என் மலர்
ஆரோக்கியம்
இந்த அரிசியின் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண் குணமாகும்.
பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோல் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று சம்பா அரிசி. இந்த அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள், இதனால் நமக்கும் கிடைக்கும் பயன்கள் என்ன என்று தற்போது பார்ப்போம்.
இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் தாராளமாக உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் நமது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.
நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஏன் என்றால் ஆண்மையை அதிகரித்து, உடலுக்கு பலம் கொடுக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்தனர்.
சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது.
இதய கோளாறுகள் வராமல் தடுக்கிறது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த அரிசியில் இருப்பதால், புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இந்த அரிசியின் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி சூப்பராக இருக்கும். வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண் குணமாகும்.
இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பலன் நிறைவாகவே கிடைக்கும்.
இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் தாராளமாக உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் நமது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.
நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஏன் என்றால் ஆண்மையை அதிகரித்து, உடலுக்கு பலம் கொடுக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்தனர்.
சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது.
இதய கோளாறுகள் வராமல் தடுக்கிறது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த அரிசியில் இருப்பதால், புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இந்த அரிசியின் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி சூப்பராக இருக்கும். வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண் குணமாகும்.
இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பலன் நிறைவாகவே கிடைக்கும்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. இன்று இந்த அரிசியுடன் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாப்பிள்ளை சம்பா அரிசி - ஒரு கப்,
முட்டைகோஸ் - கால் கிலோ,
முள்ளங்கி, தக்காளி- ஒன்று,
பெரிய வெங்காயம்- ஒன்று,
பச்சை மிளகாய்- ஒன்று,
எலுமிச்சம்பழம் - ஒன்று,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
கொத்தமல்லி - அரை கட்டு,
புதினா - கால் கட்டு,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பூண்டு பல் - சிறிதளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முட்டைகோஸ், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு அதில் வெந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
இப்போது இதமான, மிகவும் ருசியான, சத்தான மாப்பிள்ளை சம்பா அரிசி வெஜிடபிள் கஞ்சி தயார்.
மாப்பிள்ளை சம்பா அரிசி - ஒரு கப்,
முட்டைகோஸ் - கால் கிலோ,
முள்ளங்கி, தக்காளி- ஒன்று,
பெரிய வெங்காயம்- ஒன்று,
பச்சை மிளகாய்- ஒன்று,
எலுமிச்சம்பழம் - ஒன்று,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
கொத்தமல்லி - அரை கட்டு,
புதினா - கால் கட்டு,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பூண்டு பல் - சிறிதளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முட்டைகோஸ், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.
தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு அதில் வெந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
இப்போது இதமான, மிகவும் ருசியான, சத்தான மாப்பிள்ளை சம்பா அரிசி வெஜிடபிள் கஞ்சி தயார்.
சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும்.
வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் 25 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் பருமன் கொண்ட குழந்தைகள் சக குழந்தைகளுடன் விளையாடுவதற்கோ, பிற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கோ சிரமப்படுவார்கள்.
உடல் பருமன் பிரச்சினையை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது கடுமையான நோய் அபாயத்தை குறைக்கும். சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும். உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் பருகமாட்டார்கள். திரவ உணவுகளை சாப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நொறுக்குத்தீனிகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் உட்கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அதற்காக வெறுமனே பழ ஜூஸ் மட்டும் கொடுக்கக்கூடாது. தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்ற பிற திரவ உணவுகளை சாப்பிட வைக்கலாம். இது உடல் நலனை பேண உதவும் ஆரோக்கியமான பழக்கமாகும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.
உடல் எடையை நிர்வகிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க முடியும். காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட வைக்கலாம். இது குடல் இயக்கம் சீராக நடைபெறவும், எடை மேலாண்மையை பராமரிக்கவும் உதவும்.
நொறுக்குத்தீனிக்கு மாற்றாக பழ சாலட் கொடுப்பது முக்கியமானது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும். தினமும் இரண்டு வகை பழங்களை உண்ணலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி ‘நட்ஸ்’ உட்கொள்ளலாம். இவை அதிக ஊட்டச்சத்து மிக்கவை. ஆரோக்கிய நன்மைகளை வழங்குபவை. எனவே இதனை தவிர்க்கக்கூடாது. தினமும் முந்திரி அல்லது பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடலாம். ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது.
உடல் பருமன் பிரச்சினையை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது கடுமையான நோய் அபாயத்தை குறைக்கும். சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும். உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் பருகமாட்டார்கள். திரவ உணவுகளை சாப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நொறுக்குத்தீனிகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் உட்கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அதற்காக வெறுமனே பழ ஜூஸ் மட்டும் கொடுக்கக்கூடாது. தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்ற பிற திரவ உணவுகளை சாப்பிட வைக்கலாம். இது உடல் நலனை பேண உதவும் ஆரோக்கியமான பழக்கமாகும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.
உடல் எடையை நிர்வகிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க முடியும். காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட வைக்கலாம். இது குடல் இயக்கம் சீராக நடைபெறவும், எடை மேலாண்மையை பராமரிக்கவும் உதவும்.
