என் மலர்
ஆரோக்கியம்
ஓய்வை விரும்பாமல் வேலையில் மூழ்கிக்கொண்டிருந்தால் உடலும், மனதும் உங்களை அறியாமலேயே ஓய்வுக்கு தயாராகிவிடும். ஒருசில அறிகுறிகளை கொண்டே ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொள்ளலாம்.
ஓய்வில்லாமல் மணிக்கணக்கில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கை எட்டும் வரை ஓய்வெடுக்காமல் தங்கள் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பணி நேரத்தை தவிர்த்துவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் சிந்தனை முழுவதும் பார்க்கும் வேலை மீதே இருந்து கொண்டிருக்கும்.
இலக்கை எட்டிய பிறகும் முழுமையாக ஓய்வெடுக்க மனம் ஒப்புக்கொள்ளாது. ஓய்விலும் பணி பற்றிய சிந்தனை தொடர்ந்து கொண்டிருக்கும். அடுத்த வேலையை இன்னும் சிறப்பாக எப்படி செய்து முடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். ஆனால் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கு முன்பு உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். ஓய்வை விரும்பாமல் வேலையில் மூழ்கிக்கொண்டிருந்தால் உடலும், மனதும் உங்களை அறியாமலேயே ஓய்வுக்கு தயாராகிவிடும். ஒருசில அறிகுறிகளை கொண்டே ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொள்ளலாம்.
கவனக்குறைவு: நிறைய பேர் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுத்துவிடுவார்கள். அதே உத்வேகத்தில் அடுத்த பணிக்கு ஆயத்தமாவார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே திடீரென்று கவனக்குறைவு எட்டிப்பார்க்கும். செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். பணிச்சுமை அதிகரிப்பால் வேலையும், வாழ்க்கையும் சம நிலையில் இல்லாததே அதற்கு காரணமாகும். நன்றாக ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்குவது சிறப்பாக செயல்பட தூண்டும்.
அதிகரிக்கும் புகார்: தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கும் வரை சிலருடைய கவனம் வேறு எங்கும் திசை திரும்பாது. மற்றவர்களை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். தங்கள் வேலை முடிவடைந்துவிட்டால் உற்சாகமடைந்துவிடுவார்கள். அதன் பிறகு தங்களுடன் வேலை பார்க்கும் சக நண்பர்களின் வேலை மீது ஆர்வமும், கவனமும் கொள்வார்கள். அடுத்த வேலையை தொடங்கினாலும் முன்பு போல் வேலையில் ஆர்வம் இருக்காது. அவர்கள் மீது நிறைய புகார்களும் எழும். திடீரென்று எதிர்மறையான நபராக மாறிவிடுவார்கள். தங்களின் வேலை முடிந்ததும் கவனத்தை திசை திருப்புவதுதான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு மனதை மீண்டும் வேலை பற்றிய சிந்தனையில் புகுத்திவிட்டு, அடுத்தகட்ட பணிகளுக்கு செல்ல வேண்டும்.
எப்போதும் பணி சிந்தனை: காலையில் எழுவது, வேலைக்கு கிளம்புவது, அலுவலகம் சென்றதும் வேலையில் மூழ்கிவிடுவது, வேலை நேரம் முடிந்ததும் நேராக வீடு திரும்புவது, தூங்குவது, மீண்டும் எழுந்து வேலைக்கு கிளம்பி செல்வது இதுதான் அன்றாட செயல்பாடாக நிறைய பேருக்கு இருக்கிறது. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு நேரம் ஒதுக்கமாட்டார்கள். குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிடமாட்டார்கள். வேலைக்கு மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதற்கான ஓய்வு நேரத்தை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலும், மனமும் சோர்ந்துபோய்விடும்.
நோய் பாதிப்பு: நன்றாக வேலை பார்த்து அலுவலகத்தில் சிறந்த ஊழியர் என்று பெயர் எடுத்திருப்பார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதற்காக ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருப்பார்கள். உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொள்ளமாட்டார்கள். உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அது தொடர்ந்தால் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகி மாத்திரை சாப்பிட நேர்ந்தால் அதற்கு பதிலாக ஓய்வெடுங்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றத்தை உணரலாம்.
மனக்குழப்பம்: இரவும், பகலும் அயராது உழைக்கும்போது உடலும், மனமும் தளர்வடையும். வேலையில் கவனம் குறைந்து மன குழப்பம் எட்டிப்பார்க்கும். முன்பை போல் வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாவிட்டால் அதிகப்படியான உழைப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பையும், விரை வாக செய்து முடிக்கும் திறனையும் தக்கவைப்பதற்கு ஓய்வு அவசியம். சிறிது நேரம் இடை வெளி எடுத்துவிட்டு வேலையில் கவனம் பதித்தால் உற்சாகம் எட்டிப்பார்ப்பதை உணரமுடியும்.
வலிகள்: கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலைகளை தொடர்ந்து செய்யும்போது உடல் ஒத்துக்கொள்ளாது. வலி, வீக்கம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கடினமான வேலையை செய்து முடித்த பிறகு கை, கழுத்து, உடல் பகுதிகளில் வலி ஏற்படுவது பொதுவானது. ஓய்வுதான் அதற்கு சிறந்த மருந்து.
மந்த உணர்வு: வேலை செய்யும்போது மந்தமான உணர்வு எட்டிப்பார்த்தால் தொடர்ந்து வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாது. கூடுதல் நேரம் வேலை செய்த பின்பு உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்காவிட்டால் மந்த உணர்வை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஓய்வு எடுப்பது வேலையை ஒருபோதும் பாதிக்காது. ஓய்வை அலட்சியப்படுத்தினால் அது நிச்சயமாக உடல் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் மோசமாக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கவன சிதறலுக்கு இடம் கொடுக்காமல் செய்து முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் புத்துணர்ச்சியுடன் வேலையை தொடர்ந்து செய்து முடிக்கலாம்.
