என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • டேஷ்போர்டில் ஃபிரீ ஸ்டான்டிங் டிஸ்ப்ளே உள்ளன.
    • பவர்டிரெய்னை பொருத்தவரை முன்பக்கத்தில், 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மாடல் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட இ விட்டாரா, சமீபத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    புதிய இ விட்டாரா, மாருதி சுசுகியின் EVX கான்செப்ட்டில் இருந்து அதன் வடிவமைப்பைப் பெறுகிறது. கான்செப்ட் காரின் பெரும்பாலான வடிவமைப்பு அதன் உற்பத்தி மாடலிலும் காணப்படுகிறது. இந்த எஸ்யூவி Y-வடிவ DRLகளுடன் ஆங்குலர் ஹெட்லேம்ப் கிளஸ்டர்களைப் பெறுகிறது. அதே நேரத்தில் வீல் ஆர்ச், முன் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் கதவுகளின் கீழ் கிளாடிங்கின் விரிவான பயன்பாட்டையும் கொண்டுள்ளது. கனெக்ட்டட் டெயில் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன.

    கேபினுக்குள், வேறு எந்த மாருதி மாடலிலும் காணப்படாத புதிய கேபின் வடிவமைப்பை இ விட்டாரா கொண்டு வருகிறது. டேஷ்போர்டில் ஃபிரீ ஸ்டான்டிங் டிஸ்ப்ளே உள்ளன.

    அம்சங்களை பொறுத்தவரை, சர்வதேச சந்தைகளில் இ விட்டாரா மாடல் ADAS, ஆட்டோ-டிம்மிங் இன்னர் ரியர்-வியூ மிரர், டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்டிங், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

    மேலும் 19-இன்ச் வீல்கள், 10-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஃபாக் லைட்டுகள் மற்றும் 360-டிகிரி கேமராக்கள் கொண்டிருக்கிறது.



    இந்திய சந்தைக்கான இ விட்டாரா மாடலில் எந்தெந்த அம்சங்கள் வழங்கப்படும் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. பவர்டிரெய்னை பொருத்தவரை முன்பக்கத்தில், 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.

    இதன் பேஸ் மாடலில் உள்ள மோட்டார் 142 bhp பவர் மற்றும் 192.5 Nm டார்க் வெளிப்படுத்தும் என்றும் டாப் எண்ட் மாடல் 172 bhp பவர் வெளிப்படுத்தும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் வழங்கப்படுகிறது. இருப்பினும் அது இந்தியாவிற்கும் வருமா என்பதைப் பார்க்க வேண்டும். புதிய இ விட்டரா மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 428 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளது.

    புதிய இ விட்டாரா மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா BE 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்சா டீலர்ஷிப் மூலம் விற்பனைக்கு வரும்.

    • புதிய வண்ணங்கள் பைக்கின் தோற்றத்திற்கு புத்துணர்ச்சியை சேர்க்கின்றன.
    • இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்துள்ளது. அதன்படி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R இப்போது புதிதாக டூயல் சேனல் ஏபிஎஸ் (ABS) வேரியண்டில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய டூயல் சேனல் வேரியண்டின் விலை ரூ. 1.04 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பைக் சிங்கிள்-சேனல் ABS வேரியண்டிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 92,500 ஆகும். சிங்கிள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் பைக்குகளுக்கு இடையிலான விலை வேறுபாடு சுமார் ரூ. 12,000 ஆகும். எனினும், கூடுதல் பணம் வலுவான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

    வெளிப்புறத்தில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R- பிளாக் பியர்ல் ரெட், பிளாக் மேட்-ஷேடோ கிரே மற்றும் பிளாக் லீஃப் கிரீன் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது . இந்த புதிய வண்ணங்கள் பைக்கின் தோற்றத்திற்கு புத்துணர்ச்சியை சேர்க்கின்றன.

    இந்த பைக்கில் கலர் எல்சிடி டிஸ்ப்ளே, குரூயிஸ் கட்டுப்பாடு, இகோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது. இயந்திர ரீதியாக, பைக் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இதிலும் 125cc, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த யூனிட் 8,250rpm இல் 11.24bhp பவர் மற்றும் 6,500rpm இல் 10.5Nm டார்க் உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார்சைக்கிள் ஹோண்டா CB 125 ஹார்னெட் மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக விளங்குகிறது. இந்த பிரிவில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஒரே பைக் எக்ஸ்ட்ரீம் 125R ஆகும்.