நொறுக்குத்தீனிக்கு மாற்றாக பழ சாலட் கொடுப்பது முக்கியமானது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும். தினமும் இரண்டு வகை பழங்களை உண்ணலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி ‘நட்ஸ்’ உட்கொள்ளலாம். இவை அதிக ஊட்டச்சத்து மிக்கவை. ஆரோக்கிய நன்மைகளை வழங்குபவை. எனவே இதனை தவிர்க்கக்கூடாது. தினமும் முந்திரி அல்லது பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடலாம். ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாக முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும்.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாக முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. இருவருக்கும் சட்டப்படியான தெளிவு இல்லாதது இந்த முரண்பாட்டுக்கு முக்கிய காரணம். இதில் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும்.
முதலில் ஒப்பந்த பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத்தொகை, மின்கட்டணம், வெள்ளையடிப்பு, முன்பணம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். முரண்பாடு ஏற்படும்போது முன்பணத்தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் வெள்ளையடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.
வாடகை ஒப்பந்தப்பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் - உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்திற்குத்தான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால், வீட்டு வாடகைப்பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன.
வீட்டுக்கான முன்பணத்தை பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் 5 மாத வாடகையை முன்பணமாக வாங்குபவர்களும் உண்டு. 10 மாத வாடகையை வாங்குபவர்களும் உண்டு. வீட்டு வாடகையைப் பார்த்தீர்கள் என்றால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னையில் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது எழுதுபொருள் விற்பனை கடைகளில் கிடைக்கின்றன.
முதலில் ஒப்பந்த பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத்தொகை, மின்கட்டணம், வெள்ளையடிப்பு, முன்பணம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். முரண்பாடு ஏற்படும்போது முன்பணத்தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் வெள்ளையடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.
வாடகை ஒப்பந்தப்பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் - உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்திற்குத்தான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால், வீட்டு வாடகைப்பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன.
வீட்டுக்கான முன்பணத்தை பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் 5 மாத வாடகையை முன்பணமாக வாங்குபவர்களும் உண்டு. 10 மாத வாடகையை வாங்குபவர்களும் உண்டு. வீட்டு வாடகையைப் பார்த்தீர்கள் என்றால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னையில் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது எழுதுபொருள் விற்பனை கடைகளில் கிடைக்கின்றன.
ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.
பெண்களின் உடல்நலம் சார்ந்த தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்
* ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.
யாரை சந்திப்பது - (நியூராலாஜிஸ்ட் )நரம்பியல் நோய் நிபுணர்
* 71 சதவீத பெண்கள் மன அழுத்தத்திற்கு எந்த சிகிச்சையும் நாடுவதில்லை
யாரை சந்திப்பது - மனநல மருத்துவர்
* 3-ல் 1 நபருக்கு ஈறு சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களை ஒப்பிடும் போது பெண்கள் அதிக அளவில் பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
யாரை சந்திப்பது - பல் மருத்துவர்
* சுவாச நோய்கள்
ஆஸ்துமா, சைனஸ், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு 47 சதவீத பெண்கள் ஆளாகிறார்கள்.
யாரை சந்திப்பது - நுரையீரல் நிபுணர்
திருமணமான பெண்கள் பெரும்பாலும் 25 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். 32 சதவீதம் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்கிறது.
யாரை சந்திப்பது - மகப்பேறு நிபுணர்
* வருடத்திற்கு சுமார் 7 லட்சம் பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வாழ்நாளில் 29 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார். 42 சதவீத பெண்கள் பொருத்தமில்லாத காலணிகளை அணிகிறார்கள். 73 சதவீத பேர் காலணிகளுடன் தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
* 3 பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கிறார்.
யாரை சந்திப்பது - ஊட்டச்சத்து நிபுணர்
* 4-ல் 1 பெண் இதயநோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள்.
யாரை சந்திப்பது - இதய நோய் நிபுணர்
ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் மூட்டு வலி சார்ந்த பிரச்சனைக்காக மருத்துவரை நாடுகிறார்கள். இடுப்பு அளவு அதிகரிப்பு, ஈஸ்ட்ரோஜன் சீரற்ற தன்மை போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது.
* கீல்வாதம்
65 வயதை கடக்கும் பெண்களில் 59 சதவீதம் பேர் கீழ்வாதம் எனப்படும் மூட்டு தேய்மானம், மூட்டு பிறழ்வு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
யாரை சந்திப்பது - எலும்பியல் நிபுணர்
* ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.
யாரை சந்திப்பது - (நியூராலாஜிஸ்ட் )நரம்பியல் நோய் நிபுணர்
* 71 சதவீத பெண்கள் மன அழுத்தத்திற்கு எந்த சிகிச்சையும் நாடுவதில்லை
யாரை சந்திப்பது - மனநல மருத்துவர்
* 3-ல் 1 நபருக்கு ஈறு சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களை ஒப்பிடும் போது பெண்கள் அதிக அளவில் பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
யாரை சந்திப்பது - பல் மருத்துவர்
* சுவாச நோய்கள்
ஆஸ்துமா, சைனஸ், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு 47 சதவீத பெண்கள் ஆளாகிறார்கள்.
யாரை சந்திப்பது - நுரையீரல் நிபுணர்
திருமணமான பெண்கள் பெரும்பாலும் 25 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். 32 சதவீதம் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்கிறது.
யாரை சந்திப்பது - மகப்பேறு நிபுணர்
* வருடத்திற்கு சுமார் 7 லட்சம் பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வாழ்நாளில் 29 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார். 42 சதவீத பெண்கள் பொருத்தமில்லாத காலணிகளை அணிகிறார்கள். 73 சதவீத பேர் காலணிகளுடன் தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
* 3 பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கிறார்.
