என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும்.
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ரங்கநாயகி உடனாய கஸ்தூரி ரங்கநாதப் பெருமாள் கோவில். இங்கு சயன கோலத்தில் அருளும் இறைவனின் திருமேனி, சாளக்கிராமத்தால் ஆனது என்கிறார்கள். ஆதிசேஷனின் மேல் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.
பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.
பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆழ்வார் திருநகரி திருத்தலம்.
இங்கு ஆதிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி என்பதாகும். இந்த திருத்தலம் ‘திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள திருவரங்கத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்பார்கள். அதேபோல் ஆழ்வார் திருநகரி ‘பரமபதம்’ என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். இந்த வடிவிலான நம்மாழ்வாரை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த சில நாட்களாக காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பாக அனுமதிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி
கொரோனா பரவலால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான 25 அறைகளை கொண்ட விடுதி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த சில நாட்களாக காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பாக அனுமதிக்கப்பட்டது.
தற்போது பக்தர்களின் நலன் கருதி நாளையில் (திங்கட்கிழமை) இருந்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைகள் தவிர மற்ற எந்த ஆர்ஜித சேவைகளும் நடக்காது.
மேலும் ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவுரையின்பேரில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சொந்தமான விடுதி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த விடுதியில் 25 அறைகள் உள்ளன. அங்கு டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருப்பார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கோவில் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா பரவலால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான 25 அறைகளை கொண்ட விடுதி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த சில நாட்களாக காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பாக அனுமதிக்கப்பட்டது.
தற்போது பக்தர்களின் நலன் கருதி நாளையில் (திங்கட்கிழமை) இருந்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில் கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைகள் தவிர மற்ற எந்த ஆர்ஜித சேவைகளும் நடக்காது.
மேலும் ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவுரையின்பேரில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சொந்தமான விடுதி கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த விடுதியில் 25 அறைகள் உள்ளன. அங்கு டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருப்பார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கோவில் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈசனின் திருவடியை பற்றிக்கொண்டாலே போதுமானது, பிரம்ம ஞானத்தை அடையலாம். அதோடு ஈசனின் அருளால் முக்தியையும் அடையலாம்.
இறைவனின் திருவடியே முக்திக்கான வழிதிருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் வரும் பாடலில் ஒன்று இது.
இந்தப் பாடலில் வரும் வரிகளை உண்மையென்று உணர்த்தும் வகையில், இறைவனின் திருவடியை சேர்வதே, முக்திக்கான வழி என்பதை எடுத்துரைக்கும் ஆன்மிகக் கதை ஒன்றை பார்க்கலாம்.
ஓங்கி உயர்ந்து, அகன்று, பரந்து விரிந்திருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்தார், குரு. அவரது முன்பாக இருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தன. தன் குருவிடம் கல்வி பயின்றவர் களிலேயே, மிகவும் புத்திசாலி, மனதிடம் கொண்டவன் என்றெல்லாம் பெயர் எடுத்த முதன்மை சீடன்தான், இன்று எதையோ இழந்தது போல கண்ணில் நீர்மல்க, தன் குருவின் முன்பாக அமர்ந்திருந்தான். தன் குருவின் கால்களை பற்றியபடியே பேசத் தொடங்கினான்.
“குருவே.. வேத சாஸ்திரங்களையும், அதன் உண்மை பொருளையும் எனக்கு கற்றுக்கொடுத்தவர் நீங்கள். எனக்கு ஏற்பட்ட அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து, என்னை உயர்ந்தவனாக மாற்றியவர் நீங்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு பணிவிடை செய்வதிலும், உங்களுடனேயே இருப்பதிலும்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கொண்டிருக்கிறேன். ஆனால் தாங்களோ, என்னை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞானியிடம் சென்று சீடனாக இருக்கும்படி நிர்பந்திக்கிறீர்களே?” என்று கேட்டான்.
தன்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்த அந்த சீடனின் தலையை வருடிக்கொடுத்த குரு, “உனக்கு என்னால் வேத சாஸ்திர ஞானத்தை மட்டும்தான் கற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலான பிரம்ம ஞானத்தை உனக்கு வழங்க, வேறு ஒரு குரு காத்துக் கொண்டிருக்கிறார். காசியில் உள்ள வனத்தில் வசித்து வரும் அவரைப் போய் சந்தித்து, பிரம்ம ஞானத்தை நீ அடைய வேண்டும் என்பதே என் ஆசை. ஒரு புழுவானது, வளர்ச்சியடையும் வரையே தன் கூட்டிற்குள் இருக்கலாம். அது வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டுமானால், கூட்டை கடந்து சென்றுதான் ஆக வேண்டும். அதனால் நீயும் வளர்ச்சியை நோக்கிச் செல்” என்றார்.
