என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கர்ப்ப காலத்தில் உடலை அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் கூட நடைபயிற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.
    பொதுவாகவே வயது பேதமில்லாமல் அனைவரையும் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்துகிறார்கள். மருத்துவர்கள் மட்டும் அல்லாமல் உடல் நலனில் அக்கறை கொண்டிருக்கும் பலரும் கூறுவதும் இதுதான்.

    வீட்டில் செய்யும் வேலைகளே தலைக்கு மேலே இருக்கிறது. இதில் தனியாக உடல்பயிற்சி வேறா என்று புலம்பும் இல்லத்தரசிகளாக இருக்கட்டும். காலையில் எழுந்ததில் இருந்து ஆஃபிஸ்க்கு போய் வருவதற்குள் முழி பிதுங்கிவிடுகிறது இதில் எங்கிருந்து உடற்பயிற்சி என்று சலித்துக்கொள்ளும் ஆண்களாக இருக்கட்டும், ஏற்கனவே இருக்கும் உடல்சோர்வு போதாமல் கருவுற்ற காலம் இன்னும் சோர்வை அதிகரித்திருக்கிறது இந்நிலையில் உடற்பயிற்சி வேறா என்றா கேட்கும் கர்ப்பிணி பெண்ணாக இருக்கட்டும் அனைவரது ஆரோக்கியமும் உடற்பயிற்சியில் தான் அடங்கியிருக்கிறது.

    பிரசவக் காலத்தை எதிர்நோக்கும் அனைத்து பெண்களும் சற்று பின்னோக்கிய நமது மூதாதையர் காலத்தை எடுத்துக் கொண்டால் வியப்பாக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீட்டில் கூடுதலாக கவனிப்பு இருந்தாலும் வேலையைப் பொறுத்தவரை அவர்களுக்கான பொறுப்புகளை அதிகரித்துவிடுவார்கள்.

    இப்போது போன்று நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் காலம் அப்போது இல்லை என்பதால் அவர்கள் பிரத்யேகமாக எந்தவிதமான உடற்பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அன்றாட வீட்டு வேலைகளை விடாமல் செய்துவந்தார்கள். வீட்டை பெருக்கி துடைப்பதும், துணியை அடித்து துவைப்பதும், தண்ணீர் குடம் சுமப்பதும், வாசலை கூட்டி சுத்தம் செய்வதும் அவர்களுக்கு உடற்பயிற்சியோடு கூடிய வேலையாகிவிட்டது.

    எப்போதும் இயங்கிகொண்டிருக்கும் அவர்களால் ஆரோக்கியமாக இருந்து ஆரோக்கியமான குழந்தையை அலட்டல் இன்றி பெற்றெடுக்கவும் முடிந்தது.

    பெரும்பாலான பெண்கள் பணிபுரிந்துவருகிறார்கள். அதனால் வீட்டில் இருக்கும் வேலையைப் பார்த்து அலுவலகத்தில் வேலை பார்த்தாலே உடல் உழைப்பு தான் உடலுக்கு ஏற்றபயிற்சிதான் என்று நினைக்கிறார்கள் ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுத்து மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை எல்லாம் உடல் உழைப்பில் சேராது. மாறாக மன உளைச்சலையே அதிகரிக்கும்.

    கருவுற்ற ஆரம்ப காலத்தில் உடல் சோர்வு மனசோர்வு எல்லாம் இணைந்து இறுதியில் படுக்கையில் சுருட்டி விழவே செய்யும். இந்த காலத்தில் உண்பதும், உறங்குவதும் கூட குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தான் என்னும் போது உடற் பயிற்சி சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் பேறுகாலம் முழுவதும் உடலை வறுத்தும் பயிற்சிகள் தேவையில்லை. வாக்கிங், யோகா, உடலில் சற்று தெம்பு இருக்குமானால் நீச்சல் போன்ற ஆரம்ப பயிற்சிகளில் ஈடுபடலாம்.

    கருவுற்ற முதல் ஐந்து மாத காலங்களுக்கு மசக்கை வாந்தி, உடல் சோர்வு, பசியின்மை ஒருவித எரிச்சல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகான கால கட்டத்தில் அதாவது ஐந்து மாதங்களுக்கு பிறகு ஆறாவது மாதத்தில் சிறிய பயிற்சிகளை மீண்டும் தொடங்கலாம். பயிற்சியுடன் மூசுச் பயிற்சி போன்றவையும் சிறந்தது.

    சுயமாக எந்த பயிற்சியையும் மேற்கொள்ளலாமல் அனுபவமிக்க உடற்பயிற்சியாளரின் உதவியுடன் பிரசவகாலத்தில் பயன்படும் உள் உறுப்புகள் சீராக செயல்படும் விதமாக அவை பலமடையும் விதமான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. இதனால் பிரசவக்காலத்தில் தசைகள் எளிதாக உதவும். குறிப்பாக தலைப்பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக இது போன்ற பயிற்சியை செய்ய வேண்டும்.

    பயிற்சி என்றதும் ஜிம்முக்கு போக வேண்டும். ஓட வேண்டும் ட்ரெட் மில்லில் நடக்க வேண்டும். குதிக்க வேண்டும் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். சுருக்கமாக சொன்னால் நாம் உடலை வளைத்து செய்யும் வீட்டு வேலைகளை செய்யாமல் போனதன் விளைவு தான் இன்று உடலுக்கு தனியாக பயிற்சி கொடுக்க வேண்டியதாக உள்ளது. எனினும் எளிமையான பயிற்சிகள் போதுமானது.