இலக்கை எட்டிய பிறகும் முழுமையாக ஓய்வெடுக்க மனம் ஒப்புக்கொள்ளாது. ஓய்விலும் பணி பற்றிய சிந்தனை தொடர்ந்து கொண்டிருக்கும். அடுத்த வேலையை இன்னும் சிறப்பாக எப்படி செய்து முடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். ஆனால் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கு முன்பு உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். ஓய்வை விரும்பாமல் வேலையில் மூழ்கிக்கொண்டிருந்தால் உடலும், மனதும் உங்களை அறியாமலேயே ஓய்வுக்கு தயாராகிவிடும். ஒருசில அறிகுறிகளை கொண்டே ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொள்ளலாம்.
கவனக்குறைவு: நிறைய பேர் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுத்துவிடுவார்கள். அதே உத்வேகத்தில் அடுத்த பணிக்கு ஆயத்தமாவார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே திடீரென்று கவனக்குறைவு எட்டிப்பார்க்கும். செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். பணிச்சுமை அதிகரிப்பால் வேலையும், வாழ்க்கையும் சம நிலையில் இல்லாததே அதற்கு காரணமாகும். நன்றாக ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்குவது சிறப்பாக செயல்பட தூண்டும்.
அதிகரிக்கும் புகார்: தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கும் வரை சிலருடைய கவனம் வேறு எங்கும் திசை திரும்பாது. மற்றவர்களை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். தங்கள் வேலை முடிவடைந்துவிட்டால் உற்சாகமடைந்துவிடுவார்கள். அதன் பிறகு தங்களுடன் வேலை பார்க்கும் சக நண்பர்களின் வேலை மீது ஆர்வமும், கவனமும் கொள்வார்கள். அடுத்த வேலையை தொடங்கினாலும் முன்பு போல் வேலையில் ஆர்வம் இருக்காது. அவர்கள் மீது நிறைய புகார்களும் எழும். திடீரென்று எதிர்மறையான நபராக மாறிவிடுவார்கள். தங்களின் வேலை முடிந்ததும் கவனத்தை திசை திருப்புவதுதான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு மனதை மீண்டும் வேலை பற்றிய சிந்தனையில் புகுத்திவிட்டு, அடுத்தகட்ட பணிகளுக்கு செல்ல வேண்டும்.
எப்போதும் பணி சிந்தனை: காலையில் எழுவது, வேலைக்கு கிளம்புவது, அலுவலகம் சென்றதும் வேலையில் மூழ்கிவிடுவது, வேலை நேரம் முடிந்ததும் நேராக வீடு திரும்புவது, தூங்குவது, மீண்டும் எழுந்து வேலைக்கு கிளம்பி செல்வது இதுதான் அன்றாட செயல்பாடாக நிறைய பேருக்கு இருக்கிறது. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு நேரம் ஒதுக்கமாட்டார்கள். குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிடமாட்டார்கள். வேலைக்கு மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதற்கான ஓய்வு நேரத்தை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலும், மனமும் சோர்ந்துபோய்விடும்.
நோய் பாதிப்பு: நன்றாக வேலை பார்த்து அலுவலகத்தில் சிறந்த ஊழியர் என்று பெயர் எடுத்திருப்பார்கள். அதனை தக்கவைத்துக்கொள்வதற்காக ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருப்பார்கள். உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொள்ளமாட்டார்கள். உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அது தொடர்ந்தால் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகி மாத்திரை சாப்பிட நேர்ந்தால் அதற்கு பதிலாக ஓய்வெடுங்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றத்தை உணரலாம்.
மனக்குழப்பம்: இரவும், பகலும் அயராது உழைக்கும்போது உடலும், மனமும் தளர்வடையும். வேலையில் கவனம் குறைந்து மன குழப்பம் எட்டிப்பார்க்கும். முன்பை போல் வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாவிட்டால் அதிகப்படியான உழைப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பையும், விரை வாக செய்து முடிக்கும் திறனையும் தக்கவைப்பதற்கு ஓய்வு அவசியம். சிறிது நேரம் இடை வெளி எடுத்துவிட்டு வேலையில் கவனம் பதித்தால் உற்சாகம் எட்டிப்பார்ப்பதை உணரமுடியும்.
வலிகள்: கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலைகளை தொடர்ந்து செய்யும்போது உடல் ஒத்துக்கொள்ளாது. வலி, வீக்கம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கடினமான வேலையை செய்து முடித்த பிறகு கை, கழுத்து, உடல் பகுதிகளில் வலி ஏற்படுவது பொதுவானது. ஓய்வுதான் அதற்கு சிறந்த மருந்து.
மந்த உணர்வு: வேலை செய்யும்போது மந்தமான உணர்வு எட்டிப்பார்த்தால் தொடர்ந்து வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாது. கூடுதல் நேரம் வேலை செய்த பின்பு உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்காவிட்டால் மந்த உணர்வை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது. ஓய்வு எடுப்பது வேலையை ஒருபோதும் பாதிக்காது. ஓய்வை அலட்சியப்படுத்தினால் அது நிச்சயமாக உடல் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் மோசமாக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கவன சிதறலுக்கு இடம் கொடுக்காமல் செய்து முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் புத்துணர்ச்சியுடன் வேலையை தொடர்ந்து செய்து முடிக்கலாம்.
காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் செய்யும் போது அதில் காய்கறிகளை கலந்து செய்து கொடுக்கலாம். இதனால் காய்கறிகளின் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிலோ
உளுந்து - 1/4 கிலோ
கேரட் - 1 கப்
தேங்காய் - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 3
முட்டைக்கோஸ் - 100 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - விருப்பத்திற்கேற்ப
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிதம் : கடுகு, உளுந்தப்பருப்பு
செய்முறை:
கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், முட்டைகோஸ், புதினா, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைக்கவும்.
பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலை கடுகு, உளுந்தப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், தேங்காய், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை போட்டு தாளித்து மாவில் போட்டு கரைத்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை பணியாரமாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சத்தான வெஜிடபிள் பணியாரம் ரெடி.
பச்சரிசி - 1 கிலோ
உளுந்து - 1/4 கிலோ
கேரட் - 1 கப்
தேங்காய் - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 3
முட்டைக்கோஸ் - 100 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - விருப்பத்திற்கேற்ப
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிதம் : கடுகு, உளுந்தப்பருப்பு
செய்முறை:
கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், முட்டைகோஸ், புதினா, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைக்கவும்.
பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலை கடுகு, உளுந்தப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், தேங்காய், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை போட்டு தாளித்து மாவில் போட்டு கரைத்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை பணியாரமாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சத்தான வெஜிடபிள் பணியாரம் ரெடி.
தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தோல்விகளை வெற்றிப்படிக்கட்டுகளாக்கி முன்னேறிச்சென்று வாழ்வில் சாதனை படைத்தவர்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள். படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காத மேதைகள் பலரின் வரலாறுகளையும் நாம் படித்து இருக்கிறோம். ஆனால் பலர் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை, தங்களது கனவு நனவாகவில்லை என்று மனதளவில் துவண்டு தன்னம்பிக்கை இழந்து தற்கொலைக்கு ஆளாகும் தற்போதைய சூழல் அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உயிரைவிட தேர்வு பெரிதல்ல...
குறிப்பாக நீட் தேர்வை சொல்லலாம். மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை, நீட் தேர்வில் தோல்வி பயம் என்றெல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவச் செல்வங்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி எத்தனையோ துறைகள் உள்ளன. ஒன்றில் வாய்ப்பு இல்லை என்றால் மற்றொன்றில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. எத்தனையோ நிறுவனங்களில், துறைகளில் தாங்கள் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத வேலையில் கால் பதித்து சாதித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தற்கொலை முடிவுக்கு வருவதென்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். உயிரைவிட தேர்வு பெரிதல்ல என்பதே அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
மன அழுத்தம்
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்றும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் எனவும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி மனநலப்பிரிவு துறைத்தலைவர் பேராசிரியை டாக்டர் ஏ.நிரஞ்சனா தேவி வழங்கும் அறிவுரைகள் வருமாறு:-
இன்றைய காலக்கட்டத்தில் நாம் அடிக்கடி அறியும் செய்தி, ‘தேர்வு பயத்தினால் தற்கொலை முயற்சி அல்லது தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி‘ என்பதே. தற்போது பரவலாக பேசப்படும் வார்த்தை மனஅழுத்தம். நம் மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்தே வாழ்க்கை பாதையை கடந்து வந்திருக்கிறோம். இயற்கையாகவே நம்மிடம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்நோக்கும் திறன் இருக்கிறது. எனினும் ஏன் இப்படி நடக்கிறது? என்பதே பெரிய கேள்வியாக எழுகிறது.
மருத்துவ கனவை திணிக்கும் பெற்றோர்
நம் மாணவர்களின் கல்வி பெரும்பான்மையான நேரத்தில் பெற்றோர்களின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் கல்வி பற்றிய முடிவும், பெற்றோரின் முடிவும் வேறுபடுகிறது. பெற்றோர்களின் மருத்துவ படிப்பு கனவு குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள் தம் விருப்பத்தில் இருந்து பெற்றோரின் விருப்ப பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். மன அழுத்தத்திற்கான முதல் விதை அப்போதுதான் விதைக்கப்படுகிறது.
வெற்றிக்கான முயற்சி என்பது உறுதியான பாதை. அந்த பாதையில் மாணவர்கள் தங்கள் அறிவாற்றல், திறன் ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி தம் இலக்கை நோக்கி முயற்சி பயணத்தில் செல்ல வேண்டும். ஆனால், நாம் நமது எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவது இல்லை என்பதை உணர வேண்டும். தோல்வியும் நம் பாதையில் ஒரு அங்கமாக அவ்வப்போது வரலாம். ஆனால், நாம் உணரவேண்டியது என்னவென்றால், தோல்வி என்பது நம் மீதான முழு மதிப்பீடு அல்ல. அது அப்போதைய அளவீடு மட்டுமே என்பதை உணர வேண்டும்.
தோல்வியே வெற்றிக்கான பாதை
நம் முயற்சிகளில் எந்த இடத்தில் தவறினோம், எதை சரி செய்ய வேண்டும். எப்படி திருத்தினால் அதில் வெற்றி கொள்ளலாம் என்பதே நமக்கான பாடம் என புரிதல் வேண்டும். “ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்“ என்பதில் உள்ள அழகே, வெற்றி,தோல்வியை சரிசமமாய் எடுத்து கொள்ளுதல் ஆகும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டும், அதை வெற்றிக்கான பாதையாக மாற்றுவதே வீரனுக்கு அழகு. மாணவ- மாணவிகளுக்கு தளராத தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
இவற்றையெல்லாம் மீறியும் சில மாணவர்களுக்கு தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை சிந்தனைகள் தோன்றும். தோல்வி பற்றிய பயத்தினால், நம் பெற்றோர் நம்மை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிந்திக்க ஆரம்பித்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் மனதுவிட்டு பேச வேண்டும். வெற்றி, தோல்வியை புரியவைக்க வேண்டும். தனிமையில் விடக்கூடாது. இதில் சில, வெற்றி, தோல்வியை தாங்கும் சக்தி ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்பதை பெற்றோரும் கண்டிப்பாக உணருதல் அவசியம்.
அறிகுறிகள்
தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மாணவர்கள் தங்களது இயல்பான நிலையில் இருந்து வேறுபடுவர். பிறருடன் பேசாமலிருப்பது, சரிவர உணவருந்தாதது, தூக்கமின்மை, தோல்வி பற்றியே புலம்பிக்கொண்டு இருத்தல். காரணமில்லாத அழுகை, உடல் தொந்தரவுகள் உள்ளிட்ட அறிகுறிகள் அம்மாணவர்களின் மன அழுத்தத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டும் அடையாளங்கள்.
