என் மலர்
ஆட்டோமொபைல்
- இந்திய அரசு 350 சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை பழைய 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
- அனைத்து பெரிய பைக்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் மிகவும் புகழ்பெற்ற சூப்பர்பைக் மாடல்களில் ஒன்று ஹயபுசா. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாக விளங்கும் ஹயபுசா விலை இந்திய சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 மாற்றத்திற்கு பிறகு ஹயபுசா மாடலின் விலையை ரூ. 1.16 லட்சம் உயர்த்த சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹயபுசாவின் பழைய விலை சுமார் ரூ. 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது. ஆனால் இப்போது இந்த விலை உயர்வால், இந்த சூப்பர் பைக் ரூ. 18.06 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அரசு 350 சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை பழைய 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து பெரிய பைக்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் சூப்பர்பைக் மாடல் சுசுகி ஹயபுசா ஆகும். ஸ்டைலிங், அதிக செயல்திறன் மற்றும் அதீத வசதி ஆகியவற்றின் கலவையானது இந்த மோட்டார் சைக்கிளை சுசுகிக்கு அதிகம் விற்பனையாகும் பைக்காக மாற்றியுள்ளது.
ஆனால் இந்த ஜிஎஸ்டி உயர்வால், இந்த சூப்பர் பைக் விற்பனை குறுகிய காலத்தில் மந்தநிலையை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. எனினும், ஹயபுசா ஒரு பிராண்டு என்பதால் அதற்கென மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். காலப்போக்கில், ஒட்டுமொத்த விற்பனை ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்திற்கு வரலாம்.
- வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
வால்வோ இந்தியா நிறுவனம் தனது மிகவும் மலிவு விலை கார்: EX30-ஐ ரூ.41 லட்சம் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் இந்த புதிய EV-யை அக்டோபர் 19ஆம் தேதி வரை ரூ.39.99 லட்சத்திற்கு முன்பதிவு செய்து வாங்கலாம். டெலிவரி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்திற்கு EX30 மாடல் திருப்புமுனையாக இருக்கலாம். ரூ. 40 லட்சத்திற்கும் குறைவான விலையில் (முன்கூட்டிய இருப்பு விலை), இந்த மாடல் கச்சிதமான இடத்தில் அமர்ந்திருக்கிறது. வால்வோ EX40 மற்றும் EC40 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள EX30, நன்கு கட்டமைக்கப்பட்ட மின்சார காரை தேடும் இளம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது. இந்த கார் பெங்களூரு அருகில் உள்ள வால்வோ நிறுவனத்தின் ஹோஸ்கோட் ஆலையில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த மின்சார காரில் 69kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
இதன் ஒற்றை-மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் 272bhp பவர், 343Nm நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இத்துடன் 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1040 வாட்ஸ் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கீ பிளஸ் மற்றும் NFC ஸ்மார்ட் கார்டு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் தீம்கள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
புதிய வால்வோ EX30 மாடலில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா மற்றும் இன்டர்செக்ஷன் ஆட்டோ-பிரேக் போன்ற ADAS அம்சங்களையும் பெறுகிறது. இந்த கார் மாடலுக்கு வால்வோ நிறுவனம் மூன்று ஆண்டுகள் வாரண்டி, RSA தொகுப்பை வழங்குகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் பேட்டரி வாரண்டி பேக்கேஜ் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகியவையும் உள்ளன.
- 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.
காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
- இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டுவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது.
- உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம், 450 MT என்ற அட்வெஞ்சர் டூரர் மோட்டார்சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால கொண்டாட்டத்தையொட்டி, இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டுவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்.பி.எம். மில் 44 பி.எச்.பி. பவரையும், 6,250 ஆர்.பி.எம்.மில் 44 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இதன் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது.
உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த இந்திய நிறுவனம் இதனை சந்தைப்படுத்தும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, இது 40 சதவீத வரி விதிப்பு பிரிவில் (ஆடம்பர பொருள்) இடம் பெறுகிறது. சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.3.99 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகளவில், ஹூண்டாய் அதன் மிகச்சிறிய மின்சார எஸ்யூவி-யான இன்ஸ்டெரை விற்பனை செய்கிறது.
