என் மலர்
ஆட்டோமொபைல்
- மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
- டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பதிவு செய்துள்ளனர்.
நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் பயணிகள்-வாகன தயாரிப்பாளர்கள் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் சில்லறை விற்பனை 3,25,000 யூனிட்களை தொட்டுள்ளது. டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சில்லறை விற்பனை வருடாந்திர அடிப்படையில் (YoY) 30 சதவீதம் உயர்ந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 கார்களை விற்பனை செய்துள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதி அமலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த 50 நாட்களில் இந்த துறை சராசரி விற்பனையைக் கண்டுள்ளதாக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள் ஃபாடா தலைவருமான வின்கேஷ் குலாட்டி தெரிவித்தார்.
- இந்த மோட்டார்சைக்கிள் எந்த விரிவான மாற்றங்களையும் பெறவில்லை.
- இந்த பைக்கிலும் 948சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான பெரிய பைக் மாடல்களில் ஒன்று கவாசகி Z900. இந்த பைக் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கு மேம்படுத்தப்பட்டு சற்று மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ. 9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில், கிடைக்கும் புதிய 2026 Z900 மாடல் 2025 மாடலை விட ரூ. 19,000 விலை குறைவு ஆகும்.
கடந்த ஆண்டு மேம்படுத்தல் நீண்ட காலத்திற்குப் பிறகு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்ததால், எதிர்பார்க்கப்பட்டபடி, இந்த மோட்டார்சைக்கிள் எந்த விரிவான மாற்றங்களையும் பெறவில்லை. 2026 ஆம் ஆண்டிற்காக, கவாசகி இரண்டு புதிய வண்ண விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கேண்டி லைம் கிரீன்/மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் மெட்டாலிக் மேட் கிராஃபீன் ஸ்டீல் கிரே/மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க்.

மற்றொரு ஆச்சரியமான மாற்றம் பவர் மற்றும் டார்க் வெளியீட்டு எண்களில் லேசான அதிகரிப்பு ஆகும். சமீபத்திய மாடல் 123.6bhp பவர் மற்றும் 98.6Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இது முந்தைய மாடலை விட முறையே 1.6bhp மற்றும் 1.2Nm இன் அதிகம் ஆகும். மேலும், இதன் எடை 212 கிலோவில், முன்பை விட 1 கிலோ குறைவாக உள்ளது.
இந்த பைக்கிலும் 948சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு புதுப்பிப்பு ரைடு-பை-வயர் திராட்டில், க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் போன்ற கூடுதல் அம்சம்ங்கள் உள்ளது. இது IMU- உதவியுடன் கூடிய கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகியவற்றையும், புதிய 5-இன்ச் TFT திரையையும் கொண்டுள்ளது.
- முந்தைய 28 சதவீத ஸ்லாப்பை 18 சதவீதமாகக் குறைக்கிறது.
- இந்த மறுசீரமைப்பு MT/AMT உடன் 1.0L NA என்ஜினில் கிடைக்கிறது.
நிசான் இந்தியா, மேக்னைட் AMT வெர்ஷனில் அங்கீகரிக்கப்பட்ட CNG கிட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அதன் CNG மறுசீரமைப்பு திட்டத்தை நிசான் இந்தியா நிறுவனம் விரிவுபடுத்தி இருக்கிறது.
புதிய CNG வேரியண்ட்டை இப்போது வாங்குபவர்கள் AMT கியர்பாக்ஸின் வசதியை அனுபவிக்க அனுமதிக்கிறது. கூடுதலாக, நிசான் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த எரிபொருள் மூடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெட்ரோல் மற்றும் CNG வால்வுகள் இரண்டையும் ஒரே எரிபொருள் மூடியின் கீழ் வைத்திருக்கிறது.
CNG ரெட்ரோஃபிட்மென்ட் கிட் ரூ. 71,999 விலையில் கிடைக்கிறது. இது இப்போது ஜிஎஸ்டி 2.0 க்குப் பிறகு ரூ. 3,000 மலிவானது. முந்தைய 28 சதவீத ஸ்லாப்பை 18 சதவீதமாகக் குறைக்கிறது. மோட்டோசன் எரிபொருள் அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த கிட், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிசான் ரெட்ரோஃபிட்மென்ட் மையங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு கருவியைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள்/ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டியை பெறலாம். இந்த மறுசீரமைப்பு MT/AMT உடன் 1.0L NA என்ஜினில் கிடைக்கிறது. நிசான் CNG மறுசீரமைப்பு திட்டம் இப்போது டெல்லி-NCR, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இந்தியா முழுவதும் 13 மாநிலங்களை உள்ளடக்கியது.
