என் மலர்
ஆரோக்கியம்
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்கலாம்.
ஒரு ஆண் தந்தையாக மாறும் போது அவனுடைய பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கிறது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். யாருமே நூறு சதவீதம் ஒழுங்கு கிடையாது; நம் அனைவரிடமும் ஏதாவது குறை இருக்கவே செய்யும். ஆனாலும் கூட நாம் நம் குழந்தைகள் சிறந்தவற்றை கற்க முயற்சி செய்கிறோம். நம்முடைய சரியற்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்போம். முதலில் இது கஷ்டமான வேலையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது தரும் பலனை நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்….
1. நீங்கள் ஒரு விதிமுறையை போட்டால், அதனை பின்பற்ற வேண்டும். ஒரே விஷயத்திற்கு சில நேரங்களில் நீங்கள் கண்டிப்புடனும், சில நேரங்களில் அப்படி இல்லாமலும் இருப்பதாக உங்கள் குழந்தைகள் உணர்ந்தால், ஒழுக்கத்தை அவர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் அமைத்திருக்கும் எல்லைகளின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
2. உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பாறையாகவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை உங்களை முழுமையாக சார்ந்திருக்கும். தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
3. உங்கள் குழந்தையுடன் சிறந்த பந்தத்தை உண்டாக்க, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்களது போதையை நீக்க வேண்டும். உங்களது குழந்தைகளுடனும் நீங்கள் தரமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
4. உங்கள் குழந்தையுடன் நண்பனாக பழக முயற்சி செய்யும் போது, முதலில் நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்து விடாதீர்கள். காலம், பணம் மற்றும் அறநெறிகளின் மதிப்பை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைக்கான வரம்புகளையும் குறிப்பிட்ட எல்லைகளையும் நீங்கள் வரையறுக்க வேண்டும்.
5. உங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு சரி என சொல்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மீதான அன்பை நீங்கள் காட்ட வேண்டியதில்லை. சொல்லப்போனால், இதனால் நிராகரிப்புகளை கையாளுவதில் அவர்கள் திறனற்றவர்களாகி விடுவார்கள். அதனால் தேவைப்படும் போது முடியாது என சொல்வது அவசியமாகும்.
6. உங்கள் வீட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நேரம் தேவை. உறவுகளை மதிக்கவும் பொக்கிஷமாக வைத்திருக்கவும் உங்கள் குழந்தைக்கு தேவையான பண்பு இது.
7. உங்கள் விருப்பம் போல் உங்கள் குழந்தைகள் நடக்க அவர்களை அச்சுறுத்துவது அவர்களை கிளிர்ச்சி செய்வர்களாக மாற்றி விடும். அவர்களின் தனித்துவத்தை பாராட்டுங்கள்.
8. உங்கள் குழந்தைகளை பிறருடன் தொடர்ச்சியான முறையில் ஒப்பீடு செய்தால் அது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும். அவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடாதீர்கள்.
9. குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கேளுங்கள். மாறாக உங்களது தத்துவங்களையே அவர்களிடம் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்காதீர்கள்.
10. நீங்கள் அதிகமாக புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, உங்கள் குழந்தைகள் முன்னால் அவற்றை செய்யாமல் குறைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்….
1. நீங்கள் ஒரு விதிமுறையை போட்டால், அதனை பின்பற்ற வேண்டும். ஒரே விஷயத்திற்கு சில நேரங்களில் நீங்கள் கண்டிப்புடனும், சில நேரங்களில் அப்படி இல்லாமலும் இருப்பதாக உங்கள் குழந்தைகள் உணர்ந்தால், ஒழுக்கத்தை அவர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் அமைத்திருக்கும் எல்லைகளின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
2. உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பாறையாகவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை உங்களை முழுமையாக சார்ந்திருக்கும். தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
3. உங்கள் குழந்தையுடன் சிறந்த பந்தத்தை உண்டாக்க, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்களது போதையை நீக்க வேண்டும். உங்களது குழந்தைகளுடனும் நீங்கள் தரமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
4. உங்கள் குழந்தையுடன் நண்பனாக பழக முயற்சி செய்யும் போது, முதலில் நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்து விடாதீர்கள். காலம், பணம் மற்றும் அறநெறிகளின் மதிப்பை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைக்கான வரம்புகளையும் குறிப்பிட்ட எல்லைகளையும் நீங்கள் வரையறுக்க வேண்டும்.
5. உங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு சரி என சொல்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மீதான அன்பை நீங்கள் காட்ட வேண்டியதில்லை. சொல்லப்போனால், இதனால் நிராகரிப்புகளை கையாளுவதில் அவர்கள் திறனற்றவர்களாகி விடுவார்கள். அதனால் தேவைப்படும் போது முடியாது என சொல்வது அவசியமாகும்.
6. உங்கள் வீட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நேரம் தேவை. உறவுகளை மதிக்கவும் பொக்கிஷமாக வைத்திருக்கவும் உங்கள் குழந்தைக்கு தேவையான பண்பு இது.
7. உங்கள் விருப்பம் போல் உங்கள் குழந்தைகள் நடக்க அவர்களை அச்சுறுத்துவது அவர்களை கிளிர்ச்சி செய்வர்களாக மாற்றி விடும். அவர்களின் தனித்துவத்தை பாராட்டுங்கள்.
8. உங்கள் குழந்தைகளை பிறருடன் தொடர்ச்சியான முறையில் ஒப்பீடு செய்தால் அது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும். அவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடாதீர்கள்.
9. குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கேளுங்கள். மாறாக உங்களது தத்துவங்களையே அவர்களிடம் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்காதீர்கள்.
10. நீங்கள் அதிகமாக புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, உங்கள் குழந்தைகள் முன்னால் அவற்றை செய்யாமல் குறைத்துக் கொள்ளுங்கள்.
குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.
சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.
இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சுவையான இஞ்சி சூப் தயார்.
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.
சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.
இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சுவையான இஞ்சி சூப் தயார்.
பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும்.
குண்டும் குழியுமான சாலையில் வெகுதூரம் பயணம்செய்வது, பின்பு அலுவலகம் சென்று மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலைபார்ப்பது இதுதான் பலரது வழக்கமாக இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இடுப்பு, முதுகு, கழுத்து வலியோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவதியை நினைத்து இருசக்கர வாகன பயணத்தை தவிர்க்க முடியாது. அனைத்து சாலைகளையும் நம்மால் சரிசெய்திட இயலாது. ஆனால் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் வலியின்றி நிம்மதியாக பயணிக்க முடியும்.
பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும். முதுகெலும்புகளுக்கு இடையே அதிர்வுகளைத் தாங்கும் விதமாக ‘ஷாக் அப்சர்வர்கள்’ போன்று மென்மையான டிஸ்குகள் உள்ளன. தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் வெகுதூரம் பயணப்படும்போது அந்த டிஸ்குகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அப்போது முதுகெலும்பின் பலவீனமான பகுதிகளில் இருக்கும் டிஸ்குகள் பலூன் போன்று வெளியே தள்ளும் நிலை உருவாகும். அதை ‘டிஸ்க் ப்ரலாப்ஸ்’ என்று கூறுகிறோம். வெளியே தள்ளும் டிஸ்க் பகுதி அருகில் உள்ள மெல்லிய நரம்புகளை அழுத்தும்போது முதுகிலும், கால்களிலும் தாங்கமுடியாத வலி தோன்றும்.
இருசக்கர வாகனம் ஓட்டும்போது தொடர்ந்து இரு கை களாலும் ஹேன்டிலை பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். நேராக பார்த்தபடியும் வாகனத்தை இயக்கவேண்டும். இல்லாவிட்டால் கழுத்துப்பகுதி தசைகள் அழுத்தத்துடன் இறுகி, கழுத்து வலி உருவாகும். வாகனத்தில் இருந்து இறங்கிய பின்பும் சிறிது நேரம் கழுத்தை அசைக்கமுடியாமல் தவிக்கநேரும். இதை கண்டுகொள்ளாமலேவிட்டால் கழுத்து எலும்புகள் தேய்மானமடைவதோடு, கழுத்து வலியும் தீவிரமாகிக்கொண்டிருக்கும்.
கழுத்து வலி இருப்பவர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும். ஓய்வு எடுத்த பின்பும் கழுத்து வலி தீராமல் இருந்தாலோ, கழுத்து வலி தீவிரமாகி தோள் களுக்கும் கைகளுக்கும் பரவினாலோ, கை விரல்கள் வலித்து மரத்துப்போவது போல் உணர்ந்தாலோ, முதுகு வலி காலின் பின்பகுதிக்கு பரவி குதிகால் வரை தாக்கத்தை ஏற்படுத்தினாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இருமும்போதும், திரும்பும்போதும் முதுகுவலி அதிகரித்தால் நரம்பு களுக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இந்த தொந்தரவுகளை எல்லாம் தவிர்க்க இருசக்கர வாகனத்தில் நேராக அமர்ந்து இயக்குங்கள். கால்களை புட்ரெஸ்ட்டில் அழுத்தமாக வைத்து ஹேன்டிலை சரியாக பிடித்தபடி நேராக இருப்பது சரியான முறையாகும். குனிந்தபடி அமர்ந்தோ, கழுத்தை முன்னோக்கி நீட்டிக்கொண்டோ வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவேண்டும்.
வாகனத்தை ஓட்டும்போது காதுகளுக்கு சமமாக தோள்கள் உயரவேண்டும். அதிக வேகத்தில் செல்வது, திடீரென்று பிரேக் பிடிப்பது போன்றவைகளை செய்யக்கூடாது. வேகத்தடைகள் வரும்போது வேகத்தை குறைத்து, நிதானமாக அதனை கடந்துசெல்லவேண்டும்.
வெகுதூரம் வாகனத்தை ஓட்டிச்செல்லும் நிலை ஏற்படும்போது, இடைஇடையே ஓய்வு எடுத்த பின்பு தொடருவது நல்லது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். அந்த பயிற்சிகள் கழுத்து, தோள், கைகள், முதுகெலும்பு போன்றவைகளுக்கு பலம் தரும் விதத்தில் அமையவேண்டும். அதனால் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெற்று, உடற்பயிற்சி செய்வது அவசியம்.
பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும். முதுகெலும்புகளுக்கு இடையே அதிர்வுகளைத் தாங்கும் விதமாக ‘ஷாக் அப்சர்வர்கள்’ போன்று மென்மையான டிஸ்குகள் உள்ளன. தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் வெகுதூரம் பயணப்படும்போது அந்த டிஸ்குகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அப்போது முதுகெலும்பின் பலவீனமான பகுதிகளில் இருக்கும் டிஸ்குகள் பலூன் போன்று வெளியே தள்ளும் நிலை உருவாகும். அதை ‘டிஸ்க் ப்ரலாப்ஸ்’ என்று கூறுகிறோம். வெளியே தள்ளும் டிஸ்க் பகுதி அருகில் உள்ள மெல்லிய நரம்புகளை அழுத்தும்போது முதுகிலும், கால்களிலும் தாங்கமுடியாத வலி தோன்றும்.