- இன்ஸ்டெர் மாடல் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் 355 கிலோமீட்டர்கள் வரை WLTP-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.
2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் முற்றிலும் புதிய மின்சார SUV-யை அறிமுகப்படுத்தும் என்று ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய மின்சார வாகனங்கள் வரைபடத்தில் புதிய மாடல் இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் ஆகும்.
ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காம்பாக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் இந்தியாவின் வரிசையில் கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படு. கிரெட்டா EV மாடலில் பெரிய, அம்சங்கள் நிறைந்த குடும்ப EV-யை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட போதிலும், இந்த புதிய மாடல் குறைந்த விலையில் ஒரு சிறிய, நகரத்திற்கு ஏற்ற மின்சார எஸ்யூவியை தேடுபவர்களை ஈர்க்கும்.
உலகளவில், ஹூண்டாய் அதன் மிகச்சிறிய மின்சார எஸ்யூவி-யான இன்ஸ்டெரை விற்பனை செய்கிறது. இன்ஸ்டெர் மாடல் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் 355 கிலோமீட்டர்கள் வரை WLTP-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.
இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் காம்பாக்ட் எஸ்யூவி ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும். அம்சங்களைப் பொறுத்தவரை, கனெக்டெட்டகார் தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த காம்பாக்ட் SUV, உலகளாவிய மாடலின் நேரடி தழுவலாக இல்லாமல், இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹூண்டாயின் முதல் மின்சார வாகனமாக இருக்கும். கிரெட்டா EV மிட் ரேஞ்ச் மின்சார எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்படுவதால், இந்த மாடல் காம்பாக்ட் SUV வகையை இலக்காகக் கொண்டிருக்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் வரவிருக்கும் மாடல்களுடன் போட்டி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
- இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பொருட்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு அவை அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தும், குறைக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த வரிசையில், ஜிஎஸ்டி 2.0 வரி அமலுக்கு வந்த பிறகு கவாசாகி Z900 மோட்டார்சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி இன்லைன்-4, ஸ்டிரீட் நேக்கட் கவாசகி Z900 பைக்கின் விலை இப்போது ரூ.10.18 லட்சமாக மாறியுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.66,000 அதிகம் ஆகும். புதிய வரி விதிப்பு பெரிய பைக்குகளை வாங்குபவர்களின் திட்டங்களை நிச்சயமாக பாதிக்கும். மேலும் பல பைக்குகளின் விலைகள் உயரும்.
2025ஆம் ஆண்டிற்காக, இந்த பைக் ஏராளமான புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. 'சுகோமி' வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும், இதில், புதிய LED ஹெட்லைட், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய ஃபியூவல் டேன்க் மற்றும் புதிய LED டெயில் லைட்டுடன் கூர்மையான தோற்றமுடைய டெயில் பகுதியைப் பெறுகிறது.

கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 123hp பவர் மற்றும் 97.4Nm டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய புதிய வண்ண TFT டிஸ்ப்ளே, இரண்டு பவர் மோட்கள், ரைடு மோட்கள், IMU-அசிஸ்ட், கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகியவற்றைப் பெறுகிறது.
இந்த பைக் ரூ.10.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ள ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் உடன் போட்டியிடுகிறது.
- இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன.
- பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன.
மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி விதிப்பில் மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலைகள் மாறியுள்ளன. அதன்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலையை குறைத்து வருகின்றன.
இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன. பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன. அதன்படி நெக்சா பிராண்டு மாடல்களின் விலை குறைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய விலை விவரங்கள்:
இக்னிஸ் மாடலின் விலை ரூ. 71,300 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,35,100 என மாறியுள்ளது.
பலேனோ மாடலின் விலை ரூ. 86,100 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,98,900 என மாறியுள்ளது.
ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ. 1,12,600 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 6,84,900 என மாறியுள்ளது.
கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 1,07,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10,76,500 என மாறியுள்ளது.
