search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் விடப்பட்ட முட்டைகோஸ்
    X

    நீலகிரியில் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் விடப்பட்ட முட்டைகோஸ்

    • தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
    • போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்த லார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டு மல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.

    இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.10 மட்டுமே விலை போகிறது

    இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர். நாளடைவில் இந்த முட்டைகோஸ்கள் அழுகி மண்ணோடு மண்ணாகி விடும்.

    Next Story
    ×