என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மனையடி சாஸ்திரப்படி வீட்டில் எந்தெந்த இடங்களை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்..
ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் கட்டப்படும் வீடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருப்போம். அவ்வாறு கட்டப்படும் வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் வீடு விற்பனைக்கான விளம்பரங்களில் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது என்று வருவதை பார்க்க முடியும்.. சரி மனையடி சாஸ்திரப்படி வீட்டில் எந்தெந்த இடங்களை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.. வீட்டின் சுற்றுச்சுவர் ,மேல் மாடி சுவர், பூஜை அறை, துளசி மாடம், படுக்கை அறை, குளியலறை, போர் அல்லது கிணறு, படிக்கட்டுகள் எப்படி அமைப்பது? இதோ ஒரு பார்வை.
மனையடி சாஸ்திரம் கூறுவது என்ன?
இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது.. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம்., அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திரத்தின்படி வீட்டை அமைக்கும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
* வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் சுற்றுச்சுவர் அல்லது மாடி சுவர்
வீட்டின் சுற்றுசுவர் அல்லது வீட்டில் மாடிச்சுவரானது தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது உயர்ந்ததாக இருக்க வேண்டும்.. அதைவிட சற்று குறைவாக தென்கிழக்கு சுவர் அதைவிட குறைவாக வடமேற்கு சுவர் அதைவிட குறைவாக வடகிழக்கு சுவர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
பூஜை அறை
பூஜை அறையானது வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. அதேபோல் சுவாமி படங்களை கிழக்கு திசை நோக்கி பார்க்கும்படி வைக்க வேண்டும். சுவாமி படங்களை வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம்.இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு திசை நோக்கி மாட்ட வேண்டும்.மேலும் இந்த திசையில் சேமித்து வைக்கக்கூடிய அறையை அமைக்கலாம்.. இந்தப் பகுதியில் சமையலறை, கழிப்பறை இருப்பது நல்லதல்ல.
துளசி மாடம்
மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க வல்லது,அதோடு துளசிச்செடி காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டின் முன்புறம் துளசி மாடத்தை வைத்திருந்தனர். துளசி மாடம் வீட்டின் முன் இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.. அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் இல்லாத காரணத்தினால் ஆயத்த துளசி மாடங்களை வாங்கி கேட்டின் அருகிலேயே வைத்திருப்பதை பார்க்க முடிகின்றது..
விளக்கேற்றும் திசை
வீட்டில் விளக்கேற்றுவது என்பது வெறும் பூஜைக்காக, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது.. விளக்கு என்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தை கொண்டுவரக் கூடியது.. வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஒரு விளக்காக ஏற்றாமல் இரண்டு விளக்கு ஏற்றுவது சாலச் சிறந்தது. அதேபோல் வீட்டில் துளசி மாடத்தில் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.விளக்குகளை எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது நல்லது.. தெற்கு நோக்கி ஏற்றுதல் கூடாது.
படுக்கை அறை
வீட்டின் முக்கியமான அறைகளில் ஒன்று படுக்கை அறை..ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூக்கம்., ஓய்வு எடுக்க கூடிய படுக்கையறை வீட்டில் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது..படுக்கை அறையில் வடக்கு திசை நோக்கி பணம் சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்..வீட்டில் இரண்டு படுக்கை அறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையை வடகிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.. இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும், வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.அதேபோல் நாம் உறங்கும் பொழுது தெற்கிலும், கிழக்கிலும் தலை வைத்து படுப்பது நன்மையைத் தரும். வடக்கில் தலை வைத்து படுப்பது சிறந்ததல்ல என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
குளியலறை
வீட்டின் குளியலறையை தென்மேற்கு திசையில் அமைக்காமல் மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
சமையலறை
தென்கிழக்கு பகுதியானது அக்னி மூலை என்று கூறப்படுகிறது.. எனவே வீட்டின் தென் கிழக்குப் பகுதியில் சமையலறையை அமைத்து கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்..அவ்வாறு சமையலறையை அமைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் அமைக்கலாம்..சமையலறையில் பாத்திரங்களை கழுவும் சின்க் ஆனது தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.. பூஜை அறைக்கு அருகில் சமையலறை இருக்கலாம். ஆனால்., கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை மற்றும் சமையல் அறை இருப்பது நல்லதல்ல..