மனதளவில் பிரிய மனமின்றி அங்கிருந்து புறப்பட்டான், அந்த சீடன். காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை தரிசித்தான். பின், நகரை விட்டு பல மை தூரம் தள்ளியிருந்த வனத்தை நோக்கி பயணப்பட்டான். வனத்திற்குள் புகுந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. காட்டில் கிடைத்த பழங்களையும், கிழங்கு களையும், ஆங்காங்கே தென்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அருந்திய படியும் நாட்களை கடத்தினான். அந்த காட்டில் பாதியை, தன் காலால் அளந்து விட்ட போதிலும், ஒருவர் கூட சீடனின் கண்ணுக்குத் தென்படவில்லை. இருந்தாலும் குருவின் வார்த்தையில் இருந்த நம்பிக்கையில், மேலும் சில மைல் தூரம் காட்டிற்குள் நடக்கத் தொடங்கினான்.
வெகு தூரம் நடந்ததால், தாகம் உண்டானது. சோர்வை நீக்க அங்கே தென்பட்ட குளம் ஒன்றில் நீர் அருந்த குனிந்தான். அப்போது அந்த குளத்தின் நீர்பரப்பின் மேல், ஒரு கோவிலின் கோபுரம் நிழலாடியது. ஆச்சரியம் அடைந்தவன், தலையை உயர்த்திப் பார்க்க, அழகிய கோவில் ஒன்று தென்பட்டது. ‘அடர்ந்த வனத்திற்குள், இப்படி ஒரு ஆலயமா?’ என்று ஆச்சரியப்பட்டுப் போனான். தாகம் கூட தணிந் ததுபோல் தோன்றியது. உடனடியாக கோவிலை நோக்கி நடைபோட்டு, அதன் உள்ளே நுழைந்தான். வாசலில் கால் வைத்தபோதே, ஒரு குரல் கேட்டது.
“உனக்காகத்தான் காத்திருக்கிறேன். என்னை பார்ப்பதற்காகத்தான், உன்னுடைய குரு இங்கே உன்னை அனுப்பிவைத்தார்” என்ற அந்த குரல் வந்த திசையை நோக்கி பயணித்தான். தன்னுடைய புதிய குருவைப் பார்க்கும் ஆவல் அவனை உந்தித் தள்ளியது. ஆனால் அந்த ஆவலை, கோபமாக மாற்றியது சீடன் அங்கு கண்ட காட்சி. ஆம்.. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், கோவிலின் கருவறையில் இருந்த லிங்கத்தின் ஆவுடை மீது படுத்திருந்தார். தன் தலைக்கு கை வைத்து படுத்திருந்த அவரது கால், லிங்கத்தின் தலை மீது இருந்தது.
இதைக் கண்டதும் அந்த சீடனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. “ஐயா.. உங்களைப் பற்றி என்னுடய குரு மிகவும் பெருமையாகக் கூறினார். ஆனால் உங்கள் செய்கை, நீங்கள் அந்த புகழுக்கு தகுதியில்லாதவர் என்பது போல் இருக்கிறது. நான் கோபத்தில் ஏதாவது செய்வதற்கு முன்பாக, லிங்கத்தின் மீது உள்ள உங்கள் கால்களை எடுங்கள்” என்று கத்தினான்.
ஆனால் பரதேசி தோற்றத்தில் இருந்தவரோ, “என்னால் கால்களை எடுக்க முடியாது. நீ அவ்வளவு சிறந்த பக்திமானாக இருந்தால், நீயே என்னுடைய கால்களை எடுத்து வேறு பக்கமாக திருப்பி வை” என்றார்.
சீடனும், அந்த சேட்டைக்காரரின் கால்களை சிவலிங்கத்தின் மேலிருந்து தூக்கி, வேறு ஒரு திசைக்கு திருப்பி வைத்தான். ஆனால் அவரது கால் வைக்கப்பட்ட இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இதனால் பதறிப்போய், சட்டென்று அவரது காலை தூக்கிப் பிடித்து, வேறொரு திசைக்கு திருப்பினான். அங்கும் அதே போல் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இப்படி சீடன், பரதேசியின் கால்களை தூக்கி வைக்க நினைத்த இடத்தில் எல்லாம் சிவலிங்கம் தோன்றி மறைந்தது. இதனால் அவரது காலை கீழே வைக்காமல், தூக்கியபடியே நின்றிருந்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் ஒரு சிவலிங்கம் தோன்று கிறதே என்று நினைத்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக அந்த பரதேசியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து, அவரது காலை எடுத்து தன்னுடைய தலையின் மீது வைத்தான். அந்த நொடியில் அவனே சிவமாக மாறிப்போனான். பரப்பிரம்மத்தின் உண்மையை உணர்ந்தான். அங்கிருந்த பரதேசி மறைந்தார். சீடனுக்கு புரிந்து விட்டது. தன்னை ஆட்கொள்ளவந்தவர், இறைவன் சிவபெருமானே என்று.
