என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அனிருத்தின் இசையில் ஜனநாயகனில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்.

    தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத 'ராக்ஸ்டார்' ஆக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர்.

    இவர், பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மிக பிஸியான ஒரு அட்டவணையை வைத்துள்ளார்.

    அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..

    ஜனநாயகன்:

    எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜனநாயகன். தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் இசையில் ஜனநாயகனில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்.

    எல்ஐகே:

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் மெலடி பாடல்களைத் தயார் செய்துள்ளார்.

    தி பாரடைஸ்:

    தெலுங்கு திரையுலகின் 'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணையும் படம் "தி பாரடைஸ்". அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

    ஜெயிலர் 2:

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' இரண்டாம் பாகத்திற்காக அனிருத் ஏற்கனவே சில மெட்டுகளை உருவாக்கி வருவதாகவும், முதல் பாகத்தை விட பிஜிஎம் (BGM) இன்னும் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    தலைவர் 173:

    தலைவர் 173 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) மற்றும் அவரது மகள் சுஹானா கான் இணைந்து நடிக்கும் "கிங்" படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    அல்லு அர்ஜூன் ஏஏ23:

    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லீ (Atlee) இணையும் பிரம்மாண்டத் திரைப்படமான AA23க்கு அனிருத் இசையமைக்கிறார்.

    அரசன்:

    சிலம்பரசன் (STR) நடிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ('ஓ மை கடவுளே' புகழ்) இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமானத் திரைப்படம் "அரசன்". இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    தனுஷ் D57:

    தனுஷ்- அனிருத் கூட்டணி கடைசியாக 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இணைந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, தனுஷ்- அனிருத் கூட்டணி D57-ல் இணைகிறது.

    DC:

    பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் "DC" திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    மேஜிக்:

    இயக்குனர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) மற்றும் அனிருத் ரவிச்சந்தர் கூட்டணி, 'ஜெர்சி' (Jersey) படத்தின் மூலம் ஏற்படுத்திய மேஜிக்கை இப்போது 'மேஜிக்' (MAGIC) என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிகழ்த்தத் தயாராகிவிட்டனர்.

    அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சந்திப்பு.

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல், லீலாவும் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின.

    இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

    அஜித்தின் 'ரேஸிங்' பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சிபிராஜ் அஜித்தை கார் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருந்த வீடியோ வைரல் ஆனது.

    விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.

    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

    அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.

    தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும்.

    தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் ஜீவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விஜய் அண்ணனின் நடனம், ஆக்ஷன் அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என நாங்க பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவருடன் நண்பன் படத்தில் நடித்திருக்கிறேன்.

    அதுவும் பொங்கல் ரிலீஸ் தான். 14 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுக்காக தம்பி (டிடிடி) பொங்கலில் ரிலீஸ் செய்திருக்கிறோம்.

    என்னைக்குமே மக்கள் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். அவருக்காக பூவே உனக்காக படத்தில் இருந்து படங்கள் பண்ணிட்டு வந்திருக்கிறோம்.

    தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும். உண்மையிலேயே அது அவருக்கு தான் சொல்லி இருக்கிறோம்.

    எனக்கும், அவருக்கும் இடையே இருக்கும் பாண்ட் எப்படி சொல்றதுனு தெரியல. என்னைக்குமே அவருடைய ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கும்.

    எங்களுடைய ஆதரவும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்த பொங்கலை தம்பி பொங்கலாக எடுத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக இருந்தது.

    விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.

    இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.

    ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

    எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்தார்.

    இந்நிலையில், தெறி படம் ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தாணு இரண்டு அப்டேட்களை கொடுத்துள்ளார். ஆமாம்.. தெறி ரீ ரிலீஸ் ஆகும் புதிய தேதியை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அதன்படி, தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் நாளை வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

    ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.

    மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'இஷ்க்' (Ishq) என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் படம் 'ஆசை'.

    மலையாளத்தில் ஷேன் நிகம் மற்றும் ஆன் ஷீட்டல் நடித்த பாத்திரங்களில் தமிழில் கதிர் மற்றும் திவ்யபாரதி நடித்துள்ளனர்.

    தமிழில் இப்படத்தை ஜீரோ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஷிவ் மோஹா இயக்குகிறார். இப்படத்தில், லிங்கா, பூர்ணா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார்.

    ரொமாண்டிக் திரில்லரபாக உருவாகி இருக்கும் இப்படம்,'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் மற்றும் 'பேச்சுலர்' புகழ் திவ்யபாரதி ஆகிய இருவருக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆசை படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, ஆசை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    • இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் .
    • இப்படம் கவினின் 9-வது படமாகும்.

    இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். இப்படம் கவினின் 9-வது படமாகும்.

    கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

     

    இந்த நிலையில், 'Kavin 09' படத்தில் நடன மாஸ்டர் சாண்டியும் கவினுடன் இணைந்திருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3'-ல் தங்களின் நட்பின் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்த நடிகர்கள் கவின் மற்றும் சாண்டி ஆகியோர் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். "The Boys Are Back" என்று கூறி வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் "The Boys" என்ற வார்த்தை இவர்கள் பங்கேற்ற 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3'-ன் போது பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

    • இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார்.
    • ‘மெஜந்தா’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர்.

    'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனிடையே, 'மெஜந்தா' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.



    • படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும்.

    ஜெய் அமர்சிங் இயக்கத்தில் பி.ஜே.கிஷோர் தயாரிப்பில் காமெடி மற்றும் பொழுதுபோக்கு ஜானரில் உருவாகும் படம் 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்'. படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. விழாவில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், ஐ.அகமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

     

    படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது:-

    நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் அகமதிடம் "என்றென்றும் புன்னகை" படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.

    இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார். 

    • இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை என்றாலும் காதல் தினத்தையொட்டி அடுத்த மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

     

    இதற்கிடையே, பொங்கலையொட்டி விஜயின் 'தெறி' படமும் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஸ்பிரிட்'. இதில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

    மேலும், பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'ஸ்பிரிட்' படம் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். 



    • ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
    • இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

    'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.

    இந்த நிலையில் 'சிறை' படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. 



    ×