    • டிரைவருக்கான ஆக்டிவ் சீட், சரவுண்ட் லைட்கள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிக் முறையில் இருக்கை சரிசெய்யும் வசதியை பெறுகிறது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    மினி இந்தியா நிறுவனம் புதிய கண்ட்ரிமேன் SE All4 காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கண்ட்ரிமேன் விலை ரூ.66.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU வழியில் இந்தியா கொண்டு வரப்பட்ட இந்த மாடல் தற்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் முன்பதிவு செய்யலாம். இந்த காரின் டெலிவரி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வெளிப்புறத்தில், 2025 கன்ட்ரிமேன் SE All4 புதிய கிரில், ஹெட்லைட்களுக்கான புதிய வடிவமைப்பு, செதுக்கப்பட்ட பானட், ஜெட் பிளாக் ரூஃப், ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. JCW டிரிமில் மட்டுமே வழங்கப்படும் இது, ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரைப்ஸ், ரூஃப் ரெயில்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் வீல் ஆர்ச்கள் போன்ற கருப்பு நிற கூறுகளைக் கொண்டுள்ளது.

    லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு நிற ஆப்ஷன்களும் ஜெட் பிளாக்கில் முடிக்கப்பட்ட ரூஃப் மற்றும் மிரர் கேப்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இந்த கார் LED DRLகள், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லைட்களுக்கு பிரத்யேக சிக்னேச்சர் மோட்களைப் பெறுகிறது.



    புதிய மினி கன்ட்ரிமேன் SE All4 இன் உட்புறம் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டு டிரிம்கள் போன்ற JCW-க்கு ஏற்ற அம்சங்களுடன் வருகிறது. இது டிரைவருக்கான ஆக்டிவ் சீட், சரவுண்ட் லைட்கள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிக் முறையில் இருக்கை சரிசெய்யும் வசதியை பெறுகிறது. இந்த மாடலில் சிக்னேச்சர் ரவுண்ட் OLED டிஸ்ப்ளே, மினி டிஜிட்டல் கீ, HUD, போன் மிரரிங், குரூயிஸ் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா, ஆக்டிவ் கூலிங் ஏர் டக்ட்ஸ், மல்டிபிள் ஏர்பேக்குகள், TPMS மற்றும் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

    கன்ட்ரிமேன் SE All4 மாடலில் 66.45kWh பேட்டரி பேக் உள்ளது, இது இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் உள்ள மின் மோட்டார்கள் 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    • புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் ஹூண்டாயின் 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • 118bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வென்யூ N லைன் விலை ரூ.10.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று வேரிண்ட்கள் மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாடுகள் தொடங்கியதில் இருந்து அதன் புனே ஆலையில் இருந்து வெளிவரும் முதல் புதிய ஹூண்டாய் தயாரிப்பு இதுவாகும்.

    N லைன் மாடல் வழக்கமான வென்யூவுடன் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தின் பெரும்பகுதியைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பம்பர்கள், சக்கரங்கள் மற்றும் நிறங்கள் மட்டும் N லைன் மாலுக்கு ஏற்ப வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களைப் பார்க்கும்போது, இது வென்யூ மாடலின் HX8 மற்றும் HX10 வேரியண்ட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதே அம்சப் பட்டியலைப் பெற்று இருப்பதை கவனிக்க முடியும்.

    டாப் என்ட் N10 வேரியண்ட் லெவல் 2 ADAS, இரட்டை வளைந்த 12.3-இன்ச் பனோரமிக் டிஸ்ப்ளே, ஆட்டோ IRVM, LED இன்டிகேட்டர்கள், பவர்டு டிரைவர் சீட், ரிக்ளைனிங் ரியர் சீட், பின்புற ஜன்னல் சன்ஷேட், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், ஹூண்டாய் ப்ளூ-லிங்க் மற்றும் க்ளோவ் பாக்ஸ் கூலிங் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.