- என்ஜினை பொருத்தவரை டாடாவின் 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் நெக்சான் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டாடா நெக்சான் மாடலில் ADAS வசதி வழங்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் ஃபியர்லெஸ்+ PS DCT/DCA வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.13.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது நெக்சான் EV உடன் வழங்கப்படும் அதே ADAS வசதிகளுடன் வருகிறது.
ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் (FCW)
ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB)
லேன் டிபார்ச்சர் வார்னிங் (LDW)
லேன் சென்டரிங் சிஸ்டம் (LCS)
லேன் கீப் அசிஸ்ட் (LKA)
ஹை பீம் அசிஸ்ட் (HBA)
டிராஃபிக் சைன் அங்கீகாரம் (TSR)
புதிய டாடா நெக்சான் ADAS தொகுப்பில் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஃபியர்லெஸ்+ PS வேரியண்ட் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வென்டிலேட்டெட் முன்பக்க இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கான உயரத்தை சரிசெய்யும் வசதி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
என்ஜினை பொருத்தவரை டாடாவின் 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 86bhp பவர் மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய சந்தையில் கிடைக்கும் மஹிந்திரா XUV3XO, கியா சைரோஸ் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் வென்யூ போன்ற கார்கள் அனைத்திலும் லெவல் 2 ADAS வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ADAS இப்போது இந்த பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளது.
- அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது.
- ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மேப் மிரரிங், நேவிகேஷன் கொண்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அட்வென்ச்சர் டூரர் பிரிவில் என்ட்ரி கொடுத்தது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTX பேஸ் மாடல் அறிமுக விலை ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். சமீபத்திய RT-XD4 தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாடல், அப்பாச்சி சீரிசின் ஒரு முக்கியமான விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
இந்திய சந்தையில் புதிய RTX மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் ரூ. 1.99 லட்சம், டாப் வேரியண்ட் ரூ. 2.14 லட்சம், மற்றும் கஸ்டம் ஸ்பெக் PTO வேரியண்ட் ரூ. 2.29 லட்சம் (அனைத்து விலைகளும் அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அப்பாச்சி RTX புதிதாக உருவாக்கப்பட்ட 299.1cc சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு, DOHC என்ஜினை பெற்றுள்ளது. இந்த யூனிட் 9,000rpm-இல் 35.5bhp பவர், 7,000rpm இல் 28.5Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் நீர் மற்றும் எண்ணெய் ஜாக்கெட்களுடன் டூயல் கூலிங் தொழில்நுட்பம் பெற்று இருக்கிறது. இத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது.

புதிய RT-XD4 பிளாட்ஃபார்ம், டிவிஎஸ்-இன் அடுத்த தலைமுறை பொறியியல் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. சிறந்த குளிரூட்டும் திறன், மென்மையான மின் விநியோகம் மற்றும் குறைக்கப்பட்ட உமிழ்வை வழங்குகிறது.
அபாச்சி RTX, ரைடர்-ஃபோகஸ்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அர்பன், ரெயின், டூர் மற்றும் ரேலி என நான்கு ரைடு மோட்ககளைக் கொண்டுள்ளது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், குரூயிஸ் கண்ட்ரோல், லீனியர் டிராக்ஷன் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மேப் மிரரிங், நேவிகேஷன் கொண்டுள்ளது.
- அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
- இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில், பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்ற 5 கார்களை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்..!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் டி.என்.ஜி.ஏ. தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர் பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
கியா சைரோஸ்
கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்.யூ.வி. கார் ஆகும். இந்த காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் உள்ளன.

ஸ்கோடா கைலாக்
இந்த கார் அதன் பிரிவிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது. இந்த காரில் 25 அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஹேரியர் EV
டாடா ஹேரியர் EV காரை பொறுத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி. காராகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை எச்.டி. ரியர் வியூ கேமரா, 7 ஏர் பேக்குகள், 20-க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி கேமரா, I-VPAC உடன் கூடிய ESP, SOS கால் வசதி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மாருதி டிசையர்
இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக, மாருதி டிசையர் கார் திகழ்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்கிங், ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த பைக்கில் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் ரைடர் 125 மோட்டார்சைக்கிள் வரிசையில் டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 3 வால்வு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.38 பிஎஸ் பவரையும், 11.2 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
இந்த பைக்கில் முதன் முதலாக டூயல் டிஸ்க் பிரேக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுபோல், 125 என்ஜின் பிரிவில் முதலாவதாக சில அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக இதில் பொருத்தப்பட்டிருக்கும் பாலோ-மி-ஹெட்லாம்ப், பார்க்கிங் செய்த பிறகு வீடு வரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்காக உதவும்.