இருசக்கர வாகனம் ஓட்டும்போது தொடர்ந்து இரு கை களாலும் ஹேன்டிலை பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். நேராக பார்த்தபடியும் வாகனத்தை இயக்கவேண்டும். இல்லாவிட்டால் கழுத்துப்பகுதி தசைகள் அழுத்தத்துடன் இறுகி, கழுத்து வலி உருவாகும். வாகனத்தில் இருந்து இறங்கிய பின்பும் சிறிது நேரம் கழுத்தை அசைக்கமுடியாமல் தவிக்கநேரும். இதை கண்டுகொள்ளாமலேவிட்டால் கழுத்து எலும்புகள் தேய்மானமடைவதோடு, கழுத்து வலியும் தீவிரமாகிக்கொண்டிருக்கும்.
கழுத்து வலி இருப்பவர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும். ஓய்வு எடுத்த பின்பும் கழுத்து வலி தீராமல் இருந்தாலோ, கழுத்து வலி தீவிரமாகி தோள் களுக்கும் கைகளுக்கும் பரவினாலோ, கை விரல்கள் வலித்து மரத்துப்போவது போல் உணர்ந்தாலோ, முதுகு வலி காலின் பின்பகுதிக்கு பரவி குதிகால் வரை தாக்கத்தை ஏற்படுத்தினாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இருமும்போதும், திரும்பும்போதும் முதுகுவலி அதிகரித்தால் நரம்பு களுக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இந்த தொந்தரவுகளை எல்லாம் தவிர்க்க இருசக்கர வாகனத்தில் நேராக அமர்ந்து இயக்குங்கள். கால்களை புட்ரெஸ்ட்டில் அழுத்தமாக வைத்து ஹேன்டிலை சரியாக பிடித்தபடி நேராக இருப்பது சரியான முறையாகும். குனிந்தபடி அமர்ந்தோ, கழுத்தை முன்னோக்கி நீட்டிக்கொண்டோ வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவேண்டும்.
வாகனத்தை ஓட்டும்போது காதுகளுக்கு சமமாக தோள்கள் உயரவேண்டும். அதிக வேகத்தில் செல்வது, திடீரென்று பிரேக் பிடிப்பது போன்றவைகளை செய்யக்கூடாது. வேகத்தடைகள் வரும்போது வேகத்தை குறைத்து, நிதானமாக அதனை கடந்துசெல்லவேண்டும்.
வெகுதூரம் வாகனத்தை ஓட்டிச்செல்லும் நிலை ஏற்படும்போது, இடைஇடையே ஓய்வு எடுத்த பின்பு தொடருவது நல்லது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். அந்த பயிற்சிகள் கழுத்து, தோள், கைகள், முதுகெலும்பு போன்றவைகளுக்கு பலம் தரும் விதத்தில் அமையவேண்டும். அதனால் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெற்று, உடற்பயிற்சி செய்வது அவசியம்.
தாழ்வு மனப்பான்மை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தங்களை தாங்களே மனச்சிறைக்குள் அடைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது சிந்தனையும், செயல்திறனும் குறைந்துபோய் விடும்.
தமக்கு தாமே எதிரியாகிவிடுகிறவர்கள் நிறைய பேர் உண்டு. அதன் மூலம் அவர்கள் வளர்ச்சிக்கு அவர்களே முட்டுக்கட்டைபோட்டுக்கொள்வார்கள். நமக்குள்ளே இருக்கும் நமது எதிரி யார் தெரியுமா? தாழ்வு மனப்பான்மை. இந்த எதிரியிடம் சிக்கிக்கொள்கிறவர்கள், எப்போதும் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களுடைய பண வசதி, நண்பர்கள் வட்டத்தை எல்லாம் பார்த்து தனக்குள் பொறாமைத் தீயை வளர்த்துக்கொள்ளவும் செய்வார்கள்.
தாழ்வு மனப்பான்மை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தங்களை தாங்களே மனச்சிறைக்குள் அடைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது சிந்தனையும், செயல்திறனும் குறைந்துபோய் விடும். மனித மனம் எப்போதுமே அகண்ட வானில் சிறகடித்து பறக்கும் பறவைகளை போல விசாலப்பட வேண்டும். எந்த விஷயத்தையும் பரந்த மனதுடன் அணுகும் பக்குவத்தையும் பெற்றிருக்க வேண்டும். நம்மாலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
எல்லோரிடமும் திறமை இருக்கிறது. அதை வெளியே கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து மற்றவர்கள் செய்யும் காரியங்களை மலைப்பாக பார்த்துவிட்டு தம்மால் அதுபோல் முடியாது என்று தாழ்வு மனப்பான்மையால் முடங்கி கிடப்பதில் அர்த்தமில்லை. பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்கூட தடைவிதித்துக் கொண்டு தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வது நமக்கு நாமே எதிரியாகிவிடுவதற்கு சமம். அது தொடர்ந்தால் வாழ்க்கையே பரிதாபத்திற்குரியதாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை பார்ப்போம்.