    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் ஹூண்டாயின் 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 118bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டாப் என்ட் N10 வேரியண்டில் டிராக்ஷன் மற்றும் டிரைவ் மோட்களுடன் வருகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் கியா சொனெட் X லைன், டாடா நெக்சான் ரெட் டார்க் ரேஞ்ச், மஹிந்திரா XUV 3XO டர்போ ரேஞ்ச், மாருதி Fronx டர்போ, ஸ்கோடா கைலாக் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவை போட்டியாக அமைகின்றன.

    • நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
    • ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவம் பதிவான வாகனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 517 ஆட்டோக்கள், 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 73 ஆயிரத்து 577 டிராக்டர்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உள்பட 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவாகியுள்ளது.

    இது கடந்த செப்டம்பர் மாதம் 18 லட்சத்து 27 ஆயிரத்து 337 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 120.21 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகம் பதிவாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 735 ஆக இருந்த இருச்சக்கர வாகனங்களின் பதிவு, அக்டோபர் மாதம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 ஆக எழுச்சியடைந்துள்ளது. இது 144.60 சதவீதம் உயர்வு ஆகும்.

    இதேபோல 2 லட்சத்து 99 ஆயிரத்து 369 ஆக இருந்த தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் 5 லட்சத்து 57 ஆயிரத்து 373 ஆகவும், 72 ஆயிரத்து 124 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 841 ஆகவும் ஏறுமுகம் கண்டிருக்கிறது. பண்டிகை கால 42 நாட்களில், அதாவது செப்டம்பர் மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் 52 லட்சத்து 38 ஆயிரத்து 401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது முந்தைய ஆண்டு 43 லட்சத்து 25 ஆயிரத்து 632 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு வாகனங்களின் பதிவு 21.10 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு, தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்ததால் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்தது.

    இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறும்போது, "ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் வரி குறைப்பு, பண்டிகை காலம் மற்றும் கிராமப்புற மக்களிடம் மறுமலர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் வந்ததால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் அக்டோபர் மாதம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வாகும்.

    வரவிருக்கும் வாகனங்களின் புதிய மாடல்கள், ஆரோக்கியமான நிதி நிலைமை, நிலையான எரிபொருள் விலை ஆகியவை தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கின்றன" என்றார்.

    • டுகாட்டி ரேஸ் ரைடிங் மோட், குயிக்-ஷிஃப்டர் மேப் மற்றும் டைரக்ட் திராட்டில் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.
    • பைக்கில் கார்பன்-ஃபைபர் டிரிம் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளன.

    டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 பைக்ஸ் பீக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டுகாட்டி பைக்கின் விலை ரூ. 36,16,700 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி உடனடியாகத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மல்டிஸ்ட்ராடா பிரிவில் அதிக கவனம் செலுத்தும், ரோடு-ஸ்போர்ட் மாடல் ஆகும்.

    இந்த பைக்கில் 168bhp பவர் மற்றும் 123.8Nm டார்க் வெளிப்படுத்தும் 1,158 சிசி V4 Granturismo என்ஜின் உள்ளது. இது Euro 5+ விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டுகாட்டி ரேஸ் ரைடிங் மோட், குயிக்-ஷிஃப்டர் மேப் மற்றும் டைரக்ட் திராட்டில் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.

    இந்த பைக்கில் உள்ள 6-ஆக்சிஸ் IMU உடன், டுகாட்டி வெஹிகில் அப்சர்வர் (DVO) டிராக்ஷன், வீலி, ஸ்லைடு, கார்னரிங் ABS மற்றும் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட கம்பைன்டு பிரேக்கிங் ஆகியவற்றை மேம்படுத்த நூற்றுக்கணக்கான உள்ளீடுகளை டிராக் செய்கிறது. ரேடார் தொகுப்பு அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் புதிய ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.

    இத்துடன் தெளிவான யுஐ உடன் 6.5-இன்ச் TFT சஸ்பென்ஷன் மோட்களை அமைக்கவும், ரேஸ், ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் வெட் ஆகியவற்றில் இருந்து தேர்வு செய்யவும் உங்களை அனுமதிக்கிறது.