நகர சாலையில் போக்குவரத்து நெரிசல்களிலும், சுலபமாக ஓட்டுவதற்கு ஏற்ப 'கிளைடு துரோ டெக்னாலஜி' தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. டி.எப்.டி. மற்றும் எல்.சி.டி. என இரண்டு வேரியண்ட்கள் இதில் உள்ளன. டி.எப்.டி. டிஸ்பிளேயுடன் கூடியது சுமார் ரூ.95,600 எனவும், எல்.சி.டி. ஸ்கிரீன் கொண்டது ரூ.93,800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய டிஃபென்டர் சாண்ட்க்ளோ எல்லோ மற்றும் கெஸ்விக் கிரீன் வெளிப்புற ஷேட்களில் வருகிறது.
- 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டான்டர்டு 4-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அதன் டிஃபென்டர் காரின் 110 டிராபி மாடல் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் புதிய டிஃபென்டர் 110 டிராபி மாடலின் விலை ரூ. 1.39 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயித்துள்ளது.
இது ஸ்டான்டர்டு X-டைனமிக் HSE வேரியண்ட்டை விட ரூ. 4 லட்சம் அதிகமாக உள்ளது. டிராபி மாடல் முதன்முதலில் ஜூன் 2025-இல் வெளியிடப்பட்டது. இப்போது இந்த மாடல் சற்றே விலை உயர்ந்த ஸ்டைலிங் தொகுப்புடன் சந்தைக்கு வருகிறது.
டிஃபென்டர் 110 டிராபி மாடலில் புதியது என்ன?
புதிய டிஃபென்டர் சாண்ட்க்ளோ எல்லோ மற்றும் கெஸ்விக் கிரீன் வெளிப்புற ஷேட்களில் வருகிறது. இது டிராபி எடிஷன் டெக்கல்கள், பிளாக்டு-அவுட் கிளாடிங், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் டார்க் கிரே ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. உள்புறம், பிரீமியம் பொருட்கள், எம்போஸ்டு பிராண்டிங் மற்றும் பிரத்யேக நிலையை பிரதிபலிக்கும் வகையில் தீம் மூலம் கேபின் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

பவர்டிரெய்ன் மற்றும் செயல்திறன்
இயந்திர ரீதியாக, டிராபி மாடலில் 3.0-லிட்டர், இன்லைன்-6 டீசல் எஞ்சின் (மைல்ட்-ஹைப்ரிட் அசிஸ்ட்) மூலம் இயக்கப்படுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டான்டர்டு 4-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 345bhp பவர் /700Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும்.
- தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும்.
- ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தீபாவளி பண்டியையொட்டி ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மாடல்களை வாங்குபவர்களுக்கு ரொக்க சலுகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. ரிவோல்ட் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.13,000 வரை தள்ளுபடியையும், ரூ. 7,000 வரை மதிப்புள்ள இலவச காப்பீட்டையும் வழங்குகிறது.
அனைவரையும் ஆர்வமாக வைத்திருக்க, சலுகை காலம் முழுவதும் ஒவ்வொரு வாங்குபவருக்கும் உறுதியான பரிசுகள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது. இந்த பண்டிகை கால சலுகைகளில் தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், மைக்ரோவேவ்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் ரிவோல்ட் பொருட்கள் ஆகியவை அடங்கும். ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள ரிவோல்ட் ஹப்பைப் பார்வையிட்டு வாங்கலாம். பண்டிகைக் கால சலுகைகளைப் பெறலாம்.
பண்டிகை காலம் முழுக்க மின்சார பைக்குகளை வாங்குபவர்களை பெரிய அளவிலான கொள்முதல்களை ஊக்குவிக்கும் என்பதால், நிறுவனம் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கான விற்பனையை அதிகரிக்க முடியும்.
- ஹீரோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ரோட்ஸ்டர் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட உள்ளது.
- இந்த பண்டிகை காலத்தில் ஹீரோவின் பிரபலமான எக்ஸ்ட்ரீம் சீரிஸ் அப்டேட் செய்யப்பட உள்ளது.
இந்திய சந்தையில் இரு சக்கர வாகன ஆர்வலர்களுக்கு அக்டோபர் மாதம் ஒரு விருப்பமான மாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல இந்திய பைக்குகளின் ஸ்போர்ட் அப்டேட்கள் முதல் புத்தம் புதிய அட்வென்ச்சர் மாடல்கள் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க நிறைய மாடல்கள் வரிசையில் உள்ளன. அந்த வகையில் இந்த மாதம் என்னென்ன மாமடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதைப் பார்ப்போம்...