ஆம்.. நாம் அந்த ஈசனின் திருவடியை பற்றிக்கொண்டாலே போதுமானது, பிரம்ம ஞானத்தை அடையலாம். அதோடு ஈசனின் அருளால் முக்தியையும் அடையலாம்.
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் வரும் பாடலில் ஒன்று இது.
இந்தப் பாடலில் வரும் வரிகளை உண்மையென்று உணர்த்தும் வகையில், இறைவனின் திருவடியை சேர்வதே, முக்திக்கான வழி என்பதை எடுத்துரைக்கும் ஆன்மிகக் கதை ஒன்றை பார்க்கலாம்.
ஓங்கி உயர்ந்து, அகன்று, பரந்து விரிந்திருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்தார், குரு. அவரது முன்பாக இருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தன. தன் குருவிடம் கல்வி பயின்றவர் களிலேயே, மிகவும் புத்திசாலி, மனதிடம் கொண்டவன் என்றெல்லாம் பெயர் எடுத்த முதன்மை சீடன்தான், இன்று எதையோ இழந்தது போல கண்ணில் நீர்மல்க, தன் குருவின் முன்பாக அமர்ந்திருந்தான். தன் குருவின் கால்களை பற்றியபடியே பேசத் தொடங்கினான்.
“குருவே.. வேத சாஸ்திரங்களையும், அதன் உண்மை பொருளையும் எனக்கு கற்றுக்கொடுத்தவர் நீங்கள். எனக்கு ஏற்பட்ட அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து, என்னை உயர்ந்தவனாக மாற்றியவர் நீங்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு பணிவிடை செய்வதிலும், உங்களுடனேயே இருப்பதிலும்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கொண்டிருக்கிறேன். ஆனால் தாங்களோ, என்னை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞானியிடம் சென்று சீடனாக இருக்கும்படி நிர்பந்திக்கிறீர்களே?” என்று கேட்டான்.
தன்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்த அந்த சீடனின் தலையை வருடிக்கொடுத்த குரு, “உனக்கு என்னால் வேத சாஸ்திர ஞானத்தை மட்டும்தான் கற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலான பிரம்ம ஞானத்தை உனக்கு வழங்க, வேறு ஒரு குரு காத்துக் கொண்டிருக்கிறார். காசியில் உள்ள வனத்தில் வசித்து வரும் அவரைப் போய் சந்தித்து, பிரம்ம ஞானத்தை நீ அடைய வேண்டும் என்பதே என் ஆசை. ஒரு புழுவானது, வளர்ச்சியடையும் வரையே தன் கூட்டிற்குள் இருக்கலாம். அது வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டுமானால், கூட்டை கடந்து சென்றுதான் ஆக வேண்டும். அதனால் நீயும் வளர்ச்சியை நோக்கிச் செல்” என்றார்.
மனதளவில் பிரிய மனமின்றி அங்கிருந்து புறப்பட்டான், அந்த சீடன். காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை தரிசித்தான். பின், நகரை விட்டு பல மை தூரம் தள்ளியிருந்த வனத்தை நோக்கி பயணப்பட்டான். வனத்திற்குள் புகுந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. காட்டில் கிடைத்த பழங்களையும், கிழங்கு களையும், ஆங்காங்கே தென்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அருந்திய படியும் நாட்களை கடத்தினான். அந்த காட்டில் பாதியை, தன் காலால் அளந்து விட்ட போதிலும், ஒருவர் கூட சீடனின் கண்ணுக்குத் தென்படவில்லை. இருந்தாலும் குருவின் வார்த்தையில் இருந்த நம்பிக்கையில், மேலும் சில மைல் தூரம் காட்டிற்குள் நடக்கத் தொடங்கினான்.