இம்மாதிரியான சமயங்களில் பெற்றோர், மிகவும் கவனமுடன் இருந்து அவர்கள் நலனில் அக்கறையுடன் முழுமையான கண்காணிப்பில் வைத்திருத்தல் அவசியம். அவர்களுடன் அன்பாய்...ஆதரவாய் பேசுவது மிக்க மனபலத்தை கொடுக்கும். தேவைப்படும் சூழ்நிலைகளில் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறலாம். சிகிச்சை தேவைப்பட்டால் அதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
மனநல ஆலோசனை திட்டம்
இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“மனதும், உடலும் ஆரோக்கியமாக இருத்தலே உண்மையான ஆரோக்கியம்“ என உலக சுகாதார அமைப்பு ஆரோக்கியத்தை முறைப்படுத்தி இருக்கிறது. எனவே, தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல!. வாழ்க்கை என்பது அனுபவங்களின் கல்விக்கூடம். அதில் கற்றுக்கொள்ளும் நல்ல பாடங்களின் மூலம் தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சியில் வீறுநடைபோடுவோம்.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை பெற செல்போன் எண்கள் அறிமுகம்
‘நீட்‘ தேர்வு பயத்தில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று, மாவட்டந்தோறும் உள்ள ஆலோசனை மையங்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. ஆலோசனை வழங்க தமிழகத்தில் 333 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மனநல ஆலோசனை பெற 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம். மேலும் மாநில மனநல நிறுவன மையத்தை 91541 54092, 044-26425585, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மையத்தை 75501 00373, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மையத்தை 95227 55978, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மையத்தை 80721 68415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர மாவட்டந்தோறும் மனநல ஆலோசனை மைய செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-
திருச்சி-94988 59825. கரூர்-94433 10611. புதுக்கோட்டை-94860 67686, அரியலூர்-99443 61515. பெரம்பலூர்-94984 70825.
உயிரைவிட தேர்வு பெரிதல்ல...
குறிப்பாக நீட் தேர்வை சொல்லலாம். மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை, நீட் தேர்வில் தோல்வி பயம் என்றெல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவச் செல்வங்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி எத்தனையோ துறைகள் உள்ளன. ஒன்றில் வாய்ப்பு இல்லை என்றால் மற்றொன்றில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. எத்தனையோ நிறுவனங்களில், துறைகளில் தாங்கள் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத வேலையில் கால் பதித்து சாதித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தற்கொலை முடிவுக்கு வருவதென்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். உயிரைவிட தேர்வு பெரிதல்ல என்பதே அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
மன அழுத்தம்
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்றும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் எனவும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி மனநலப்பிரிவு துறைத்தலைவர் பேராசிரியை டாக்டர் ஏ.நிரஞ்சனா தேவி வழங்கும் அறிவுரைகள் வருமாறு:-
இன்றைய காலக்கட்டத்தில் நாம் அடிக்கடி அறியும் செய்தி, ‘தேர்வு பயத்தினால் தற்கொலை முயற்சி அல்லது தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி‘ என்பதே. தற்போது பரவலாக பேசப்படும் வார்த்தை மனஅழுத்தம். நம் மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்தே வாழ்க்கை பாதையை கடந்து வந்திருக்கிறோம். இயற்கையாகவே நம்மிடம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்நோக்கும் திறன் இருக்கிறது. எனினும் ஏன் இப்படி நடக்கிறது? என்பதே பெரிய கேள்வியாக எழுகிறது.
மருத்துவ கனவை திணிக்கும் பெற்றோர்
நம் மாணவர்களின் கல்வி பெரும்பான்மையான நேரத்தில் பெற்றோர்களின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் கல்வி பற்றிய முடிவும், பெற்றோரின் முடிவும் வேறுபடுகிறது. பெற்றோர்களின் மருத்துவ படிப்பு கனவு குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள் தம் விருப்பத்தில் இருந்து பெற்றோரின் விருப்ப பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். மன அழுத்தத்திற்கான முதல் விதை அப்போதுதான் விதைக்கப்படுகிறது.
வெற்றிக்கான முயற்சி என்பது உறுதியான பாதை. அந்த பாதையில் மாணவர்கள் தங்கள் அறிவாற்றல், திறன் ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி தம் இலக்கை நோக்கி முயற்சி பயணத்தில் செல்ல வேண்டும். ஆனால், நாம் நமது எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவது இல்லை என்பதை உணர வேண்டும். தோல்வியும் நம் பாதையில் ஒரு அங்கமாக அவ்வப்போது வரலாம். ஆனால், நாம் உணரவேண்டியது என்னவென்றால், தோல்வி என்பது நம் மீதான முழு மதிப்பீடு அல்ல. அது அப்போதைய அளவீடு மட்டுமே என்பதை உணர வேண்டும்.
தோல்வியே வெற்றிக்கான பாதை
நம் முயற்சிகளில் எந்த இடத்தில் தவறினோம், எதை சரி செய்ய வேண்டும். எப்படி திருத்தினால் அதில் வெற்றி கொள்ளலாம் என்பதே நமக்கான பாடம் என புரிதல் வேண்டும். “ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்“ என்பதில் உள்ள அழகே, வெற்றி,தோல்வியை சரிசமமாய் எடுத்து கொள்ளுதல் ஆகும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டும், அதை வெற்றிக்கான பாதையாக மாற்றுவதே வீரனுக்கு அழகு. மாணவ- மாணவிகளுக்கு தளராத தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
இவற்றையெல்லாம் மீறியும் சில மாணவர்களுக்கு தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை சிந்தனைகள் தோன்றும். தோல்வி பற்றிய பயத்தினால், நம் பெற்றோர் நம்மை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிந்திக்க ஆரம்பித்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் மனதுவிட்டு பேச வேண்டும். வெற்றி, தோல்வியை புரியவைக்க வேண்டும். தனிமையில் விடக்கூடாது. இதில் சில, வெற்றி, தோல்வியை தாங்கும் சக்தி ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்பதை பெற்றோரும் கண்டிப்பாக உணருதல் அவசியம்.
அறிகுறிகள்
தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மாணவர்கள் தங்களது இயல்பான நிலையில் இருந்து வேறுபடுவர். பிறருடன் பேசாமலிருப்பது, சரிவர உணவருந்தாதது, தூக்கமின்மை, தோல்வி பற்றியே புலம்பிக்கொண்டு இருத்தல். காரணமில்லாத அழுகை, உடல் தொந்தரவுகள் உள்ளிட்ட அறிகுறிகள் அம்மாணவர்களின் மன அழுத்தத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டும் அடையாளங்கள்.