யாரை சந்திப்பது - ஊட்டச்சத்து நிபுணர்
* 4-ல் 1 பெண் இதயநோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள்.
யாரை சந்திப்பது - இதய நோய் நிபுணர்
ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் மூட்டு வலி சார்ந்த பிரச்சனைக்காக மருத்துவரை நாடுகிறார்கள். இடுப்பு அளவு அதிகரிப்பு, ஈஸ்ட்ரோஜன் சீரற்ற தன்மை போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது.
* கீல்வாதம்
65 வயதை கடக்கும் பெண்களில் 59 சதவீதம் பேர் கீழ்வாதம் எனப்படும் மூட்டு தேய்மானம், மூட்டு பிறழ்வு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
யாரை சந்திப்பது - எலும்பியல் நிபுணர்
தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
கங்காரு தனது குட்டியை எப்போதும் வயிற்றோடு சுமந்து கொண்டிருக்கும். அதற்கு ஏதுவாக அடி வயிற்று பகுதியில் பை அமைந்திருக்கும். அந்த பையில் தாயின் அரவணைப்போடு குட்டி வளரும். அதுபோலவே பச்சிளம் குழந்தைகளை மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது கங்காரு பராமரிப்பு முறை எனப்படுகிறது. இது தாய்க்கும், சேய்க்கும் இடையே நேரடியாக சரும தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க உதவும். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு கங்காரு முறை பராமரிப்பு தேவைப்படும்.
கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி தாய்ப்பால் கொடுக்கும்போதும் தாய் தனது குழந்தையுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும். தந்தைக்கு அத்தகைய நெருக்கமான தொடர்பு பந்தம் இல்லாத குறையை கங்காரு முறை பராமரிப்பு நிவர்த்தி செய்யும். ஆனால் குழந்தை பிறந்த உடனேயே இந்த முறையை கையாளக்கூடாது. சில வாரங்கள் கழித்தோ, குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவைப்படும்போதோ இந்த முறையை கையாளலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
தந்தை குழந்தையை வெற்று மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது நல்ல பயனை கொடுக்கும். அப்படி தந்தை-குழந்தை இருவருடைய சருமமும் ஒன்றிணைந்த நிலையில் இருந்தால்தான் தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு கிடைக்கும். குழந்தையின் பசி அல்லது மன அழுத்தம் பற்றிய உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும்.
குழந்தையை கங்காரு நிலையில் வைத்திருக்கும்போது மொபைல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது கவன சிதறலை தவிர்க்க உதவும். முழு கவனமும் குழந்தை மீது பதிவதற்கு ஏதுவாக அமையும்.
கங்காரு நிலையில் குழந்தை ஏதேனும் அசவுகரியத்தை உணர்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தையின் கழுத்தும், தலையும் நேரான நிலையிலும், ஒரு பக்கம் திரும்பியவாறும் தந்தையின் மார்போடு இணைந்திருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு, வாய் பகுதி ஏதேனும் துணி கொண்டு மூடப்பட்டிருக்கக்கூடாது. எந்த நிலையில் வைத்திருந்தாலும் குழந்தையின் முகம் எப்போதும் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.
கங்காரு பராமரிப்பை மேற்கொள்ளும்போது வசதியான இடத்தில் உட்கார வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் யாருடைய தொடர்பும் இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தையை வெற்று மார்பின் மீது மெதுவாக வைத்து, அரவணைப்புக்காக ஒரு போர்வையை போர்த்தலாம். தாய்-தந்தை இருவருமே ஒரே நேரத்தில் கங்காரு முறையை கையாளலாம். இது குடும்ப பிணைப்புக்கு வழிவகுக்கும்.
காய்ச்சல், சளி, இருமல் என ஏதேனும் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டால், கங்காரு பராமரிப்பை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும். குழந்தைக்கு கங்காரு பராமரிப்பை கொடுப்பதற்கு முன்பு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.
கங்காரு பராமரிப்பின்போது வாசனை திரவியங்கள் அல்லது டியோடரண்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை குழந்தையின் மென்மையான சருமத்தை எரிச்சலூட்டும். தடிப்புகள், சிவத்தல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். அதுபோல் குழந்தையும் எந்தவிதமான சருமம் சார்ந்த நோய்த்தொற்றாலும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம்.
கங்காரு பராமரிப்பு மூலம் தந்தையர்கள் தங்கள் உணர்வு மற்றும் உடல் ரீதியான ஆதரவை குழந்தைக்கு வழங்க முடியும். அது மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதனால் கங்காரு பராமரிப்பை தாய் மட்டுமின்றி அப்பாவும் கொடுக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி தாய்ப்பால் கொடுக்கும்போதும் தாய் தனது குழந்தையுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும். தந்தைக்கு அத்தகைய நெருக்கமான தொடர்பு பந்தம் இல்லாத குறையை கங்காரு முறை பராமரிப்பு நிவர்த்தி செய்யும். ஆனால் குழந்தை பிறந்த உடனேயே இந்த முறையை கையாளக்கூடாது. சில வாரங்கள் கழித்தோ, குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவைப்படும்போதோ இந்த முறையை கையாளலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
தந்தை குழந்தையை வெற்று மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது நல்ல பயனை கொடுக்கும். அப்படி தந்தை-குழந்தை இருவருடைய சருமமும் ஒன்றிணைந்த நிலையில் இருந்தால்தான் தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு கிடைக்கும். குழந்தையின் பசி அல்லது மன அழுத்தம் பற்றிய உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும்.