    மனதுக்கு அமைதி தரும் யோகா உடலுக்கு வலுவயும் தரும் என்பதால் யோகா பயிற்சி நல்லது என்கிறார்கள். மேலும் உடலை களைப்படைய செய்யாத உடல் பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

    உடற்பயிற்சியில் முக்கியமானதாக நடைபயிற்சியை சொல்வார்கள்.இது எளிய பயிற்சியாக அதிகமாக பயன் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் சோர்வு காலங்களிலும் நடைபயிற்சி செய்யும் போது சோர்வையும் விரட்டி அடிக்கும். மேலும் பிரசவகாலம் முழுமையும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

    நடைபயிற்சியை இப்போது தான் செய்ய வேண்டும் என்றில்லை. அதிகாலையில் செய்யும் போது அதற்கான பலன் அதிகரிக்கும் அவ்வளவே. அதனால் எப்போது இயலுமோ அப்போது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இரவு நேரங்களில் உணவு உண்டபிறகும் நடைபயிற்சி செய்யலாம். எவ்வளவு நேரம் நடக்கமுடியுமோ அவ்வளவு தூரம்நடக்கலாம்.

    குறைந்தது அரைமணி நேரமாவது நடைபழகுவது முக்கியம். எந்த காரணம் கொண்டு வெறும் வயிற்றில் நடக்க வேண்டாம். பேறுகாலம் நெருங்கும் வரை இதைக் கடைப்பிடிக்கலாம். இறுதி மாதத்தில் நடக்கும் போது மூச்சு வாங்க தொடங்கும் எனினும் நடைபயிற்சியை விடாமல் பொறுமையாக நடக்கலாம்.
    நான் எல்லா வகையிலும் முன்பை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறும்போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும்.
    மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரை சார்ந்தும் அமைகிறது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம் என்று. பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன்பு தன் மேதாவித் தனத்தை காட்டும் மனிதர்கள் மற்றொரு வகை. எண்ணங்களே செயலை தீர்மானிக்கின்றன.

    எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. நல்லதையே நினைக்க வேண்டும் என்பதாக பாட்டிகள் நம் வீட்டில் அடிக்கடி கூறுவதுண்டு.

    நல்லா இருக்கீங்களா...என்ற கேள்வியின் எதிர்வினை பதிலை வைத்து மனிதர்களை இனம் காணலாம். நல்லா இருக்கேன் என்ற பதில் தருபவர்கள் நேர்மறை எண்ணங்களை உடையவர்களாகவும், ஏதோ இருக்கேன் என்ற பதிலை உடையவர்கள் எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களாகவும் அறிந்து கொள்ளலாம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய். ஒவ்வொரு நாளும் தூங்க செல்வதற்கு முன்பு அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள்.

    நான் எல்லா வகையிலும் முன்பை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறும்போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதேபோன்றே இன்று புதிதாய் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என்வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப்பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். அகத்தில் தேவையற்ற குப்பைகளை தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாக தான் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதை பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்குகளை பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள்.

    எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா... என்னும் பாரதியின் நேர் மறை சிந்தனையே எண்ணங்களை வலுவாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாக கடந்து விடும் பக்குவமும் வந்து விட்டாலே வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நல்ல எண்ணங்களை கொண்ட மனிதர்களாக வாழ்வோம். எனவே நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம். எண்ணமது திண்ணமானால் வாழ்க்கையது வண்ணமாகும். எண்ணங்களை வசமாக்கி சிறப்பாக வாழ்வோம்.

    ராஜலட்சுமி, 12-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, கிழவிக்குளம்.
    மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன.
    கல்வியானது நாளுக்கு நாள் மாற்றங்களை கண்டு வருகிறது. அதாவது பழங்காலத்தில் குருகுல கல்வி வழக்கத்தில் இருந்தது. கால மாற்றத்தால் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ., சமச்சீர் கல்வி என நாளுக்கு நாள் மாறி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் கல்வி முறை வந்துள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் மூடப்பட வேண்டிய பள்ளிக்கூடங்கள், முன்கூட்டியே மார்ச் மாத இறுதியிலேயே மூடப்பட்டு விட்டன. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அனைத்து பள்ளிகளும் அறிவித்துள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்போடு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆன்லைன் வகுப்புகள்

    கடந்த கல்வி ஆண்டு முடிவடைந்து விட்டது. கொரோனாவால் இந்த கல்வி ஆண்டில் இன்னமும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆனாலும் மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கி விட்டது. இதற்கு அரசும் பச்சை கொடி காட்டி விட்டது.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. காலையில் வழக்கமாக பள்ளிக்கு செல்வது போன்று மாணவ- மாணவிகள் குளித்து முடித்து சீருடை அணிந்து தனது வீட்டிலேயே செல்போன் அல்லது லேப்-டாப் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.

