கடலை உருண்டை, எள் உருண்டை இவைகளை நாம் பழக்கத்தில் கொண்டு வந்து விடலாமே. இதனால் இவர்களது மூளை செயல்பாடும் நன்கு இருக்கும் என்கின்றனர்.

    * காரிலும், பைக்கிலும், ஸ்கூல் பஸ்சிலும் பறந்து கொண்டே உணவு உண்பது, போனில் பேசிக் கொண்டே உணவு உண்பது, சத்தமாகவே பேசுவது இவை அனைத்தும் ஒருவர் அறியாமலேயே ஸ்ட்ரெஸ்சினை வெகுவாகக் கூட்டி விடுகின்றன. எனவே அமர்ந்து அமைதியாய் உண்பதே மிக முக்கியம். எத்தனை சத்தான உணவானாலும் அவசரம் அவசரமாய் அள்ளி போட்டுக் கொள்வது அதனை விஷமாகவே மாற்றி விடும்.

    * ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி சண்டையின்றி அன்பானவர்களாக இருந்தால் அந்த குழந்தைகள், அந்த வீட்டு முதியோர் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்களாம். முதியோர்கள் நல்ல படியாய் நடத்தப்படும் விதம் அவ்வீட்டு குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்குமாம்.

    * சமையல் தாயின் கடமை என்று விட்டு விடக் கூடாது. காய்கறிகள் வாங்குவது, சுத்தம் செய்வது, சமைப்பது இப்படி அனைத்திலும் அனைவரின் பங்கு இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான உணவினை சமைக்க முடியும் என்கின்றனர். அம்மா மட்டுமே முழு பொறுப்பு எனும் பொழுது மற்றவர்கள் அதனை குறை சொல்வதும், தனக்குப் பிடித்ததனை மட்டுமே உண்பதும் என இருப்பதால் முறையான சத்துணவினை பெறுவதில்லை எனக் கூறப்படுகின்றது.

    * மேலும் குடும்பத்தோடு உண்பதும், குடும்பத்தோடு நடை பயிற்சி செல்வதும் முக்கியம் என வலியுறுத்தப்படுகின்றது. சிறு, சிறு செடிகளையாவது தொட்டிகளில் வளர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

    * குடும்ப உறவுகளுடன் கூடி, வாழ்பவர்களுக்கு இருதய பாதிப்பு போன்ற கடும் பாதிப்புகள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன. தனியாக இருப்பவர்களுக்கு இத்தகு பாதிப்புகள் கூடுதலாக ஏற்படுகின்றது என்கின்றனர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்.

    * வீடுகளில் செய்யப்படும் நல்ல ‘ஸ்நாக்ஸ்’, ‘பழங்கள்’ இவைகள் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டும்.

    * பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களை அதீதமாக வருத்திக் கொள்வதும் பின்னர் இக்கஷ்டங்களை தன் பிள்ளைகள் உணரவில்லையே என்று வருந்துவதும் இருதலை முறையினரையும் நோயாளி ஆக்கி விடுகின்றதாம். எனவே பொருளாதார நிலைமையினை குடும்பத்தினர் அனைவரும் கூடி பேசுவது ஆரோக்கிய சூழ்நிலையினை உருவாக்கும்.

    எனவே ஆரோக்கியம் என்பது மருந்து, சிகிச்சை இவற்றைத் தாண்டி வளரும் சூழ்நிலை வாழும் நிலை.
    பியூட்டி பார்லர்கள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
    அழகுத்துறை என்பது என்றுமே ஆடம்பரமாகப் பார்க்கப்படுவதில்லை. அதை ஆரோக்கியத்துடனும் தொடர்புடைய ஒரு துறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எத்தனை பியூட்டி பார்லர்கள் திறக்கப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிதாக பார்லர் தொடங்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    பார்லர் தொடங்கப் போகிற ஏரியா மிக முக்கியம். பார்லர் தொடங்கப்படவிருக்கிற இடத்தின் அருகில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு பார்லர் வர வேண்டிய தேவையும் வசதியும் இருக்குமா எனப் பார்க்க வேண்டும்.  ‘என்னிடம் திறமை இருக்கிறது.. என்னைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள்’ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நீங்கள் பார்லர் பிசினஸில் உங்களைத் தக்க வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற பிறகுதான் சாத்தியம்.

    அடுத்தது வேலை தெரிந்த ஆட்களை நியமிக்க வேண்டியது முக்கியம். கற்றுக்குட்டிகளை வைத்து வேலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அடுத்த முறை உங்களைத் தேடி வர மாட்டார்கள். மூன்றாவதாக தரமான அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உபயோகிக்கிற பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியையோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.

