search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cabbage"

    • தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
    • போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்த லார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டு மல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.10 மட்டுமே விலை போகிறது

    இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர். நாளடைவில் இந்த முட்டைகோஸ்கள் அழுகி மண்ணோடு மண்ணாகி விடும்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது
    • அறுவடையும் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், பீன்ஸ், காலிபி ளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    அங்கு இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, காக்காசோலை, குருக்குத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்து வருகிறது. எனவே காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளன.

    மலை காய்கறிகளில் முட்டைகோஸ் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முட்டை கோசுக்கு கிலோ ரூ.9-க்கு மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சியால் அதை பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈளாடா கதவுத்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க ரூ.6 செலவாகிறது. இதனை அறுவை செய்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்ப போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி உள்பட எக்கச்சக்கமாக செலவாகிறது. எனவே முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. எனவே, நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் மற்றும் அறுவடையும் செய்து வரும் தனியார் நிறுவனங்களுக்கு முட்டைகோசை கிலோ ரூ.8க்கு விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    • மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து.
    • கிலோ ரூ.4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்தலார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிளில் மாற்றுப் பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், உகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக, 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 30 டன் அளவுக்குத்தான் விற்பனைக்கு வருகின்றன.

    உறைபனி விழுவதால் மலை காய்கறிகளை பாதுகாக்க காலை நேரங்களில், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. உறைபனி தாக்கத்தால் முட்டைகோஸ் பயிர் நிறம் மாறியுள்ளது.

    முட்டைகோசுக்கு நல்லவிலை கிடைத்து வந்தநிலையில் தற்போது அதன் விலை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் படிப்படியாக விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் விட்டுவிடும் நிலை காணப்படுகிறது

    ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட் உள்பட பல்வேறு மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    தற்போது பிற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று ஊட்டி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 4 ரூபாய்க்கு தான் விற்பனையானது.

    15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும். பீட்ரூட், கேரட் விலையும் இதுபோன்று குறைந்து தான் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முட்டைகோஸ்களை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
    • முட்டை கோசை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனர். ஒரு சில இடங்களில் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    இப்பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டை கோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளது. முட்டைகோஸ்களை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    இதனால் முட்டை கோசை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டனர். ஒரு சில இடங்களில் முட்டை கோஸ்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.

    தாளவாடி பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ்களை பயிரிட்டு உள்ளோம். 3 மாத பயிரான முட்டைகோஸ் பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்து உள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கேட்கின்றனர். ஆனால் தற்போது வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்றால் தான் எங்களுக்கு கட்டுபடியாகும். விளைச்சல் அதிகம் என காரணம் கூறி எங்களிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் நாங்கள் அறுவடை செய்யாமல் முட்டைகோஸ்களை செடியிலேயே விட்டு விட்டோம். சில இடங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.
    • தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய உடுமலை பகுதி கிராமங்களில் உள்ள குளிர்ந்த வானிலை முட்டைகோஸ் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.அதனடிப்படையில் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில்ஈடுபட்டுள்ளோம்.

    ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது.நாற்றங்கால் அமைத்து தொழு உரம்,மண் புழு உரம் போன்றவற்றைப் போட்டு விதைப்படுக்கை அமைக்கிறோம்.அதில் 10 செமீ இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும்.

    பின்னர் நாற்றுக்களைப் பிடுங்கி தயார்படுத்தப்பட்ட நிலத்தில் 40 செமீ இடைவெளியில் நடவு செய்கிறோம்.முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.

    பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப் புழுக்கள்,அஸ்வினிகள் தாக்குதல் இருக்கும்.இதுதவிர இலைப் புள்ளி நோய்,இலைக் கருகல் நோய்,கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.எனவே அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத்துறையினரின் பரிந்துரை பெற்று தெளிப்பது சிறந்தது.

    முட்டைகோசை நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்யத்தொடங்கலாம்.சுமார் 120 நாட்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம்.இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.

    மலைப்பகுதிகளில் இதை விட 3 மடங்கு மகசூல் கிடைக்கும் என்றாலும் சமவெளியிலும் முட்டைகோஸ் சாகுபடி லாபகரமானதாகவே உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.

    • கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது.
    • விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முட்டைக்கோஸ் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே முட்டைக்கோஸ் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது. இதற்கிடையே கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறோம். மேலும் வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.20-க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்து சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

    முட்டைகோஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.

    முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்து அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்பதால் அதிகமாக வேக வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

    மேலும் முட்டைகோஸ் வேக வைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் ஆகியவற்றை தினமும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்திடும். தொடர்ந்து உடல் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.

    மேலும் சர்க்கரை நோயாளிகள் இதனை தினமும் பின்பற்றி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சரியான நிலையில் பரமாரிக்கப்படும்.

    இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.

    நரம்புகளுக்கு வலுகொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். மேலும் சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    உடலில் இவை நல்ல வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். மேலும் தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

    இதில் உள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.மேலும் எலும்புகள் எப்பொழுதும் வலுமையுடன் இருக்க பெரிதும் உதவுகின்றன.

    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

    முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

    உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
    ×