    மாணவர்கள் உற்சாகம்

    ஆசிரியர்கள் வீடியோ காலில், அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாடம் எடுக்கின்றனர். வகுப்பு முடியும்போது வீட்டு பாடத்தை செய்து விட்டு நாளை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். இது மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த புதுவிதமான வகுப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    ஆனாலும் இந்த கல்வி முறை வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும். ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு இது பொருந்தாது என்றும், வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் சாத்தியப்படும் என்றும், தமிழக மாணவர்கள் படிப்போடு ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள். எனவே நமது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடி வழிகாட்டல் அவசியம். எனவே நமக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒத்து வராது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது. ஆனாலும் கொரோனாவால் ஆன்லைன் வகுப்புகள் தற்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு ஏன்? எதிர்ப்பு எழுகிறது என்பது பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    ஏழை மாணவர்கள்

    ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆசிரியை தேவி:- ஆன்லைன் வகுப்பு என்பது நல்ல திட்டம் தான். இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடத்தின் மீதான கவனம் குறைவாக உள்ளது. ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டுக்கொண்டே பாடம் கவனிக்கின்றனர். நேரில் பாடம் எடுத்தாலே சில மாணவர்கள் கவனிக்க மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பாடங்களை கவனிப்பது இல்லை. வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதாவது கற்றுக்கொண்டால் நல்லதுதான். ஏழை மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் அல்லது லேப்டாப் அவசியமாகிறது. பல ஏழை குடும்பங்களில் இன்னமும் செல்போன், லேப்டாப் அறியாத பொருளாகவே உள்ளது. எனவே ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

    மறவன்குடியிருப்பை சேர்ந்த ஆசிரியர் மைக்கேல்:- கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வாழ் வாதாரத்துக்கே வழியில்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இப்படி இருக்க அறிவு பசிக்கு எவ்வாறு இடம் கொடுக்க முடியும். ஆன்லைன் வகுப்புகள் சில மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பது எப்படி என்பது கூட தெரியாமல் உள்ளனர். அவர்களது பெற்றோருக்கும் ஆன்லைன் வகுப்பு தொடர்பான விவரம் ஓரளவு தெரிந்தால்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். ஒரு மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியரால் மட்டுமே முடியும். ஆன்லைனில் எப்படி மாணவர்களை நல்வழியில் நடத்த முடியும். ஆன்லைன் வகுப்புகளை காட்டிலும் பள்ளிக்கூட வகுப்புகள் தான் சிறந்தது.

    வரவேற்பு

    நாகர்கோவிலை சேர்ந்த பிளஸ்-1 மாணவி சன்மதி:- நான் பிளஸ்-1 படித்து விட்டு, தற்போது விடுபட்ட பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இதற்காக தினமும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறேன். காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். ஆன்லைன் வகுப்பில் பிளஸ்-1 விடுபட்ட தேர்வுக்கும், பிளஸ்-2 பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன. முதலில் பாடம் நடத்தப்படும். பின்னர் அதிலிருந்து வீட்டுப்பாடம் கொடுத்து, படிக்கச் சொல்வார்கள். மேலும் பாடம் தொடர்பாக வீடியோவும் அனுப்புவார்கள். இந்த வீடியோவை டவுன்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம். மேலும் எப்போது தேவை என்றாலும் வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள முடியும். இதனால் ஆன்லைன் வகுப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே சமயம் என்னுடன் படிக்கும் பலரிடம் செல்போன் இல்லை. எனவே அவர்களால் ஆன்லைன் வகுப்பு மூலம் கற்றுக்கொள்ள முடியவில்லை.

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கோகிலா:- என் மகன் கோணத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறான். மகள் பிளஸ்-1 வகுப்பில் விடுபட்ட தேர்வு எழுத இருக்கிறாள். 2 பேருமே தற்போது ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். மகனுக்கு தினமும் 3 வகுப்புகள் நடக்கின்றன. அவனுக்கு ஆன்லைனில் தேர்வும் நடக்கிறது. மகளுக்கு பிளஸ்-1 விடுபட்ட தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் படிப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறார்கள். வீட்டில் வெகு நாட்களாக சும்மா இருக்கும் போது மாணவர்களின் கல்வி திறன் குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு நன்மைதான். எனவே ஆன்லைன் வகுப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டும்.

    இன்னும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடுமுறையில் நேரத்தை வீணாக்குவதற்கு பதில் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று கூறினாலும், இன்னும் லேப்- டாப், ஆன்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத வீடுகள் எத்தனையோ உள்ளன. அவர்களுக்கு எல்லாம் இந்த ஆன்லைன் வகுப்புகள் எட்டாக்கனிதான் என்றும் பெற்றோர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதிகாரி

    இதுபற்றி கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் 130 அரசு பள்ளிகள் உள்ளன. 133 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 204 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 10 முதல் 15 அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தற்போதும் தொடர்கிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டால் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அதிலும் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு உத்தரவிட்டால் ஜூன் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்“ என்றார்.
    காலை உணவில் சிலவற்றினை எடுத்துக்கொள்வதும் சிலவற்றினை தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது அவற்றில் சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.
    காலை உணவில் சிலவற்றினை எடுத்துக்கொள்வதும் சிலவற்றினை தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது அவற்றில் சில...

    காலை உணவில் ஜூஸ் அருந்துவது பலருக்கு எளிதாக இருக்கின்றது. அதுவும் ரெடிமேடாக வாங்கப்படும் ஜூஸ் இன்னமும் எளிதாக இருக்கின்றது. இதனை தவிர்த்து பழங்களை வெட்டி சில துண்டுகள் காலை உணவில் எடுத்துக்கொள்வது நார்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் இவை நன்கு கிடைக்கச்செய்யும். வேண்டுமெனில் காய்கறி ஜூஸ் செய்து குடிக்கலாம்.

