என் மலர்
ஆட்டோமொபைல்
- ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் ADV 350-இன் புதிய மாடலை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய சந்தைக்கு வந்தது. புதிய அப்டேட் செய்த பிறகும் இந்த மாடலின் இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அப்படியே உள்ளன. இருப்பினும், ADV 350 இப்போது மூன்று புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் வருகிறது.
ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 30 hp பவர் மற்றும் 31.5 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் பவர் யூனிட் ஒரு அண்டர்போன் சேஸிக்குள் அமர்ந்திருக்கிறது. இது USD முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.

பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்புறத்தில் 15-இன்ச் சக்கரம் பின்புறம் 14-இன்ச் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரில் 11.7 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ADV 350 பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்பிரிங்ஸ், ஹோண்டா ரோட்-சின்க் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 5-இன்ச் TFT ஸ்கிரீன், மற்றும் ஆட்டோ-கேன்சலிங் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது.
- வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
- இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.
- 2025 ஆம் ஆண்டில் இந்த பைக்குகள் பெற்ற இரண்டாவது விலைக் குறைப்பு இதுவாகும்.
- கடந்த ஜனவரி மாதம், யமஹா அவற்றின் விலைகளை ரூ. 1.10 லட்சமாக குறைத்தது.
இந்தியாவில் சமீபத்தில் புதிய ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் மூலம், 350 சிசிக்கும் குறைவான மோட்டார்சைக்கிள்கள் மிக குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இந்த வகை பைக்குகளுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் விளைவாக பல இரு சக்கர வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த பிரிவில் யமஹா நிறுவனத்தின் பிரபலமான பிரீமியம் மாடல்கள்- R3 மற்றும் MT-03 ஆகியவை உள்ளன.
இரண்டு பைக்குகளும் 350cc-க்கும் குறைவான எஞ்சின் மூலம் இயக்கப்படுவதால், அவற்றின் விலையில் சுமார் ரூ. 20,000 வரை சரிவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, R3 மாடல் ரூ. 3.39 லட்சமாகவும், அதன் நேக்கட் வெர்ஷன் MT-03 மாடல் ரூ. 3.30 லட்சமாகவும் (இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) மாறியுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், 2025 ஆம் ஆண்டில் இந்த பைக்குகள் பெற்ற இரண்டாவது விலைக் குறைப்பு இதுவாகும். கடந்த ஜனவரி மாதம், யமஹா அவற்றின் விலைகளை ரூ. 1.10 லட்சமாக குறைத்தது. இது 2023-இன் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட கணிசமாக அதிக அணுகக்கூடியதாக மாற்றியது.
இரு மாடல்களிலும் 321cc, இரட்டை சிலிண்டர் எஞ்சின் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட சேஸ் ஆகியவை அசத்தலான ரைடு அனுபவத்தை வழங்குகின்றன. இந்த பிரிவில் சில பைக்குகளை ஒப்பிட முடியாது.
- 7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை.
- 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.
ஸ்கோடா நிறுவனம் 5 சீட்டர் கொண்ட கோடியாக் லவுஞ்ச் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும். இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது.
7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை. இதனால் பூட் இட வசதி 281 லிட்டரில் இருந்து 786 லிட்டராக அதிகரித்துள்ளது. 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.
9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பனேரமிக் சன்ரூப், டூயல் வயர்லெஸ் சார்ஜர், 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த காரின் விலை ரூ.39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
இதுதவிர, இதே என்ஜின் திறன் கொண்ட ஸ்போர்ட் லைன் ரூ.43.76 லட்சம் என்றும் எல் அண்ட் கே சுமார் ரூ.45.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
- VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.
ஹீரோ நிறுவனம், புதிய டெஸ்டினி 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.1 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
இந்த ஸ்கூட்டரில் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எச் வடிவ எல்இடி டெயில் லைட்கள் என வடிவமைப்புகள் பெரும்பாலும் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.
இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இதன் விலை ரூ.72 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் மூன்று நிறங்களில் வருகின்றன. ZX வேரியண்டிலும் 3 நிறங்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரூ.10 லட்சத்திற்குள் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.
எம்ஜி கோமெட் EV
நகர்ப்புற பயன்பாட்டிற்காக, இரு கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் கார் கோமெட் EV. இந்திய சந்தையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த கார் அதிகபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.
இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என இரட்டைத்திரை அமைப்பு கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா டியாகோ EV
டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும். டி.சி. பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
டாடா பன்ச் EV
இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது 315 கிலோமீட்டர்கள் வரை 'ரேஞ்ச்' வழங்கும்.
- டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
மோட்டோ ஹவுஸ் நிறுவனம் விஎல்எப் மாப்ஸ்டர் 135 என்ற ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12.1 பிஹெச்பி பவர், 11.7 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒரு லிட்டருக்கு 46 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, டிஆர்எல்-களுடன் கூடிய டூயல் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், காம்பேக்ட் வைசர், ஆங்குலர் சைடு பேனல், எல்இடி டெயில் லைட்டுகள், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5 இன்ச் டிஎப்டி கலர் டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், 12 வாட்ஸ் யுஎஸ்பி சார்ஜர் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய விஎல்எப் மாப்ஸ்டர் விலை ரூ.1.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகச் சலுகை விலை சுமார் ரூ.1.29 லட்சம் எனவும், இந்த சலுகை முதல் 2,500 முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
- சோதிக்கப்பட்ட மாடல் ஐந்து இருக்கைகள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் ஆகும்.
- சிட்ரோயன் நிறுவனம் ஏர்கிராஸ் X மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது.
சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஏர்கிராஸ் மாடல் பாதுகாப்பு சோதனைகளில் அசத்தியுள்ளது. பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் (பாரத் NCAP) C3 ஏர்கிராஸ் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த SUV பயணிகள் பாதுகாப்பில் (AOP) 27.05/32 மதிப்பெண்களைப் பெற்று, முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. குழந்தை பயணிகள் பாதுகாப்பில் (COP) ஏர்கிராஸ் 40/49 புள்ளிகளைப் பெற்று, நான்கு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. சோதிக்கப்பட்ட மாடல் ஐந்து இருக்கைகள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் ஆகும்.
சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், எலெட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரெஷர் மாணிட்டர் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட நிலையான பாதுகாப்பு உபகரணங்களுடன் வருகிறது.
சமீபத்தில், சிட்ரோயன் நிறுவனம் ஏர்கிராஸ் X மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது. இது வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய மாடல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் X மற்றும் C3 X போன்ற அப்டேட்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 16-இன்ச் அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- கிரே, புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் பயன்பாட்டு இரு சக்கர வாகனமான XL100 ஹெவி டியூட்டியின் புதிய டாப்-எண்ட் அலாய் வீல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ. 59,800 (எக்ஸ்-ஷோரூம்) விலையில், இந்த வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய வேரியண்ட் அதன் தோற்றம், பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல புது அம்சங்களைக் கொண்டுவருகிறது. டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 16-இன்ச் அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய வயர்-ஸ்போக் அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், எளிதாக பஞ்சர் பழுதுபார்க்கும் கூடுதல் வசதியையும் வழங்குகிறது.
XL100 ஹெவி டியூட்டி புது வேரியண்டில் LED ஹெட்லைட், டைப்-ஏ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், என்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் ஆகிய வசதிகளும் உள்ளன. இயந்திர ரீதியாக, இது 4bhp மற்றும் 6.5Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 99.7cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒற்றை-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 4 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவையும் 89 கிலோ எடையையும் கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 58 கிலோமீட்டர்கள் ஆகும். இது கிரே, புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் வழங்கப்படுகிறது.
- வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
- வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன.
