என் மலர்
கார்
- சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
- சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது எங்கள் இலக்கு அல்ல என கூறியது.
பிரசெல்ஸ்:
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எந்த ஒரு வாகனத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மின்சார வாகனங்கள் மீதான புதிய வரி விகிதங்களை ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவின் BYD மாடல்கள் 17.4 சதவீதமும், Geely 20 சதவீதமும், SAIC 38.1 சதவீதம் வரியையும் பெறுகிறது.
உள்ளுர் உற்பத்தியாளர்களின் நலன்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், எங்கள் விரிவான விசாரணையின் தெளிவான சான்றுகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை முழுமையாக மதிக்கும் வகையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணையை இறுதி செய்யும் நோக்கில் சீன அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இப்போது ஈடுபடுவோம்.
சீனாவிலிருந்து வரும் மின்சார வாகனங்களை முற்றிலுமாகத் தடுப்பது இலக்கு அல்ல. எங்கள் இலக்கு சமநிலையை மீட்டெடுப்பது மற்றும் சீனாவில் இருந்து மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தை திறந்திருப்பதை உறுதி செய்வதாகும் என தெரிவித்தனர்.
- ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் கொண்டிருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது குறைந்த விலை எஸ்.யு.வி. மாடல் காம்பஸ் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு ஜூன் மாதம் வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய விலை குறைப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலைரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.
முன்னதாக ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல்: ஸ்போர்ட், லாங்கிடியூட், நைட் ஈகிள், லிமிடெட், பிளாக் ஷார்க் மற்றும் மாடல் எஸ் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஜீப் காம்பஸ் மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- டார்க் தீம் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரேசர் பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.
- 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அல்ட்ரோஸ் ரேசர் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அல்ட்ரோஸ் ரேசர் ஹேச்பேக் மாடல் மூன்று வேரிண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்த கார் அடோமிக் ஆரஞ்சு, அவென்யூ வைட் மற்றும் பியூர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் டோன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. இத்துடன் டார்க் தீம் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரேசர் பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறத்திலும் ஸ்போர்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 118 ஹெச்.பி. பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
- பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
உலகம் முழுக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவிலும், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்குவதற்கான பணிகளில் மும்முரம் காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த வாரம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,
மின்சார வாகனங்களை நோக்கிய மாற்றத்தை வலியுறுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை ஒழிக்கும் அரசின் திட்டத்தை அறிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் போக்குவரத்துக்கான நீர் மின்சாரத்தின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த அவர், பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
- தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் மே மாதத்தில் 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி.
- கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாட்டில் வடக்குப் பகுதிகளில் நிலவும் வெப்ப அலை காரணமாக கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 3,50,257 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 3,35,436 வாகனங்களை விட 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியாகும்.
அதன்படி, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படையில் பார்ப்போம்..
மாருதி சுசுகி

மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை 1,57,184 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,51,606 வாகன விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை ஒப்பிடுகையில், இது 3.5 சதவீத வளர்ச்சியாகும். ஏற்றுமதியில், இந்நிறுவனம் மே 2023-ல் 26,477 வாகன எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 17,367 யூனிட்களை மட்டுமே பெற்றுள்ளது.
டாடா மோட்டார்ஸ்
பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் டாடா மோட்டார்சின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தில் 74,973 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 76,766 ஆக இருந்தது.
மே 2023ல் 45,878 யூனிட்களுடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 46,697 ஆக இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 106 யூனிட்களாக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 378 யூனிட்களாக இருந்தது - இது 257 சதவீதம் வளர்ச்சி.
மே மாதத்தில் டாடா ஸ்டேபில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை 5,558 யூனிட்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,805 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதிகள் உட்பட - 4 சதவீதம் சரிவு.
எம்&எம்
மஹிந்திரா & மஹிந்திரா, அதன் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 71,682 வாகனங்களாக இருந்தது.

மே 2023-ல் நிறுவனத்தின் மொத்த விநியோகங்கள் அதன் டீலர்களுக்கு 61,415 ஆக இருந்தது.
கியா இந்தியா
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா இந்தியா கடந்த மே மாதத்தில் 19,500 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 18,766 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சோனெட் 7,433 வாகனங்களுடன் அதிக விற்பனையான மாடலாக உருவெடுத்தது. தொடர்ந்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் முறையே 6,736 மற்றும் 5,316 வாகனங்களுடன் அடுத்தடுத்து உள்ளன.
டொயோட்டா கிர்லோஸ்கர்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) மே மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் அதிகரித்து 25,273 வாகனங்களாக உள்ளது. கடந்த மாதம், உள்நாட்டில் விற்பனை 23,959 ஆகவும், ஏற்றுமதி 1,314 ஆகவும் இருந்தது.
எம்ஜி மோட்டார்ஸ்