    ஓட்ஸ் கார்போஹைட்டிரேட், புரதசத்து கொண்டது. உடனடி சக்தியும் நீண்ட நேர சக்தியும் கொடுக்கக்கூடியது. நார்சத்து கொண்டது. அதனால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். ஜீரண சக்தி சீராய் இருக்கும்.

    உங்களுக்கு அசிடிடி பிரச்சினை, வயிற்றில் புண், போன்ற பிரச்சினைகள் இருந்தால் காலை உணவில் சமைக்காத தக்காளியினை தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் இது அசிடிடியினை அதிகரிக்கச்செய்யும்.

    முட்டை சிறந்த புரதம், நல்ல கொழுப்பு கொண்டது. நன்கு சக்தி அளிக்கக் கூடியது. காலை உணவிற்கு சிறந்தது.

    தர்பூசணி சிறந்த பழ உணவு. உடலுக்கு தேவையான நீர்சத்து தருவதோடு நச்சு நீக்குதல், புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் இவற்றில் இருந்து காத்தல் போன்றவற்றுக்கு தர்பூசணி சிறந்த உணவாக அமையும்.

    காலையில் டீ, காபி தவிர்ப்பது நல்லது. இதனை காலை உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளலாம்.

    சிறிது பாதாம் போன்ற கொட்டை வகைகளை காலை உணவிற்கோ அல்லது 11 மணி உணவிற்கோ எடுத்துக் கொள்வது சிறந்த புரதத்தினை அளிக்கும்.

    * அதிகம் சர்க்கரை கலந்த உணவினை தவிர்த்து விட வேண்டும்.

    * பப்பாளி பழம் காலை உணவில் சேர்த்துக் கொள்ள சிறந்தது.

    * கேக் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும்

    * முழு தானிய உணவுகள் நல்லது.

    * தயிர் மிகவும் நல்லது. புரதம் நிறைந்தது. ஜீரணத்திற்கு உதவுவது. இதில் பழங்கள். கொட்டைகள் சேர்த்து உண்ணலாம்.
    குழந்தைகளுக்கு ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பத்தே நிமிடத்தில் கோகோ பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
    தேவையான பொருட்கள்

    கோதுமை பிஸ்கட் - 12
    சுண்டக்காய்ச்சிய பால் -     3 தேக்கரண்டி
    கோகோ தூள் -     3 தேக்கரண்டி
    கண்டென்ஸ்ட் மில்க் - தேவையான அளவு
    முந்திரி - விருப்பத்திற்கு ஏற்ப


    கோகோ பர்ஃபி

    செய்முறை

    மிக்ஸி ஜாரில் பிஸ்கெட்டுகளைப் போட்டு பவுடராக பொடித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தல் பொடித்த பிஸ்கெட் போட்டு அதோடு கோகோ பவுடரை சேர்த்து நன்றாக கலந்துகொள்வும்.

    அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க்கை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதில் எண்ணெய் தடவிய பின்னர் நன்றாக பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.

    அடுத்து ஒரு கட்டரை எடுத்து உங்களுக்கு விருப்பமான ஷேப்ல வெட்டிக் கொள்ளவும்.

    கட் பண்ணின பர்ஃபிகளை ஒரு பிளேட்டுக்கு மாற்றிப் அதன் மேலே முந்திரி பருப்புகளை தூவி பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்திருந்த பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    சூப்பரான கோகோ பர்ஃபி ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன.

    ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி என்ற பேதம், பணக்காரன், ஏழை என்ற பேதம், படித்தவன், படிக்காதவன் என்ற பேதம், மொழிகளுக்குள் பேதம், மண்ணுக்குள் பேதம் என்று கூறிக்கொண்டே போகலாம். வித்தியாசம் என்று பொருள் கொண்ட பேதமானது, நம் மக்களால் ஒருவித வெறுப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. காலம் காலமாக எந்த ஒரு பேதமாக இருந்தாலும், அதை ஒழிக்க வேண்டும், அதை உருவாக்கிக்கொண்டிருப்பவர்களின் கருத்தை மாற்றி அவர்களை திருத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் சரியான கருத்து என்று வைத்துக்கொள்வோம். இம்மாதிரியான முற்போக்கு கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது. இன்று ஒரு கூட்டம் திருந்துகிறது என்றால் நாளை வேறு ஒரு கூட்டம் உருவாகும். சாதியை ஒழிப்போம், மதத்தை ஒழிப்போம், முதலாளித்துவத்தை ஒழிப்போம் என்று போராடிக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும் இன்னும் எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருக்கப்போகிறோம்.

    இவை அனைத்தும் மற்றவர்களை திருத்தும் செயல் என்று பார்த்தால், பேதத்திற்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்னைவிட நீ தாழ்ந்தவன் என்று ஒருவன் கூறினால், உடனே மனம் நொந்து தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாதலை நிறுத்த வேண்டும். பார்க்கும் வேலையில் என்னை விட நீ தாழ்ந்தவன் என்றாலும், இனத்தில் நீ என்னைவிட தாழ்ந்தவன் என்றாலும், பணத்தில் நீ என்னை விட தாழ்ந்தவன் என்றாலும், செருக்கோடு எண்ணுங்கள், “நீ யார் என்னை தாழ்ந்தவன் என்று கூறுவதற்கு?” என்று. அவர்கள் உயர்ந்தவர்கள், நாங்கள் தாழ்ந்தவர்கள். அதனால் நாங்கள் போராடுகிறோம் என்று கூறி பல வருடங்களாக பேதத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் தான் பெருமை, கவுரவம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணக்கூடாது.

