search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sura Puttu"

    பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் நன்றாக தாய்ப்பால் சுரக்கும். இன்று இந்த சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுறா மீன் - 300 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - 1½ டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 5,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 100 கிராம்,
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 50 மி.லி.,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்து உதிர்த்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் நன்றாக உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சுறா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×