டிவிஎஸ் அப்பாச்சி RTX300
அப்பாச்சி RTX300 உடன் டிவிஎஸ் நிறுவனம் அட்வென்ச்சர் பிரிவில் பெரிய அளவில் நுழைய தயாராகி வருகிறது . கடந்த ஆண்டு மோட்டோ சோலில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட 300 சிசி என்ஜினை அடிப்படையாகக் கொண்ட இந்த பைக், ஏராளமான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் இந்திய சாலைகளுக்குத் தயாராக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இது பல முறை சோதனை செய்யப்பட்டுள்ளது, மேலும் பண்டிகைக் காலத்திற்கு முன்பே அக்டோபர் 15, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சரியான விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் விலை சுமார் ரூ.2.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஸ்க்வர்னா விட்பிலன் 250
ஹஸ்க்வர்னாவின் விட்பிலன் 250, பழைய எல்சிடி கன்சோலுக்குப் பதிலாக செவ்வக வடிவ TFT கன்சோலுடன் அப்டேட் செய்யப்படுகிறது. புதிய மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட சுமார் ரூ.12,000 வரை அதிகரிக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ.2.25 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இருக்கும். புதுப்பிக்கப்பட்ட பைக் இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுசுகி இ-அக்சஸ்
2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட சுசுகி இ-அக்சஸின் வெளியீடு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது. மே மாதத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டாலும், இந்த மாதம் இது அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை சுமார் ரூ.1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். இ-ஆக்சஸ் கூர்மையான வடிவமைப்பு, 4.1kW மோட்டார் மற்றும் 3.07kWh பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது மணிக்கு 71 கிமீ வேகத்தையும் 95 கிமீ தூரத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட ஹீரோ மேவரிக் 440
ஹீரோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ரோட்ஸ்டர் மாடல் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மேவ்ரிக் 440, மேட் கிரே நிறம், கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பிரான்ஸ் நிற என்ஜின் கவர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

புதுப்பிக்கப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R & 160R 4V
இந்த பண்டிகை காலத்தில் ஹீரோவின் பிரபலமான எக்ஸ்ட்ரீம் சீரிஸ் அப்டேட் செய்யப்பட உள்ளது. இரண்டு எக்ஸ்ட்ரீம் மாடல்களும் டீலர் சந்திப்பில் ஏராளமான அப்டேட்களுடன் காணப்பட்டன. எக்ஸ்ட்ரீம் 125R ஒரு பிரைட் ரெட் மற்றும் பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் பார்-எண்ட் மிரர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் திராட்டில், பல ரைடு மோட்கள், க்ரூயிஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை பெறுகிறது.
புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V க்ரூயிஸ் கண்ட்ரோல், புளூடூத் உடன் கூடிய கலர்-எல்சிடி கிளஸ்டர், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், கூர்மையான கிராபிக்ஸ் மற்றும் ஒற்றை இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது. இருப்பினும், இரண்டு பைக்குகளும் அவற்றின் தற்போதைய இயந்திரங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன மற்றும் இயந்திர ரீதியாக மாறாமல் உள்ளன.
- இது ஏழு பேர் அமரக்கூடிய நிலையான இருக்கைகளுடன் வருகிறது.
- இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட பொலிரோ மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இந்த புதுப்பிப்பு மாடலில் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
2025 பொலேரோ மாடல் 1.5 லிட்டர் mHawk75 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 75bhp பவர் மற்றும் 210Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும், இது ஏழு பேர் அமரக்கூடிய நிலையான இருக்கைகளுடன் வருகிறது.
வண்ணங்களைப் பொறுத்தவரை, புதிய பொலிரோ- டயமண்ட் ஒயிட், டிசாட் சில்வர், ராக்கி பெய்க் மற்றும் ஸ்டெல்த் பிளாக் என நான்கு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த கார் B4, B6, B6(O) மற்றும் B8 ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது.
- புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரை இன்ஸ்பயர் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. டாப்-எண்ட் "எசென்ஸ்" வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய வெர்ஷனில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்...
வெளிப்புறத்தில் வின்ட்சர் EV இன்ஸ்பயர் பியர்ல் ஒயிட் மற்றும் ஸ்டாரி பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், ரோஸ் கோல்ட் கிளாடிங், கருப்பு ORVMகள் மற்றும் 'இன்ஸ்பயர்' பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.
உட்புறம் சாங்ரியா ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. அவை பிளாக் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொண்டுள்ளன. டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது. முன்புற கிரில் பகுதி ரோஸ் கோல்டு நிறமும், பாடி சைடு மோல்டிங்ஸ், 'இன்ஸ்பயர்' மெத்தைகள், லெதர் கீ கவர் மற்றும் பம்பர் கார்னர் ப்ரொடெக்டர்கள் உள்ளது.

புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை. இதிலும் 100 கிலோவாட் (134hp பவர்) /200 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் FWD மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 38kWh LFP பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 331 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி வின்ட்சர் EV இன்ஸ்பயர் மாடல் இந்திய சந்தையில் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் ஒரு வருட நிறைவு மற்றும் இந்தியாவில் 40,000 யூனிட் விற்பனையையும் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.