குழந்தையை கங்காரு நிலையில் வைத்திருக்கும்போது மொபைல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது கவன சிதறலை தவிர்க்க உதவும். முழு கவனமும் குழந்தை மீது பதிவதற்கு ஏதுவாக அமையும்.
கங்காரு நிலையில் குழந்தை ஏதேனும் அசவுகரியத்தை உணர்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தையின் கழுத்தும், தலையும் நேரான நிலையிலும், ஒரு பக்கம் திரும்பியவாறும் தந்தையின் மார்போடு இணைந்திருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு, வாய் பகுதி ஏதேனும் துணி கொண்டு மூடப்பட்டிருக்கக்கூடாது. எந்த நிலையில் வைத்திருந்தாலும் குழந்தையின் முகம் எப்போதும் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.
கங்காரு பராமரிப்பை மேற்கொள்ளும்போது வசதியான இடத்தில் உட்கார வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் யாருடைய தொடர்பும் இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தையை வெற்று மார்பின் மீது மெதுவாக வைத்து, அரவணைப்புக்காக ஒரு போர்வையை போர்த்தலாம். தாய்-தந்தை இருவருமே ஒரே நேரத்தில் கங்காரு முறையை கையாளலாம். இது குடும்ப பிணைப்புக்கு வழிவகுக்கும்.
காய்ச்சல், சளி, இருமல் என ஏதேனும் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டால், கங்காரு பராமரிப்பை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும். குழந்தைக்கு கங்காரு பராமரிப்பை கொடுப்பதற்கு முன்பு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.
கங்காரு பராமரிப்பின்போது வாசனை திரவியங்கள் அல்லது டியோடரண்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை குழந்தையின் மென்மையான சருமத்தை எரிச்சலூட்டும். தடிப்புகள், சிவத்தல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். அதுபோல் குழந்தையும் எந்தவிதமான சருமம் சார்ந்த நோய்த்தொற்றாலும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம்.
கங்காரு பராமரிப்பு மூலம் தந்தையர்கள் தங்கள் உணர்வு மற்றும் உடல் ரீதியான ஆதரவை குழந்தைக்கு வழங்க முடியும். அது மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதனால் கங்காரு பராமரிப்பை தாய் மட்டுமின்றி அப்பாவும் கொடுக்க வேண்டும்.
பற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது.
பற்கள் பளிச்சென்று வெண்மை நிறத்தில் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக பலரும் விரும்புவார்கள். ஒருசில சமையல் பொருட்கள், பழ வகைகளை கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். பால் பொருட்கள் ஏதாவதொரு வகையில் சாப்பிடும் உணவு பொருட்களுடன் கலந்திருக்கும். பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்களில் லாக்டிக் அமிலம் உள்ளடங்கி இருக்கும். கால்சியமும் நிறைந்திருக்கும்.
இத்தகைய பால் பொருட்களை உட்கொள்வது உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும். அத்துடன் பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கும் வித்திடும். இவை தவிர இந்த பால் பொருட்களில் புரதம் மற்றும் கேசீன் உள்ளது. இவற்றுள் கேசீன், பிளீச்சிங் ஏஜென்ட் போல் செயல்படக்கூடியது. அது பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை போக்குவதுடன் பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. மேலும் பல் சிதைவு, நிறம் மாறுதல், பிளேக் போன்ற பல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். ஸ்ட்ராபெர்ரியில் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பிளீச்சிங் போல் செயல்பட்டு பற்களை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி, அமில தன்மையும் அதிகம் கொண்டது. இதன் பி.எச். அளவு 3 முதல் 4-க்கு இடைப்பட்டதாக அமைந்திருக்கிறது. அது பற்களின் மேல் அடுக்குகளை வெள்ளை நிறமாக மாற்ற துணைபுரியக்கூடியது. ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தை துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, குழைத்துக்கொள்ளவும். பேஸ்ட் போல இதை பயன்படுத்தி பிரஷ் கொண்டு பல் துலக்கி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
பற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து கொண்ட அது உமிழ்நீர் உற்பத்தியையும் அதிகரிக்க செய்து பற்களை சுத்தம் செய்ய உதவும். பற்களின் மேற்பரப்பில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவும். ஆப்பிள் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவும். தினமும் ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குவதோடு பற்களுக்கும் நன்மை தரும்.
‘சீஸ்’ எனப்படும் பாலாடைக்கட்டிகளை மென்று சாப்பிடுவதும் பற்களை வெண்மையாக்க உதவும். தினமும் ஒரு கப் தயிர் பருகி வருவதும் பற்களின் பிரகாசத்திற்கு வித்திடும்.