சரிதா திருமணமாகி, மூத்த மருமகளாக புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைத்தாள். புகுந்த வீட்டில் உள்ள அனைவர் மனதிலும் சட்டென்று இடம்பிடித்துவிட்டாள். குடும்பத்திற்காக உழைத்தாள். பலவித தியாகங்களை செய் தாள். குடும்பத்தில் உள்ள அனைவருமே அவளை புகழ்ந்தார்கள். ஆனால் அந்த ஆனந்தம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டாவது மருமகள் சுவிதா வந்த பிறகு சரிதாவின் மனம் சலனப்பட்டது. காரணம், சுவிதா, சரிதாவை விட வசதி படைத்தவள். பார்க்க அழகாக இருந்தாள். சரிதாவைவிட அதிகம் படித்தும் இருந்தாள்.
அவளுடைய வசதி வாய்ப்பு சரிதாவின் கண்களை உறுத்தியது. தன்னை விட அனைத்து வகையிலும் அவள் உயர்ந்தவளாக தெரிந்தாள். அதுவே அவளுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. சுவிதாவோடு தன்னை ஒப்பிட்டுப்பார்த்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டாள். அதனால் தனிமையைத் தேடினாள். குடும்பத்தாரிடம் முன்புபோல கலகலப்பாக பேசுவதை தவிர்த்தாள்.
தன்னைத்தானே வருத்திக்கொண்டவள் ஒருகட்டத்தில் அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பினாள். கணவரை நச்சரித்து தனிக்குடித்தனம் சென்றாள். அதுவே அவள் செய்த மிகப்பெரிய தவறாகிவிட்டது. குடும்பத்தினர் குறைசொன்னார்கள். அதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை உருவானது. சொர்க்கமாக இருந்த சரிதாவின் குடும்ப வாழ்க்கை அதன் பின்பு நரகமாகிவிட்டது.
சரிதாவை போன்று நிறைய பெண்கள் தாழ்வு மனப்பான்மையால் தங்களுடைய சுய மதிப்பை இழந்துகொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களது திறமையும், தனித்துவமும் அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. தங்களை தாங்களே முடக்கிக்கொள்கிறார்கள்.
எந்த வயதினருக்கும் தாழ்வு மனப்பான்மை வரலாம். அவர்கள் வளரும் சூழலும், அவர்களிடம் இருக்கும் திறமையின்மையுமே அதற்கு காரணம். தாழ்வு மனப்பான்மையில் இருந்து அகல தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும். நம்மை நாமே நேசித்தால், நம்மை நாமே தட்டிக்கொடுத்து வேலைவாங்கினால், தாழ்வு மனப்பான்மை அகலும். தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும். புதிய செல்கள் உருவாகுவதற்கும் வழிவகைசெய்யும். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.
முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.
முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.
முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.
முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது.
சிறிய வெங்காயத்தை நாம் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கிறோம். மாமிசம், மீன், காய்கறி, பலகார வகைகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருளாக சிறிய வெங்காயம் இருக்கிறது. உணவுகளுக்கு இது அதிக சுவையை தந்தாலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக இருந்துவருகிறது.
தாய்ப்பாலை பெருகவைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. பிரசவித்த பின்பு பெண்களின் கருப்பை மீண்டும் சுருங்கி இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும். அதற்கு தேவையான மருத்துவகுணங்களும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சுகபிரசவத்தின்போது பெண்களின் பிறப்பு உறுப்பின் சுவர்ப்பகுதி பலவீனமாகும். அதனை பலப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வரும் சக்தியும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. கர்ப்பிணிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது. தாய்மையடைய விரும்பும் பெண்களும், கர்ப்பமடைந்த பெண்களும், பிரசவித்த பெண்களும் இதனை அதிகம் பயன்படுத்தலாம். ஆண்மை சக்தியை பெருக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும் இதனை அதிகம் சாப்பிட்டு வரலாம். செல்களை புதுப்பித்து இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் இது துணைபுரிகிறது.
வயிற்றை சுத்தப்படுத்தும் ஆற்றலையும் சிறிய வெங்காயம் பெற்றிருக்கிறது. வயிற்றில் ஏற்படும் அவஸ்தைகளை தீர்த்து, பசியை தூண்டி ஜீரணத்தன்மையை ஊக்குவிக்கவும் இதனால் முடியும். குடல்களில் ஏற்படும் பருக்கள், வீக்கம், காயம் போன்றவைகளை குணப்படுத்தும் மருத்துவகுணமும் இதில் அடங்கியிருக்கிறது.
சிறிய வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறிய வெங்காயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சிவப்பு நிறம் தருவது, லூட்டின் என்ற வர்ண கலவையாகும். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் தன்மைகொண்டது.
சிறிய வெங்காயத்தை பயன்படுத்தி லேகியம் தயாரித்து சுவைக்கலாம். இது பலவிதங்களில் உடலுக்கு பலம் சேர்க்கும். இந்த லேகியத்தை தயாரிக்கும் முறை:
சுத்தம் செய்த சிறிய வெங்காயத்தை 300 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு பூண்டுவை இடிக்கவும். இவை இரண்டையும் 500 கிராம் தேங்காய் பாலில் நன்றாக வேகவைத்து குழைக்கவும். 180 கிராம் வெல்லத்தை கரைத்து அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள்.
அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும். ஒரு சிட்டிகை சுக்குத் தூள் மற்றும் 4 ஏலக்காய்களையும் தூளாக்கி சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள். இதுதான் வெங்காய லேகியம். இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
தாய்ப்பாலை பெருகவைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. பிரசவித்த பின்பு பெண்களின் கருப்பை மீண்டும் சுருங்கி இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும். அதற்கு தேவையான மருத்துவகுணங்களும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சுகபிரசவத்தின்போது பெண்களின் பிறப்பு உறுப்பின் சுவர்ப்பகுதி பலவீனமாகும். அதனை பலப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வரும் சக்தியும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. கர்ப்பிணிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது. தாய்மையடைய விரும்பும் பெண்களும், கர்ப்பமடைந்த பெண்களும், பிரசவித்த பெண்களும் இதனை அதிகம் பயன்படுத்தலாம். ஆண்மை சக்தியை பெருக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும் இதனை அதிகம் சாப்பிட்டு வரலாம். செல்களை புதுப்பித்து இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் இது துணைபுரிகிறது.
வயிற்றை சுத்தப்படுத்தும் ஆற்றலையும் சிறிய வெங்காயம் பெற்றிருக்கிறது. வயிற்றில் ஏற்படும் அவஸ்தைகளை தீர்த்து, பசியை தூண்டி ஜீரணத்தன்மையை ஊக்குவிக்கவும் இதனால் முடியும். குடல்களில் ஏற்படும் பருக்கள், வீக்கம், காயம் போன்றவைகளை குணப்படுத்தும் மருத்துவகுணமும் இதில் அடங்கியிருக்கிறது.
சிறிய வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறிய வெங்காயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சிவப்பு நிறம் தருவது, லூட்டின் என்ற வர்ண கலவையாகும். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் தன்மைகொண்டது.
சிறிய வெங்காயத்தை பயன்படுத்தி லேகியம் தயாரித்து சுவைக்கலாம். இது பலவிதங்களில் உடலுக்கு பலம் சேர்க்கும். இந்த லேகியத்தை தயாரிக்கும் முறை:
சுத்தம் செய்த சிறிய வெங்காயத்தை 300 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு பூண்டுவை இடிக்கவும். இவை இரண்டையும் 500 கிராம் தேங்காய் பாலில் நன்றாக வேகவைத்து குழைக்கவும். 180 கிராம் வெல்லத்தை கரைத்து அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள்.
அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும். ஒரு சிட்டிகை சுக்குத் தூள் மற்றும் 4 ஏலக்காய்களையும் தூளாக்கி சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள். இதுதான் வெங்காய லேகியம். இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
ரத்த அழுத்தத்தை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது முக்கியம். மருந்துகளின் தேவை இல்லாமல் இயற்கையாகவே ரத்த அழுத்த பிரச்சினையை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
ரத்த அழுத்தம் குறைவது மற்றும் ரத்த அழுத்தம் உயர்வது போன்ற பிரச்சினையை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது முக்கியம். ஏனெனில் அவை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிகுறிகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அவற்றுள் தலைவலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல், மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மருந்துகளின் தேவை இல்லாமல் இயற்கையாகவே ரத்த அழுத்த பிரச்சினையை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
* வஜ்ராசனம், மலாசனம், தண்டாசனம், விருக்ஷாசனம் போன்ற யோகாசனங்கள் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்தக்கூடியவை. இவை தொடக்க நிலை ஆசனங்கள் என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்துவிடலாம்.
* உப்பில் உள்ளடங்கி இருக்கும் சோடியம் இயற்கையாகவே ரத்த அழுத்த அளவை அதிகரிக்கக்கூடியது. ஒரு டம்ளர் நீரில் சிறிதளவு உப்பு கலந்து பருகினால் ரத்த அழுத்தத்தில் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். அதனால் உப்பை அதிகம் உபயோகிக்கக்கூடாது.
* ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிமுறையாகும். ஏனெனில் நீரிழப்புதான் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதுடன் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் முடியும்.
* அபான வாயு முத்திரை பயிற்சி செய்வதும் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். மோதிர விரலின் நுனி பகுதியும், நடு விரலின் நுனி பகுதியும், பெருவிரலின் நுனி பகுதியை தொடும்படி வைக்க வேண்டும். பின்பு ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைக்க வேண்டும். கட்டை விரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையிலேயே சிறிது நேரம் வைத்திருந்து பயிற்சி செய்ய வேண்டும். இந்த முத்திரையை குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது செய்வது சிறந்த பலனை தரும். நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.
* பிராணாயாமம் என்பது யோகா பயிற்சியின் ஒரு அங்கமான மூச்சு பயிற்சியாகும். ஹைப்பர்டென்ஷன் எனப்படும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
* உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்டென்ஷன் போன்ற பிரச்சினைகளுக்கு மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபடுவது குறைந்த ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.
* ஊட்டச்சத்துக்கள் கொண்ட சமச்சீரான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கியம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க சரியான நேரத்தில் சரியான உணவை உண்ணுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செய்யும்போது உடல் தோரணை சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இவை அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனையின்படி செய்வது அவசியம்.
* வஜ்ராசனம், மலாசனம், தண்டாசனம், விருக்ஷாசனம் போன்ற யோகாசனங்கள் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்தக்கூடியவை. இவை தொடக்க நிலை ஆசனங்கள் என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்துவிடலாம்.
* உப்பில் உள்ளடங்கி இருக்கும் சோடியம் இயற்கையாகவே ரத்த அழுத்த அளவை அதிகரிக்கக்கூடியது. ஒரு டம்ளர் நீரில் சிறிதளவு உப்பு கலந்து பருகினால் ரத்த அழுத்தத்தில் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். அதனால் உப்பை அதிகம் உபயோகிக்கக்கூடாது.
* ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிமுறையாகும். ஏனெனில் நீரிழப்புதான் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதுடன் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் முடியும்.
* அபான வாயு முத்திரை பயிற்சி செய்வதும் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். மோதிர விரலின் நுனி பகுதியும், நடு விரலின் நுனி பகுதியும், பெருவிரலின் நுனி பகுதியை தொடும்படி வைக்க வேண்டும். பின்பு ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைக்க வேண்டும். கட்டை விரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையிலேயே சிறிது நேரம் வைத்திருந்து பயிற்சி செய்ய வேண்டும். இந்த முத்திரையை குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது செய்வது சிறந்த பலனை தரும். நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.
* பிராணாயாமம் என்பது யோகா பயிற்சியின் ஒரு அங்கமான மூச்சு பயிற்சியாகும். ஹைப்பர்டென்ஷன் எனப்படும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
* உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்டென்ஷன் போன்ற பிரச்சினைகளுக்கு மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபடுவது குறைந்த ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.
* ஊட்டச்சத்துக்கள் கொண்ட சமச்சீரான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கியம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க சரியான நேரத்தில் சரியான உணவை உண்ணுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செய்யும்போது உடல் தோரணை சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இவை அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனையின்படி செய்வது அவசியம்.
இந்த கஞ்சியை உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களும், தொப்பையை குறைக்க விரும்புபவர்களும் ஒருவேளை உணவாக எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - 2 கைப்பிடி
புழுங்கலரிசி - 100 கிராம்
பூண்டுப்பல் - 10
மிளகு - 10
வெந்தயம் - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, பூண்டை தட்டி வைக்கவும்.
புழுங்கல் அரிசியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அகத்திக்கீரையை போட்டு அதனுடன் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், வெந்தயம் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
அகத்திக்கீரை வெந்ததும் தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரில் பொடித்த அரிசியை போட்டு வேக வைக்கவும்
கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு வேக வைத்த அகத்திக்கீரை போட்டு கலந்து பரிமாறவும்.
சத்தான சுவையான கஞ்சி ரெடி.
அகத்திக்கீரை - 2 கைப்பிடி
புழுங்கலரிசி - 100 கிராம்
பூண்டுப்பல் - 10
மிளகு - 10
வெந்தயம் - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, பூண்டை தட்டி வைக்கவும்.
புழுங்கல் அரிசியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அகத்திக்கீரையை போட்டு அதனுடன் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், வெந்தயம் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
அகத்திக்கீரை வெந்ததும் தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரில் பொடித்த அரிசியை போட்டு வேக வைக்கவும்
கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு வேக வைத்த அகத்திக்கீரை போட்டு கலந்து பரிமாறவும்.
சத்தான சுவையான கஞ்சி ரெடி.
வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் சரியாக திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிட்டு செயல்படுவது வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் அன்றைய நாளில் என்னென்ன வேலைகளையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் நிறைய பேர் உண்டு. மறுநாளில் முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்து இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் சரியாக திட்டமிடுவார்கள்.
முந்தைய நாள் மாலையிலோ, இரவிலோ தூங்க செல்வதற்கு முன்பு அடுத்த நாளுக்காக தங்களை தயார்படுத்திவிடுவார்கள். அதன் காரணமாக இரவில் நிம்மதியாக தூங்கி எழுந்து காலையில் திட்டமிட்டபடியே பணிகளை மேற்கொள்ள தொடங்குவார்கள். அப்படி திட்டமிட்டு செயல்படுவது வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
அடுத்த நாளுக்கு திட்டமிடுங்கள்: காலையில் எழுந்ததும் தொய்வின்றி அன்றைய நாளை தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். காலையில் உடுத்தும் ஆடையை தேர்ந்தெடுப்பது, காலை உணவுக்கான மெனுவை தீர்மானிப்பது, முன்கூட்டியே முடிக்க வேண்டிய பணி எது? கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய பணி எது? எந்த பணியை எப்போது செய்து முடிக்கலாம்? என திட்டமிட வேண்டும். இப்படி அடுத்த நாளில் செய்ய வேண்டிய பணிக்காக சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.
மது-உணவு பழக்கம்: இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிடவும் கூடாது. மது மற்றும் தவறான உணவு பழக்கம் உடலின் உயிர் கடிகாரத்தை தொந்தரவு செய்துவிடும். தூக்கமின்மை, கவலை மற்றும் கனவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக தூக்கத்தின் அளவு குறையும். உடல் இயக்க செயல்திறனும் பாதிப்படையும்.
இரவில் தியானம் செய்யுங்கள்: தூங்க செல்வதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள். தினமும் அப்படி செய்துவந்தால் தூக்க சுழற்சியில் வித்தியாசத்தை உணர்வீர்கள். படுக்கை நேர தியானம், மனம் ஓய்வெடுக்க உதவும். கவன சிதறலை கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். எண்ணங்களை மேம்படுத்தும். காலையில் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்வோடு எழுந்திருக்கலாம்.
இலக்குகள்- முன்னுரிமை: அடுத்த நாளுக்கான திட்டங்களை வகுக்கும்போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துவிட வேண்டும். அதனை செய்து முடிப்பதற்கு இலக்கையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் திட்டமிட்ட நேரத்திற்குள் பணியை முடித்தாக வேண்டிய உந்துதலுடன் துரிதமாக செயல்பட முடியும். அதேவேளையில் சரியான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய, சாத்தியமான இலக்குகளை அமைக்க வேண்டும்.