    தான் இருக்கும் இடமும், பார்க்கும் வேலையும், பேசும் மொழியும், முன்னோர்கள் வழி வந்த பரம்பரையும் மிகச் சிறந்தது என்று ஒவ்வொருவரும் மனதில் நினைக்கத் தொடங்கவேண்டும். அதை விடுத்து கொஞ்சமும் தேவையற்ற பேதத்தினால் உருவான தாழ்வு மனப்பான்மையை மனதிற்குள் வளர்க்கக்கூடாது. இதற்கான எடுத்துக்காட்டாக மேலை நாட்டு மக்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். அங்கே மத பேதமும், தொழில் பேதமும், இதர பேதங்களும் இல்லை என்று கூறவில்லை. அங்கேயும் இதுபோன்ற வேற்றுமை உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும். அங்கு முதலாளியானாலும், தொழிலாளியானாலும், ஆணானாலும், பெண்ணானாலும், யாராக இருந்தாலும் சக மனிதர்கள்தான். ஒருவரை விட ஒருவர் பெரியவர் இல்லை என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களிடத்தில் காணப்படும்.

    ஆக, என்று நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேற்றுமை உணர்வினால் தன்னை இழிவுபடுத்துபவர்களுக்காக முக்கியத்துவம் அளிக்காமல், அவர்கள் முன்பு வாழ்க்கையில் முன்னேறி வாழ்ந்து காட்டுதலே பெருமை சேர்க்கும் செயலாகும். முன்னேறுவதற்கான பாதையை உருவாக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே முட்கள் நிறைந்து காணப்படும் சகதியான பாதைக்கு, தான் போவது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் சேர்த்துக்கொண்டு வீணாதலை நிறுத்த வேண்டும். நான் முட்களை நீக்கி அந்த பாதையில் பூக்களை நிரப்புவேன் என்று போர்க்கொடி தூக்கிக்கொண்டு இருந்தால், தன்னுடைய நேரமும், உழைப்பும் வீணாகுமே தவிர முன்னேற்றத்தை பார்ப்பது மிகவும் கடினமானது.

    உனக்கான தனித்துவ பாதையை உருவாக்கி உன்னைச் சேர்ந்த மக்களிடத்தில் நீ கொடுத்தாயானால், அந்த நல்வழியை பின்பற்றி ஒரு பெரும் அமைதியான சமூகமே உருவாதலை கட்டாயம் பார்க்க முடியும். நான் பெரியவன் என்று ஒருவன் கூறினால், நான் உனக்கு எந்த விதத்திலும் சிறியவன் இல்லை என்பதை வாயால் கூறுவதை காட்டிலும், செயலால் காட்டுவதே தனக்குத்தானே உற்சாகமூட்டும் வழியாகும். வேற்றுமையை உடைத்து முன்னேறி வாழ்ந்து காட்டும் கதையம்சமுள்ள திரைப்படங்களைப் பார்த்து விசில் அடித்து கொண்டாடி மகிழும் மக்களால், தங்களுடைய வாழ்வில் அதுபோன்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுவதில்லை.

    தான் முன்னேறுவதை வேறு ஒருவன் எவ்வித பேதத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இக்காலகட்டத்தில் முன்பைவிட சூழலும், வாய்ப்புகளும் நிறைய உள்ளன. அதை நல்ல முறையில் பயன்படுத்தி தனக்கென தனியான ஒரு அடையாளத்தை அனைவரும் மேற்கொள்ள தொடங்க வேண்டும். கூட்டத்தினரோடு இருக்கும்பொழுது எவருக்கும், நீ தாழ்ந்தவன் என்று பிறர் சொல்லும் சொல்லைக் கேட்டு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதில்லை. ஏனென்றால் என்னைப் போன்று இங்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது. நான் தனி ஆள் அல்ல என்ற எண்ணமும், பலமும் தானாக உருவாகிறது. ஆனால் இதே சூழ்நிலை தனிப்பட்ட முறையில் நிகழும் பொழுது பலவீனமாகி மனம் நொந்து துவண்டு போகும் நிலை ஏற்படுகிறது.