எம்ஜி மோட்டார் இந்தியா சனிக்கிழமையன்று மொத்த விற்பனையில் 5 சதவீதம் சரிந்து 4,769 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே-ல் டீலர்களுக்கு 5,006 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ராயல் என்ஃபீல்டு
மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு, மே மாதத்தில் மொத்த விற்பனையில் 8 சதவீதம் சரிந்து 71,010 வாகனங்களாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 77,461 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில் விற்பனை 63,531 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மே மாதத்தில் 70,795 ஆக இருந்தது.
- விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- விலைகளைக் குறைப்பதன் மூலம், மாருதி சுசுகி தனது ஏஜிஎஸ் மாடல்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது, மாருதி சுசுகி நிறுவனம் தனது குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை ரூ.5,000 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆல்ட்டோ K10, S-Presso, செலிரியோ, வேகன்-ஆர், Swift, டிசையர், Baleno, Fronx மற்றும் Ignis உள்ளிட்ட பல மாடல்களுக்கு இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் ரக கார்களை மலிவு விலையில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விலை குறைக்கப்பட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விலைகளைக் குறைப்பதன் மூலம், மாருதி சுசுகி தனது ஏஜிஎஸ் மாடல்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
- ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.
- இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் eVX மாடலுடன் களமிறங்க உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாருதி eVX மாடல் அதன்பிறகு சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. வெளியீட்டுக்கு முன் மாருதி eVX மாடல் இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகின. அதில் இந்த காரின் அளவீடுகள் கிராண்ட் விட்டாராவுக்கு இணையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எனினும், முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், இந்த கார் அதிக இடவசதியை வழங்கும் என்று தெரிகிறது.

மாருதி eVX எலெக்ட்ரிக் கார் மாடலில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதே காரின் குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், குறைந்த பேட்டரி திறன் கொண்ட மாடலின் விலை சற்றே குறைவாக இருக்கும்.
- அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்தலாம்.
- இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சென்னையில் தனது முதல் 180 கிலோவாட் டி.சி. பாஸ்ட் சார்ஜிங் மையத்தை திறந்தது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் இந்த சார்ஜிங் மையம் அமைந்துள்ளது. இதில் 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் டி.சி. திறன் கொண்ட முனைகள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஹூண்டாய் நிறுவனம் தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 100 பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. இவற்றை ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்துவிதமான எலெக்ட்ரிக் வாகன பயனர்களும் பயன்படுத்த முடியும்.
முன்னதாக மும்பை, பூனே, ஆமதாபாத், ஐதராபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு என நாடு முழுக்க பத்து இடங்களில் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் நிறுவனம் திறந்து வைத்தது. இவை அனைத்திலும் மூன்று டி.சி. சார்ஜர்கள் உள்ளன.
- இவற்றின் விலை பெருமளவு குறையும்.
- வினியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர கார் உற்பத்தி பிரிவாக ஜாகுவார் லேண்ட் ரோவர் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பில் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களை அசெம்பில் செய்யும் போது, இவற்றின் விலை பெருமளவு குறையும்.
மேலும், பிரிட்டனின் சொலிஹல் ஆலையை தவிர்த்து வேறொரு பகுதியில் ரேஞ்ச் ரோவர் கார்கள் அசெம்பில் செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். புதிய முன்னெடுப்பின் மூலம், ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை கிட்டத்தட்ட ரூ. 56 லட்சம் வரை குறையும் வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. மேலும், இவற்றை டெலிவரி எடுக்க காத்திருக்கும் காலமும் பெருமளவு சரிந்துவிடும்.

உள்நாட்டில் அசெம்பில் செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வேரியண்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், HSE வேரியண்டில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. டீசல் எஞ்சின் 346 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் டைனமிக் SE வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான வினியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டன.
விலை விவரங்கள்:
ரேஞ்ச் ரோவர் ரூ. 2 கோடியே 36 லட்சம்
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரூ. 1 கோடியே 40 லட்சம்
ரேஞ்ச் ரோவர் வெலர் ரூ. 87 லட்சத்து 90 ஆயிரம்
ரேஞ்ச் ரோவர் இவோக் ரூ. 67 லட்சத்து 90 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- இந்த காரில் அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.
- இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கியா EV3 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கியா EV3 மாடல்- ஸ்டான்டர்டு மற்றும் GT லைன் என இரண்டு வேரியண்ட்களிலும், ஒன்பது விதமான நிறங்களிலும் கிடைக்கிறது.
தோற்றத்தில் கியா EV3 மாடல் EV9 போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், இந்த காரில் போதுமான இடவசதி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கியா EV3 வெளிப்புறத்தில் பிளான்க்டு-ஆஃப் கிரில், L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.

பின்புறத்தில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், அளவில் பெரிய பம்ப்பர், பிளாக் கிளாடிங், ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரிவர்ஸ் பார்கிங் கேமரா சென்சார்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஆஃப் செட் கியா லோகோ, இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் IRVM, ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்த காரில் 460 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த கார் 58.3 கிலோவாட் ஹவர் மற்றும் 81.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 283 டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும்.
- புதிய தார் மாடல் ஹார்டு-டாப் பாடி ஸ்டைல் கொண்டிருக்கும்.
- இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் 5-டோர் வேரியண்ட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய தார் 5-டோர் மாடல் உற்பத்திக்கு தயாரான நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
புகைப்படங்களின் படி புதிய தார் ஐந்து கதவுகள் கொண்ட மாடலில் முற்றிலும் புதிய டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், உள்புறத்தில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. முந்தைய ஸ்பை படங்களின் படி புதிய தார் மாடல் ஹார்டு-டாப் பாடி ஸ்டைல் கொண்டிருக்கும் என்று தெரியவந்தது.

2024 மஹிந்திரா தார் 5-டோர் மாடலில் முற்றிலும் புதிய கிரில், நீண்ட வீல்பேஸ், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் சன்ரூஃப், ரியர் ஏ.சி. வெண்ட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய தார் மாடலிலும் 2.0 லிட்டர் எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.






