என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shanthnu
நீங்கள் தேடியது "shanthnu"
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பாக்யராஜ், தனது மகனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்யராஜ் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் சாந்தனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யராஜ் என்று மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள்.
மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கும் இராவண கோட்டம் படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். #Shanthnu #RaavanaKottam
மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
Official👍🏻Mighty thrilled to team up wid an extremely talented dir #VikramSugumaran of MadhayaanaiKootam fame💛
— Shanthnu Buddy (@imKBRshanthnu) April 27, 2019
Titled #RaavanaKottam#இராவணகோட்டம் pinning a lot of hopes on a completely new backdrop in my career💛Thanking Producer #MrKannanRavi fr dis opportunity🙏🏻@DoneChannel1pic.twitter.com/5MJxJRoUYG
முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நடிகர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மன்னிப்பு கேட்டுள்ளார். #Sarkar #Shanthnu
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார். வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் கதைத் திருட்டு புகார் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.
நேற்று ஐகோர்ட்டில் இந்த விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரான இயக்குனர் கே.பாக்யராஜ் சில பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் சர்கார் படத்தின் கதையை கூறி விளக்கியிருந்தார்.
படம் வெளியாகும் முன்னர் இப்படியாக கதையைக் கூறியதால் பலர் அதிருப்தியடைந்தனர். முக்கியமாக விஜய் ரசிகர்கள் பாக்யராஜை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்.
தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கதையை அப்பா கூறினார். அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரை கொண்டாடுவோம்.” என்று கூறியுள்ளார். சாந்தனு விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X