    அங்கு தான் நிலை தடுமாறாமல், சூழ்நிலைகளால் இழுக்கப்பட்டு தைரியம் இழக்காமல் திமிரோடு நிற்கவேண்டும். முன்னேற்றம் ஒன்றே நான் பெரியவன் என்று காட்டும் என்ற வைராக்கியத்தை மனதில் கொள்ள வேண்டும். இதையே வேதமாக ஏற்று பின்பற்ற தொடங்க வேண்டும். எந்த இடத்தில் கூனிக்குறுகி மனம் புண்பட்டதோ, அதே இடத்தில் தலைநிமிர்ந்து என்னுடைய நிலை இதுதான் என்று மிடுக்கோடு கூற வேண்டும். பிறருடைய பேதச் செருக்கை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டிலும், தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை அறவே ஒழித்து சமூகத்தில் நிற்பதே மாபெரும் வெற்றியாக கருதப்படும். பேதம் தீக்குச்சி என்றால், உரசியவுடன் பற்றிக்கொள்ளும் காய்ந்த சருகல்ல நாம். முளைத்து, துளிர்த்து, செழித்து, வளர்ந்து, மரமாகும் விதை நாம். வளர்வோம். நிமிர்வோம்.
    குண்டாக இருப்பது ஆபத்து என்ற எண்ணம் மனதில் பதிய வைக்கப்பட்டுவிட்டதால் பலருக்கும் தங்களது உடல் பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது.
    ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை‘ என்பார்கள். அதேபோல் மனிதர்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உடலமைப்பை கொண்டிருக்கிறார்கள். உயரம் குரல் எடை தலைமுடி நிறம் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் ஆரோக்கியமான நபர் என்பதை உருவத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. ஓரளவு கணிக்கலாம் அவ்வளவுதான். வி‌‌ஷயத்துக்கு வருவோம். உடல் பருமன் என்பது தவிர்க்க வேண்டியது பல நோய்களை வரவழைக்கக் கூடியது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி வருகிறார்கள் என்பது உண்மைதான். கட்டான உடலமைப்பை பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்ட மருத்துவ ஆலோசனை எதிர்மறை பிரசாரமாக சமீபகாலங்களில் மாறிவிட்டது.

    குண்டாக இருப்பது ஆபத்து என்ற எண்ணம் மனதில் பதிய வைக்கப்பட்டுவிட்டதால் பலருக்கும் தங்களது உடல் பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது. எடையைக் குறைக்க வேண்டும் என்று சாப்பிடாமல் இருப்பது பிட்னஸ் பற்றிய புரிதல் இல்லாமலேயே உடற்பயிற்சிகள் செய்ய முயற்சிப்பது மன உளைச்சலுக்கு ஆளாவது என்று தற்போது பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமா? குண்டாக இருப்பவர்கள் எல்லோருமே நோயாளிகளா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்களும் இல்லை. குண்டாக இருப்பவர்கள் எல்லாரும் நோயாளிகளும் இல்லை. உடல் பருமனாக இருப்பவர்களும் சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அவர்களால் நன்றாக மூச்சுவிட முடியும். உடலும் நல்ல வலிமை மற்றும் நெகிழ்ச்சித் தன்மையோடு இருக்கும். மூட்டுவலி இடுப்புவலி முதுகு வலி என உடலில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். ஏனெனில் குழந்தை பருவத்திலிருந்தே அவர்களது உடல் பருமனுக்கேற்றவாறு உடல் தகவமைத்து கொண்டுவிடும். எனவே குண்டாக இருப்பது பிரச்சினை அல்ல. ஒல்லியாக இருந்துவிட்டு குண்டாக ஆரம்பிக்கும்போதுதான் அது மருத்துவர்கள் சொல்வதுபோல் கவனத்துக்குரியதாகிறது.

    ஒல்லியாக இருப்பவர்கள் உடலிலும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். நன்றாக வளைந்து நெளிந்து வேலை செய்ய முடியாது. மூச்சு வாங்கும். நாம்தான் ஒல்லியாக இருக்கிறோமே உடற்பயிற்சி உணவுகட்டுப்பாடு எல்லாம் நமக்கு எதற்கு என்ற மனநிலை. சிறு வயதில் விளையாட்டு நடனம் என சுறுசுறுப்பாக இருந்துவிட்டு பருவ வயதிற்குப்பிறகு திடீரென்று அதையெல்லாம் நிறுத்திவிட்டு இயக்கமே இல்லாத நிலைக்கு மாறும்போது உடலில் கொழுப்பு சேர்ந்து எடைபோட்டு விடுவார்கள்.

    25 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் மெட்டபாலிச விகிதம் 3 சதவீதம் கூடிக்கொண்டே போகும். இந்த நேரத்தில்தான் இயக்கமற்ற வாழ்க்கை முறை அதிக கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்வது நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சாப்பிடுவது மதுப்பழக்கம் போன்ற எல்லாமும் சேர்ந்து கொண்டு அவர்களை அறியாமலேயே எடை கூடிவிடுகிறது.
    அரிசி மாவு சருமத்துக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
    அரிசியை கொண்டு அழகுபடுத்தி கொள்ளலாம் என்பது வீட்டிலிருந்து அழகு படுத்தி கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் வரபிரசாதம். இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம். அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    காய்ச்சாத பால் / பன்னீர் - 3 டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்

    அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    பலன்

    முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.

    சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

    அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.

    அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.

    அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.

    விழாக்களுக்கு செல்லும் போது அதிக மேக் அப் பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப் பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு தூங்கும் போது மேக் அப் கலைத்த பிறகு படுக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

    மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும். 
    அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம்.
    முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும் மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்

    முத்தம் என்றவுடனே அதை காமத்தின் குறியீடாக பார்ப்பதே பெரும்பாலோரின் வழக்கம். ஆனால் காமத்தைத் தாண்டி பல உண்மைகளை முத்தங்கள் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கின்றன!

    காதல் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே முத்தங்கள் அனைத்துக்கும் மனஅழுத்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் முத்தங்கள் எப்போதுமே மருத்துவ முத்தங்கள்தான். குழந்தை பிறந்தவுடன் தாயால் தன் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் முத்தம் தாய் சேய் பாசப்பிணைப்பை உறுதி செய்யும்.

