search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது.
    X

    முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது.

    • கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது.
    • விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முட்டைக்கோஸ் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே முட்டைக்கோஸ் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது. இதற்கிடையே கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறோம். மேலும் வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.20-க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

    Next Story
    ×