என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புதூர் மண்டைக்காட்டில் கண்ணொளி அன்னை புனித லூசியா ஆலய புனிதப்படுத்துதல் மற்றும் பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
புதூர் மண்டைக்காட்டில் கண்ணொளி அன்னை புனித லூசியா ஆலய புனிதப்படுத்துதல் மற்றும் பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பிறகு அங்கிருந்து சிறப்பு திருக்கொடி பவனி நடக்கிறது.
மதியம் 3.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் இருந்து பவனியும், மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 5.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புதிய ஆலயம் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதில் பங்குதந்தை அருட்பணி சாம்.எப்.மேத்யூ, துணை தலைவர் ஜீஸஸ், செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஜெமிலன் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு பேரவை, கட்டிடக்குழு, புனித அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. தொடர்ந்து 13-ந் தேதி வரை பெருவிழா நடைபெறுகிறது.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பிறகு அங்கிருந்து சிறப்பு திருக்கொடி பவனி நடக்கிறது.
மதியம் 3.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் இருந்து பவனியும், மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 5.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புதிய ஆலயம் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதில் பங்குதந்தை அருட்பணி சாம்.எப்.மேத்யூ, துணை தலைவர் ஜீஸஸ், செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஜெமிலன் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு பேரவை, கட்டிடக்குழு, புனித அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. தொடர்ந்து 13-ந் தேதி வரை பெருவிழா நடைபெறுகிறது.
ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி... ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம் வருகிற குழப்பம் இது.
நம்மையும் நம்மைப் பெற்றவர்களையும் இந்த உலகுக்கு அளித்த, கடவுளிடம் மாறாத பக்தி செலுத்தவேண்டும். கடவுளுக்கு நிகரான முன்னோரைத் துதிக்கவேண்டும் என்று பட்டியலிடுகிறது சாஸ்திரம்!
ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி... ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம் வருகிற குழப்பம் இது.
சிராத்தமோ தர்ப்பணமோ செய்வது என்பது நம் கர்மா சம்பந்தப்பட்ட காரியம். ஒருவரின் பிறந்தநாள் என்பது நட்சத்திரத்தின்படி கொண்டாடப்படுகிறது. ஆனால் பலர் தேதியைக் கொண்டே கொண்டாடுகிறார்கள். அது வேறு விஷயம். அதேபோல், சிராத்த காரியங்கள், திதி அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகின்றன. வருடந்தோறும் தாயாரோ தந்தையோ இறந்த அந்தத் திதியில் அவர்களுக்கான காரியங்களைச் செவ்வனே செய்துவிடவேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவே, சிராத்தம் முக்கியம். தர்ப்பணம் மிக மிக அவசியம்.
பம்பா நதி என்பது புண்ணிய நதி. கங்கை போல், காவிரி போல், தாமிரபரணி போல் புண்ணியத்தை நமக்கு வழங்குகிற நதி. ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதி புதிதல்ல. பம்பையின் மகத்துவமும் தெரியாததல்ல. இந்த பம்பா நதியில், நதிக்கரையில் ஸ்ரீராமபிரான் தன் தந்தை தசரதச் சக்கரவர்த்திக்கான தர்ப்பணத்தைச் செய்தார் என்கிறது புராணம்.
எனவே, சிராத்த நாள் வருகிறதே என்பதற்காக, மாலையணிவதை, விரதம் மேற்கொள்வதைத் தள்ளிப் போடவேண்டாம் என வலியுறுத்துகிறார்கள் குருசாமிமார்கள்.
ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி... ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம் வருகிற குழப்பம் இது.
சிராத்தமோ தர்ப்பணமோ செய்வது என்பது நம் கர்மா சம்பந்தப்பட்ட காரியம். ஒருவரின் பிறந்தநாள் என்பது நட்சத்திரத்தின்படி கொண்டாடப்படுகிறது. ஆனால் பலர் தேதியைக் கொண்டே கொண்டாடுகிறார்கள். அது வேறு விஷயம். அதேபோல், சிராத்த காரியங்கள், திதி அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகின்றன. வருடந்தோறும் தாயாரோ தந்தையோ இறந்த அந்தத் திதியில் அவர்களுக்கான காரியங்களைச் செவ்வனே செய்துவிடவேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவே, சிராத்தம் முக்கியம். தர்ப்பணம் மிக மிக அவசியம்.
பம்பா நதி என்பது புண்ணிய நதி. கங்கை போல், காவிரி போல், தாமிரபரணி போல் புண்ணியத்தை நமக்கு வழங்குகிற நதி. ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதி புதிதல்ல. பம்பையின் மகத்துவமும் தெரியாததல்ல. இந்த பம்பா நதியில், நதிக்கரையில் ஸ்ரீராமபிரான் தன் தந்தை தசரதச் சக்கரவர்த்திக்கான தர்ப்பணத்தைச் செய்தார் என்கிறது புராணம்.
எனவே, சிராத்த நாள் வருகிறதே என்பதற்காக, மாலையணிவதை, விரதம் மேற்கொள்வதைத் தள்ளிப் போடவேண்டாம் என வலியுறுத்துகிறார்கள் குருசாமிமார்கள்.
எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜப் பத்து.
பொதுப் பொருள்:
மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே!
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜப் பத்து.
பொதுப் பொருள்:
மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே!
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று தேர் பவனி நடந்தது. நல்ல மிளகு, உப்பை பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. 8-ம் திருவிழாவான 1-ந் தேதி இரவு தேர் பவனி நடந்தது. அன்றைய தினம் 3 தேர்கள் பவனியாக வந்தன.
9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன. இந்த 2 நாட்களும் கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்குள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவதும் நடைபெறவில்லை.
சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. பின்னர் 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. கடந்த 2 நாட்களாக ஆலயத்துக்குள்ளே மட்டும் வலம் வந்த தேர்கள் நேற்று வீதியில் வலம் வந்தன.
அதாவது பேராலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.
இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சவேரியார் பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு கை கழுவும் திரவங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மிட்டாய் கடைகளும் போடப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு காவல் தூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா ஆகிய 4 தேர்கள் மேள தாளங்கள் முழங்க பவனியாக கொண்டு செல்லப்பட்டன. இந்த 2 நாட்களும் கொரோனா பரவல் காரணமாக தேர் பவனியானது ஆலய வளாகத்துக்குள்ளேயே நடந்தது. மேலும் கும்பிடு நமஸ்காரம் மற்றும் உருண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவதும் நடைபெறவில்லை.
சிகர நிகழ்ச்சியாக நேற்று 10-ம் திருவிழா தேர் பவனி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. பின்னர் 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. கடந்த 2 நாட்களாக ஆலயத்துக்குள்ளே மட்டும் வலம் வந்த தேர்கள் நேற்று வீதியில் வலம் வந்தன.
அதாவது பேராலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் ரத வீதி, கம்பளம், ரெயில்வே ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தன. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, நல்ல மிளகு மற்றும் மெழுகுவர்த்தியை நேர்ச்சையாக செலுத்தினர். மாலையில் தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.
இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சவேரியார் பேராலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர். இதனால் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலயம் வரை உள்ள சாலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சவேரியார் பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களுக்கு கை கழுவும் திரவங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் பேராலயம் வரையிலும் மற்றும் சவேரியார் பேராலயத்தில் இருந்து செட்டிகுளம் வரையிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மிட்டாய் கடைகளும் போடப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் கே.அனந்தகோபன் நேற்று சபரிமலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சன்னிதானத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்ட போதிலும் முற்றிலுமாக தளர்த்தப்பட வில்லை. இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகையினை அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் முன் பதிவு தரிசன முறையை நீக்கி விட்டு, ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருபவர்கள் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு நேரடி தரிசனம் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சன்னிதானத்தில் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பக்தர்களின் வருகை குறைய காரணமாக தேவஸ்தானம் கருதுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் தங்குவதற்கான அறைகளை சுத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது
மொத்தம் உள்ள 500 அறைகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட அறைகள் தங்குவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் உள்ளது. அரசு அனுமதி அளித்தால் அதற்கான முன் பதிவு உடனடியாக தொடங்கப்படும். இது தொடர்பாக அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
அதேபோல் பக்தர்கள் பம்பை ஆற்றில் நீராடவும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு முந்தைய காலங்களைப்போல் நெய் அபிஷேகத்தை பக்தர்கள் நேரிடையாக நடத்தவும் அனுமதிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி உடனடியா கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் உடன் இருந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்ட போதிலும் முற்றிலுமாக தளர்த்தப்பட வில்லை. இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் வருகையினை அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் முன் பதிவு தரிசன முறையை நீக்கி விட்டு, ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருபவர்கள் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு நேரடி தரிசனம் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சன்னிதானத்தில் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பக்தர்களின் வருகை குறைய காரணமாக தேவஸ்தானம் கருதுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் தங்குவதற்கான அறைகளை சுத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது
மொத்தம் உள்ள 500 அறைகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட அறைகள் தங்குவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் உள்ளது. அரசு அனுமதி அளித்தால் அதற்கான முன் பதிவு உடனடியாக தொடங்கப்படும். இது தொடர்பாக அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
அதேபோல் பக்தர்கள் பம்பை ஆற்றில் நீராடவும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு முந்தைய காலங்களைப்போல் நெய் அபிஷேகத்தை பக்தர்கள் நேரிடையாக நடத்தவும் அனுமதிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி உடனடியா கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் உடன் இருந்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை கல்ப விருட்ச வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 5-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்தோற்சவம், இரவு தங்க யானை வாகன சேவை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 5-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்தோற்சவம், இரவு தங்க யானை வாகன சேவை நடக்கிறது.
கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில்தான், சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றினார் என்று புராணங்கள் சொல்கின்றன. இதனால் கார்த்திகை பவுர்ணமி சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அது போலவே கார்த்திகை மாத அமாவாசை தினமும் சிறப்புக்குரிய ஒரு நாள்தான். ஏனெனில் இந்த நாளில்தான், திருப்பாற்கடலில் இருந்து லட்சுமி தேவி வெளிப்பட்டாள் என்கிறார்கள். இந்த தினத்தில் லட்சுமியோடு, நம்முடைய முன்னோர்களையும் வழிபாடு செய்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
வீட்டின் எல்லா அழகான பகுதிகளிலும் லட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. எனவே கார்த்திகை அமாவாசை அன்று, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடம் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் லட்சுமி இருக்கும் இடங்கள்தான். எனவே நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அழகாக வைத்திருந்தாலே அன்னை மகாலட்சுமியின் அருளோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
இந்த லட்சுமி வழிபாட்டோடு, கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் கிடைக்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். கார்த்திகை அமாவாசை நாளில் விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டின் எல்லா அழகான பகுதிகளிலும் லட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. எனவே கார்த்திகை அமாவாசை அன்று, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடம் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் லட்சுமி இருக்கும் இடங்கள்தான். எனவே நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அழகாக வைத்திருந்தாலே அன்னை மகாலட்சுமியின் அருளோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
இந்த லட்சுமி வழிபாட்டோடு, கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் கிடைக்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். கார்த்திகை அமாவாசை நாளில் விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கார்த்திகை திருஏடுவாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17 நாட்கள் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்றாகும்.
இங்கு வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்ட சாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகள் மற்றும் அருள் வாக்குகளை ஏடாக வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட திரு ஏடுவாசிப்புத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது.
முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து பணிவிடையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சியினை பால. ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். பால.லோகாதிபதி, வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இரவு 8 மணிக்கு வாகன பவனியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
விழாவின் பதினைந்தாம் நாளன்று அதாவது 17-ந்் தேதி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. அன்று திருக்கல்யாண நிகழ்ச்சி திருஏடாக வாசிக்கப்படுகிறது. பெண்கள் திருமண சீர்வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பழங்கள் அடங்கிய பொருட்களை சுருள்களாக படைத்து அய்யாவை வழிபடுவது வழக்கம்.
விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சாமிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில் காலை-மாலை பணிவிடையும் பகலில் உச்சிபடிப்பும் மாலையில் திருஏடுவாசிப்பும் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.
இங்கு வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்ட சாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகள் மற்றும் அருள் வாக்குகளை ஏடாக வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட திரு ஏடுவாசிப்புத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது.
முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து பணிவிடையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சியினை பால. ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். பால.லோகாதிபதி, வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இரவு 8 மணிக்கு வாகன பவனியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
விழாவின் பதினைந்தாம் நாளன்று அதாவது 17-ந்் தேதி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. அன்று திருக்கல்யாண நிகழ்ச்சி திருஏடாக வாசிக்கப்படுகிறது. பெண்கள் திருமண சீர்வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பழங்கள் அடங்கிய பொருட்களை சுருள்களாக படைத்து அய்யாவை வழிபடுவது வழக்கம்.
விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சாமிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில் காலை-மாலை பணிவிடையும் பகலில் உச்சிபடிப்பும் மாலையில் திருஏடுவாசிப்பும் இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக்கோவிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக்கோவிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று தன்வந்திரி ஜெயந்தி உற்சவம் நடந்தது. அதையொட்டி உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று பரவாமல் மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி கோவிலில் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்தது.
அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சானூர் கோவிலில் நேற்று முத்துப்பந்தல் வாகன சேவை, சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதிதாயார் எழுந்தருளி காட்சியளித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் முத்துப்பந்தல் வாகனத்தில், ‘ஆதிலட்சுமி தேவி’ அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிம்ம வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவையில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா, துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு அனுமந்த வாகன சேவை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிம்ம வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவையில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா, துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு அனுமந்த வாகன சேவை நடக்கிறது.
வருகிற 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இவ்விழா பகல் பத்து, ராப்பத்து என 20 நாட்கள் விமரிசையாக நடைபெறும். வருகிற 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைகூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் முத்தரசு, சக்திவேல், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் கோவிலில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் ரங்கா, ரங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், கருடாழ்வார் சன்னதி, ஆரியபட்டா வாசல், கொடிமரம், துரை பிரகாரம், அர்ஜுன மண்டபம், கிளிமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், பரமபத வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி உள்பட கோவில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைகூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் முத்தரசு, சக்திவேல், மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் கோவிலில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் ரங்கா, ரங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், கருடாழ்வார் சன்னதி, ஆரியபட்டா வாசல், கொடிமரம், துரை பிரகாரம், அர்ஜுன மண்டபம், கிளிமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், பரமபத வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி உள்பட கோவில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:
மகாவிஷ்ணு மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் நாம் நினைத்த காரியங்களெல்லாம் நிறைவேற்றித் தருவார் பரந்தாமன்.
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:
மகாவிஷ்ணு மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் நாம் நினைத்த காரியங்களெல்லாம் நிறைவேற்றித் தருவார் பரந்தாமன்.