எக்ஸ்எல் 6 மாடலின் விலை ரூ. 52,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 11,52,300 என மாறியுள்ளது.
ஜிம்னி மாடலின் விலை ரூ. 51,900 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,31,500 என மாறியுள்ளது.
இன்விக்டோ மாடலின் விலை ரூ. 61,700 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 24,97,400 என மாறியுள்ளது.
- புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
- LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் மின்சார இருசக்கர வாகன நிறுவனமான ஆம்பியர், இந்தியாவில் மேக்னஸ் கிராண்ட் குடும்ப ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் அசத்தலான ஸ்டைல், சௌகரியம், ஆயுள், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட LFP பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
ஆம்பியர் பிரான்டின் புதிய மேக்னஸ் கிராண்ட் ஸ்கூட்டர் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்பியர் மேக்னஸ் நியோவை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் மேக்னஸ் கிராண்ட், பெரும்பாலான வடிவமைப்பு சிறப்பம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் அதன் புதிய குடும்ப ஸ்கூட்டரை இரண்டு புதிய டூயல் டோன் பிரீமியம் நிறங்கள்- மேட்சா கிரீன் மற்றும் ஓஷன் புளூ ஆகியவற்றுடன், கோல்டு ஃபினிஷ் வழங்கியுள்ளது. மேலும், இது இப்போது வலுப்படுத்தப்பட்ட கிராப் ரெயில், மேம்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம், விசாலமான இருக்கை மற்றும் அதிக சுமை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அம்சங்களைப் பொருத்தவரை, புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-95 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.
அறிமுகத்தின் போது, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் விகாஸ் சிங் கூறுகையில், "புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் ஆம்பியரின் நிஜ உலக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பங்கள் மற்றும் பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், ஸ்டைல், ஆயுள் மற்றும் உறுதித்தன்மையின் இணக்கமான கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார்.
- ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.
- ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.
ஸ்டீல்பேர்ட் (Steelbird) ஹை-டெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இக்னைட் (IGNYTE) ஹெல்மெட், ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இணைக்கும் IGN-58 திறந்த முக ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில், எக்ஸ்பான்டெட் பாலிப்ரொப்பிலீன் (EPP) லைனர் தொழில்நுட்பத்துடன் வரும் மிகவும் மலிவு மாடல்களில் இந்த ஹெல்மெட் ஒன்றாகும்.
IGN-58 இன் EPP லைனர் மீண்டும் மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளை உறிஞ்சி, வடிவத்தை மீண்டும் பெறவும், தண்ணீர் மற்றும் ரசாயனங்களின் வெளிப்பாட்டைத் தாங்கவும் முடியும். இது அதன் நீண்டகால பயன்பாட்டிற்கு அதிக ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.

அதன் வடிவமைப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ABS ஷெல், UV மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் உடன் கூடிய பபிள் வைசர் மற்றும் பாதுகாப்பான கட்டுதலுக்கான டபுள் டி-ரிங் பக்கிள் அமைப்பு ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதிக்காக, ஹெல்மெட் ஒவ்வாமை எதிர்ப்பு பேட், சுவாசிக்கக்கூடிய மெஷ் பேனல்கள் மற்றும் நீக்கக்கூடிய சீக் பேட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.
IGN-58 540மிமீ முதல் 620மிமீ வரையிலான அளவுகளில் வைட், டெசர்ட் ஸ்டார்ம், அத்தெனா கிரே, பேட்டில் கிரீன், செஸ்ட்நட் ரெட், பிளாக், ஸ்குவாட்ரான் புளூ, டல் ஸ்லேட், டீப் கிரீன், அர்மடா புளூ மற்றும் ரெடிட்ச் புளூ போன்ற வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். ரைடர்கள் தங்கள் தோற்றத்தைத் தனிப்பயனாக்க ஐந்து ஈகிள் தீம் டெக்கால் செட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம். இந்திய சந்தையில் இந்த ஹெல்மெட்டின் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
- 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை அமேஸ் மாடலுக்கு புதிய "கிரிஸ்டல் பிளாக் பேர்ல்" நிறத்தை சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையுடன், அமேஸ் செடான் மாடல் இப்போது லூனார் சில்வர், மீடியோராய்டு கிரே, பிளாட்டினம் ஒயிட், கோல்டன் பிரவுன், ரேடியன்ட் ரெட் மற்றும் அப்சிடியன் புளூ உள்பட மொத்தம் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
இளம் வாடிக்கையாளர்களிடையே அடர் மற்றும் ஸ்போர்ட்டியர் வண்ணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், புதிய நிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹோண்டா கூறுகிறது.