வெகு தூரம் நடந்ததால், தாகம் உண்டானது. சோர்வை நீக்க அங்கே தென்பட்ட குளம் ஒன்றில் நீர் அருந்த குனிந்தான். அப்போது அந்த குளத்தின் நீர்பரப்பின் மேல், ஒரு கோவிலின் கோபுரம் நிழலாடியது. ஆச்சரியம் அடைந்தவன், தலையை உயர்த்திப் பார்க்க, அழகிய கோவில் ஒன்று தென்பட்டது. ‘அடர்ந்த வனத்திற்குள், இப்படி ஒரு ஆலயமா?’ என்று ஆச்சரியப்பட்டுப் போனான். தாகம் கூட தணிந் ததுபோல் தோன்றியது. உடனடியாக கோவிலை நோக்கி நடைபோட்டு, அதன் உள்ளே நுழைந்தான். வாசலில் கால் வைத்தபோதே, ஒரு குரல் கேட்டது.
“உனக்காகத்தான் காத்திருக்கிறேன். என்னை பார்ப்பதற்காகத்தான், உன்னுடைய குரு இங்கே உன்னை அனுப்பிவைத்தார்” என்ற அந்த குரல் வந்த திசையை நோக்கி பயணித்தான். தன்னுடைய புதிய குருவைப் பார்க்கும் ஆவல் அவனை உந்தித் தள்ளியது. ஆனால் அந்த ஆவலை, கோபமாக மாற்றியது சீடன் அங்கு கண்ட காட்சி. ஆம்.. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், கோவிலின் கருவறையில் இருந்த லிங்கத்தின் ஆவுடை மீது படுத்திருந்தார். தன் தலைக்கு கை வைத்து படுத்திருந்த அவரது கால், லிங்கத்தின் தலை மீது இருந்தது.
இதைக் கண்டதும் அந்த சீடனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. “ஐயா.. உங்களைப் பற்றி என்னுடய குரு மிகவும் பெருமையாகக் கூறினார். ஆனால் உங்கள் செய்கை, நீங்கள் அந்த புகழுக்கு தகுதியில்லாதவர் என்பது போல் இருக்கிறது. நான் கோபத்தில் ஏதாவது செய்வதற்கு முன்பாக, லிங்கத்தின் மீது உள்ள உங்கள் கால்களை எடுங்கள்” என்று கத்தினான்.
ஆனால் பரதேசி தோற்றத்தில் இருந்தவரோ, “என்னால் கால்களை எடுக்க முடியாது. நீ அவ்வளவு சிறந்த பக்திமானாக இருந்தால், நீயே என்னுடைய கால்களை எடுத்து வேறு பக்கமாக திருப்பி வை” என்றார்.
சீடனும், அந்த சேட்டைக்காரரின் கால்களை சிவலிங்கத்தின் மேலிருந்து தூக்கி, வேறு ஒரு திசைக்கு திருப்பி வைத்தான். ஆனால் அவரது கால் வைக்கப்பட்ட இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இதனால் பதறிப்போய், சட்டென்று அவரது காலை தூக்கிப் பிடித்து, வேறொரு திசைக்கு திருப்பினான். அங்கும் அதே போல் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இப்படி சீடன், பரதேசியின் கால்களை தூக்கி வைக்க நினைத்த இடத்தில் எல்லாம் சிவலிங்கம் தோன்றி மறைந்தது. இதனால் அவரது காலை கீழே வைக்காமல், தூக்கியபடியே நின்றிருந்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் ஒரு சிவலிங்கம் தோன்று கிறதே என்று நினைத்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக அந்த பரதேசியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து, அவரது காலை எடுத்து தன்னுடைய தலையின் மீது வைத்தான். அந்த நொடியில் அவனே சிவமாக மாறிப்போனான். பரப்பிரம்மத்தின் உண்மையை உணர்ந்தான். அங்கிருந்த பரதேசி மறைந்தார். சீடனுக்கு புரிந்து விட்டது. தன்னை ஆட்கொள்ளவந்தவர், இறைவன் சிவபெருமானே என்று.
ஆம்.. நாம் அந்த ஈசனின் திருவடியை பற்றிக்கொண்டாலே போதுமானது, பிரம்ம ஞானத்தை அடையலாம். அதோடு ஈசனின் அருளால் முக்தியையும் அடையலாம்.
விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெறுவதற்காக, சிறப்புக்குரிய ஒருவரைப் பலியிட வேண்டியிருந்தது. அதற்காக அர்ச்சுனனின் பிள்ளைகளில் ஒருவனான அரவான் முன்வந்தான். ஆனால் பலியாவதற்கு முன்பாக, திருமணம் செய்துகொள்ள அவன் விரும்பினான். இறக்கப் போகும் ஒருவனுக்குப் பெண் கொடுக்க, யார்தான் முன்வருவார்கள்? அரவானை திருமணம் செய்ய யாரும் தயாராக இல்லை. இதனால் அவனைப் பலியிடும் நாளும் தள்ளிக்கொண்டே போனது. போருக்கான நாளோ நெருங்கிவிட்டது.