குளியலறை
குளியலறையை தென்மேற்கு திசையை தவிர மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல் கழிவுநீர்த் தொட்டியையும் தென்மேற்கில் அமைக்காமல் மற்ற திசைகளில் அமைக்கலாம்.
படிக்கட்டுகள்
வீட்டில் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டை அமைக்கக்கூடாது.
மரங்கள்
வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்களை வளர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியானது மரங்கள் வளர்க்க உன்னதமானது என்று கூறப்படுகின்றது. அதேபோல் மரக்கிளைகள் வீட்டின் மேல் செல்வது சிறந்ததல்ல என்று கூறப்படுகிறது.
மனையடி சாஸ்திரம் கூறுவது என்ன?
இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது.. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம்., அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திரத்தின்படி வீட்டை அமைக்கும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
* வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் சுற்றுச்சுவர் அல்லது மாடி சுவர்
வீட்டின் சுற்றுசுவர் அல்லது வீட்டில் மாடிச்சுவரானது தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது உயர்ந்ததாக இருக்க வேண்டும்.. அதைவிட சற்று குறைவாக தென்கிழக்கு சுவர் அதைவிட குறைவாக வடமேற்கு சுவர் அதைவிட குறைவாக வடகிழக்கு சுவர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
பூஜை அறை
பூஜை அறையானது வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. அதேபோல் சுவாமி படங்களை கிழக்கு திசை நோக்கி பார்க்கும்படி வைக்க வேண்டும். சுவாமி படங்களை வடக்கு திசை நோக்கியும் வைக்கலாம்.இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு திசை நோக்கி மாட்ட வேண்டும்.மேலும் இந்த திசையில் சேமித்து வைக்கக்கூடிய அறையை அமைக்கலாம்.. இந்தப் பகுதியில் சமையலறை, கழிப்பறை இருப்பது நல்லதல்ல.
துளசி மாடம்
மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க வல்லது,அதோடு துளசிச்செடி காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டின் முன்புறம் துளசி மாடத்தை வைத்திருந்தனர். துளசி மாடம் வீட்டின் முன் இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.. அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் இல்லாத காரணத்தினால் ஆயத்த துளசி மாடங்களை வாங்கி கேட்டின் அருகிலேயே வைத்திருப்பதை பார்க்க முடிகின்றது..
விளக்கேற்றும் திசை
வீட்டில் விளக்கேற்றுவது என்பது வெறும் பூஜைக்காக, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது.. விளக்கு என்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தை கொண்டுவரக் கூடியது.. வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஒரு விளக்காக ஏற்றாமல் இரண்டு விளக்கு ஏற்றுவது சாலச் சிறந்தது. அதேபோல் வீட்டில் துளசி மாடத்தில் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.விளக்குகளை எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது நல்லது.. தெற்கு நோக்கி ஏற்றுதல் கூடாது.
படுக்கை அறை
வீட்டின் முக்கியமான அறைகளில் ஒன்று படுக்கை அறை..ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூக்கம்., ஓய்வு எடுக்க கூடிய படுக்கையறை வீட்டில் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது..படுக்கை அறையில் வடக்கு திசை நோக்கி பணம் சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்..வீட்டில் இரண்டு படுக்கை அறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையை வடகிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.. இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும், வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.அதேபோல் நாம் உறங்கும் பொழுது தெற்கிலும், கிழக்கிலும் தலை வைத்து படுப்பது நன்மையைத் தரும். வடக்கில் தலை வைத்து படுப்பது சிறந்ததல்ல என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
குளியலறை
வீட்டின் குளியலறையை தென்மேற்கு திசையில் அமைக்காமல் மற்ற எந்த திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
சமையலறை
தென்கிழக்கு பகுதியானது அக்னி மூலை என்று கூறப்படுகிறது.. எனவே வீட்டின் தென் கிழக்குப் பகுதியில் சமையலறையை அமைத்து கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்..அவ்வாறு சமையலறையை அமைக்க இயலாதவர்கள் வடமேற்கு திசையில் அமைக்கலாம்..சமையலறையில் பாத்திரங்களை கழுவும் சின்க் ஆனது தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.. பூஜை அறைக்கு அருகில் சமையலறை இருக்கலாம். ஆனால்., கழிப்பறைக்கு அருகில் பூஜை அறை மற்றும் சமையல் அறை இருப்பது நல்லதல்ல..