    பிள்ளைகள் தந்தைக்கு வழங்கும் முத்தம் தந்தையின் சாட்சியை சொல்லும். காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம்… மனைவி கணவனுக்கு கொடுக்கும் முத்தம்… அனைத்துமே காதல் ஹார்மோனை சுரக்கச் செய்து உறவுகளை பலப்படுத்தக்கூடியவை. உதடுகள் நடுங்க வயதான பாட்டி ஆசைத் தாத்தாவுக்கு பரிமாறும் ’நடுக்கமுத்தம்’ முதிர்ந்த வயதில் உருவாகும் நடுக்கங்களையும் போக்கும் மருத்துவ குணம் மிக்கது.

    ’காதல் ஹார்மோன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோனுடைய சுரப்பினை தூண்டி அன்புணர்வை முத்தங்கள் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் தலைவலி உடல் அசதி சில வகையான இதய நோய்கள் மனஅழுத்தம் போன்ற நோய்களை குறைக்கும் தன்மையும் முத்தங்களுக்கு உண்டு. முகப்பொலிவினை உண்டாகுவதற்கும் முத்தங்கள் உதவும். நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வல்லமை முத்தங்களுக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    உண்மை என்னவென்றால் மேற்சொன்ன மருத்துவப் பலன்களைப் பெற காமம் பொதிந்த முத்தங்கள் தான் அவசியம் என்றில்லை. நெற்றியில் தவழும் ஆசை முத்தம்… தலைமுடிகளை வருடும் அன்பு முத்தம்… கன்னங்களில் அழுந்தும் குழந்தை முத்தம்… இவை எதுவாக இருந்தாலும் சரி முத்தங்கள் நோய்த் தீர்க்கும். மீண்டும் அதே கேள்வி… முத்தங்கள் போதுமான அளவுக்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறதா!… உறவுகளின் நோய்களைப் போக்க உதடுகளை குவிப்போம்!

    கோதுமை ரவையில் சத்தான சுவையான ரெசிபிகள் செய்யலாம். இன்று கோதுமை ரவையில் வெஜிடபிள் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை -  200 கிராம்
    கேரட் - 1
    பீன்ஸ் - 10
    குடைமிளகாய் - 1
    நெய் -  2 டீஸ்பூன்
    புதினா - கால் கட்டு
    பச்சை மிளகாய் - 2
    உப்பு -  சிறிதளவு.

    கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீன்ஸ், குடை மிளகாய், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    உருட்டி வைத்த உருண்டைகளை நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம் போன்றவை கோடைக்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும்.
    கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் இரண்டு பருவநிலைகளை கண்டிப்பாக கடந்துவருவார்கள். ஏற்கனவே உடல் ரீதியில் பல மாற்றங்களை சந்தித்துவரும் இவர்களுக்கு இந்த பருவ மாற்றம் உடலில் வேறு பிரச்சனைகளை கொண்டுவராமல் பார்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக கோடைக் காலங்களில். கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம் போன்றவை இக்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும். இதைத் தவிர்க்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வெண்டும்.இதனால் கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் குழந்தையின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். இது குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.

    கோடைக்காலத்தில் வியர்வை வழியாக வெளியேறும் அதிகப்படியான நீரை ஈடு செய்ய உடலுக்கு போதிய நீர்ச்சத்து தேவை. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் நாளை தொடங்குங்கள். ஒவ்வாமையும், குமட்டலும், வாந்திஉணர்வும் இந்தகாலத்தில் சகஜமானது தான். ஆனால் மிதமான சூட்டில் வெந்நீரை குடிக்கும் போது இந்த உணர்வு உண்டாகாது.

    வெந்நீருக்கு மாற்றாக பழச்சாறுகள் குடிக்கலாம். அதே நேரம் வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து ஒரு நாள் குடிக்கலாம். மறுநாள் நெல்லிக்காய் சாறு சேர்த்து குடிக்கலாம். இன்னொரு நாள் ஆரஞ்சு சாறு கலந்து குடிக்கலாம். இப்படி தினமும் 4 டம்ளர் பழச்சாறுகள் உடன் அதிகப்படியான நீரும் அவசியம்.

    சிறுநீரை அடக்குவது கண்டிப்பாக கூடாது. கர்ப்பக்காலத்தில் கருத்தரித்த நாள் முதல் சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும். தூங்கும் போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரக்கூடும். இதனால் ஆழ்ந்த தூக்கம் என்பது கடினமாக இருக்கும் பலரும் இந்த நேரத்தில் சிறுநீரை கழிக்காமல் அடக்க முயற்சிப்பார்கள்.

    நாள் ஒன்றுக்கு 3 லிருந்து 5 முறை வரை சிறுநீர் கழிப்பது போய் 8 முதல் 10 முறையாவது சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும். இதை தவிர்க்கும் போது சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று, சிறுநீரக கற்கள். சிறுநீர் கடுப்பு பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். மேலும் கோடைக்காலத்தில் உடலில் வியர்வை வழியாக வெளியேறும் நீர் ஒருபுறம், சிறுநீர் வழியாக வெளியேறும் நீர் மறுபுறம் என்று உடல் அதிகப்படியான நீரிழப்பை சந்திக்க நேரிடும். அதை ஈடு செய்ய ஒரே வழி. போதுமான நீர் குடிப்பதும், சிறுநீரை அடக்காமல் இருப்பதும் தான்.