இதையறிந்த கிருஷ்ணன், தானே மோகினி என்னும் பெண் உருவம் எடுத்து அரவானை மணம்புரிந்தார். அதற்கு அடுத்த நாள், அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அகற்றி, வெள்ளைச் சேலை உடுத்தி, விதவைக் கோலம் தரித்தாள். அதன்பின் சுயவடிவம் அடைந்த கிருஷ்ணன், பாரதப் போரினை முன்னின்று நடத்தி பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப்படி அரவானுக்காக பெண் வேடத்தில் வந்த கிருஷ்ணனின் அம்சம்தான் திருநங்கைகள் என்கிறது புராணங்கள்.
திருநங்கைகள் என்றால், ஆணாகப் பிறந்து பின்னாளில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள். அதாவது, ஆண் உடம்பில் பெண்ணுக்குரிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ‘திரு’ என்றால் ‘ஆண்மகன்’ என்றும், ‘நங்கை’ என்றால் ‘பெண் மகள்’ என்றும் பொருள். இரண்டும் சேர்ந்ததே ‘திருநங்கை’ என்ற வாக்கியம். இவர்கள், தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.
அன்று கிருஷ்ணன், மோகினியாக உருமாறி அரவானை மணந்ததை நினைவுகூரும் வகையில்தான், திருநங்கைகள் தங்கள் கணவனாக அரவானை ஏற்று சித்ரா பவுர்ணமி நன்னாளில் திருமணம் செய்து கொள்கின்றனர். மறுநாள் அதி காலையிலேயே தாலி அறுத்தல் சடங்கில் ஈடுபட்டு, விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து வழிபடுகிறார்கள்.
மகாபாரதக் கதையைக் கூறும் பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில், அரவானைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் ‘களப்பலி’ என்னும் பலி சடங்கினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்காக வீரன் ஒருவனை பலி கொடுத்தல் ‘களப்பலி’ எனப்படுகிறது. இந்த பலியைக் கொடுப்பவர்கள், போர்க்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த களப்பலி சடங்கில் அழகும், துணிவும் கொண்ட வீரன் ஒருவன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளிதேவிக்கு பலி கொடுக்க முன் வருவான். அப்படி வந்தவன்தான் அரவான்.
கிருஷ்ணன் ஆசியுடன் பின்னாளில், கூவாகத்தில் கூத்தாண்டவர் எனும் பெயரில் அரவான் திருகோவில்கொண்டார். இத்தலத்திற்கு நோயுற்ற ஆண்கள், குழந்தைகள், பெண்கள் வந்து வழிபட்டால் உடல் நோய்கள் குணமாகும். திருநங்கைகள் இங்கு வழிபட்டுவர வாழ்வின் அனைத்துவகைப் நற்பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திடுவர். மரணபயம், ஆண்மை குறைபாடுகள் அகல, ஒரு மண்டலம் கூத்தாண்டவரை வழிபட்டு வந்தால் நலம் விளையும். சித்ரா பவுர்ணமி நன்னாளில் இங்கு வந்து வழிபட வாழ்க்கையில் மன அழுத்தத்துடன் வாழ்பவர்களின் துன்பங்கள் விலகி, இன்ப வாழ்வு கிடைக்கும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது எனவே திருவிழா நடைபெறவில்லை
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இதையறிந்த கிருஷ்ணன், தானே மோகினி என்னும் பெண் உருவம் எடுத்து அரவானை மணம்புரிந்தார். அதற்கு அடுத்த நாள், அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அகற்றி, வெள்ளைச் சேலை உடுத்தி, விதவைக் கோலம் தரித்தாள். அதன்பின் சுயவடிவம் அடைந்த கிருஷ்ணன், பாரதப் போரினை முன்னின்று நடத்தி பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப்படி அரவானுக்காக பெண் வேடத்தில் வந்த கிருஷ்ணனின் அம்சம்தான் திருநங்கைகள் என்கிறது புராணங்கள்.
திருநங்கைகள் என்றால், ஆணாகப் பிறந்து பின்னாளில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள். அதாவது, ஆண் உடம்பில் பெண்ணுக்குரிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ‘திரு’ என்றால் ‘ஆண்மகன்’ என்றும், ‘நங்கை’ என்றால் ‘பெண் மகள்’ என்றும் பொருள். இரண்டும் சேர்ந்ததே ‘திருநங்கை’ என்ற வாக்கியம். இவர்கள், தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.