    மேலும் பைக்கில் கார்பன்-ஃபைபர் டிரிம் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளன. டுகாட்டி கார்னரிங் லைட்கள், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ இக்னிஷன், குயிக் ஷிஃப்டர் அப்/டவுன், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டுகாட்டி பவர் லாஞ்ச் மற்றும் டேட்டா லாக்கிங் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு ADV இன் நிலைப்பாட்டைக் கொண்ட ரோடு-ஃபர்ஸ்ட் ஸ்போர்ட் டூரர் மாடலை விரும்பும் ரைடர்களை இலக்காகக் கொண்ட ஒரு ஃபுல் கிட் பட்டியல் ஆகும்.

    • 1983 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியது.
    • இந்த மைல்கல்லை அடைய மாருதி சுசுகி நிறுவனத்திற்கு 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.

    இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது.

    1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.

    விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.

    இதுகுறித்து பேசிய மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி, "இந்தியாவில் 1,000 பேருக்கு 33 கார்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் எங்களுக்கு இன்னும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
    • புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், Fronx Flex Fuel கான்சப்ட் காரை சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது.

    இந்தியச் சந்தையில் உள்ள Fronx காரில் 1.2 லிட்டர் என்ஜின் K சீரிஸ் டூயல் ஜெட் என்ஜின் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கிறது. ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Fronx காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    இந்த யூனிட் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய காரை சுசூகி நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய பனிகேல் V2 மாடலில் 890சிசி என்ஜின் இடம் பெற்றுள்ளது.
    • 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    டுகாட்டி நிறுவனம், பனிகேல் V2 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முதன் முதலாக கடந்த ஆண்டு நடந்த மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பனிகேல் V2 மாடலில் 890சிசி என்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த யூனிட் அதிகபட்சமாக 10,750 120hp பவரையும், 93.3 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பைக்கின் முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் கயாபா மோனோ ஷாக்-அப்சர்வர்கள், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பனிகேல் V2 மாடலின் தொடக்க விலை ரூ.19.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் இதன் டாப் வேரியண்ட் விலை ரூ.21.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • ஹூண்டாய் Grand i10 Nios மாடல் ரூ.5.47 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
    • ஹூண்டாய் i20 நைட் எடிஷன் மாடல் ரூ.9.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் நிறைய பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

    அவ்வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களின் பட்டியல்:

    1. ஹூண்டாய் i20 - ரூ.6.80 லட்சம்

    2. ஹூண்டாய் Aura - ரூ.5.98 லட்சம்

    3. ஹூண்டாய் Exter - ரூ.5.68 லட்சம்

    4. ஹூண்டாய் Grand i10 Nios - ரூ.5.47 லட்சம்

    5. ஹூண்டாய் i20 N-Line - ரூ.9.15 லட்சம்

    6. ஹூண்டாய் Venue - ரூ.7.90 லட்சம்

    • இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
    • இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புல்லட் 650' பைக்கை இத்தாலியில் நடைபெற்று வரும் 2025 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    வரும் மாதங்களில் புல்லட் 650 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இந்த பைக்கின் விலை சுமார் ரூ.3.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் எலிவேட் மாடலின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலிவேட் ADV என்று அழைக்கப்படும் புதிய வேரியண்ட் ஸ்போர்ட் தோற்றத்தையும், தனித்துவமான காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய எலிவேட் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 15.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இதன் CVT டூயல்-டோன் மாடன் விலை ரூ. 16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ADV மாடல் கிளாஸ் பிளாக் ஆல்பா-போல்ட் பிளஸ் முன்பக்க கிரில், ஆரஞ்சு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஹூட் டெக்கல், ORVMகள் மற்றும் ஆரஞ்சு சிறப்பம்சங்களுடன் பிளாக் அலாய் வீல்கள் என பிரத்யேக ஸ்டைலிங் அப்டேட்களுடன் வருகிறது. இத்துடன் ADV பேட்ஜ்கள், ஆரஞ்சு ஃபாக் லைட் மற்றும் ஆரஞ்சு நிற அக்சென்ட்களுடன் கூடிய பின்புற பம்பர் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகின்றன.

    எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.



    பாதுகாப்பு அம்சங்களில், எலிவேட் ADV மாடலில் ஹோண்டா சென்சிங் ADAS பொருத்தப்பட்டுள்ளது. இதில் லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX மவுண்ட் ஆகியவை அடங்கும்.

    எலிவேட் ADV மாடல், மீடியோராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் நிறங்களில், சிங்கில் டோன் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    ×