என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம். அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள். ‘இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்’ என்றாளாம்.

    வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு ‘வெற்றிலை’ என்று பெயர் வந்தது. ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால் தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தமான பழம். நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம்பழ மாலை சார்த்தி வழிபடுவோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.
    திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி தொடங்க உள்ளது.

    இதில் முக்கிய நிகழ்வாக மகா தேரோட்டம் நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெற உள்ளது‌. இதையடுத்து 19-ந்தேதி காலை கோவிலின் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணா மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து, தீப திருவிழாவுக்கான பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியது.

    இதில் மிக முக்கியமானதாக பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை பாதுகாக்க வைத்திருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

    இதையடுத்து அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.

    இப்பணிகள் நிறைவு பெற்றதும் 5 தேர்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவிற்கு ஏற்பாடு தயாராவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறும் போது:-

    கொரோனாவால் தடை உத்தரவு காரணமாக பஞ்ச ரதங்கள் கடந்த ஆண்டு சீரமைக்க முடியவில்லை. இந்த ஆண்டு சீரமைக்க தொடங்கியுள்ளோம். இது தொடர்ந்து தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஆண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.

    இதனால் மாடவீதியில் சாமி வீதிஉலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறவில்லை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 2-ம் அலையின் தாக்கத்திலிருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கார்த்திகை தீபத் திருவிழாவையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
    தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருந்தன.

    தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் ஆர்வமாக கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று புரட்டாசி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்ததால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று கோவில்கள் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக இன்று பெருமாள் கோவில்களிலும் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    சென்னை தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் திருப்பதி தேவஸ்தான ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள வைணவத் தலங்களிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதே போல் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், திருநீர்மலை பெருமாள் கோவில் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு இன்று காலை 6 மணி முதலே பக்தர்கள் வரத் தொடங்கினார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் இன்று காஞ்சீபுரம் வருகை தந்து வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர் மழை காரணமாக அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதை பார்த்தும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதே போல் திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

    பெருமாள் தமிழ் மந்திரம் 1:

    “அரியே, அரியே, அனைத்தும் அரியே!

    அறியேன் அறியே அரிதிருமாலை

    அறிதல் வேண்டி அடியேன் சரணம்

    திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

    மந்திரம் 2

    “ஓம் நமோ நாராயணாயா”

    ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
    ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் (48 நாட்கள்) வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இதனால், மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர். இவ்வாறு தைலக்காப்பிடும் நாட்களில் பெருமாளை அலங்கரித்திருக்கும் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு திருவடி தொடங்கி திருமுடிவரை தைலம் பூசப்படும். தைலம் பூசுவதற்காக பெருமாளின் மீதிருக்கும் வஸ்திரம் மற்றும் நகைகள் அகற்றப்பட்டுவிடுவதால் பெருமாளின் மார்புக்குக் கீழே திருவடி வரையுள்ள உள்ள பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும்.

    ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் (48 நாட்கள்) வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும். இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன.

    பொதுவாக புரட்டாசி மாதங்களில் தைலகாப்பு நடைபெறுவதால் பெருமாளின் திருவடியை பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், இந்தாண்டு கடந்த 8-ந்தேதியுடன் தைலகாப்பு நிறைவடைந்ததையொட்டி புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று(சனிக்கிழமை) முதல் பக்தர்கள் மூலவர் ரெங்கநாதர் திருவடியை தரிசிக்கலாம். மேலும் அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை ரெங்கநாதரை முழு அலங்காரத்துடன் திருவடியை தரிசிக்கலாம் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
    வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை முடித்து கொள்கிறார்கள்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டும் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவில் முன்பு சென்றார்.

    தொடர்ந்து அங்கு ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத் தால் வதம் செய்தார்.

    பின்னர் சிங்க முகமாக உருமாறி மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போர் தொடுப்பதற்காக அம்மனை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷா சூரன் மீண்டும் பெரும் கோபத்துடன் அம்ம னுடன் போர் புரிய வந்தான். அவனை யும் சூலாயுத்தால் அன்னை சம்ஹாரம் செய்தார்.

    பின்னர் சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுத்ததால் வதம் செய்தார். பின்னர் கோவில் கலை அரங்கத்தில் அம்மன் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை உற்சவ மூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அம்மன் கோவிலை வந்தடைந்த உடன் கொடி இறக்கப்பட்டு காப்பு அவிழ்க்கப்படுகிறது.

    வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை முடித்து கொள்கிறார்கள்.

    நாளை பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா விழா நிறைவு பெறுகிறது.சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்றும், நாளையும் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வில் அம்பு எய்தல் நிகழ்ச்சியையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவிற்கு மறுநாள் வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.இதற்காக கோவிலில் இருந்து முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வெள்ளியிலான வில், அம்புவை ஏந்தியபடி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து பசுமலையில் உள்ள அம்பு ஏய்தல்மண்டபத்திற்கு செல்லுவதும், மண்டபத்தை 3 முறை வலம் வந்து வில் அம்பு ஏய்தல் செய்வதும் வழக்கம்.

    ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் பசுமலையில் உள்ள மண்டபத்திற்கு செல்லுவது தவிர்க்கப்பட்டது. இதே சமயம் கோவிலுக்குள்ளே உள்திருவிழாவாக வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.
    "தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார் இயேசு
    இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு தமது பாடுகள், உயிர்த்தெழுதல் பற்றி கூறுவதும் அதேவேளை தன்னை பின்பற்ற விரும்பினால் தன்னலம் துறந்து தம் சிலுவையை சுமந்து கொண்டு தன் பின்னே வரட்டும் என தெரிவித்ததையும் நமக்கு கூறுகிறது.

    உலகில் ஒவ்வொரு மனிதனும் சுயநலத்துடன் வாழ்ந்தால் சக மனிதர்கள் வாழ முடியாது போகும். அதனால் தான் தன்னை பின்பற்றுகிறவர்களை தன்னலம் துறந்து வாருங்கள் என இயேசு அழைக்கின்றார். மக்களை அன்பு செய்வதற்காகவே இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

    அதேபோன்று அவரை பின்பற்றுகின்ற நாமும் அனுதினம் நாம் சுமக்கும் சிலுவை களோடு அவரை பின் தொடருமாறு அவர் அழைக்கின்றார்.

    சத்திய வேதம் பிறரன்பு மற்றும் தன்னைப் போல பிறரை நேசிக்கும் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

    எமது குடும்ப வாழ்வில், பொது வாழ்வில் இன்னோரன்ன நாம் சந்திக்க நேரும் அனைத்து சவால்களிலும் இயேசு எப்போதும் எம்முடனே இருக்கின்றார் என்பதை விசுவாசிப்போம்.

    எமது கஷ்டங்கள் சிலுவைகளை நாம் தனித்து சுமக்கவில்லை அவர் வாழ்க்கையில் எம்மைத் தாங்கி நம் முன் செல்கின்றார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தவக்காலத்தில் பயணிப்போம்.

    "தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார் இயேசு
    சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இறுதிநாளான நேற்று அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றுது. இதில் மலையேற அனுமதி இருக்கும் என்று நினைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலை முதலே திரண்டனர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய தடை நேற்று வரை இருந்ததால் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    பின்னர் நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சதுரகிரியில், நவராத்திரியின் கடைசி நாளான நேற்று ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி தந்தார். தொடர்ந்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் மதியம் 2 மணியில் இருந்து 3 மணி அளவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் வளாகத்தில் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு, மலைவாழ் மக்கள் விரதம் இருந்து எடுத்த வந்த முளைப்பாரி வீதி உலா நடைபெற்றது.

    பின்னர் ஆனந்தவல்லி அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விசுவநாத் மற்றும் நவராத்திரி விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளினார்.
    நவராத்திரி விழாவின் 9-வது நாளில் நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது ஆகும். இந்த நிகழ்ச்சி அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    அதுபோன்று கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நேற்று மதியம் 12.30 மணிக்கு நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் முருகப்பெருமான் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அங்கு வன்னிமரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து முருகப்பெருமான் தனது கையில் இருந்த அம்பை 5 முறை வன்னிமரத்தில் எய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது அங்கு இருந்த பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என முழக்கமிட்டனர். தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி கோவிலை வலம் வந்து முன்மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்தபோதிலும் கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் மலை மீது உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடி நின்றனர்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டது. அவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா, மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி அம்மன் சன்னதியில் ஞானாப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதியில் ஞானாப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து உற்சவமூர்த்தி சன்னதி வளாகத்தில் இருந்து பால ஞானாம்பிகை சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெய்வேத்தியம், மகாதீபாராதனை, மந்திர புஷ்பம் நடந்தது.

    நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவில் அதிகாரி நெத்தி.ராஜு மற்றும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா நேற்று நடந்தது. இதில் கொட்டும் மழையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10-வது நாளான நேற்று நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வில், அம்பு மற்றும் வாள் போன்றவை கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த உற்சவ அம்பாள் முன்பு பூஜையில் வைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் அம்மன் வேட்டைக்கு செல்லும் குதிரையை கொலு மண்டபத்துக்கு எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்து அந்த குதிரைக்கு உணவாக காணம் மற்றும் கொள்ளு படைக்கப்பட்டு இருந்தது. இரவு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    பரிவேட்டை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம் ஆகிய 8 வாசனை திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணியளவில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது அம்மனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டார்.

    வாகனத்துக்கு முன்னால் வாள், வில், அம்பு ஏந்தியபடி சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதிதெரு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், 4 வழிசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது.

    அதன்பிறகு அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர். பின்னர் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையைநோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு தென்னை இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த தென்னை இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பானாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

    பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் அம்மன் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீதசந்தான கோபாலகிருஷ்ண சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் மீண்டும் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

    பரிவேட்டை நிகழ்ச்சி நடந்த போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நிகழ்ச்சியை பார்த்தனர்.

    கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபட அனுமதிக்கப்படவில்லை.

    அம்மன் ஊர்வலமாக சென்ற பாதையில் வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    ×