குளியலறை
குளியலறையை தென்மேற்கு திசையை தவிர மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல் கழிவுநீர்த் தொட்டியையும் தென்மேற்கில் அமைக்காமல் மற்ற திசைகளில் அமைக்கலாம்.
படிக்கட்டுகள்
வீட்டில் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டை அமைக்கக்கூடாது.
மரங்கள்
வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்களை வளர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியானது மரங்கள் வளர்க்க உன்னதமானது என்று கூறப்படுகின்றது. அதேபோல் மரக்கிளைகள் வீட்டின் மேல் செல்வது சிறந்ததல்ல என்று கூறப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அளிப்பதால் இங்குள்ள இறைவனை வேண்டினால் நீண்ட ஆயுளை பெறலாம் என்பது ஐதீகம்.
16 வயதை மட்டுமே ஆயுளாக கொண்ட மார்க்கண்டேயன் தனது உயிரை தற்காத்துக்கொள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார். இறுதியில் திருக்கடையூர் ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை இறுக பற்றிக்கொண்டு தன்னை எமதர்மனிடம் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார். அப்போது அங்கு வந்த எமதர்மன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்ந்து சிவபெருமான் மீதும் விழுந்தது.
சிவபெருமான் மீது விழுந்த பாசக்கயிற்றை எமதர்மன் பற்றி இழுத்ததால் சினம் கொண்ட சிவபெருமான் எமதர்மனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார். எமதர்மனின் பாசக்கயிறு பட்டதால் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியிலும் மேனியிலும் கயிற்றின் தடம் காணப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அளிப்பதால் இங்குள்ள இறைவனை வேண்டினால் நீண்ட ஆயுளை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் மனித உயிர்களை எடுக்க வரும் காலனை இங்குள்ள சிவபெருமான் சம்ஹாரம் செய்ததால் நீண்ட ஆயுளுக்கு அதிபதியாக அமிர்தகடேஸ்வரர் திகழ்கிறார்.
எனவே 60 வயதை நிறைவு செய்தவர்கள் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் வேண்டி இக்கோவிலில் மணி விழா வழிபாடும், 70 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் பீமரத சாந்தி வழிபாடும், 75 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் விஜரத சாந்தி வழிபாடும், 80 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் சதாபிஷேக வழிபாடும் நடத்துகிறார்கள்.
சிவபெருமான் மீது விழுந்த பாசக்கயிற்றை எமதர்மன் பற்றி இழுத்ததால் சினம் கொண்ட சிவபெருமான் எமதர்மனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார். எமதர்மனின் பாசக்கயிறு பட்டதால் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியிலும் மேனியிலும் கயிற்றின் தடம் காணப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அளிப்பதால் இங்குள்ள இறைவனை வேண்டினால் நீண்ட ஆயுளை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் மனித உயிர்களை எடுக்க வரும் காலனை இங்குள்ள சிவபெருமான் சம்ஹாரம் செய்ததால் நீண்ட ஆயுளுக்கு அதிபதியாக அமிர்தகடேஸ்வரர் திகழ்கிறார்.
எனவே 60 வயதை நிறைவு செய்தவர்கள் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் வேண்டி இக்கோவிலில் மணி விழா வழிபாடும், 70 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் பீமரத சாந்தி வழிபாடும், 75 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் விஜரத சாந்தி வழிபாடும், 80 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் சதாபிஷேக வழிபாடும் நடத்துகிறார்கள்.
அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 28 உண்டியல்கள் உள்ளன. கள்ளழகர் மதுரைக்கு வரும் போது உண்டியல்கள் உடன் கொண்டு வரப்படுகின்றன.
பிரசித்தி பெற்ற அழகர்கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா வருகிற 12-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. 13-ந்தேதியும் திருக்கல்யாண மண்டபத்தில் அதே மாலை நேரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 14-ந் தேதி சித்திரை மாதம் 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று காலையில் அதே மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.
அன்று மாலை 6.15 மணிக்கு கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுவார். பின்னர் இரவு 7 மணிக்கு கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி வழியாக மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
தொடர்ந்து பொய்கைகரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு 12 மணிக்கு அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துபடி ஆனதும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 5.50 மணிக்கு மேல் 6-20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
மறுநாள்(17-ந்தேதி) தேனூர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு மேல் 3 மணிக்குள் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுவார். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தருவார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். 18-ந் தேதி பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கு விழாவும், 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை 2-30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் கள்ளர் திருக்கோலத்துடன், கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி திருமாலிருஞ்சோலைக்கு பிரியாவிடை பெற்று கள்ளழகர் செல்வார்.
