search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீர் பிரச்சனை"

    சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. சிறுநீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம்.
    சிறுநீரக கல் ஒரு கடினமான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற்கள் உருவாகலாம். ஆனால் சில நோய்கள் மற்றும் நிலைபாடு காரணமாக மருந்து எடுத்து கொள்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    சிறுநீர்க் குழாய் கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது, மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கால்சியத்தால் உருவானவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் உருவானவை. சிறுநீர் ஓட்டத்தின் அடைப்பும் கல் உருவாவதற்கு வழிவகுக்கும்.

    கீல்வாதம் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து யூரிக் அமில கற்கள் உருவாக்க வழிவகுக்கும். சிறுநீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்படலாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களும் கற்கள் வளரும் ஆபத்து அதிகரித்துள்ளது.

    குடல் அழற்சி நோய் இருப்பவர்களுக்கு கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சிறுநீரக கற்கள் அதிகரிக்க ஆபத்து உள்ளது. 
    சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை தவிர்க்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுநீரக கல் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். அதோடு பழ ஜூஸ்வகைகள், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவைகளையும் பருக வேண்டும். அவை சிறுநீரக கல் உருவாகுவதை தவிர்க்க உதவும்.

    கால்சிய சத்து கொண்ட உணவுகளை குறைவாக உட்கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். கால்சிய உணவுகளை தவிர்க்கும்போது உடலில் ஆக்சலேட் எனும் உப்புச்சத்து அதிகரிக்க தொடங்கி, சிறுநீரக கற்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும். அதை தவிர்க்க சோயா பால், தயிர், பாதாம், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதேநேரத்தில் சாக்லேட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காபி, வேர்க்கடலை போன்றவற்றில் ஆக்சலேட் அதிகம் கலந்திருக்கும். ஆதலால் அவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, துளசி, மிளகாய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். புரத சத்து உடலுக்கு அவசியமானது. எனினும் புரதம் கலந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றில் அமிலத்தன்மையும், யூரிக் அமிலமும் அதிகம் சேர்ந்திருக்கும். அவை சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். ஆதலால் சிறுநீரக கற்கள் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்கள் மாட்டிறைச்சி, கோழி, மீன், பன்றி இறைச்சி போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை.

    இரு காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்சனை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும்.

    அதன் தொடர்ச்சியாக, பல பிரச்சனைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். பள்ளி மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெண்கள், இந்த பிரச்சனைக்கு பயந்து, வேலையை விட்டு விடுவதும் உண்டு. வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்; இதனால், மன அழுத்தம் ஏற்படும்.



    சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் சொல்வோம். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.

    கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்சனையை சரி செய்து விடலாம். பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.

    அறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். 
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில நேரங்கள் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் சிறுநீரகம் வரை கூட சென்றிருக்கலாம்.

    * சிறுநீர் செல்லும் பொழுது அதில் ரத்தம் கலந்தார் போல் இருந்தால் கிருமிகளோடு உடல் நடத்திய போராட்டத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் கலந்திருக்கலாம். அப்படி இருந்தால் சிறுநீரக உறுப்புகளில் இருக்கும் கிருமிகளை சரி செய்ய உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

    * அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் தோன்றுகின்றதா? சிறுநீரக பையில் கிருமிகள் தாக்குதல் இருந்தால் அந்த பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பை தன்னை சுருக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன்றும். பொதுவில் சிறுநீரக உறுப்பு கிருமி தாக்குதல் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகமாக ஏற்படும். இது உடல் கூறு அமைப்பு காரணமாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் சிறுநீரக பை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

    * கீழ்முதுகு வலி:- கிருமியால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் வீங்கும். இதனால் கீழ் முதுகுவலி ஏற்படும்.

    * சிறுநீர் செல்லும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். ஏனெனில் கிருமிகளால் சிறுநீரக உறுப்புகள், பாதை உள்ளிட்டவை வீங்கி இருக்கும்.

    * சிறுநீர் ஒரு கலங்கிய திரவம் போல இருக்கலாம். உடல் வெள்ளை ரத்த அணுக்களை கிருமிகளோடு போராட அனுப்புவதால் அவை போராடி சிறுநீரில் கலப்பதால் கலங்கிய தோற்றம் இருக்கலாம்.

    * சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் இருக்கலாம்.

    * சிறுநீரில் சீழ் இருக்கலாம்.

    * மயக்கம் இருக்கலாம். கிருமி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாத பொழுது கிருமிகள் ரத்த குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.

    * ஜுரம் இருக்கலாம்.

    மேலும் உங்கள் சிறுநீரகம் பாதித்து இருந்தால் அதன் அறிகுறிகளாக

    * திடீரென உடலில் மிக அதிக அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். நன்கு வேலை செய்யும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியேற்றி விடும். சிறுநீரக பாதிப்பு நிகழும் பொழுது இக்கழிவுகள் ரத்தத்தில் கூடி பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாட்டில் ஒன்றாக சருமத்தில் அதிக அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும். அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் சிலரிடம் இருக்கும். அதிக தாகம், உப்பிச உணர்வு, வீக்கம், இவை இருந்தால் நீங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கின்றீர்களா என்பதனை ‘செக்’ செய்யுங்கள்.

    * உட்கார, நிற்க முடியாத வயிற்றுவலி இருந்தால் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருக்கின்றதா என்பதனை மருத்துவரிடம் சென்று அறியுங்கள். கூடவே வாந்தி, அதிக வியர்வை வயிற்றுப்பிரட்டல் இவையும் இருக்கலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.

    * உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு மிக தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தின் ரத்த குழாய்கள் சிறுநீரை பிரித்து எடுக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் பெரிய குழாய்களில் இருந்தால் மிகச் சிறிய ரத்த குழாய்களிலும் இருக்கும். இதனால் சிறுநீரக மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும். எனவே உங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 
    சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.

    நீங்கள் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இந்த கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். ஏனெனில் இங்கு சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    எத்தனை முறை வீட்டில் உள்ளோர் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் பலர் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இக்கட்டுரை தெளிவாக விளக்கும்.

    நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

    சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக, பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால், சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

    வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.

    மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர்ப்பை விரைவில் நிறைந்துவிடும்.
    தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
    உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.

    அதிகமாக வியர்த்தால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.

    சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

    நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

    சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

    கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.
    ×