என் மலர்
சினிமா செய்திகள்
சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கப்புல் ஃப்ரெண்ட்லி. அறிமுக இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் காதல் கதையம்சம் கொண்டிருக்கிறது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கப்புல் ஃப்ரெண்ட்லி திரைப்படம் வெளியாகி பத்து நாட்களில் ரூ. 12.67 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. அஜய் குமார் ராஜூ தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு பணிகளையும், கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு ஆதித்யா ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கப்புல் ஃப்ரெண்ட்லி திரைப்படம் காதலர் தினத்தை ஒட்டி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
- படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
- கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் Made in Korea. இப்படத்தை ஆர்.ஏ. கார்த்திக் இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுவயது முதல் கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தென்கொரியா செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அங்கு கிடைக்கும் நட்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு ஃபீல்குட் மூவியாக உருவாகி உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்படம் நேரடியாக மார்ச் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கணவன், மனைவிக்குள்ளான காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் டிரெய்லர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஓ பட்டர்பிளை' படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா சாப்டர்-1 பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் புகழ் ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார்.
இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங்கிற்கு எதிராக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், ரன்வீர் சிங்கிற்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, இந்த விவகாரத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது தி பாரடைஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று 42 வயதை எட்டியுள்ள நானி, பிறந்தநாளை முன்னிட்டு, தனது 32 வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த படத்திற்கு பிளடி ரோமியோ (Bloody Romeo) என பெயரிடப்பட்டுள்ளது. பவன் கல்யாணின் ஓஜி படத்தை இயக்கிய சுஜித் இந்த படத்தை இயக்குகிறார்.
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் நானியின் சொந்த நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ கவனம் பெற்று வருகிறது. ஸ்டைலான ஆக்ஷன் கலந்த டார்க் காமெடி கதையாக இது இருக்கும் எனத் தெரிகிறது. அதேநேரம் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ பட பாணியிலும் இது அமைந்துள்ளது.
கதாநாயகியாக திரிப்தி திம்ரி அல்லது பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் கூறப்படுகிறது.
- கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது.
- கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது
உண்மையில் மத உணர்வுகளை புண்படுத்தும் பல படங்களுக்கு தணிக்கை வாரியம் சான்று வழங்குகிறது. ஆனால் ஒன்றும் இல்லாத படத்திற்கு இழுத்தடிக்கிறது என கடந்த காலங்களாகவே தணிக்கை வாரியம்மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கும் வகையில் கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்.
'தி கேரளா ஸ்டோரி' கடந்த 2023ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.
இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது.
டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை படத்தை பார்ப்பதாக கூறியுள்ளது. படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், நீதிமன்றங்கள் பொதுவாக கலை வெளிப்பாட்டில் தலையிடத் தயங்கினாலும், கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது பேசிய அவர்,
"கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது. ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கேரளா முழுவதும் நடப்பதாக நீங்கள் சித்தரித்துள்ளீர்கள். இது தவறான ஒரு தகவலை கொடுப்பதுடன், மக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டவும் கூடும். இங்குதான் தணிக்கை வாரியம் தனது பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் இதைக் கருத்தில் கொண்டீர்களா?"
பொதுவாக, நான் எந்தப் படத்திலும் தலையிடுவதில்லை. கலை சுதந்திரம். ஆனால், அது உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, கேரளா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள், இது சில வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும். நான் நாளை படத்தைப் பார்ப்பேன். நாளை படத்தின் திரையிடலை நீங்கள் ஏற்பாடு செய்யலாம்." என தெரிவித்தார்.
முன்னதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் எந்த மதத்தையோ அல்லது பிரிவையோ பாதிக்கும் எந்த பகுதியும் இல்லை என்றும், படம் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட இளம் பெண்கள் குழுவை 'லவ் ஜிகாத்தின் பலியானவர்கள்' (Victims of Love Jihad) என்ற அடையாளத்துடன் முன்னிறுத்துவதாகவும், ஆனால் கதையில் காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட கேரளாவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் வாதிட்டனர். நிலைமை இப்படி இருந்தும், இப்படத்திற்கு 'தி கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது கேரளச் சமூகத்தை மோசமான முறையில் சித்தரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து திரையிடல் நேரம் மற்றும் இடம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தற்போது 'கல்கி 2898 ஏடி' 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
- இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகமெங்கும் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தற்போது 'கல்கி 2898 ஏடி' 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'கல்கி 2898AD' 2 படப்பிடிப்புத் தளத்தில் அமிதாப் பச்சனை கமல்ஹாசன் சந்தித்தார். அமிதாப் பச்சன், கமல்ஹாசனுக்கு இடையேயான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. 'கல்கி 2898AD' 2 ஆம் பாகம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "தாய் கிழவி." ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இந்தப் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் (தலைவர் 173) ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கும். நான் ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன், சிவகார்த்திகேயன் போன்ற ஒரு ஹீரோவை இயக்குவது ஒரு கனவாக இருந்தது. நான் முதலில் அவரிடம் ஒரு கதையைச் சொன்னபோது, அவர் அதை நிராகரித்தார். பின்னர் நான் பல ஹீரோக்களை அணுகி இறுதியில் அவரிடம் திரும்பினேன்.
இந்த முறை அவர் அதை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து, அவர் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்து வருகிறார். எதிர்மறையான கட்டங்களில் கூட, அவர் என்னுடன் நின்றார். கடந்த டிசம்பரில் நான் "தாய்கிழவி" படத்தை பார்த்தேன், ஒரு விஷயம் என்னைத் தாக்கியது. இது ஒரு அற்புதமான படம், இயக்குநர் சிவா அதை மிகவும் எளிதாக கையாண்டுள்ளார்.
ஒரு வலுவான கிராமப்புறக் கதை வந்து சிறிது காலம் ஆகிவிட்டது, இது நிச்சயமாக அந்த ஒன்றாக இருக்கும். ராதிகா மேடம் தான் அந்த பெண் கமல்ஹாசன். இதற்காக அவர் நிச்சயமாக தேசிய விருதை வெல்வார்," என்றார்.
- சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
- மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தரங்க விழாவில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
கொரட்டூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தரங்க விழாவில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "அரசியலை தாண்டி ஸ்டாலின் ஐயா மேல் மதிப்பும், மரியாதையும் இருக்கு. இதுவரை ஒரு இடத்தில் கூட முகம் சுளிக்கிற மாதிரியோ, யாரையாவது கடிந்தோ நான் பார்த்ததில்லை. பண்பாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார். மனிதநேயம் மிக்கவர்" என்று தெரிவித்தார்.
- NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.
ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
- இப்படத்தின் டீசரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது.
- கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'ஆம்பள'. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.
இதே பாணியில் சுந்தர் சி- விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட 'மதகஜராஜா' படமும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது.
டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடித்து இருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ப்ரோமோ வீடியோவில் அனிருத்தின் துள்ளலான ரெட்ரோ இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இந்த பின்னணி இசையை உருவாக்கின்போது வைப் செய்த வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.