இத்தகைய பால் பொருட்களை உட்கொள்வது உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும். அத்துடன் பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கும் வித்திடும். இவை தவிர இந்த பால் பொருட்களில் புரதம் மற்றும் கேசீன் உள்ளது. இவற்றுள் கேசீன், பிளீச்சிங் ஏஜென்ட் போல் செயல்படக்கூடியது. அது பற்களின் மேற்பரப்பில் உள்ள கறைகளை போக்குவதுடன் பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. மேலும் பல் சிதைவு, நிறம் மாறுதல், பிளேக் போன்ற பல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். ஸ்ட்ராபெர்ரியில் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பிளீச்சிங் போல் செயல்பட்டு பற்களை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி, அமில தன்மையும் அதிகம் கொண்டது. இதன் பி.எச். அளவு 3 முதல் 4-க்கு இடைப்பட்டதாக அமைந்திருக்கிறது. அது பற்களின் மேல் அடுக்குகளை வெள்ளை நிறமாக மாற்ற துணைபுரியக்கூடியது. ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்தை துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, குழைத்துக்கொள்ளவும். பேஸ்ட் போல இதை பயன்படுத்தி பிரஷ் கொண்டு பல் துலக்கி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
பற்களை இயற்கையாகவே வெண்மையாக்குவதற்கு ஆப்பிள் பழத்தையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் மாலிக் அமிலம் இயற்கையாகவே கறைகளை நீக்கும் தன்மை கொண்டது. நார்ச்சத்து கொண்ட அது உமிழ்நீர் உற்பத்தியையும் அதிகரிக்க செய்து பற்களை சுத்தம் செய்ய உதவும். பற்களின் மேற்பரப்பில் படிந்திருக்கும் கறைகளை அகற்றவும் உதவும். ஆப்பிள் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவும். தினமும் ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குவதோடு பற்களுக்கும் நன்மை தரும்.
‘சீஸ்’ எனப்படும் பாலாடைக்கட்டிகளை மென்று சாப்பிடுவதும் பற்களை வெண்மையாக்க உதவும். தினமும் ஒரு கப் தயிர் பருகி வருவதும் பற்களின் பிரகாசத்திற்கு வித்திடும்.
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளம் புத்துணர்வோடு இருந்தால்தான் முகமும் பொலிவு பெற்று புறத்தோற்றத்தில் அதன் அழகு வெளிப்படும். வயது அதிகரித்தாலும் இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு அகம், புறம் இரண்டையும் பேணி வந்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். வயதானாலும்... இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..!உணவு பழக்கம்முகத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்:
அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவை. தண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.
உடல் எடையில் கவனம்
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது. உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.
மன நலம் காப்போம்
தேவையற்ற மன அழுத்தமும் சரும பொலிவுக்கு எதிரியாக மாறிவிடும். மனதில் ஏதேனும் குழப்பங்கள் குடி கொண்டிருந்தால் அதன் தாக்கம் முகத்திலும் எதிரொலிக்கும். பொலிவும் மங்கிவிடும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுடன், வாரம் ஒருமுறை சிறிதளவு எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வரலாம். தினமும் தியானம் செய்து வருவதும் மனதை புத்துணர்வாக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* உருளைக்கிழங்கை சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டு, பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.
* தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி, குளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.
* புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ‘பளிச்’ தோற்றத்தையும் பெறலாம்.
* ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.
* கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.
* அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.
அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவை. தண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.
உடல் எடையில் கவனம்
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது. உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.
மன நலம் காப்போம்
தேவையற்ற மன அழுத்தமும் சரும பொலிவுக்கு எதிரியாக மாறிவிடும். மனதில் ஏதேனும் குழப்பங்கள் குடி கொண்டிருந்தால் அதன் தாக்கம் முகத்திலும் எதிரொலிக்கும். பொலிவும் மங்கிவிடும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுடன், வாரம் ஒருமுறை சிறிதளவு எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வரலாம். தினமும் தியானம் செய்து வருவதும் மனதை புத்துணர்வாக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* உருளைக்கிழங்கை சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டு, பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.
* தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி, குளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.
* புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ‘பளிச்’ தோற்றத்தையும் பெறலாம்.
* ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.
* கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.
* அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.
அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் சர்க்கரை நோயாளிகள் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் உப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
சிறிது தண்ணீர்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.
கேழ்வரகுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் செய்து ஆவியில் வேக வைத்து பின்னர் கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.
உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன் அதை உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு உப்பு உருண்டை தயார்.
கேழ்வரகு - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
சிறிது தண்ணீர்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.
கேழ்வரகுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் செய்து ஆவியில் வேக வைத்து பின்னர் கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.
உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன் அதை உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு உப்பு உருண்டை தயார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள், வதந்திகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 138 நாடுகளில் இருந்து 9,657 தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவல்களின் உண்மை தன்மையை 94 நிறுவனங்கள் சரிபார்த்திருக்கின்றன. அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகளில் இந்தியாவில்தான் 18.7 சதவீதம் பதிவாகி இருக்கிறது.
சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுபடி, தெலுங்கானா மாநிலத்தில் தவறான தகவல்கள் பகிரப்பட்டதாக 273 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 118 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 166 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நகரங்களை பொறுத்தவரை ஐதராபாத்தில் 208 வழக்குகளும், அதனை தொடர்ந்து சென்னையில் 42, டெல்லியில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய தண்டணை சட்டம் 505-ன்படி, மதம், இனம், பிறந்த இடம், மொழி, சாதி அல்லது சமூகம், பகைமை, வெறுப்பு, இன உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வதந்தி அல்லது செய்திகளை, தகவல்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராரதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும் போலி தகவல்கள் பரப்பப்படுவது குறைந்தபாடில்லை. கொரோனா தொடர்பாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியா தான், கொரோனா பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிடும் முக்கியமான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. போலி செய்திகள் பரவுவது இந்தியாவில் 214 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
‘‘சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படும் பிரச்சினையை நிவர்த்தி செய்வது கடினமான பணியாகும். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமயத்தில் போலி தகவல்கள் உலவுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மோசமான விளைவுகளையும் உண்டாக்கும்’’ என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 800 பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுபடி, தெலுங்கானா மாநிலத்தில் தவறான தகவல்கள் பகிரப்பட்டதாக 273 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 118 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 166 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நகரங்களை பொறுத்தவரை ஐதராபாத்தில் 208 வழக்குகளும், அதனை தொடர்ந்து சென்னையில் 42, டெல்லியில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய தண்டணை சட்டம் 505-ன்படி, மதம், இனம், பிறந்த இடம், மொழி, சாதி அல்லது சமூகம், பகைமை, வெறுப்பு, இன உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வதந்தி அல்லது செய்திகளை, தகவல்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராரதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும் போலி தகவல்கள் பரப்பப்படுவது குறைந்தபாடில்லை. கொரோனா தொடர்பாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியா தான், கொரோனா பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிடும் முக்கியமான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. போலி செய்திகள் பரவுவது இந்தியாவில் 214 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
‘‘சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படும் பிரச்சினையை நிவர்த்தி செய்வது கடினமான பணியாகும். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமயத்தில் போலி தகவல்கள் உலவுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மோசமான விளைவுகளையும் உண்டாக்கும்’’ என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 800 பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
பெண்கள் பருவமடைந்துவிட்டதும், தானும் பெரிய மனுஷிதான் என்று நினைத்து தனித்துவம் பெற விரும்புகிறார்கள். உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உணர்வுரீதியான அன்பு, அனுசரணை, பாதுகாப்பு, நம்பிக்கை போன்ற அனைத்துமே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. அதனால்தான் சிறுவயதில் இருந்தே மனிதர்கள் அனைவரும் அன்புக்கு அடிமையாகி விடுகிறார்கள். பொதுவாக தாய்மார்கள் அன்பு, அனுசரணை, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் சிறுவயதில் இருந்தே தங்கள் மகள்களுக்கு உணர்வுரீதியாக வழங்கிக்கொண்டிருப்பார்கள். மகள்களும் தாயின் அன்பிற்குள் அடைபட்டுக்கிடப்பார்கள். ஆனால் மகள் பருவமடைந்ததும் அவள் எதிர்பார்க்கும் அன்பு, அனுசரணையின் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது அவள் அதனை வெளியே தேடத் தொடங்குகிறாள். அந்த தேடலில் உருவாகும் நட்பே, எதிர்பால் ஈர்ப்பு மூலம் காதலாக வலுப்பெறுகிறது. சிறுவயதில் கிடைத்தது போன்ற அன்பும், பாசமும் யாருக்கெல்லாம் அவர்களது வீட்டிலே டீன்ஏஜிலும் கிடைக்கிறதோ அவர்களெல்லாம் பெரும்பாலும் காதல் வலையில் விழுவதில்லை.
பெண்கள் பருவமடைந்துவிட்டதும், தானும் பெரிய மனுஷிதான் என்று நினைத்து தனித்துவம் பெற விரும்புகிறார்கள். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அந்த தனித்துவத்தை தக்கவைக்க விரும்புகிறார்கள். அப்போது மகளிடம் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதற்கு தக்கபடி பெற்றோர் மாறி அவளை நேசிக்க வேண்டும். நேசித்தால், அவர்களது உணர்வுக்கு தகுந்த மதிப்பு குடும்பத்தினர் மூலமாகவே கிடைத்துவிடும். கிடைத்துவிட்டால் எளிதாக வெளியே காதல் வலையில் விழமாட்டார்கள்.
அதையும் மீறி உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உடனே மனங்குழம்பி நிதா னத்தை இழந்து விடாதீர்கள். மகளை குற்றவாளியாக்கி, தனிமைப்படுத்தி தண்டிக்க முயற்சிக்க வேண்டாம். அவளை பதற்றப்படுத்தாமல் அமைதிப்படுத்தி, உட்காரவைத்து பொறுமையாக பேசுங்கள். அவளை நிதானமாக யோசிக்கவையுங்கள்.
அவளிடம், ‘நான் உன்னை நம்புகிறேன். உனக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன். அதே நேரத்தில் சில உண்மைகளை உனக்கு புரியவைக்க வேண்டியது என் கடமை’ என்று கூறி, அவளது காதலின் தன்மையையும், சூழ்நிலையையும் உணர்த்துங்கள்.
படிக்கிற வயதில் அவள் காதலித்தால், அந்த காதலால் அவளது கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாவதை சுட்டிக்காட்டி படிப்பு முடியும் வரை காதலை தள்ளிவைக்கும்படி எடுத்துரையுங்கள். ஆத்திரம், அவசரம் இல்லாமல் பக்குவமாக இதை செய்யவேண்டும்.
பெரும்பாலான தாய்மார்கள் மகளின் காதலை எடுத்த எடுப்பிலே நிராகரிக்கிறார்கள். அப்படி நிராகரித்தால் அவள் தனது தாயை எதிரியாக நினைப்பாள். அதனால் பாதுகாப்பு தேடி வீட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம்.