20 ந் தேதி புதன்கிழமை அதிகாலை 3- 30 மணிக்கு அப்பன் திருப்பதி வழியாக சென்று, அன்று பகல் 1-30 மணிக்கு அழகர்கோவிலுக்கு சுவாமி இருப்பிடம் சேருகிறார். 21 ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
முன்னதாக, இந்த திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 28 உண்டியல்களும் அழகர்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்ச்சியுடன் போது சுவாமியுடன் 28 உண்டியல்களும் எடுத்து செல்லப்படுகின்றன. ஆங்காங்கே பக்தர்களிடம் காணிக்கை உண்டியல்களில் பெறப்படுகின்றன. பின்னர் கள்ளழகர் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் போது, உண்டியல்களும் கோவிலுக்கு ெகாண்டு வரப்படுகின்றன. சித்திரை திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
அன்று மாலை 6.15 மணிக்கு கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுவார். பின்னர் இரவு 7 மணிக்கு கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி வழியாக மதுரையை நோக்கி புறப்படுகிறார்.
தொடர்ந்து பொய்கைகரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு 12 மணிக்கு அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துபடி ஆனதும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 5.50 மணிக்கு மேல் 6-20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
மறுநாள்(17-ந்தேதி) தேனூர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு மேல் 3 மணிக்குள் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுவார். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தருவார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். 18-ந் தேதி பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கு விழாவும், 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை 2-30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் கள்ளர் திருக்கோலத்துடன், கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி திருமாலிருஞ்சோலைக்கு பிரியாவிடை பெற்று கள்ளழகர் செல்வார்.
20 ந் தேதி புதன்கிழமை அதிகாலை 3- 30 மணிக்கு அப்பன் திருப்பதி வழியாக சென்று, அன்று பகல் 1-30 மணிக்கு அழகர்கோவிலுக்கு சுவாமி இருப்பிடம் சேருகிறார். 21 ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
முன்னதாக, இந்த திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 28 உண்டியல்களும் அழகர்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்ச்சியுடன் போது சுவாமியுடன் 28 உண்டியல்களும் எடுத்து செல்லப்படுகின்றன. ஆங்காங்கே பக்தர்களிடம் காணிக்கை உண்டியல்களில் பெறப்படுகின்றன. பின்னர் கள்ளழகர் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் போது, உண்டியல்களும் கோவிலுக்கு ெகாண்டு வரப்படுகின்றன. சித்திரை திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் இருந்தாள். சிறந்த பார்வதிதேவியின் சிறந்த பக்தை. திருமண வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. திருமணமான நாலாவது நாளில்தான் சாந்திமுகூர்த்தம் நடத்துவது அன்றைய நாளின் வழக்கம்.
ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன் இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.
தாருகாவனத்தில் வசித்த வேதத்தை கற்றதால் மமதை கொண்ட முனிவர்கள் சிலர் , கர்மாவே கடவுள், அதற்கு மிஞ்சியது ஏதுமில்லை. ஒருவனின் கர்ம வினைப்படியே அவனின் வாழ்க்கை அமையும். கடவுளால்கூட ஏதும் செய்யமுடியாது என சொல்லி திரிந்தனர்.
இவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிட்சாடனாராகவும், விஷ்ணு மோகினி வேடம் கொண்டு முனிவர்கள் முன் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி முனிவர்களும், பிட்சாடனர் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகளும் சென்றனர். இதனால் முனிவர்களது தவம் பாதிக்கப்பட்டதால், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினர்.
கர்வமும், தவ வாழ்வும் கலைந்த நிலையில் வேள்வியில் பிழை ஏற்பட்டு வேள்வி தீயிலிருந்து புலி ஒன்று உருவாகிட்டுது. அதை அந்த பிசாடனர்மேல் ஏவினர். தன்னை நோக்கி வந்த புலியை அடக்கி, அதன் தோலை, தன் இடைக்கச்சையாக கட்டிக்கொண்டார் பிட்சாடனர் வேடம் கொண்ட சிவன்.