இம்மாதிரியான சமயங்களில் பெற்றோர், மிகவும் கவனமுடன் இருந்து அவர்கள் நலனில் அக்கறையுடன் முழுமையான கண்காணிப்பில் வைத்திருத்தல் அவசியம். அவர்களுடன் அன்பாய்...ஆதரவாய் பேசுவது மிக்க மனபலத்தை கொடுக்கும். தேவைப்படும் சூழ்நிலைகளில் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறலாம். சிகிச்சை தேவைப்பட்டால் அதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
மனநல ஆலோசனை திட்டம்
இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“மனதும், உடலும் ஆரோக்கியமாக இருத்தலே உண்மையான ஆரோக்கியம்“ என உலக சுகாதார அமைப்பு ஆரோக்கியத்தை முறைப்படுத்தி இருக்கிறது. எனவே, தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல!. வாழ்க்கை என்பது அனுபவங்களின் கல்விக்கூடம். அதில் கற்றுக்கொள்ளும் நல்ல பாடங்களின் மூலம் தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சியில் வீறுநடைபோடுவோம்.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை பெற செல்போன் எண்கள் அறிமுகம்
‘நீட்‘ தேர்வு பயத்தில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று, மாவட்டந்தோறும் உள்ள ஆலோசனை மையங்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. ஆலோசனை வழங்க தமிழகத்தில் 333 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மனநல ஆலோசனை பெற 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம். மேலும் மாநில மனநல நிறுவன மையத்தை 91541 54092, 044-26425585, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மையத்தை 75501 00373, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மையத்தை 95227 55978, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மையத்தை 80721 68415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர மாவட்டந்தோறும் மனநல ஆலோசனை மைய செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-
திருச்சி-94988 59825. கரூர்-94433 10611. புதுக்கோட்டை-94860 67686, அரியலூர்-99443 61515. பெரம்பலூர்-94984 70825.
ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்கலாம்.
கர்ப்பகாலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். அதை பார்த்து பயப்பட தேவையில்லை. அவற்றுள் பெரும்பாலானவை இயல்பாக நடைபெறும் மாற்றங்கள்தான். ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்கலாம்.
நீர்ச்சத்து: கர்ப்பகாலத்தில் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வழிவகை செய்யும். தொடர்ந்து தண்ணீரையே பருகிக்கொண்டிருந்தால் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். அதற்கு மாற்றாக ஐஸ்கட்டியை தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது உங்களுக்கு பிடித்தமான பானத்தை குளிர்சாதனப்பெட்டியின் பிரீசரில் வைத்து அதனை ஐஸ்கட்டியாக மாற்றலாம். பின்பு அதனை தண்ணீரில் கலந்து பருகலாம். சிலருக்கு குளிர்ச்சியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று பானங்களை பருகுவது நல்லது.
முதுகுவலி: கர்ப்பகாலத்தில் முதுகுவலி உள்பட பிற உடல் வலி சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும். முதுகு தண்டுவட பகுதி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமானது. ஆகையால் எலும்பு மற்றும் முதுகுதண்டுவட சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. ஒட்டுமொத்த உடல் நலத்தை பேணவும் முதுகு தண்டு ஆரோக்கியத்தை காக்கவும் கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
பாதாம் எண்ணெய்: சுக பிரசவமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் கர்ப்பிணி பெண் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரிடமும் இருக்கும். அதற்கு சாத்தியமான சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். பாதாம் எண்ணெய்யையும் உபயோகிக்கலாம். கருத்தரித்து 8 மாதங்கள் கடந்த பிறகு குழந்தை வெளியேறும் பகுதியில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம். அது தசைகளை நெகிழ்வடைய செய்யும். சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்.
உள்ளாடை தேர்வு: கர்ப்ப காலத்தில் மார்பகத்தின் அளவு அதிகரிப்பது இயல்பானது. அதனால் பழைய பிராவை தவிர்த்து, அதற்கு ஏற்ற வகையிலான பிராவை தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக வயருடன் கூடிய பிராவை தவிர்த்துவிட வேண்டும். அவை பால் சுரப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
குறட்டை சத்தம்: கர்ப்பகாலத்தில் உடலின் சில பகுதிகள் வீக்கம் அடையும். பாதங்களின் அதன் தாக்கத்தை நேரடியாக உணரலாம். சுவாச குழாய்களிலும் அதன் தாக்கம் எதிரொலித்து குறட்டை சத்தமாக வெளிப்படும். அது இயல்பானதுதான். அதனை கட்டுப்படுத்த விரும்பும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
கூந்தல் பராமரிப்பு: கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கூந்தல் பராமரிப்புக்கு போதிய நேரம் செலவிடமுடியாமல் போகும். குழந்தை பிறந்த பிறகு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். அதனை தவிர்க்க பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு சிறிதளவு கூந்தலை கத்தரித்து நேர்த்தியாக அலங்கரித்துவிடலாம்.
நடைப்பயிற்சி: கர்ப்ப காலத்தில் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்த வேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கர்ப்ப காலத்தில் ஒருவித சோர்வை உணரக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய முடியாவிட்டாலும் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அது பிரசவம் சுமுகமாக நடைபெற உதவும்
நீர்ச்சத்து: கர்ப்பகாலத்தில் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வழிவகை செய்யும். தொடர்ந்து தண்ணீரையே பருகிக்கொண்டிருந்தால் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். அதற்கு மாற்றாக ஐஸ்கட்டியை தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது உங்களுக்கு பிடித்தமான பானத்தை குளிர்சாதனப்பெட்டியின் பிரீசரில் வைத்து அதனை ஐஸ்கட்டியாக மாற்றலாம். பின்பு அதனை தண்ணீரில் கலந்து பருகலாம். சிலருக்கு குளிர்ச்சியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று பானங்களை பருகுவது நல்லது.
முதுகுவலி: கர்ப்பகாலத்தில் முதுகுவலி உள்பட பிற உடல் வலி சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும். முதுகு தண்டுவட பகுதி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமானது. ஆகையால் எலும்பு மற்றும் முதுகுதண்டுவட சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. ஒட்டுமொத்த உடல் நலத்தை பேணவும் முதுகு தண்டு ஆரோக்கியத்தை காக்கவும் கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
பாதாம் எண்ணெய்: சுக பிரசவமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் கர்ப்பிணி பெண் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரிடமும் இருக்கும். அதற்கு சாத்தியமான சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். பாதாம் எண்ணெய்யையும் உபயோகிக்கலாம். கருத்தரித்து 8 மாதங்கள் கடந்த பிறகு குழந்தை வெளியேறும் பகுதியில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம். அது தசைகளை நெகிழ்வடைய செய்யும். சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்.