காலையில் எழுந்திருக்கும் நேரம்: இரவில் திட்டங்களை வகுத்திருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது காலையில் கூடுதல் நேரம் கிடைப்பதற்கு வழிவகுக்கும். நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடித்துவிடலாம். அவசர, அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் எழாது. அதிகாலையில் எழுந்திருப்பதன் மூலம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
தூக்கத்திற்கு உகந்த சூழல்: நம்மில் பலர் இரவில் நன்றாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். பெரும்பாலும் ஏதாவதொரு விஷயத்தை சிந்தித்த படியே இரவை கழிக்கிறோம். திடீர் விழிப்பு வந்த பிறகு எதைப் பற்றியாவது யோசித்து தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க படுக்கையறையை தூங்குவதற்கு உகந்த சூழலுக்கு மாற்றுங்கள். இரவில் நன்றாக தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிப்பது படைப்பாற்றலை மேம்படுத்தும். செய்யும் வேலையின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். அதனால் இரவில் போதுமான அளவு தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
முந்தைய நாள் மாலையிலோ, இரவிலோ தூங்க செல்வதற்கு முன்பு அடுத்த நாளுக்காக தங்களை தயார்படுத்திவிடுவார்கள். அதன் காரணமாக இரவில் நிம்மதியாக தூங்கி எழுந்து காலையில் திட்டமிட்டபடியே பணிகளை மேற்கொள்ள தொடங்குவார்கள். அப்படி திட்டமிட்டு செயல்படுவது வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
அடுத்த நாளுக்கு திட்டமிடுங்கள்: காலையில் எழுந்ததும் தொய்வின்றி அன்றைய நாளை தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். காலையில் உடுத்தும் ஆடையை தேர்ந்தெடுப்பது, காலை உணவுக்கான மெனுவை தீர்மானிப்பது, முன்கூட்டியே முடிக்க வேண்டிய பணி எது? கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய பணி எது? எந்த பணியை எப்போது செய்து முடிக்கலாம்? என திட்டமிட வேண்டும். இப்படி அடுத்த நாளில் செய்ய வேண்டிய பணிக்காக சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.
மது-உணவு பழக்கம்: இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிடவும் கூடாது. மது மற்றும் தவறான உணவு பழக்கம் உடலின் உயிர் கடிகாரத்தை தொந்தரவு செய்துவிடும். தூக்கமின்மை, கவலை மற்றும் கனவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக தூக்கத்தின் அளவு குறையும். உடல் இயக்க செயல்திறனும் பாதிப்படையும்.
இரவில் தியானம் செய்யுங்கள்: தூங்க செல்வதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள். தினமும் அப்படி செய்துவந்தால் தூக்க சுழற்சியில் வித்தியாசத்தை உணர்வீர்கள். படுக்கை நேர தியானம், மனம் ஓய்வெடுக்க உதவும். கவன சிதறலை கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். எண்ணங்களை மேம்படுத்தும். காலையில் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்வோடு எழுந்திருக்கலாம்.
இலக்குகள்- முன்னுரிமை: அடுத்த நாளுக்கான திட்டங்களை வகுக்கும்போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துவிட வேண்டும். அதனை செய்து முடிப்பதற்கு இலக்கையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் திட்டமிட்ட நேரத்திற்குள் பணியை முடித்தாக வேண்டிய உந்துதலுடன் துரிதமாக செயல்பட முடியும். அதேவேளையில் சரியான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய, சாத்தியமான இலக்குகளை அமைக்க வேண்டும்.
காலையில் எழுந்திருக்கும் நேரம்: இரவில் திட்டங்களை வகுத்திருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது காலையில் கூடுதல் நேரம் கிடைப்பதற்கு வழிவகுக்கும். நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடித்துவிடலாம். அவசர, அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் எழாது. அதிகாலையில் எழுந்திருப்பதன் மூலம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
தூக்கத்திற்கு உகந்த சூழல்: நம்மில் பலர் இரவில் நன்றாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். பெரும்பாலும் ஏதாவதொரு விஷயத்தை சிந்தித்த படியே இரவை கழிக்கிறோம். திடீர் விழிப்பு வந்த பிறகு எதைப் பற்றியாவது யோசித்து தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க படுக்கையறையை தூங்குவதற்கு உகந்த சூழலுக்கு மாற்றுங்கள். இரவில் நன்றாக தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிப்பது படைப்பாற்றலை மேம்படுத்தும். செய்யும் வேலையின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். அதனால் இரவில் போதுமான அளவு தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
உடல் பருமன் பிரச்சினையை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது கடுமையான நோய் அபாயத்தை குறைக்கும். சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும். உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் பருமன் கொண்ட குழந்தைகள் சக குழந்தைகளுடன் விளையாடுவதற்கோ, பிற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கோ சிரமப்படுவார்கள்.
காலை (எழுந்ததும்):
பாதாம் பருப்பு-5, வால்நெட்-2, இரவில் ஊறவைத்த உலர் அத்திப்பழம் - 1 சாப்பிடலாம்.
காலை உணவு:
உப்புமா, தோசை அல்லது இட்லியுடன் இரண்டு வேகவைத்த முட்டைகள் சாப்பிடலாம். 100 கிராம் பன்னீரும் சாப்பிட வேண்டும்.