பெட்ரோல், டீசல் கார்கள் பழைய டிரெண்ட் ஆகி விட்டன. ஆட்டோமொபைல் துறையில் இப்போதைக்கு, எலெக்ட்ரிக் கார்களும், சிஎன்ஜி கார்களும் தான் அதிகமாக விற்பனையாகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விலை குறைப்பு நடவடிக்கைகளில், கார் வாங்க திட்டமிடுபவர்கள், பெட்ரோல்-டீசல் மாடல்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.
கார்களில் எலெக்ட்ரிக் சிறந்ததா, இல்லை சிஎன்ஜி சிறந்ததா? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்...
சிஎன்ஜி
'கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்' என்பதன் சுருக்கம்தான் சிஎன்ஜி இயல்பான கார்களில், கூடுதலாக கியாஸ் சிலிண்டர்களை பொருத்தி, சிஎன்ஜி கியாஸ் நிரப்பி காரை இயக்குவார்கள்.
எலெக்ட்ரிக்
மின்சாரத்தில் இயங்கும் கார் இது. வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
இயக்கத்திறன்
எலெக்ட்ரிக்-சிஎன்ஜி-யை விட பெட்ரோல், டீசல் என்ஜின் கார்களை விடவும் எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்திறன் அசாத்தியமானது. பெட்ரோல் கார்களை விடவும் மின்னல் வேக இயக்கத்திறனை எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன.
சிஎன்ஜி - எலெக்ட்ரிக் கார்களை விட, கொஞ்சம் குறைவான இயக்கத்திறனே சிஎன்ஜி கார்களுக்கு உண்டு. இருப்பினும், நெடுஞ்சாலை, மலைப்பாதைகளில் சூப்பராக இயங்கும்.
எரிபொருள்
எலெக்ட்ரிக்:
எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான மின்சக்தியை வழங்கும் இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர பயன்பாட்டில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் இ-சார்ஜிங் வசதி இருப்பதால், தைரியமாக வாங்கலாம். ஆனால் நெடுஞ்சாலை பயணங்களை மட்டும், கவனமாக திட்டுமிட்டு பயணிக்க வேண்டும்.
(சார்ஜ் நிரப்ப 30 நிமிடம் தொடங்கி, சில மணி நேரங்கள் ஆகலாம்)
சிஎன்ஜி:
சிஎன்ஜி நிரப்பும் ஸ்டேஷன்கள் சென்னையில் நிறைய காணப்படுகிறது. சென்னையை தாண்டினால் நெடுஞ்சாலைகளிலும் நிறைந்திருக்கிறது. அப்படியே, சிஎன்ஜி கியாஸ் தீர்ந்து விட்டாலும் கவலையில்லை, பெட்ரோல் வசதியை தேர்ந்தெடுத்து, பெட்ரோலில் பயணிக்கலாம். இருவிதமான வாய்ப்புகளை, சிஎன்ஜி கார் வழங்குகிறது.
(பெட்ரோல் நிரப்புவதுபோல சில நிமிடங்களில், சுலபமாக கியாஸ் நிரப்பலாம்)
சிக்கனம்
வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிஎன்ஜி-யை விட குறைவான செலவிலேயே இயங்குகிறது. எலெக்ட்ரிக் காரின் முழு சார்ஜிற்கும் சுமார் 200 ரூபாய் செலவாகலாம். ஆனால் அதன் மூலம் 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம். அதுவே, சிஎன்ஜி-யில் 200 ரூபாயில் 60 கிலோமீட்டர்கள் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.
விலை
கார்களின் விலை நிலவரப்படி, எலெக்ட்ரிக் கார்களை விட சிஎன்ஜி கார்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலையில் கூட சிஎன்ஜி கார்களை வாங்கலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சத்திலேயே சிஎன்ஜி சாதனத்துடன் அசத்தலான செடான் காரை வாங்கிவிட முடியும். அதுவே எலெக்ட்ரிக் ரகமாக இருந்தால், செடான் மாடலை வாங்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். அதனால் விலை நிலவரப்படி, பட்ஜெட் பிரியர்களின் தேர்வாக இருப்பது, சிஎன்ஜி தான்.
- மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது.
- இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பாரத் NCAP சோதனைகளில், மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் பெற்றுள்ளது. மாருதி இன்விக்டோ ஆல்பா+ 7-சீட்டர் மற்றும் ஜீட்டா+ 8-சீட்டர் வேரியண்ட்களில் சோதிக்கப்பட்ட இன்விக்டோ, விசாலமானதாகவும் வசதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பிலும் பெரியதாக இருப்பதைக் காட்டியது.
இன்விக்டோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 32 இல் 30.43 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக 49 இல் 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பான கார் கிளப்பின் ஒரு பகுதியாக அமைந்தது.
பயணிகள் பாதுகாப்பு மதிப்பீடு: 30.43/32 – கிட்டத்தட்ட குறைபாடற்றது
முன்பக்க ஆஃப்செட் விபத்து சோதனையில் இன்விக்டோ சிறப்பாக செயல்பட்டது, ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் தலை, கழுத்து, முழங்கால்களை பாதுகாத்தது. ஓட்டுநரின் மார்பு "போதுமானதாக" இருந்தது, மீதமுள்ளவை "நல்லதாக" இருந்தன. இருப்பினும், முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடிஷெல் மற்றும் ஃபுட்வெல் ஆகியவை இன்விக்டோவின் திடமான கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் நிலையானதாக உள்ளன.
இன்விக்டோ அனைத்து முக்கிய பகுதிகளிலும் "நல்ல" பாதுகாப்புடன் பக்கவாட்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது. கடினமான பக்கவாட்டு கம்பத்தில் சோதிக்கப்பட்டபோதும், அது சிறப்பாக செயல்பட்டது, பக்கவாட்டு விபத்துகளின் போது MPVகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறது.
குழந்தை பயணி பாதுகாப்பு மதிப்பீடு: 45/49 – மிகவும் நல்லது
பின்புறமாக எதிர்கொள்ளும் ISOFIX மவுண்ட்களை தரநிலையாகக் கொண்டு, 18 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் பின்புறமாக எதிர்கொள்ளும் டம்மிகளுடன் சோதிக்கப்பட்ட நிலையில், இன்விக்டோ டைனமிக் கிராஷ் செயல்திறனில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றது. பக்கவாட்டு மற்றும் முன்பக்க தாக்கங்கள் சரியான மதிப்பெண் பெற்றன.
மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு திடமான தொகுப்புடன் முன், பக்க மற்றும் திரைச்சீலைகளைப் பாதுகாக்கும் ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வகைகளிலும் நிலையானவை. இது பயணி பாதுகாப்பை முழுமையாக்குகிறது.
அனைத்து டிரிம்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) கிடைக்கிறது மற்றும் கடினமான ஓட்டுநர் சூழ்நிலைகளில் வாகனம் நிலையாக இருக்க உதவுகிறது.
இன்விக்டோ ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உடன் வரவில்லை என்றாலும், அதன் உத்தி நடைமுறைக்குரியது. அதன் வகுப்பிற்குள் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் அனைத்து அடிப்படை பாதுகாப்பு அத்தியாவசியங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24.97 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.28.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுடன் அதன் டாப் எண்ட் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
- ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது.
கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் புதிய E லூனா பிரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய E லூனா பிரைம் மாடல் ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த மின்சார ஸ்கூட்டர் 110 கிலோமீட்டர் மற்றும் 140 கிலோமீட்டர் என இருவித ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய E லூனா பிரைம், பயணிகள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வழக்கமான 100 சிசி மற்றும் 110 சிசி பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய E லூனா பிரைம் மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள், பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டியான ஒற்றை இருக்கை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல விசாலமான பகுதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு நீடித்து உழைக்கும் அதே வேளையில், செயல்திறன் மற்றும் வசதியையும் பராமரிக்கும் வகையில் E லூனா பிரைம் இருக்கும் என்று கைனடிக் கிரீன் கூறுகிறது. இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை கொண்ட நிறுவனம், E லூனா பிரைம் மாடல் பரவலாகக் கிடைக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.






