search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Class"

    • 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் முழு அளவில் நடத்தப்படுகின்றன.
    • கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இந்த கல்வி ஆண்டில்தான் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பதால் பள்ளிகளுக்கு அடுத்து வருகிற நாட்களிலும் விடுமுறை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் இருப்பதால் அவ்வப்போது மாணவர்களுக்கு விடுமுறை விட வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்பதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கருதி ஒருசில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ளது.

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் முழு அளவில் நடத்தப்படுகின்றன. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இந்த கல்வி ஆண்டில்தான் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் நடத்தப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் நடந்து முடிந்துள்ளன.

    இந்த நிலையில் பாடப்பகுதிகளை தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

    தொடர் விடுமுறையால் மாணவர்கள் கற்றல் திறன் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சில தனியார் பள்ளிகள் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.

    அண்ணாநகர், முகப்பேர் பகுதியில் உள்ள பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்கி பாடப்பகுதிகளை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கொளத்தூர் எவர்வின் பள்ளிகளின் மூத்த முதல்வர் புருஷோத்தமன் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு கருதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதை பின்பற்றி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மழை பெய்யக்கூடிய நேரத்தில் மாணவர்களின் மனநிலை மாறுபட்டு இருக்கும். ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பருவமழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் விடுமுறை விட வேண்டிய நிலை நீடித்தால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது.
    • ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது. அவர்களது மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். அவ்வாறு வெற்றிகளைப்பெற மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதை காண்போம்.

    1) இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். அப்போது தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியும். மருத்துவ ரீதியல் ஒரு மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். சரியான உறக்கம் இல்லை என்றால் உடலும் மனமும் சோர்ந்து கல்வி கற்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே இரவில் நீண்ட நேரம் டெலிவிஷன் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து சரியான நேரத்திற்கு உறங்கச்சென்று அதிகாலையில் விழித்து படிப்பது நல்லது.

    2) காலை உணவு மிக அவசியம். சிலர் பள்ளிக்குப்புறப்படும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பதுண்டு. இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு வயிறு காலியாக இருக்கும். எனவே காலை உணவு சாப்பிட்டால் தான் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லை என்றால் உடலும், மூளையும் சோர்ந்து போகும். ஆர்வமுடன் படிக்க முடியாது. படிப்பதும் மனதில் பதியாது.

    3) ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். அவர் கரும்பலகையில் எழுதிப்போடும் குறிப்புகளை கவனமுடன் எழுதிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மனதை அலைபாய விடுவது, கவனக்குறைவாக இருப்பது போன்றவை கூடாது.

    4) ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்தாலே போதும். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்தடுத்த வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்க முடியும்.

    5) வகுப்பறையில் அமரும்போது எப்போதும் நேராக, நிமிர்ந்து அமருங்கள். உடலை வளைத்துக்கொண்டு அமரக்கூடாது.

    6) கவனம் தடைப்படும்போது உடலை அசைத்துக்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுறுசுறுப்பை உருவாக்கலாம். கொஞ்சம் தண்ணீர் குடித்தாலும் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

    பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்று மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. மாணவர்களுக்கு வீட்டுச் சூழலை வழங்கு வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

    இதுநாள் வரை படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டிலேயே பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு பழகி விட்டதால் சட்டென்று அவர்களை பள்ளிச் சூழலுக்கு தயார்படுத்துவது சிரமமானது. அதனை கருத்தில் கொண்டே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இதில் இசை, நடனம், கலை வேலைப்பாடுகள் மற்றும் கைவினை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்பட விளக்கக்காட்சிகள், தோட்டக்கலை, புத்தக வாசிப்பு என பல விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.

    இந்த பாடத்திட்டம் பள்ளி நேரத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இந்த பள்ளிக்கூடம் ஆலுவாவில் உள்ள கீழ்மாட் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. ‘‘எங்கள் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக இயங்குகிறது. இங்கு படிப்பவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் பள்ளிக்கு திரும்பும்போது வீட்டுச்சூழலை மறப்பது சற்று சிரமமானது. திடீரென்று குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப்போல அவர்கள் உணருவதையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தும் நோக்கத்தில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

    மகிழ்ச்சி பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதனை பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு இந்த பாடத்திட்டத்தை நடத்த இருக்கிறோம். மாணவர்கள் மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்ப உதவுவதற்கான சிறந்த வழியாக மகிழ்ச்சி பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது’’ என்கிறார்கள், ஆசிரியர்கள்.
    ×