என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    பெருமாளின் தெய்வீகக் காட்சி

    பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும்.
    நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ரங்கநாயகி உடனாய கஸ்தூரி ரங்கநாதப் பெருமாள் கோவில். இங்கு சயன கோலத்தில் அருளும் இறைவனின் திருமேனி, சாளக்கிராமத்தால் ஆனது என்கிறார்கள். ஆதிசேஷனின் மேல் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.


    Next Story
    ×