அவள் வீட்டைவிட்டு வெளியேறுவது நல்லதல்ல. அதுபோல் காதலனை கண்மூடித்தனமாக நம்புவதும் சரியல்ல. அதனால் அவளுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று முதலிலே அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள். காதலை பற்றி யோசித்து முடிவெடுக்க தேவையான கால இடைவெளியையும் கொடுங்கள். கால இடைவெளியில் பலர் உண்மையை உணர்ந்து தப்பான காதலை கைவிட்டிருக்கிறார்கள்.
காதல் வேறு, காமம் வேறு என்பதை மகளுக்கு புரிய வையுங்கள். காதல் என்ற பெயரில் யாரும் அவளை ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச்சொல்லுங்கள். இப்போது சமூகத்தில் எப்படி எல்லாம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பக்குவமாக சுட்டிக்காட்டுங்கள்.
பெண்களின் உடல் புனிதமானது. காதல் என்ற பெயரில் அதில் ஆளுமை செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அடிக்கடி உணர்த்துங்கள்.
டீன்ஏஜ் காதல் கவலைக்கும், கலவரத்திற்கும் உரியதல்ல. கவனிக்கத்தகுந்தது. சரியான முறையில் அணுகினால், உங்கள் மகளை அதிலிருந்து மீட்டுவிடலாம்.
பெண்கள் பருவமடைந்துவிட்டதும், தானும் பெரிய மனுஷிதான் என்று நினைத்து தனித்துவம் பெற விரும்புகிறார்கள். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அந்த தனித்துவத்தை தக்கவைக்க விரும்புகிறார்கள். அப்போது மகளிடம் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதற்கு தக்கபடி பெற்றோர் மாறி அவளை நேசிக்க வேண்டும். நேசித்தால், அவர்களது உணர்வுக்கு தகுந்த மதிப்பு குடும்பத்தினர் மூலமாகவே கிடைத்துவிடும். கிடைத்துவிட்டால் எளிதாக வெளியே காதல் வலையில் விழமாட்டார்கள்.
அதையும் மீறி உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உடனே மனங்குழம்பி நிதா னத்தை இழந்து விடாதீர்கள். மகளை குற்றவாளியாக்கி, தனிமைப்படுத்தி தண்டிக்க முயற்சிக்க வேண்டாம். அவளை பதற்றப்படுத்தாமல் அமைதிப்படுத்தி, உட்காரவைத்து பொறுமையாக பேசுங்கள். அவளை நிதானமாக யோசிக்கவையுங்கள்.
அவளிடம், ‘நான் உன்னை நம்புகிறேன். உனக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன். அதே நேரத்தில் சில உண்மைகளை உனக்கு புரியவைக்க வேண்டியது என் கடமை’ என்று கூறி, அவளது காதலின் தன்மையையும், சூழ்நிலையையும் உணர்த்துங்கள்.
படிக்கிற வயதில் அவள் காதலித்தால், அந்த காதலால் அவளது கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாவதை சுட்டிக்காட்டி படிப்பு முடியும் வரை காதலை தள்ளிவைக்கும்படி எடுத்துரையுங்கள். ஆத்திரம், அவசரம் இல்லாமல் பக்குவமாக இதை செய்யவேண்டும்.
பெரும்பாலான தாய்மார்கள் மகளின் காதலை எடுத்த எடுப்பிலே நிராகரிக்கிறார்கள். அப்படி நிராகரித்தால் அவள் தனது தாயை எதிரியாக நினைப்பாள். அதனால் பாதுகாப்பு தேடி வீட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம்.
அவள் வீட்டைவிட்டு வெளியேறுவது நல்லதல்ல. அதுபோல் காதலனை கண்மூடித்தனமாக நம்புவதும் சரியல்ல. அதனால் அவளுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று முதலிலே அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள். காதலை பற்றி யோசித்து முடிவெடுக்க தேவையான கால இடைவெளியையும் கொடுங்கள். கால இடைவெளியில் பலர் உண்மையை உணர்ந்து தப்பான காதலை கைவிட்டிருக்கிறார்கள்.
காதல் வேறு, காமம் வேறு என்பதை மகளுக்கு புரிய வையுங்கள். காதல் என்ற பெயரில் யாரும் அவளை ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச்சொல்லுங்கள். இப்போது சமூகத்தில் எப்படி எல்லாம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பக்குவமாக சுட்டிக்காட்டுங்கள்.
பெண்களின் உடல் புனிதமானது. காதல் என்ற பெயரில் அதில் ஆளுமை செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அடிக்கடி உணர்த்துங்கள்.
டீன்ஏஜ் காதல் கவலைக்கும், கலவரத்திற்கும் உரியதல்ல. கவனிக்கத்தகுந்தது. சரியான முறையில் அணுகினால், உங்கள் மகளை அதிலிருந்து மீட்டுவிடலாம்.
சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
தினமும் காலை நேரங்களில் முகம் மற்றும் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களில் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது இரவில் சருமம் மற்றும் கூந்தலில் சில பராமரிப்பு செயல்களை மேற்கொண்டால் அது காலை நேர மேக்கப்பை விட கூடுதல் பலன்தரும். சருமமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் திகழும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?
இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன்றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.
காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.
பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.
பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.
வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.
கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.
இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.
கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.
சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை என்னென்ன தெரியுமா?