    தரத்தில் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது.  இன்று பார்லர் ஆரம்பித்துவிட்டு, நாளைக்கே லாபம் கொட்டும் என்கிற கனவில் மிதப்பது மிகவும் தவறு. இந்தத் துறையில் பொறுமை மிக மிக அவசியம். உழைப்பையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருங்கள். லாபமும் நற்பெயரும் தானாக வரும்.
    பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் நன்றாக தாய்ப்பால் சுரக்கும். இன்று இந்த சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுறா மீன் - 300 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - 1½ டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 5,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 100 கிராம்,
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 50 மி.லி.,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்து உதிர்த்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் நன்றாக உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சுறா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் செய்வார்கள்.
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் பின் நன்றாக தூங்கவும் செய்வார்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாருமற்றவர்களாகவும் பணிக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண்களுக்கு டேகேர் ஒரு மிகப்பெரிய கொடை.

    இப்படி நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று டேகேர்களும், க்ரீச்களும் மாறிவிட்ட சூழலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டே கேர்கள் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? பெரும்பாலானவர்கள் ஏசி ரூம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஏசி ரூம் மட்டுமல்ல அது இல்லாத காற்றோட்டமான இயற்கையான வெளிச்சம் கொண்ட அறைகள் இருக்க வேண்டுமென எதிர்பாருங்கள். ஏசி ரூம் என்று சொன்னாலும் அது ஜன்னல், கதவு என அடைத்திருக்கும் சிறை என்று தான் குழந்தைகளுக்கு தெரியும். காற்றோட்டமுள்ள அறைகள் அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விடுவிப்பையும் கொடுக்கும் விளையாட வெளியில் இடமும் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

    சரியாக கவனித்துக்கொள்ள முறையாக படித்த ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள். டாய்லெட் பாத்ரூம்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். டையஃபர்கள் மாற்றும் போது நன்றாக கழுவி துடைத்து பவுடர் போட்டு விட்டு மாற்ற வேண்டுமென அறிவுறுத்துங்கள். அந்த இடம் குழந்தைகளுக்கு பழகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க பாத்ரூம்தான் போக வேண்டுமென சொல்லிக் கொடுக்க சொல்லுங்கள். சீக்கிரமே டையஃபர் பழக்கம் மாறிவிடும்.

    மற்ற குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறன் வெகுவிரைவில் வசப்படும். முதலில் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் என விட்டு அழைத்து வாருங்கள். இடமும் பிடித்த நண்பர்களும் அமைந்து விட்டால் அவர்களே பையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்களோ அதையே திரும்ப செய்யவும் பழகுவார்கள். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வளர்ச்சியில் டே கேர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பிறருடன் பழகவும் விளையாடவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்தும். நமக்குத்தான் இவர்கள் குழந்தைகள். சமுதாயத்திற்கு இவர்கள் நல்லதொரு மனிதர்களாகவும் மற்ற கலாசாரங்களை மதிக்கவும் தங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இவர்களுக்கு முதல் பயிற்சி கூடம்தான் இது.

    கண்ணீருடன் குழந்தையை டேகேரில் விட்டுவிட்டு வராதீர்கள். இந்த இடம் உனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை குழந்தைக்கு உங்கள் செய்கைகளின் மூலம் உணர்த்துங்கள். நம் குழந்தைகள் மனம் விரும்பும் இடத்தினை சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகமாக அனுப்புங்கள். 
    பெண்களின் முகத்திற்கு அழகு சேர்க்கும் உதட்டை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.
    பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.

    * உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெயை லேசாகப் பூசி வரலாம்.

    * சந்தனத்தை பன்னீரில் குழைத்து உதடுகளில் பூசி, ஊற வைத்து, கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

    * ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளில் பூசி வந்தால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறையும்.

    * பாலாடையை உதடுகளில் தினமும் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து அழகாக மாறும்.

    * வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் காய்ந்து போகாமல் இருக்கும்.

    * பீட்ரூட்டை துண்டுகளாக்கி அதை உதடுகளின் மேல் லேசாக தேய்த்து வந்தால் உதடுகள் ரோஜா கலரில் மாற்றம் ஏற்படும்.

    * பன்னீரை பஞ்சினால் எடுத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால் உதடுகள் பொலிவாக மாறி விடும்.

    * கொத்தமல்லித்தழையின் சாறை உதடுகளில் இரவு நேரத்தில் பூசி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி அழகு தரும்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 1 கப்,
    ஸ்வீட்கார்ன் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்,
    புதினா இலை - சிறிது.



    செய்முறை :

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும்.

    ஸ்வீட்கார்னையும் உதிர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, புதினா கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான ராஜ்மா - ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×