உள்ளாடை தேர்வு: கர்ப்ப காலத்தில் மார்பகத்தின் அளவு அதிகரிப்பது இயல்பானது. அதனால் பழைய பிராவை தவிர்த்து, அதற்கு ஏற்ற வகையிலான பிராவை தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக வயருடன் கூடிய பிராவை தவிர்த்துவிட வேண்டும். அவை பால் சுரப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
குறட்டை சத்தம்: கர்ப்பகாலத்தில் உடலின் சில பகுதிகள் வீக்கம் அடையும். பாதங்களின் அதன் தாக்கத்தை நேரடியாக உணரலாம். சுவாச குழாய்களிலும் அதன் தாக்கம் எதிரொலித்து குறட்டை சத்தமாக வெளிப்படும். அது இயல்பானதுதான். அதனை கட்டுப்படுத்த விரும்பும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
கூந்தல் பராமரிப்பு: கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கூந்தல் பராமரிப்புக்கு போதிய நேரம் செலவிடமுடியாமல் போகும். குழந்தை பிறந்த பிறகு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். அதனை தவிர்க்க பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு சிறிதளவு கூந்தலை கத்தரித்து நேர்த்தியாக அலங்கரித்துவிடலாம்.
நடைப்பயிற்சி: கர்ப்ப காலத்தில் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்த வேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கர்ப்ப காலத்தில் ஒருவித சோர்வை உணரக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய முடியாவிட்டாலும் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அது பிரசவம் சுமுகமாக நடைபெற உதவும்
சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன.
சப்போட்டா காயாக இருக்கும்போது வெளிப்படும் பால் போன்ற வேதிப்பொருள் தான் டேனின். இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருள்.
வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழ வகை, சப்போட்டா. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சப்போட்டா, மெக்சிகோ, பெலிசி போன்ற மழைக்காடு பகுதிகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது.
சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன.
சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது.
அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.
வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழ வகை, சப்போட்டா. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சப்போட்டா, மெக்சிகோ, பெலிசி போன்ற மழைக்காடு பகுதிகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது.
சப்போட்டா, நார்ச்சத்து கொண்டது. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றன.
சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது.
அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.
கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும்.
கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி பார்ப்பது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருக்கிறது. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நெயில் பாலிஷ்களை தீட்டி அழகுபார்ப்பார்கள்.
அதில் இருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.
கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.
நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.
டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.
‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நக பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.
அதில் இருந்து வெளிப்படும் வாசனையும் பலருக்கு பிடிக்கும். அதனை நுகர்ந்து பார்த்து ரசிக்கவும் செய்வார்கள். ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதை பலரும் அறிவதில்லை. அதன் வாசனை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும்.
கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அதில் சேர்க்கப்படும் பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் போன்ற ரசாயனங்கள் உடல் நலத்திற்கு கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
மென்மை தன்மையை தக்கவைப்பதற்கும், நிறங்களின் பொலிவுக்கும் டோலுன் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரும்.
நக பாலிஷ்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு பார்மாலிடிகைடு எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் பார்மாலிடிகைடு கலந்திருக்கும் நக பாலிஷை தவிர்ப்பது நல்லது. தோல் நோய்கள், மன அழுத்தம், புற்றுநோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிவிடும்.
டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயனம் சாயங்கள் மற்றும் பெயிண்டிங் போல செயல்பட்டு நக பாலிஷுக்கு பொலிவு சேர்க்கும் தன்மை கொண்டது. இதுவும் நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இத்தகைய ரசாயனங்கள் கலந்த நக பாலிஷ்களை தவிர்க்க வேண்டும்.
‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ போன்ற ரசாயன கலப்பு அதிகம் இல்லாத நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம். நக பாலிஷ்களை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்று இரவே நக பாலிஷை அகற்றி நகங்களை சுத்தப்படுத்தி விடுவதும் நல்லது.
பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவது நுரையீரலுடன் தொடர்புடைய நோய் அபாயங்களை 23 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கும் பழங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்கள் விளைகின்றன. அவற்றுள் தற்போது பச்சை நிற ஆப்பிள் பரவலாக சந்தையில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
சிவப்பு நிற ஆப்பிளை போலவே பச்சை ஆப்பிளும் சம அளவில் ஊட்டச்சத்துக்களை கொண்டது. ஆனால் பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அத்துடன் இதில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை இரண்டுமே கலந்திருக்கும். பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.
வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்: பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் இதிலிருக்கும் அதிக நார்ச்சத்தானது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்முறையை தூண்டிவிடக்கூடியது. செரிமான அமைப்புக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது. அதனால் வளர்சிதை மாற்றமும் துரிதமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
கல்லீரலுக்கு நல்லது: பொதுவாக ஆன்டி ஆக்சிடென்டுகள், இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும் முகவர்களாக செயல்படக்கூடியவை. கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. பச்சை ஆப்பிள், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குடல் இயக்கத்தையும் எளிதாக்கும். குடல் அமைப்பை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வரலாம். குறிப்பாக வேக வைத்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவது விரைவில் நிவாரணம் பெற உதவும். பச்சை ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் நல்லது.
எலும்புகளை வலுப்படுத்தும்: அடர்த்தியான மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். குறிப்பாக கால்சியம் பற்றாக்குறை காரணமாக பெண்களுக்கு எலும்புகள் மெலிந்து பலவீனமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 வயதுக்கு பிறகு எலும்பு அடர்த்தி குறையும். மாதவிடாய் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்கள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது பலன் தரும். பச்சை ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பச்சை ஆப்பிளுடன் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நுரையீரலை பாதுகாக்கும்: பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவது நுரையீரலுடன் தொடர்புடைய நோய் அபாயங்களை 23 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை ஆப்பிள், ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த வடிகாலாக அமையும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. அது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
பார்வை திறன் மேம்படும்: பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. அது கண்பார்வை திறனை அதிகரிக்க உதவும். சாலட்டுகளுடன் பச்சை ஆப்பிளை கலந்து சாப்பிடலாம். பச்சை ஆப்பிளின் தோலை தவிர்க்கக்கூடாது. அது இறைச்சியை போல் ஆரோக்கியமானது. நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்: பச்சை ஆப்பிள் இதய அமைப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 52 சதவீதம் குறைக்கக்கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின் படி, பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் உணவு பட்டியலில் பச்சை ஆப்பிளை சேர்க்க மறக்கக்கூடாது. குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.
பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
சிவப்பு நிற ஆப்பிளை போலவே பச்சை ஆப்பிளும் சம அளவில் ஊட்டச்சத்துக்களை கொண்டது. ஆனால் பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அத்துடன் இதில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை இரண்டுமே கலந்திருக்கும். பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.
வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்: பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் இதிலிருக்கும் அதிக நார்ச்சத்தானது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்முறையை தூண்டிவிடக்கூடியது. செரிமான அமைப்புக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது. அதனால் வளர்சிதை மாற்றமும் துரிதமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
கல்லீரலுக்கு நல்லது: பொதுவாக ஆன்டி ஆக்சிடென்டுகள், இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும் முகவர்களாக செயல்படக்கூடியவை. கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. பச்சை ஆப்பிள், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குடல் இயக்கத்தையும் எளிதாக்கும். குடல் அமைப்பை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வரலாம். குறிப்பாக வேக வைத்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவது விரைவில் நிவாரணம் பெற உதவும். பச்சை ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் நல்லது.
எலும்புகளை வலுப்படுத்தும்: அடர்த்தியான மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். குறிப்பாக கால்சியம் பற்றாக்குறை காரணமாக பெண்களுக்கு எலும்புகள் மெலிந்து பலவீனமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 வயதுக்கு பிறகு எலும்பு அடர்த்தி குறையும். மாதவிடாய் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்கள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது பலன் தரும். பச்சை ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பச்சை ஆப்பிளுடன் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நுரையீரலை பாதுகாக்கும்: பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவது நுரையீரலுடன் தொடர்புடைய நோய் அபாயங்களை 23 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை ஆப்பிள், ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த வடிகாலாக அமையும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. அது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
பார்வை திறன் மேம்படும்: பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. அது கண்பார்வை திறனை அதிகரிக்க உதவும். சாலட்டுகளுடன் பச்சை ஆப்பிளை கலந்து சாப்பிடலாம். பச்சை ஆப்பிளின் தோலை தவிர்க்கக்கூடாது. அது இறைச்சியை போல் ஆரோக்கியமானது. நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்: பச்சை ஆப்பிள் இதய அமைப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 52 சதவீதம் குறைக்கக்கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின் படி, பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் உணவு பட்டியலில் பச்சை ஆப்பிளை சேர்க்க மறக்கக்கூடாது. குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.
பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தற்காப்பு கலைகள் பெண்களின் பாதுகாப்புக்கு உதவும். அவற்றுள் சில முக்கியமான மற்றும் எளிதான முறைகளை தெரிந்து வைத்து கொண்டால் தேவைப்படும் நேரங்களில் கையாளலாம்.
பெண்கள் எந்த நேரத்திலும் ஆபத்துகளை சந்திக்கும் தைரியத்தோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்காப்பு கலைகள் பெண்களின் பாதுகாப்புக்கு உதவும். அவற்றுள் சில முக்கியமான மற்றும் எளிதான முறைகளை தெரிந்து வைத்து கொண்டால் தேவைப்படும் நேரங்களில் கையாளலாம்.
ஹேமர் ஸ்டிரைக் ( சுத்தியல் முறை தாக்குதல்)
ஆபத்து வரும் நேரத்தில் பலரும் கைகளில் வளர்த்திருக்கும் நகங்களினால் கீறியே எதிர்ப்பை வெளிகாட்டுவது உண்டு. இதனால் கை நகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு பதிலாக சாவியை கொண்டே தாக்க முடியும். வாகனத்தில் உள்ள சாவியை கையில் இறுக்கி பிடித்து கொண்டு தாக்கலாம். நீளமான கீ செயின் இருந்தால் அதை எதிராளியின் முகத்திற்கு நேராக எறிந்து எதிர்பாராத தாக்குதலால் அவரை செயலிழக்க செய்யலாம். இது சிறந்த தாக்குதல் முறையாக வெளிநாடுகளில் பெண்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
க்ரோஇன் கிக் (இடுப்பில் அடித்தல்)
எதிராளி உங்களை நோக்கி நெருங்கும் போது உடனடியாக ஒரு காலை இடுப்பி வரை தூக்க வேண்டும். எதிராளி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் இடுப்பு பகுதியை வலுவாக தாக்க வேண்டும். இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழும் நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கலாம். இந்த முறையில் தாக்கும் போது நீங்கள் நிலை தடுமாறி கீழே விழாமல் சுதாரித்து கொள்ள வேண்டும்.
ஹீல் பாம் ஸ்டிரைக்(உள்ளங்கையால் தாக்குதல்)
இது மிகவும் எளிமையாகவும், துணிச்சலோடும் எதிராளியை தாக்கும் முறையாகும். நமக்கு முன்பாக நிற்கும் எதிராளியை உள்ளங்கையை கொண்டு அவரது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் தாக்க வேண்டும். இதன் மூலம் எதிராளியை நிலை குலைய செய்து தப்பிக்கலாம்.
எல்போ ஸ்டிரைக் (முழங்கையால் தாக்குதல்)
முழங்கையை மடக்கி கொண்டு எதிராளியின் முகத்தில் தாக்க வேண்டும். இத்தகைய எதிர்பாராத தாக்குதலால் எதிராளி கீழே விழ நேரிடும். எதிராளி எதிரே இருந்தால் மட்டுமல்ல.. நமக்கு பின்னால் இருந்தாலும் இந்த முறையின் மூலம் எளிதாக தாக்க முடியும்.
எதிர்பாராத வகையில் எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
பியர் ஹக் அட்டாக்
நமது பின் பக்கத்தில் இருந்து எதிராளி கட்டிப்பிடித்தால் முதலில் பயத்தை விடுத்து துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கையை மடக்கி முழங்கையால் அவரது முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பலமாக தாக்க வேண்டும்.
