என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.

    இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.

    சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார். பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.

    இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினரின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சபேஷின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேனிசைத் தென்றல்

    தேவாவின் இளவல்

    இசையமைப்பாளர்

    சபேஷ் மறைவு

    மனவலியைத் தருகிறது

    கலையன்றி

    வேறொன்றும் அறியாத

    இசையே வாழ்வென்று வாழ்ந்த

    ஒரு சகோதரர் சபேஷ்

    அமைதியானவர்;

    அவர் பேசியதைவிட

    வாசித்ததே அதிகம்

    அவரது மறைவு

    தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல

    வாசிக்கப்படும்

    இசைக்கருவிகளுக்கெல்லாம்

    இழப்பாகும்

    ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்

    அடங்கிவிட்டான்

    அவரது ஆருயிர்

    அமைதி பெறட்டும்

    ஆழ்ந்த இரங்கல்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டன் மகளிடம் விஜய் ரசிகர் ஒருவர் தெனாவட்டாக பேசி வாங்கி கட்டியுள்ளார்.

    ஜோவிடா லிவிங்ஸ்டன் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா லிவிங்ஸ்டன் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவின் கமெண்ட்ஸ் செக்ஷனில் விஜய் ரசிகர் ஒருவர், "உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?" என்று கேள்வி கேட்டார்.

    இந்த கேள்வியால் கடுப்பான ஜோவிடா, "ஓ... ஹாய் TVK. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன்" என்று பதிலடி கொடுத்தார்.

    ஜோவிடாவின் இந்த பதிலடி இணையத்தில் வைரலாக பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

     

    படம் அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

    திரவ் இயக்கத்தில், அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் கதையாக "மெல்லிசை" உருவாகியுள்ளது. இப்படத்தில், கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை 'மெல்லிசை' பேசுகிறது.

    ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, புரோக்டிவ் பிரபாகர் மற்றும் கண்ணன் பாரதி நடித்துள்ளனர்.

    விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தற்போது தயாரித்துள்ள 'மெல்லிசை' அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ' அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

    இந்நிலையில், 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "முதல்பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.

    வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு 'மெல்லிசை' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

    கொம்புசீவி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமைமிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'.

    இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

    தொடர்ந்து, 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில், "கொம்புசீவி" படத்தின் முதல் பாடலான "உன்ன நான் பாத்த" பாடல் வெளியாகியுள்ளது.

    • கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அற்புதமாக திரையில் தந்துள்ளார் மாரி செல்வராஜ்.
    • சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாக தொடர வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.

    இந்நிலையில், பைசன் படத்தை பாராட்டி பாஜக முன்னாள் மணிலா தலைவர் அண்ணலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

    அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு. மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு. மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கதாநாயகன் திரு. துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் திரு. பசுபதி அவர்கள், திரு. லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    சகோதரர் மாரி செல்வராஜ் அவர்கள், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
    • தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி பகிர்ந்திருந்தார்

    நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

    இந்நிலையில், தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவில் ஒருவர், "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று கிண்டல் அடித்திருந்தார்.

    அவருக்கு பதில் அளித்த சூரி, " திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.

    நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். சூரியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள்.
    • டைட்டில் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    சீதா ராமம் புகழ் ஹனு ராகவப்பு இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பிரபாஸ் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது.

    அதன்படி, இன்று வெளியான டைட்டில் போஸ்டரில் இப்படத்திற்கு Fauzi என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. டைட்டில் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

    பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் நேற்று ரூ.95 கோடி வசூலை குவித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில், டியூட் படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படம் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியானது.
    • படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

    இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியானது.

    இந்த நிலையில், இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தப் படத்தில் தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், பல மாஸ் ஹீரோக்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பூபதியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • நாளை கண்ணம்மாபேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகை மனோரமா. "ஆச்சி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறார்.

    ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த மனோரமாவின் மகனான பூபதி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பூபதி கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

    நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன்பின் சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    பூபதியின் மறைவுக்கு திரையுலங்கினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பூபதிக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை கண்ணம்மாபேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    • சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார்.
    • சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.

    இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.

    சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார். பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.

    இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் 19-ந்தேதி வெளியான படம் 'சக்தி திருமகன்'.
    • கன்னட இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    சக்தி திருமகன்:

    விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் 19-ந்தேதி வெளியான படம் 'சக்தி திருமகன்'. ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற இப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

    ஓஜி:

    தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று, தே கால் ஹிம் ஓஜி. இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

    கிஷ்கிந்தாபுரி:

    தெலுங்கில் வெளிவந்த ஹாரர் திரைப்படம் 'கிஷ்கிந்தாபுரி'. அனுபமா பரமேஸ்வரி, சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ் டப்பிங்கில் நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.

    பறை இசை நாடகம், ராம்போ சர்கஸ்:

    பறை இசையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பயோகிராஃபி திரைப்படம் 'tales of tradition : parai isai nadagam'. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கன்னட மொழி படமான ராம்போ சர்கஸும் நாளை வெளியாக உள்ளது.

    அக்யூஸ்ட்:

    இயக்குநர் ஏ.எல். விஜய்யின் சகோதரர் ஏ.எல். உதயா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அக்யூஸ்ட்'. கன்னட இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குற்றவாளியை பேருந்து மூலம் சிறைக்கு கொண்டு செல்லும் போலீஸ் அதிகாரி. அப்போது குற்றவாளியை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. குற்றவாளி தப்பித்தாரா? இல்லையா? என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

    ×