அன்று கிருஷ்ணன், மோகினியாக உருமாறி அரவானை மணந்ததை நினைவுகூரும் வகையில்தான், திருநங்கைகள் தங்கள் கணவனாக அரவானை ஏற்று சித்ரா பவுர்ணமி நன்னாளில் திருமணம் செய்து கொள்கின்றனர். மறுநாள் அதி காலையிலேயே தாலி அறுத்தல் சடங்கில் ஈடுபட்டு, விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து வழிபடுகிறார்கள்.
மகாபாரதக் கதையைக் கூறும் பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில், அரவானைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் ‘களப்பலி’ என்னும் பலி சடங்கினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்காக வீரன் ஒருவனை பலி கொடுத்தல் ‘களப்பலி’ எனப்படுகிறது. இந்த பலியைக் கொடுப்பவர்கள், போர்க்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த களப்பலி சடங்கில் அழகும், துணிவும் கொண்ட வீரன் ஒருவன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளிதேவிக்கு பலி கொடுக்க முன் வருவான். அப்படி வந்தவன்தான் அரவான்.
கிருஷ்ணன் ஆசியுடன் பின்னாளில், கூவாகத்தில் கூத்தாண்டவர் எனும் பெயரில் அரவான் திருகோவில்கொண்டார். இத்தலத்திற்கு நோயுற்ற ஆண்கள், குழந்தைகள், பெண்கள் வந்து வழிபட்டால் உடல் நோய்கள் குணமாகும். திருநங்கைகள் இங்கு வழிபட்டுவர வாழ்வின் அனைத்துவகைப் நற்பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திடுவர். மரணபயம், ஆண்மை குறைபாடுகள் அகல, ஒரு மண்டலம் கூத்தாண்டவரை வழிபட்டு வந்தால் நலம் விளையும். சித்ரா பவுர்ணமி நன்னாளில் இங்கு வந்து வழிபட வாழ்க்கையில் மன அழுத்தத்துடன் வாழ்பவர்களின் துன்பங்கள் விலகி, இன்ப வாழ்வு கிடைக்கும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது எனவே திருவிழா நடைபெறவில்லை
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா வழிபாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்து வருகிறது.
நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொரோனா வழிபாட்டுதல் படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்து வருகிறது.
விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகன சேவை, இரவு யானை வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் வேத நாராயணசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்[மாற்கு:10:21]. ஐசுவரியமான தலைவனிடம் உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு; பின்பு என்னை பின்பற்றி என்று இயேசு சொன்ன போது அவன் மிகுந்த துக்கமடைந்தவனாய் போனான். இங்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவன் துக்கமடைந்தான் என தன் கொள்கையை மாற்றவில்லை.
நாம் எப்போதும் நமக்காக உலக பொக்கிஷங்களை சேர்க்கிறோம்.ஆனால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க இயேசு கிறிஸ்து நம்மை அறிவுறுத்துகிறார்[லூக்கா:12:21].
ஏனெனில் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?[மத்தேயு:16:26] மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாது. பரலோகத்தின் பொக்கிஷமாகிய நம்முடைய ஆத்துமாவை எதை நஷ்டப்பட்டாகிலும் நாம் சம்பாதிக்க வேண்டும். அன்பானவர்களே நம்முடைய பொருட்கள் ஐசுவரியம் யாவும் கர்த்தர் தந்தது. அதை பிரயோஜனப்படுத்தி தேவனுக்காய் ஆத்துமாக்களை சம்பாதித்து அவர்களையும் தேவனுக்கு சீடராக்குவோம். சீஷத்துவம் ஒரு தொடர்செயல்; சீஷராவோம் சீஷராக்குவோம்.[Discipleship is a chain process. So be a Disciple and Make Disciples]
மோசே தான் உலக சந்தோஷங்களை வெறுத்து தேவனுக்காய் பொக்கிஷங்களை சேர்த்து தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனான். மோசேயைப் போல நாமும், தேவனை பின்பற்ற தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து தேவனை பின்பற்றுவோம்.