மதிய உணவு:
சப்பாத்தியுடன் பருப்பு, காய்கறி கலந்த குருமா தயாரித்து சாப்பிடலாம். சிறிதளவு கோழி இறைச்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரும் உட்கொள்ளலாம்.
மதிய உணவுக்கு பின்:
சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.
மாலை:
மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். மசாலா பூரியும் ருசிக்கலாம். சென்னா மசாலாவும் சாப்பிடலாம். எலுமிச்சை, புதினா கலந்த ஜூஸ் தயாரித்தும் பருகலாம்.
இரவு உணவு:
காய்கறிகள் சேர்க்கப்பட்ட புலாவ் தயாரித்து சாப்பிடலாம். காய்கறிகளை வறுத்து சாலட்டாகவும் ருசிக்கலாம். அரிசி சாதத்தில் காராமணி குழம்பு ஊற்றி ருசிக்கலாம்.
தூங்கச் செல்வதற்கு முன்பு:
150 மி.லி. பாலில் ஏலக்காய், குங்குமப்பூ கலந்து பருகலாம்.
இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் பருமன் கொண்ட குழந்தைகள் சக குழந்தைகளுடன் விளையாடுவதற்கோ, பிற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கோ சிரமப்படுவார்கள்.
காலை (எழுந்ததும்):
பாதாம் பருப்பு-5, வால்நெட்-2, இரவில் ஊறவைத்த உலர் அத்திப்பழம் - 1 சாப்பிடலாம்.
காலை உணவு:
உப்புமா, தோசை அல்லது இட்லியுடன் இரண்டு வேகவைத்த முட்டைகள் சாப்பிடலாம். 100 கிராம் பன்னீரும் சாப்பிட வேண்டும்.
மதிய உணவு:
சப்பாத்தியுடன் பருப்பு, காய்கறி கலந்த குருமா தயாரித்து சாப்பிடலாம். சிறிதளவு கோழி இறைச்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரும் உட்கொள்ளலாம்.
மதிய உணவுக்கு பின்:
சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.
மாலை:
மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். மசாலா பூரியும் ருசிக்கலாம். சென்னா மசாலாவும் சாப்பிடலாம். எலுமிச்சை, புதினா கலந்த ஜூஸ் தயாரித்தும் பருகலாம்.
இரவு உணவு:
காய்கறிகள் சேர்க்கப்பட்ட புலாவ் தயாரித்து சாப்பிடலாம். காய்கறிகளை வறுத்து சாலட்டாகவும் ருசிக்கலாம். அரிசி சாதத்தில் காராமணி குழம்பு ஊற்றி ருசிக்கலாம்.
தூங்கச் செல்வதற்கு முன்பு:
150 மி.லி. பாலில் ஏலக்காய், குங்குமப்பூ கலந்து பருகலாம்.
முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
எல்லா கர்ப்பத்தையும் உறுதி செய்கிற முதல் அறிகுறியான மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.
சில பெண்களுக்கு ரத்தப்போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். அரிதாக சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட அளவில் மிகப் பெரியதாக இருக்கும்.
அதாவது மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.
தீர்வுகள்...
ஹெச்.சி.ஜி ஹார் மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகை இருக்கிறதா எனப் பார்க்க சிபிசி (complete blood count test) சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப் பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். அடுத்து வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப் பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.
கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது.... கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
ஆனால் அதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பக் கட்டியானது புற்று நோயாக மாறுமா என்பதை தொடர் கண்காணிப்பு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளை 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்தாலும் 2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி சோதனை செய்து அதன் அளவைப் பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் அதை சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி அளவானது 100க்கும் கீழே வரும்.
அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும். 5க்கும் கீழே வந்துவிட்டால் பிறகு மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.
ஹெச்.சி.ஜியின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது திடீரென அதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் அதை உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம்.
சில பெண்களுக்கு ரத்தப்போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். அரிதாக சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட அளவில் மிகப் பெரியதாக இருக்கும்.
அதாவது மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.
தீர்வுகள்...
ஹெச்.சி.ஜி ஹார் மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகை இருக்கிறதா எனப் பார்க்க சிபிசி (complete blood count test) சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப் பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். அடுத்து வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப் பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.
கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது.... கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
ஆனால் அதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பக் கட்டியானது புற்று நோயாக மாறுமா என்பதை தொடர் கண்காணிப்பு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளை 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்தாலும் 2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி சோதனை செய்து அதன் அளவைப் பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் அதை சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி அளவானது 100க்கும் கீழே வரும்.
அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும். 5க்கும் கீழே வந்துவிட்டால் பிறகு மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.
ஹெச்.சி.ஜியின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது திடீரென அதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் அதை உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம்.
சருமத்தின் அழகை பாதுகாக்க சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.
வெள்ளரிக்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குகிறது. வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல. சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.
சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகியவை நீங்கும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படும். மேலும் சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.
வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
வெள்ளரிக்காயின் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
சருமத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அதனுடன் தோல் சீவிய ஆப்பிள் மற்றும் வெள்ளரி கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பிரகாசிக்கும்.
சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகியவை நீங்கும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படும். மேலும் சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.
வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
வெள்ளரிக்காயின் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
சருமத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அதனுடன் தோல் சீவிய ஆப்பிள் மற்றும் வெள்ளரி கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பிரகாசிக்கும்.