அடுத்தடுத்து மான், நெருப்பை வேள்வியிலிருந்து உண்டாக்கி அதை பிட்சாடனர்மேல் ஏவ, அதையும் வீரியமில்லாததாக்கி, தன் கைகளில் ஏந்திகொண்டார் பெருமான். அடுத்து யானை வர அதையும் கொன்று அதன் தோலை மேலாடையாக போட்டுக்கொண்டார். அடுத்து தங்களது முழு ஞானத்தையும் வேள்வியில் இட்டு, அதன்மூலம், முயலகன் என்ற அரக்கனை உண்டாக்கி, சிவன்மேல் ஏவினர். முயலகனை அடக்கி, தன் காலடியில் அழுத்தி வைத்துக்கொண்டனர்.
இத்தனைக்கு பிறகு புத்தி வந்த முனிவர்கள், சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்ந்து சிவனை பணிந்து, தங்களை மன்னிக்க வேண்டி நின்றனர். அவர்களை மன்னித்து அருளி, மோகினி வேடத்திலிருந்த விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மேளம் கொட்ட, சிவன் ஆனந்த நடனம் புரிந்தார். சிவனின் நடனம் கண்டு தாருகாவனமே மகிழ்ந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார். விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார்.
தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.
அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன் இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.
தாருகாவனத்தில் வசித்த வேதத்தை கற்றதால் மமதை கொண்ட முனிவர்கள் சிலர் , கர்மாவே கடவுள், அதற்கு மிஞ்சியது ஏதுமில்லை. ஒருவனின் கர்ம வினைப்படியே அவனின் வாழ்க்கை அமையும். கடவுளால்கூட ஏதும் செய்யமுடியாது என சொல்லி திரிந்தனர்.
இவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிட்சாடனாராகவும், விஷ்ணு மோகினி வேடம் கொண்டு முனிவர்கள் முன் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி முனிவர்களும், பிட்சாடனர் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகளும் சென்றனர். இதனால் முனிவர்களது தவம் பாதிக்கப்பட்டதால், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினர்.
கர்வமும், தவ வாழ்வும் கலைந்த நிலையில் வேள்வியில் பிழை ஏற்பட்டு வேள்வி தீயிலிருந்து புலி ஒன்று உருவாகிட்டுது. அதை அந்த பிசாடனர்மேல் ஏவினர். தன்னை நோக்கி வந்த புலியை அடக்கி, அதன் தோலை, தன் இடைக்கச்சையாக கட்டிக்கொண்டார் பிட்சாடனர் வேடம் கொண்ட சிவன்.
அடுத்தடுத்து மான், நெருப்பை வேள்வியிலிருந்து உண்டாக்கி அதை பிட்சாடனர்மேல் ஏவ, அதையும் வீரியமில்லாததாக்கி, தன் கைகளில் ஏந்திகொண்டார் பெருமான். அடுத்து யானை வர அதையும் கொன்று அதன் தோலை மேலாடையாக போட்டுக்கொண்டார். அடுத்து தங்களது முழு ஞானத்தையும் வேள்வியில் இட்டு, அதன்மூலம், முயலகன் என்ற அரக்கனை உண்டாக்கி, சிவன்மேல் ஏவினர். முயலகனை அடக்கி, தன் காலடியில் அழுத்தி வைத்துக்கொண்டனர்.
இத்தனைக்கு பிறகு புத்தி வந்த முனிவர்கள், சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்ந்து சிவனை பணிந்து, தங்களை மன்னிக்க வேண்டி நின்றனர். அவர்களை மன்னித்து அருளி, மோகினி வேடத்திலிருந்த விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மேளம் கொட்ட, சிவன் ஆனந்த நடனம் புரிந்தார். சிவனின் நடனம் கண்டு தாருகாவனமே மகிழ்ந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார். விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார்.
தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.
அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வீற்றிருந்தார். அப்போது அங்கு கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்குமாறு வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் சிவயோகிகள் யாரும் சித்திகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் இச்சித்திகள் நிழல்போல் உடலோடு ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் என்றார். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இதனால் சிவன் கார்த்திகை பெண்களிடம் உங்களுக்கு பராசக்தியாக விளங்கும் பார்வதிதேவி அஷ்டமாசித்தியை உபதேசிப்பார் என்று கூறி பார்வதியிடம் அவர்களுக்கு இச்சித்திகளை உபதேசிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார்.
அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர்.
கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.
இதற்கிடையே பார்வதிதேவி கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும் படி சிவனுக்கு பரிந்துரை செய்ததால் சிவன் கோபத்திற்கு ஆளாகி காளியாக உருவெடுத்து பட்டமங்கலத்தில் நாவல் மரத்தடியில் கோவில் கொண்டாள். அந்த காளிக்கு நவ்வலடி காளி என்று பெயர். அவளுக்கும் சிவபெருமான் விமோசனம் கொடுத்தார். அதன்பின் அவர் காளி வடிவம் நீங்கி சவுந்தரி அம்மனாக காட்சி அளித்தார். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.
ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர்.
எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலுமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தி யுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.
இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மாசி மகம், மகாசிவராத்திரி. வியாழக்கிழமைகளில் பகல் 12.00 -1.30 மணி வரை அபிஷேகம்.
நேரம்: காலை 6.30 - 12.30 மணி; மாலை 4.30 - 8.00 மணி.
பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.
குருப் பெயர்ச்சிக்கு முதல் நாள், 108 கலசங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், குருப்பெயர்ச்சி அன்று, அஷ்டமா சித்தி குரு பகவானுக்கு 108 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார்.
அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர்.
கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.
இதற்கிடையே பார்வதிதேவி கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும் படி சிவனுக்கு பரிந்துரை செய்ததால் சிவன் கோபத்திற்கு ஆளாகி காளியாக உருவெடுத்து பட்டமங்கலத்தில் நாவல் மரத்தடியில் கோவில் கொண்டாள். அந்த காளிக்கு நவ்வலடி காளி என்று பெயர். அவளுக்கும் சிவபெருமான் விமோசனம் கொடுத்தார். அதன்பின் அவர் காளி வடிவம் நீங்கி சவுந்தரி அம்மனாக காட்சி அளித்தார். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.
ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர்.
எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலுமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தி யுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.
இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மாசி மகம், மகாசிவராத்திரி. வியாழக்கிழமைகளில் பகல் 12.00 -1.30 மணி வரை அபிஷேகம்.
நேரம்: காலை 6.30 - 12.30 மணி; மாலை 4.30 - 8.00 மணி.
பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.
குருப் பெயர்ச்சிக்கு முதல் நாள், 108 கலசங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், குருப்பெயர்ச்சி அன்று, அஷ்டமா சித்தி குரு பகவானுக்கு 108 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோவிலில் குரு பகவானுக்கு நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற குருபகவான் வழிபாட்டுத் திருத்தலம் திருப்பத்தூர் அருகே பட்டமங் கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் அஷ்டமாசித்தி தட்சணாமூர்த்தி திருக்கோவிலில் உள்ளது.இந்த கோவிலின் சிறப்பு குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய தெய்வமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒரே இடத்தில் கூடி கார்த்திகைப் பெண்களுக்கு பாவ விமோசனம் கொடுத்ததால் இங்கு குரு பகவானுக்கு நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வருகிற 14-ந்தேதி அதிகாலை 4.16 மணிக்கு கும்பராசியில் இருந்து மீனராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பெயர்ச்சியை முன் னிட்டு நேற்று காலை 9.30 மணியில் இருந்து கணபதி ஹோமம், குரு ஹோமத்துடன் குருபெயர்ச்சியாகம் தொடங்கியது.
தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்படும். யாகம் நிறைவடைந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகளை வீரப்ப செட்டியார் செய்து வருகிறார்.
ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய தெய்வமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒரே இடத்தில் கூடி கார்த்திகைப் பெண்களுக்கு பாவ விமோசனம் கொடுத்ததால் இங்கு குரு பகவானுக்கு நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வருகிற 14-ந்தேதி அதிகாலை 4.16 மணிக்கு கும்பராசியில் இருந்து மீனராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பெயர்ச்சியை முன் னிட்டு நேற்று காலை 9.30 மணியில் இருந்து கணபதி ஹோமம், குரு ஹோமத்துடன் குருபெயர்ச்சியாகம் தொடங்கியது.
தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்படும். யாகம் நிறைவடைந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகளை வீரப்ப செட்டியார் செய்து வருகிறார்.