கையை கீழே இறக்கி தாக்குதல்
எதிராளியின் கிடுக்கிபிடி வலுவாக இருந்தால் முதலில் நமது கையை கீழே இறக்கி எதிராளியின் முழங்காலில் தாக்க வேண்டும்.
ஹெட் லாக்கில் தப்பிப்பது
நமது தலை எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால் தலையை மெதுவாக அசைத்து அவரை தடுமாற செய்ய வேண்டும். பின்பு கையால் அவரது இடுப்பு பகுதியில் தாக்க வேண்டும்.
ஹேமர் ஸ்டிரைக் ( சுத்தியல் முறை தாக்குதல்)
ஆபத்து வரும் நேரத்தில் பலரும் கைகளில் வளர்த்திருக்கும் நகங்களினால் கீறியே எதிர்ப்பை வெளிகாட்டுவது உண்டு. இதனால் கை நகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு பதிலாக சாவியை கொண்டே தாக்க முடியும். வாகனத்தில் உள்ள சாவியை கையில் இறுக்கி பிடித்து கொண்டு தாக்கலாம். நீளமான கீ செயின் இருந்தால் அதை எதிராளியின் முகத்திற்கு நேராக எறிந்து எதிர்பாராத தாக்குதலால் அவரை செயலிழக்க செய்யலாம். இது சிறந்த தாக்குதல் முறையாக வெளிநாடுகளில் பெண்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
க்ரோஇன் கிக் (இடுப்பில் அடித்தல்)
எதிராளி உங்களை நோக்கி நெருங்கும் போது உடனடியாக ஒரு காலை இடுப்பி வரை தூக்க வேண்டும். எதிராளி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் இடுப்பு பகுதியை வலுவாக தாக்க வேண்டும். இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழும் நேரத்தில் அங்கிருந்து தப்பிக்கலாம். இந்த முறையில் தாக்கும் போது நீங்கள் நிலை தடுமாறி கீழே விழாமல் சுதாரித்து கொள்ள வேண்டும்.
ஹீல் பாம் ஸ்டிரைக்(உள்ளங்கையால் தாக்குதல்)
இது மிகவும் எளிமையாகவும், துணிச்சலோடும் எதிராளியை தாக்கும் முறையாகும். நமக்கு முன்பாக நிற்கும் எதிராளியை உள்ளங்கையை கொண்டு அவரது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் தாக்க வேண்டும். இதன் மூலம் எதிராளியை நிலை குலைய செய்து தப்பிக்கலாம்.
எல்போ ஸ்டிரைக் (முழங்கையால் தாக்குதல்)
முழங்கையை மடக்கி கொண்டு எதிராளியின் முகத்தில் தாக்க வேண்டும். இத்தகைய எதிர்பாராத தாக்குதலால் எதிராளி கீழே விழ நேரிடும். எதிராளி எதிரே இருந்தால் மட்டுமல்ல.. நமக்கு பின்னால் இருந்தாலும் இந்த முறையின் மூலம் எளிதாக தாக்க முடியும்.
எதிர்பாராத வகையில் எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
பியர் ஹக் அட்டாக்
நமது பின் பக்கத்தில் இருந்து எதிராளி கட்டிப்பிடித்தால் முதலில் பயத்தை விடுத்து துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். கையை மடக்கி முழங்கையால் அவரது முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பலமாக தாக்க வேண்டும்.
கையை கீழே இறக்கி தாக்குதல்
எதிராளியின் கிடுக்கிபிடி வலுவாக இருந்தால் முதலில் நமது கையை கீழே இறக்கி எதிராளியின் முழங்காலில் தாக்க வேண்டும்.
ஹெட் லாக்கில் தப்பிப்பது
நமது தலை எதிராளியின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால் தலையை மெதுவாக அசைத்து அவரை தடுமாற செய்ய வேண்டும். பின்பு கையால் அவரது இடுப்பு பகுதியில் தாக்க வேண்டும்.
கேழ்வரகில் முருங்கை கீரை சேர்த்து அடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்) - 150 கிராம்.
உளுந்து - 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
முட்டைக்கோஸ் - 25 கிராம்,
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
குடைமிளகாய் - ஒன்று
உப்பு- சிறிதளவு
செய்முறை:
கொத்தமல்லி, அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும்.
கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம்.
கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை ரெடி.
குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.
கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்) - 150 கிராம்.
உளுந்து - 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
முட்டைக்கோஸ் - 25 கிராம்,
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
குடைமிளகாய் - ஒன்று
உப்பு- சிறிதளவு
செய்முறை:
கொத்தமல்லி, அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும்.
கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம்.
கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை ரெடி.
குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.
பெண்களுக்கு பிரசவத்தின் போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?
* சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.
* சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழித்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது. இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படுகிறது. தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.
* குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.
* கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன்மையை மேம்படுத்த முடியும். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அப்பயிற்சியினை செய்யலாம். தினந்தோறும் செய்ய வேண்டிய அப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?
* சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.
* சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழித்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது. இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படுகிறது. தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.
* குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.
* கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன்மையை மேம்படுத்த முடியும். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அப்பயிற்சியினை செய்யலாம். தினந்தோறும் செய்ய வேண்டிய அப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.
பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது, இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டம், மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
சட்டத்தின் பொதுவான அம்சங்கள்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.
சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே பிரதானம்
சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்படவேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறு வரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல் லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும்.
துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீரு டையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் படவேண்டும்.
பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.
குறிப்பிடத் தகுந்த பிரிவுகள்
குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது.
குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.
இழப்பீடு/நிவாரணம்
சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.
மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண் டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
சட்டத்தின் பொதுவான அம்சங்கள்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.
சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே பிரதானம்
சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்படவேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறு வரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல் லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும்.
துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீரு டையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் படவேண்டும்.
பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.
குறிப்பிடத் தகுந்த பிரிவுகள்
குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது.
குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.
இழப்பீடு/நிவாரணம்
சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.
மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண் டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
* அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
* அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
* அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
* ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
* நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
* இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
* அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
* அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
* அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
* ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
* நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
* இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.