இன்றைய கிறிஸ்தவ உலகம் சிலுவையை பற்றி போதிப்பதை விட “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நோயில்லாத கடனில்லாத ஆசீர்வாதமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று ஆசீர்வாதத்தை மட்டுமே போதித்து அழைக்கின்றன. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எப்படியாய் வளர்வது, பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று உணர்த்துகிற வசனங்களை விட ஆசீர்வாத வசனங்களை தான் எங்கும் பார்க்க முடிகிறது. சிலுவையின் போதனைகளை நாம் கேட்பது மிக அரிது. இதனால் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும் என்பதை உணராமல், நம் இருதயம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்க்க வாஞ்சிக்கிறது. இதனால் ஆசீர்வாதங்களை மட்டுமே நம்பி வரும் ஜனங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வரும் போது, அவைகள் முட்களைப் போல அவர்களை நெருக்குவதால் விசுவாசத்திலிருந்து விழுந்து போக ஏதுவாய் அமைகிறது. பவுலைப் போல கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சிலுவையை சுமப்போம் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.
கிறிஸ்துவின் பாடு மரணத்தை இந்நாட்களில் தியானிக்கிற நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் மேன்மையான அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்மை வெறுமையாக்கி சாத்தானின் சதிகளை முறியடித்து அனுதினமும் சிலுவையை சுமந்து அவருக்கு சீஷராகுவோம். மற்றவர்களையும் சீஷராக்குவோம். ஆத்துமாக்களை தேவனுக்கு ஆதாயப்படுத்துவது மட்டுமல்ல புதிய சீஷர்களையும் உருவாக்குவோம். இந்த உலகத்தை தேவனுக்காய் ஆதாயப்படுத்துவோம். “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற கட்டளையை இயேசு கிறிஸ்து பரமேறுமுன் நமக்கு கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவர் விட்டுசென்ற பணியை செய்து நிறைவேற்றினர். இன்று இந்த பனியை செய்து நிறைவேற்ற நம்மை அழைக்கிறார். இந்த மேன்மையான அழைப்புக்கு நம்மையும் அர்ப்பணிப்போமா? நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை தினமும் சுமந்து சிலுவையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்போம்.தேவனுடைய வருகை மிக சமீபம். ஆயத்தமாவோம் ஆயத்தமாக்குவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பாத்திரராய் மாறுவோம்.
இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்
விசுவாசத்தில் முன்நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்.
இந்த பாடல் வரிகள் நம் இருதயத்தில் எப்போதும் தொனித்து கொண்டே இருக்கட்டும். செயல்படும் கிறிஸ்தவர்களாய் மாறுவோம்.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
நாம் எப்போதும் நமக்காக உலக பொக்கிஷங்களை சேர்க்கிறோம்.ஆனால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க இயேசு கிறிஸ்து நம்மை அறிவுறுத்துகிறார்[லூக்கா:12:21].
ஏனெனில் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?[மத்தேயு:16:26] மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாது. பரலோகத்தின் பொக்கிஷமாகிய நம்முடைய ஆத்துமாவை எதை நஷ்டப்பட்டாகிலும் நாம் சம்பாதிக்க வேண்டும். அன்பானவர்களே நம்முடைய பொருட்கள் ஐசுவரியம் யாவும் கர்த்தர் தந்தது. அதை பிரயோஜனப்படுத்தி தேவனுக்காய் ஆத்துமாக்களை சம்பாதித்து அவர்களையும் தேவனுக்கு சீடராக்குவோம். சீஷத்துவம் ஒரு தொடர்செயல்; சீஷராவோம் சீஷராக்குவோம்.[Discipleship is a chain process. So be a Disciple and Make Disciples]
மோசே தான் உலக சந்தோஷங்களை வெறுத்து தேவனுக்காய் பொக்கிஷங்களை சேர்த்து தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனான். மோசேயைப் போல நாமும், தேவனை பின்பற்ற தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து தேவனை பின்பற்றுவோம்.
இன்றைய கிறிஸ்தவ உலகம் சிலுவையை பற்றி போதிப்பதை விட “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நோயில்லாத கடனில்லாத ஆசீர்வாதமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று ஆசீர்வாதத்தை மட்டுமே போதித்து அழைக்கின்றன. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எப்படியாய் வளர்வது, பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று உணர்த்துகிற வசனங்களை விட ஆசீர்வாத வசனங்களை தான் எங்கும் பார்க்க முடிகிறது. சிலுவையின் போதனைகளை நாம் கேட்பது மிக அரிது. இதனால் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும் என்பதை உணராமல், நம் இருதயம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்க்க வாஞ்சிக்கிறது. இதனால் ஆசீர்வாதங்களை மட்டுமே நம்பி வரும் ஜனங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வரும் போது, அவைகள் முட்களைப் போல அவர்களை நெருக்குவதால் விசுவாசத்திலிருந்து விழுந்து போக ஏதுவாய் அமைகிறது. பவுலைப் போல கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சிலுவையை சுமப்போம் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.