இரவில் நன்றாக தூங்கி எழும்போது மனது புத்துணர்ச்சி பெறுவது போன்று, தூங்கி எழும்போது அன்றாடம் சருமமும் புத்துணர்ச்சி பெறும். தூங்கும் இரவு நேரத்தில் தூசுவோ, அழுக்கோ சருமத்தில் படாது. அசுத்தக்காற்றும் அண்டாது. வெயில், சூடு எதுவும் படாமல் சருமம் இரவு நேரத்தில் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் இரவில் சருமத்திற்கு கிடைப்பதால், தூங்கச் செல்வதற்கு முன்னால் சருமத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது.
காலை நேரத்தில் முகத்தில் கிரீம் பூசி மேக்கப் போட்டிருப்பீர்கள். அதை முழுமையாக நீக்குவதற்கு கிளன்சிங் செய்வது மிக அவசியம். சருமம் நன்றாக சுவாசிப்பதற்காகவும், தானே புதுப்பித்துக்கொள்வதற்காகவும் இதை செய்யவேண்டும். முகத்தில் இருக்கும் தொற்றுக்கள், தூசுக்கள், எண்ணெய்த் தன்மை போன்றவைகளை போக்கி சருமத்தை சுத்தமாக்கும் பணியை கிளன்சிங் செய்கிறது. சருமத்திற்கு பொருத்தமான ‘பேஸ் வாஷ்’ பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தவேண்டும்.
பெண்கள் கிளன்சரை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். மூன்று பாதாம் பருப்பையும், இரண்டு பெரிய தேக்கரண்டி அரிசியையும் கலந்து நன்றாக அரைத்து தூளாக்குங்கள். அதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொண்டு தேவைக்கு தக்கபடி பயன்படுத்தவேண்டும். அதில் சிறிதளவு பால் கலந்து கிளன்சராக பயன்படுத்த வேண்டியதுதான்.
பசும்பாலை கொதிக்கவைக்காமல் அப்படியே குளிரச்செய்து அதனை பயன்படுத்தி இரவில் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த கிளன்சராக பயன்படும். எண்ணெய்த்தன்மை நிறைந்த சருமத்தைகொண்டவர்கள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து முகத்திற்கு கிளன்சராக பயன்படுத்தலாம். சாதாரண சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
சருமத்தில் இருக்கும் பி.எச்.அளவு சீரற்ற நிலையில் இருந்தால், சரும பிரச்சினைகள் தோன்றும். அதனால் சருமத்தில் ‘டோனிங்’ செய்து பி.எச். அளவை சீராக்கவேண்டும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை நன்றாக கழுவினாலும் சரும துவாரங்களில் அழுக்குகள் சேர்ந்திருக்கத்தான் செய்யும். அதனை முழுமையாக நீக்கினால்தான் முக அழகை பாதுகாக்கமுடியும். இதற்கு டோனிங் துணைபுரியும்.
வறண்ட சருமத்திற்கும், எண்ணெய்த்தன்மையான சருமத்திற்கும் பொருத்தமான ‘டோனர்’களை அழகு சாதன பொருட்களை விற்கும் கடைகளில் வாங்கலாம். அதில் ஆல்கஹால் கலக்காததை தேர்வு செய்யவேண்டும்.
கொதித்து ஆறிய நீரை சிறிய பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு ரோஜா இதழ்களை போட்டு சூரிய வெளிச்சத்தில் ஒரு நாள் முழுக்க வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி எடுங்கள். இதுதான் ரோஸ்வாட்டர். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு இதில் பஞ்சை முக்கி, நன்றாக முகத்தை தேய்த்து சுத்தப்படுத்துங்கள். பிரிட்ஜில் குளிரவைத்த கிரீன் டீ அல்லது வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றையும் ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.
இரவில் நீங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்குபவர்களாக இருந்தால், உங்களுக்கு கூந்தல் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம். தினமும் இரண்டு முறையாவது தலைமுடியை சீப்பால் நன்றாக சீவவேண்டும். மண்டை ஓட்டில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் இது ஏற்றது.
கூந்தலை சீவிவிடாமல் இருந்தால் பொடுகு அதிகரிக்கும். பிளாஸ்டிக் சீப்பிற்கு பதில் மரத்தாலான சீப்பை பயன்படுத்தினால் முடி உடைந்துபோவதை ஓரளவு தடுக்கலாம். முடியை நன்றாக சீவி கட்டிவைத்துக்கொண்டு தூங்கவேண்டும். கூந்தலை அவிழ்த்துவிட்டபடி தூங்கினால் தலையணை, போர்வையில் முடி உரசி, உடைந்துபோகும்.
சருமத்தில் தண்ணீர்த்தன்மையை நிலைநிறுத்த துணைபுரிவது, மாய்ஸ்சரைசர். எந்த வகை சருமமாக இருந்தாலும் அதில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமை தெரியாமல் இருக்க சருமத்திற்கு தண்ணீர்த்தன்மை மிக முக்கியம். வறண்ட சருமத்தினர் கிரீமை அடிப்படையாகக் கொண்டவற்றையும், எண்ணெய் சருமத்தினர் ஜெல்லை அடிப்படையாகக் கொண்டவற்றையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். டோனரை சருமம் நன்றாக உறிஞ்சிய பின்பு மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி நிறைய தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதில் மூன்று துளி வைட்டமின் ஈ ஆயில் கலந்து மாய்ஸ்சரைசராக முகத்தில் பூசலாம்.