    கர்ப்பக்காலத்தில் அதிலும் இரண்டாவது ட்ரைமெஸ்டரின் இறுதி மாதங்களில் அதாவது 6 ஆம் மாதம் முதலே பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். குழந்தை வளர வளர வயிற்று தசைகள் தளர்ந்து கூபக தசை மற்றும் இடுப்பு தசைகளில் இறுக்கம் உண்டாவதால் மலச்சிக்கல் இயல்பானது என்றாலும் உணவு பழக்கம் மூலம் அதை தவிர்க்க முடியும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நீர்ச்சத்தும் காரணமாகிறது.

    உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் தான் அவை குடலின் இயக்கங்களை சீராக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும். நீர்ச்சத்து இல்லாமல் பற்றாக்குறையாகும் போது மலம் இறுகி விடுகிறது. தொடர்ந்து இந்த பிரச்சனையை சந்திக்கும் போது கர்ப்பிணிகள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் உணவு முறையோடு தினமும் தேவைக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பதும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் மட்டும் அல்லாமல் தினமும் தண்ணீரும் அதிகம் தேவை.

    கர்ப்பக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் வாந்தி எடுப்பதும் உங்கள் உடலிலிருக்கும் நீர்ச்சத்தை இழக்க கூடும். இந்த நீர் இழப்பு எல்லா காலங்களிலும் என்றாலும் கூட கோடைக்காலத்தில் இன்னும் அதிகமாக வேகமாக இழப்பை சந்திக்க நேரிடும். இதை உணர்த்தும் அறிகுறிகளாக தொண்டையில் வறட்சி ஏற்படும். தொண்டை உலர்ந்து காணப்படும். சிலருக்கு தலைவலியும் சோர்வும் உண்டாகும். தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் அவை நீர் இழப்பாக இருந்தால் அவரே உறுதி செய்து அதற்கான ஆலோசனைகளை பரிந்துரைப்பார்.

    கர்ப்பிணிகள் உடலில் நீர்சத்து குறைபாடில்லாமல் பார்த்துகொள்வது அவர்களது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் பொருந்தும். நீர்ச்சத்து குறைபாடு கர்ப்பிணிகளின் உடலை பலவீனப்படுத்துவதோடு குழந்தையையும் பலவீனப்படுத்தும். கர்ப்பிணிகளின் உடலில் போதிய நீர்ச்சத்து இருந்தால் தான் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும்.

     கோடைக்காலத்தில் நீர்சத்து குறையாமல் பார்ட்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டமும் போதுமான அளவு இருக்கும். அதனால் தான் கர்ப்பக்காலங்களில் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் கோடைக்காலங்களில் இன்னும் சற்று கூடுதலாக என்கிறார்கள்.

    தண்ணீரோடு அவ்வபோது இஞ்சி சேர்த்த மோர், இளநீர், பழச்சாறுகளையும் எடுத்துகொள்வதன் மூலம் கோடையில் உடலை நீர்ச்சத்து குறையாமல் காக்கலாம். 
    குட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எந்தெந்த உணவு வகைகளில் என்னென்ன வைட்டமின் சத்து இருக்கிறது என்ற தகவல்களையும் இங்கே காணலாம்.
    குட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. அது கிடைக்க விட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதுடன், நோய்களும் ஏற்படக்கூடும். அதனால், வைட்டமின் சத்து பற்றாக்குறையால் வரக்கூடும் பாதிப்புகளையும், எந்தெந்த உணவு வகைகளில் என்னென்ன வைட்டமின் சத்து இருக்கிறது என்ற தகவல்களையும் இங்கே காணலாம். அதன்படி உணவில் மாற்றங்களை செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

    உதாரணமாக, வைட்டமின் ‘ஏ’ சத்து குறைந்தால் கண் பார்வை மங்குவதுடன், எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். கருவில் வளரும் குழந்தைக்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் வைட்டமின் ‘ஏ’ தேவை. இந்த வைட்டமின் முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

    வைட்டமின் ‘பி’ சத்து குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். வாயில் புண்கள் உண்டாகலாம். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் ‘பி’ சத்து நிறைய உள்ளது.

    வைட்டமின் ‘சி’ சத்து குறைந்து விட்டால் குழந்தைகள் மன அமைதியை இழப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால், அவர்கள், கோபமாகவும் காணப்படுவார்கள். எலும்புகள் பலம் குறைவதுடன், பல் ஈறுகள் பாதிக்கப்படலாம். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைய உள்ளது.

    குழந்தைகளின் எலும்புகள் வலுவாக வளர வைட்டமின் ‘டி’ சத்து அவசியமானது. இந்த சத்து போதிய அளவு கிடைக்காத குழந்தைகளின் கால்கள் உட்புறமாக வளைந்து விடக்கூடும். போதிய சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் வைட்டமின் ‘டி’ சத்தை உடல் தாமாகவே தயாரித்துக்கொள்ளும். உணவுப்பொருட்களில் முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘டி’ சத்து இருக்கிறது.

    வைட்டமின் ‘ஈ’ சத்து குறைந்து விடும்போது குழந்தைகளின் தசைகள் பலவீனமடையலாம். மேலும், ரத்தம் உறைவது சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஈ’ சத்து இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
    ×