கிறிஸ்துவின் பாடு மரணத்தை இந்நாட்களில் தியானிக்கிற நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் மேன்மையான அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்மை வெறுமையாக்கி சாத்தானின் சதிகளை முறியடித்து அனுதினமும் சிலுவையை சுமந்து அவருக்கு சீஷராகுவோம். மற்றவர்களையும் சீஷராக்குவோம். ஆத்துமாக்களை தேவனுக்கு ஆதாயப்படுத்துவது மட்டுமல்ல புதிய சீஷர்களையும் உருவாக்குவோம். இந்த உலகத்தை தேவனுக்காய் ஆதாயப்படுத்துவோம். “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற கட்டளையை இயேசு கிறிஸ்து பரமேறுமுன் நமக்கு கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவர் விட்டுசென்ற பணியை செய்து நிறைவேற்றினர். இன்று இந்த பனியை செய்து நிறைவேற்ற நம்மை அழைக்கிறார். இந்த மேன்மையான அழைப்புக்கு நம்மையும் அர்ப்பணிப்போமா? நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை தினமும் சுமந்து சிலுவையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்போம்.தேவனுடைய வருகை மிக சமீபம். ஆயத்தமாவோம் ஆயத்தமாக்குவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பாத்திரராய் மாறுவோம்.
இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்
விசுவாசத்தில் முன்நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்.
இந்த பாடல் வரிகள் நம் இருதயத்தில் எப்போதும் தொனித்து கொண்டே இருக்கட்டும். செயல்படும் கிறிஸ்தவர்களாய் மாறுவோம்.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வந்தார். பின்னர் காலை 5.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
தொடர்ந்து பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பேரிதாடனம் நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் கருடமண்டபம் சென்று, சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.
சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் இரண்டாம் நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
வருகிற 7-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடிமர மண்டபம் வந்தார். பின்னர் காலை 5.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
தொடர்ந்து பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை பேரிதாடனம் நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் கருடமண்டபம் சென்று, சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.
சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் இரண்டாம் நாளில் கற்பக விருட்ச வாகனத்திலும், இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 5-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 6-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
வருகிற 7-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 8-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் :
1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3) ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
ஸ்ரீ வராஹி அம்மன் துதி :
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி :
வேண்டுதல் ; செல்வம் பெருக
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
க்லீம் வாராஹி தேவியை நம :
க்லீம் வாராஹிமுகி
ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம்
வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.
ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் :
1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3) ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
ஸ்ரீ வராஹி அம்மன் துதி :
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி :
வேண்டுதல் ; செல்வம் பெருக
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
க்லீம் வாராஹி தேவியை நம :
க்லீம் வாராஹிமுகி
ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம்
வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.
ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சப்தஸ்தான விழா பக்தர்கள் இ்ன்றி நடைபெற்றது.
திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த தடைவிதித்ததை தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்திலேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சப்தஸ்தான விழா பக்தர்கள் இ்ன்றி நடைபெற்றது.
விழாவில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த தடைவிதித்ததை தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்திலேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சப்தஸ்தான விழா பக்தர்கள் இ்ன்றி நடைபெற்றது.
விழாவில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசின் தடை அறிவிப்பு இருந்தாலும் பழனிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
மலையடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த கடைகள், அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள் என பெரும்பாலான கடைகள் பூட்டியே உள்ளன. இதனால் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் என்றால், அரசின் தடை அறிவிப்பு இருந்தாலும் பழனிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு முடிதிருத்தும் தொழிலாளரை அழைத்து வருகின்றனர்.
பின்னர் பழனி அடிவார பகுதியில் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். அதன் பின்பு குடும்பத்துடன் முருகன் கோவில் நுழைவு பகுதியான பாதவிநாயகர் சன்னதி முன்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர்.
மலையடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த கடைகள், அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள் என பெரும்பாலான கடைகள் பூட்டியே உள்ளன. இதனால் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் என்றால், அரசின் தடை அறிவிப்பு இருந்தாலும் பழனிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு முடிதிருத்தும் தொழிலாளரை அழைத்து வருகின்றனர்.
பின்னர் பழனி அடிவார பகுதியில் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். அதன் பின்பு குடும்பத்துடன் முருகன் கோவில் நுழைவு பகுதியான பாதவிநாயகர் சன்னதி முன்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர்.






