search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் போலி தகவல்கள்
    X
    சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் போலி தகவல்கள்

    சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் போலி தகவல்கள்

    கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள், வதந்திகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 138 நாடுகளில் இருந்து 9,657 தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவல்களின் உண்மை தன்மையை 94 நிறுவனங்கள் சரிபார்த்திருக்கின்றன. அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகளில் இந்தியாவில்தான் 18.7 சதவீதம் பதிவாகி இருக்கிறது.

    சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுபடி, தெலுங்கானா மாநிலத்தில் தவறான தகவல்கள் பகிரப்பட்டதாக 273 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 118 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 166 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நகரங்களை பொறுத்தவரை ஐதராபாத்தில் 208 வழக்குகளும், அதனை தொடர்ந்து சென்னையில் 42, டெல்லியில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்திய தண்டணை சட்டம் 505-ன்படி, மதம், இனம், பிறந்த இடம், மொழி, சாதி அல்லது சமூகம், பகைமை, வெறுப்பு, இன உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வதந்தி அல்லது செய்திகளை, தகவல்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராரதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது. ஆனாலும் போலி தகவல்கள் பரப்பப்படுவது குறைந்தபாடில்லை. கொரோனா தொடர்பாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியா தான், கொரோனா பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை வெளியிடும் முக்கியமான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. போலி செய்திகள் பரவுவது இந்தியாவில் 214 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    ‘‘சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படும் பிரச்சினையை நிவர்த்தி செய்வது கடினமான பணியாகும். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமயத்தில் போலி தகவல்கள் உலவுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மோசமான விளைவுகளையும் உண்டாக்கும்’’ என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 800 பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
    Next Story
    ×