கீழ்க்காணும் துதியையும் சோமவார விரத தினத்தன்று ஓதினால் எல்லா நலன்களும் நிறையும். மாலையில் சிவன் கோவிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவி
தாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம்
ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக
தரம் ப்ரணமாமி நித்யம்.
பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரே, சிறந்த வெண்மை நிறம் கொண்டவரே, வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரே, தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரே, இரண்டு கைகளிலும் அபய-வரத முத்திகளைத் தரித்தவரே, மனமுவந்து வரங்களை அளிப்பவரே, அம்ருத கிரணமும், வத்ஸம் என்ற முத்துமாலையை தரித்தவருமான சந்திர பகவானே நமஸ்காரம். அன்று விரதம் முடிந்த பின் தஞ்சை மாவட்டத்திலுள்ள திங்களூர் சென்று கைலாசநாதரையும், தனி சந்நதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானையும் வழிபடலாம். இயலாதவர்கள் பக்கத்து சிவன் கோயிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவி
தாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம்
ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக
தரம் ப்ரணமாமி நித்யம்.
பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரே, சிறந்த வெண்மை நிறம் கொண்டவரே, வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரே, தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரே, இரண்டு கைகளிலும் அபய-வரத முத்திகளைத் தரித்தவரே, மனமுவந்து வரங்களை அளிப்பவரே, அம்ருத கிரணமும், வத்ஸம் என்ற முத்துமாலையை தரித்தவருமான சந்திர பகவானே நமஸ்காரம். அன்று விரதம் முடிந்த பின் தஞ்சை மாவட்டத்திலுள்ள திங்களூர் சென்று கைலாசநாதரையும், தனி சந்நதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானையும் வழிபடலாம். இயலாதவர்கள் பக்கத்து சிவன் கோயிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர்.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவாதி தேவா்களை போரில் வென்று கடைசியாக சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.
அவ்வாறு மதுரை நாட்டை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும்.
அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதையும் படிக்கலாம்...சோமவார விரதத்தை சரியான முறையில் அனுஷ்டிப்பது எப்படி?
அவ்வாறு மதுரை நாட்டை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும்.
அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதையும் படிக்கலாம்...சோமவார விரதத்தை சரியான முறையில் அனுஷ்டிப்பது எப்படி?
கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று 10 நாள் பெருந்திருவிழா துவங்கும். அதன்படி முதல் நாள் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருகில் கொடிமரத்தில் ஏற்றுவதற்கான ஆஞ்சநேயர் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாள் திருவிழாவான நேற்று சூரிய வாகனத்தில் பெருமாள் இரவு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருவீதி உலா நான்கு வீதிகள் வழியாக நடந்தது.
பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாள் திருவிழாவான நேற்று சூரிய வாகனத்தில் பெருமாள் இரவு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருவீதி உலா நான்கு வீதிகள் வழியாக நடந்தது.
சபரிமலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடக்கிறது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி அளிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
கேரளாவில் வருகிற 15ந்தேதி கொண்டாடப்படும் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார்.
இன்று (திங்கட்கிழமை) முதல் 18-ந்தேதி வரை கோவில் நடை காலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
15-ந்தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. இதையொட்டி சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடக்கிறது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி அளிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) முதல் 18-ந்தேதி வரை கோவில் நடை காலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
15-ந்தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. இதையொட்டி சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடக்கிறது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி அளிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்க கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சங்களாகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். தவக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த குருத்தோலை பவனியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர். இந்த பவனி பேராலயத்தின் பின் பகுதியில் நிறைவடைந்தது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நாள் முழுவதும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.
இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகை ஊசி மாதா கோவில் எனப்படும் லூர்து மாதா பேராலயம், மாதரசி மாதா பேராலயம், காடம்பாடி புனித சவேரியார் கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பவனியில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, கீர்த்தனைகள் பாடியவாறு பவனி வந்தனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். தவக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த குருத்தோலை பவனியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர். இந்த பவனி பேராலயத்தின் பின் பகுதியில் நிறைவடைந்தது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நாள் முழுவதும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.
இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகை ஊசி மாதா கோவில் எனப்படும் லூர்து மாதா பேராலயம், மாதரசி மாதா பேராலயம், காடம்பாடி புனித சவேரியார் கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பவனியில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, கீர்த்தனைகள் பாடியவாறு பவனி வந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக ஒளி கூடவும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறையவும் சந்திரனுக்கு உதவிய பரமேஸ்வரனை வழிபட்டு, மேற்கொள்வதுதான் சோமவார விரதம்.
சந்திரன் முழுமையாகத் தேயும் நாள்தான் அமாவாசை; முழுமையாக வளர்ந்து ஒளிரும் நாள் பௌர்ணமி. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒளி கூடவும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறையவும் அவனுக்கு உதவிய பரமேஸ்வரனை வழிபட்டு, மேற்கொள்வதுதான் சோமவார விரதம். இந்த விரத நியதிப்படி, திங்கட்கிழமையன்று காலையில் நீராடிவிட்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது வழக்கம்.
அன்று முழுவதும் சிவ ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே இருப்பது இவ்வாறு விரதம் இருப்பவர்களின் வழக்கம். வீட்டிலேயே இருக்கக்கூடியவர்கள் இப்படி நாள் முழுவதும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். அன்று சிவாஷ்டகம் படிக்கலாம். சிவ அஷ்டோத்திரம் சொல்லலாம். மனதார சிவனை தியானித்து நம்முடைய நியாயமான தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்றால் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்றார்போல உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லது எளிமையான சைவ உணவை ஒருவேளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். சிவ ஸ்தோத்திரங்கள் மனப்பாடமாகத் தெரிந்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வேலை நேரத்திலே டீ நேரம், உணவு இடைவேளை நேரம் என்று கிடைக்குமானால், அப்போது, கையோடு ஸ்லோகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டுபோய் அவற்றைப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கலாம்.
இதற்கும் அவகாசமும் வசதியும் இல்லையென்றால், கவலைப்படவேண்டாம், ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டுமாவது நாள்பூராவும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வேலைக்குப் போகிறவர்களால் காலையில் சிவன் கோயிலுக்குச் சென்றுவர நேரமில்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், மாலையில் வீட்டுக்கு வந்தபிறகு நீராடிவிட்டு சிவன் கோயிலுக்குப் போய் சிவதரிசனம் செய்யலாம்.
அதுவும் முடியாமல், இரவு வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நாள் பூராவும், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டேயிருந்தால் போதும். அதோடு திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது ரொம்பவும் விசேஷமானதாக அமையும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், அர்ச்சனை எல்லாவற்றையும் மனங்குளிரப் பார்த்து எல்லா பாக்கியங்களையும் அடைய அச்சாரம் வாங்கிக்கொள்ளலாம்.
அன்று முழுவதும் சிவ ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே இருப்பது இவ்வாறு விரதம் இருப்பவர்களின் வழக்கம். வீட்டிலேயே இருக்கக்கூடியவர்கள் இப்படி நாள் முழுவதும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். அன்று சிவாஷ்டகம் படிக்கலாம். சிவ அஷ்டோத்திரம் சொல்லலாம். மனதார சிவனை தியானித்து நம்முடைய நியாயமான தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்றால் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்றார்போல உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லது எளிமையான சைவ உணவை ஒருவேளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். சிவ ஸ்தோத்திரங்கள் மனப்பாடமாகத் தெரிந்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வேலை நேரத்திலே டீ நேரம், உணவு இடைவேளை நேரம் என்று கிடைக்குமானால், அப்போது, கையோடு ஸ்லோகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டுபோய் அவற்றைப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கலாம்.
இதற்கும் அவகாசமும் வசதியும் இல்லையென்றால், கவலைப்படவேண்டாம், ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டுமாவது நாள்பூராவும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வேலைக்குப் போகிறவர்களால் காலையில் சிவன் கோயிலுக்குச் சென்றுவர நேரமில்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், மாலையில் வீட்டுக்கு வந்தபிறகு நீராடிவிட்டு சிவன் கோயிலுக்குப் போய் சிவதரிசனம் செய்யலாம்.
அதுவும் முடியாமல், இரவு வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நாள் பூராவும், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டேயிருந்தால் போதும். அதோடு திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது ரொம்பவும் விசேஷமானதாக அமையும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், அர்ச்சனை எல்லாவற்றையும் மனங்குளிரப் பார்த்து எல்லா பாக்கியங்களையும் அடைய அச்சாரம் வாங்கிக்கொள்ளலாம்.