புதிய நிறம் தவிர, இந்த காரில் வேறு எந்த இயந்திர மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா அமேஸ் மாடல் தொடர்ந்து 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை அமேஸ் மாடல் DRLகளுடன் ஆட்டோமேடிக் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லைட்கள், 15-இன்ச் அலாய் வீல்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளேவுடன் 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு முன்பக்கத்தில், ஆறு ஏர்பேக்குகள், ISOFIX மவுண்ட்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
ஜிஎஸ்டி 2.0 இன் முழு பலனையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் தலைமுறை அமேஸ் ரூ. 95,000 வரை விலைக் குறைப்புகளை பெறுகிறது.
- பைக் 217 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது மிகவும் கனமாக உள்ளது.
- இந்த பைக்கில் முழுமையாக LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா நிறுவனம் ஒருவழியாக தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் பைக் WN7 என்று அழைக்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.
பெயரில் உள்ள 'W' என்பது கான்செப்ட்-ஐ குறிக்கிறது, மேலும் 'N' என்பது 'நேக்கட்' என்பதைக் குறிக்கிறது. 7 என்ற எண் அது சேர்ந்த திறனை குறிக்கிறது. இந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 130 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் பைக்கின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும். 6kVA சார்ஜரின் உதவியுடன், இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
பவர்டிரெயினைப் பொறுத்தவரை, இது 18kW லிக்விட்-கூல்டு மோட்டாரை பெறுகிறது. இது 600cc ICE மோட்டார்சைக்கிளின் சக்தியை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பைக் 217 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது மிகவும் கனமாக உள்ளது.
ஹோண்டா இந்த பைக்கில் 5-இன்ச் ஃபுல் கலலர் TFT ஸ்கிரீனை பொருத்தியுள்ளது. இது ஒருங்கிணைந்த RoadSync இணைப்புடன் வருகிறது. இந்த பைக்கில் முழுமையாக LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா WN7 முதலில் இங்கிலாந்தில் GBP 12,999 (இந்திய மதிப்பில் ரூ. 15.5 லட்சம்) விலையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
- இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மீட்டியோர் 350 பைக்கை நவீனப்படுத்தி, புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பயர்பால், ஸ்டெல்லர், அரோரா, சூப்பர் நோவா என நான்கு வேரியன்ட்களில், புதுமையான நிறங்களில் காட்சியளிக்கிறது.
புதுமையான எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் நேவிகேஷன் பாட், எல்இடி இண்டிகேட்டர், டைப்-சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற நவீன அம்சங்கள் இந்த பைக்கின் பயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியன்ட்களில் இடம்பெறுகின்றன.
அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் போன்றவை சூப்பர் நோவா, அரோரா ஆகிய வேரியன்ட்களில் கூடுதல் அம்சங்களாக கிடைக்கிறது.
இந்த பைக்கில் 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.2 பி.எச்.பி. பவரையும், 27 என்.எம். டார்க் திறனையும் வழங்கும். இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இதன் ஆரம்ப விலை ரூ.1.96 லட்சம்.
இந்த பைக்கின் பயர்பால் வேரியன்ட் ஆரஞ்ச் மற்றும் கிரே நிறங்களிலும், ஸ்டெல்லர் மேட் கிரே மற்றம் மெரைன் புளூ ஆகிய நிறங்களிலும், அரோரா வேரியன்ட் ரெட்ரோ கிரீன், அரோரா ரெட் ஆகிய நிறங்களிலும், சூப்பர் நோவா கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.






