என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் சாதனங்களின் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள் வாட்சுகளுக்கு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டது.
இந்த அப்டேட்டில் புதிய சிரி வாய்ஸ்கள், முகக்கவசம் அணிந்தபடியே ஐபோன்கள், ஐபேட்களை அன்லாக் செய்யும் அம்சம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் ஆப்பிள் சாதனங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளையும் ஆப்பிள் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் இணைய பாதுகாப்பு பிரிவான ஐ.சி.இ.ஆர்.டி அனைத்து ஆப்பிள் பயனர்களையும் தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யக்கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கின்றன. இதன்மூலம் ஹாக்கர்கள் ஆப்பிள் சாதனங்களுக்குள் நுழைந்து சில முக்கிய தகவல்களை எடுத்துவிட முடியும். இவற்றை சரி செய்ய ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டுக்கு உடனே மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஆப்பிள் சாதனங்களில் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
14.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐஓஎஸ் ஐபேட் ஓஎஸ்
8.5 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் வாட்ச் ஓஎஸ்
15.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி
12.12.13 விண்டோஸ் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐடியூன்ஸ்
12.3 மோண்டெரே வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்
11.6.5 பிக் சர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்
ஆப்பிள் மேக் ஓஎஸ் கேட்டலினா
7.9 சாஃப்ட்வேர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி
10.4.6 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் கேரேஜ்பேண்ட்
10.7.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் லாஜிக் ப்ரோ எக்ஸ்
13.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் Xcode
ஆப்பிள் மென்பொருள் பிரச்சனைகளை சரி செய்ய பயனர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த டிவியில் 8ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் டிவி Y1S ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிவி 43 இன்ச் அளவில், 4கே ரெஷலியூஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியில் 8ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்றும், இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 10 ஓ.எஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டெண்ட், அமேசான் அலெக்சா, டால்பி ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும், இதில் 24W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிவி இந்திய மத்திப்பில் ரூ.65,000-ஆக இருக்கும் என கருதப்படுகிறது.
ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை இதில் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி.ஐ லைட் என்ற அம்சத்தை என்.பி.சி.ஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த யூ.பி.ஐ லைட் அம்சத்தின் மூலம் சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யூ.பி.ஐ சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் யூ.பி.ஐ லைட் தேர்வையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யூ.பி.ஐ லைட்டில் ஆன்லைன் வாலட் தரப்படும். பயனர்கள் வங்கி கணக்கிலிருந்து வாலட்டில் பணத்தை வைத்துகொண்டு சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்யலாம். ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை இதில் செய்ய முடியும்.
தற்போது யூபிஐ சேவையை இணையம் இல்லாமலே செய்யும் வசதி அறிமுகமாகியுள்ள நிலையில், யூ.பி.ஐ லைட் சேவையை இணையத்தில் மட்டுமே செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மைக்ரோசாஃப்டால் வழங்கப்பட்டு வரும் இந்த சேவை வரும் ஜுன் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் பயனர்களை இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11 சேவையை முழுதாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் பயனர்கள் யாரும் எக்ஸ்பிளோரர் பிரவுசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்பிளோரருக்கு வழங்கப்பட்டு வந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும். அதன்பின் விண்டோஸ் பிரவுசராக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இருக்கும். எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களுக்கு தானாகவே மைக்ரோசாஃப்ட் எட்ஜுக்கு ரீடைரெக்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
நவீன தேவைகளுக்கு ஏற்ப ஒரே ஒரு பிரவுசரிலேயே அனைத்து அம்சங்களையும் கொண்டு வர மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளதால் எக்ஸ்பிளோரருக்கு பதில், எட்ஜை பிரதான பிரவுசராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த மாதமே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களை ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் மெயில் அனுப்பியது. அவ்வாறு செய்யவில்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த முடக்கம் அமலுக்கு வந்ததாக பல ஃபேஸ்புக் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஹேக்கர்களால் ஃபேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. பயனர்கள் உடனே செட்டிங்ஸுக்கு சென்று தங்களுடைய ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்தால் மட்டுமே அவர்களால் உள் நுழைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான இதில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ரெட்மியின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரெட்மி கே50 ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், 6.7 இன்ச் 2கே AMOLED பேனல், ஹெச்.டி.ஆர்10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்டை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 Hz டச் சாம்பிளிங் ரேட் தரப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை கே 50 கேமராவில் 48 MP Sony IMX582 பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.
மேலும் இதில் 5,500 mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது.
இந்த போனின் 8ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.28,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி/256ஜிபி மற்றும் 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.31,000 மற்றும் ரூ.33,450-ஆகவும் இருக்கிறது.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 பிராசஸர், 6.7 இன்ச் 2கே ஆமோலெட் பேனல் HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது.
கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 108 மெகாபிக்ஸல் Samsung 1/1.52 இன்ச் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் ஷூட்டர், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா தரப்பட்டுள்ளன.
5000 mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனின் 8ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,450-ஆகவும், 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.43,000-ஆகவும் இருக்கிறது. இந்த போனின் டாப் மாடல் 12ஜிபி/512ஜிபி வேரியண்டின் விலை ரூ.47,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன் இந்தியாவில் வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
வேறு செயலியின் உதவியில்லாமல் நமக்கு பிடித்த புகைப்படங்களை வாட்ஸ்ஆப் மூலமாகவே ஸ்டிக்கராக மாற்றலாம்.
வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் அனைவருக்கும் பிடித்துபோய் ஸ்டிக்கரை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதை தொடர்ந்து 3-வது வகை செயலிகள் பயனர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைப்பட வசனங்கள், கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களாக வெளியிட்டன. இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது வேறு செயலிகளில் உதவி இல்லாமல் வாட்ஸ்ஆப்பிலேயே நமக்கு பிடித்த புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை வாட்ஸ்ஆப் வெப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை பயன்படுத்த வாட்ஸ்ஆப் வெப்பை திறந்து ஏதாவது ஒரு சாட் விண்டோவிற்குள் செல்லவும்.
பிறகு அதில் உள்ள Attachment ஐகானை கிளிக் செய்து ஸ்டிக்கர் என்பதை செலக்ட் செய்யவும்.

இப்போது ஃபைல் எக்ஸ்பிளோரரில் சென்று உங்களுக்கு பிடித்த போட்டோவை செலக்ட் செய்து ஓபன் தரவும்.
இவற்றை அனுப்பினால் ஸ்டிக்கர் வகையில் செல்லும். இந்த ஸ்டிக்கரை ரைட் கிளிக் அல்லது நீண்ட நேரம் பிரஸ் செய்து சேவ் செய்து வைத்துகொள்ளலாம்.
இந்த அம்சத்தில் புகைப்படத்தின் பேக்கிரவுண்டை நீக்கும் வசதி இடம்பெறவில்லை. நீங்கள் பேங்கிரவுண்ட் நீக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பினால் வாட்ஸ்ஆப்பில் தரப்படும் ஸ்டிக்கர்கள் போலவே இருக்கும்.
ஜியோவின் இந்த புதிய திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனம் இரண்டு புதிய வொர்க் ஃபிரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள்
ரூ. 2,879 மற்றும் ரூ. 2,999 விலையில் கிடைக்கின்றன.
இதன்படி ஜியோவின் ரூ.2879 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 730ஜிபி ஆகும். தினசரி எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.
மற்றொரு திட்டமான ரூ.2999-ல் தினம் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 912.5 ஜிபி ஆகும். எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.
ஜியோவின் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
மெட்டாவெர்ஸ் சாதனங்களை உருவாக்குவதற்கு பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஆண்டு மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வருவதாக அறிவித்தார்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விளையாடலாம், நண்பர்களுடன் கூடி அரட்டையடிக்கலாம், பாடம் கற்கலாம், நிலம் வாங்கலாம் மற்றும் விரும்பும் விஷயங்களை செய்யலாம். இணைய உலகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் அமையப்போவதாக பலரும் கருதுகின்றனர். இதையடுத்து பெரும் நிறுவனங்கள் பலவும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை சார்ந்த சாதனங்கள், சேவைகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த முன்னணி நிறுவனமான சாம்சங், இனி மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்சங் கூறியதாவது:-
எதிர்காலம் மெட்டாவெர்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் சார்ந்து தான் இருக்கும். இதனால் மெட்டாவெர்ஸ் சாதனங்களையும், தீர்வுகளையும் உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்த இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதுவேண்டுமானலும், எங்குவேண்டுமானலும் இருந்து மெட்டாவெர்ஸை அனுபவிப்பதற்கான வகையில் உதவுவோம்.
இனி சாம்சங் நிறுவனம் மெட்டாவர்ஸை சப்போர்ட் செய்யக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்யும். என்னவகையான சாதனங்கள் என்பதை இப்போது கூற முடியாது. இதற்காக பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம்.
இவ்வாறு சாம்சங் அறிவித்துள்ளது.
இந்த ரெட்மிபுக் ப்ரோ 2022 மூன்று வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது.
ஜியோமி நிறுவனம் ரெட்மிபுக் ப்ரோ 2022 ஃபிளாக்ஷிப் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த லேப்டாப் 15 இன்ச் ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 89 சதவீதம் ஸ்கீரின் டு பாடி ரேட்ஷியோ வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட்புக் ப்ரோவில் 12-வது ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7 மற்றும் ஐ5 பிராசஸர்கள், RTX2050 GPU, 16ஜிபி LPDDR 5200MHz, 512ஜிபி PCIe 4.0 எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜுடன் தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் அலுமினியம் அலாய் கொண்ட யுனிபாடி டிசைனில் வந்துள்ளது. இதன்மூலம் எந்த தேய்மானத்தையும் தாங்கக்கூடியது. ஃபிங்கபிரிண்ட் செம்சார் பவர் பட்டனுடன் வைக்கப்பட்டுள்ளது. இதில் 1.3 கீ டிராவல் ஸ்பேஸ் உள்ள பெரிய டச்பேட் தரப்பட்டுள்ளது.
ரெட்மிபுக் ப்ரோ 2022 விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது. இதில் 72Wh பேட்டரி, 130W சார்ஜிங் வசதில், 2 தண்டர்போல்ட் போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி ஏ 3.2 போர்ட்டுகள், ஹெச்.டி.எம்.ஐ 2.0 கனெக்டர், ஆடியோ ஜாக், எஸ்.டி கார்ட் ரீடர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. ஐ5 இண்டகிரேட்டட் ஜிபியூ லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.67,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. i5+RTX2050 மாடல் இந்திய மதிப்பில் ரூ.81,300-ஆகவும், i7+RTX2050 மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.89,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வரும் மார்ச் 24 முதல் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் வங்கி கார்டுகளை கொண்டு ஐபோன் எஸ்.இ மற்றும் ஐபேட் ஏர் சாதனங்களை வாங்கும்போது ரூ.4000 வரை தள்ளுபடியும் உண்டு.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ (2022) மற்றும் ஐபேட் ஏர் (2022) சாதனங்களை இந்த மாதம் 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்று இந்த இரு சாதனங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
ஐபோன் எஸ்.இ 2022-ஐ பொறுத்தவரை, இந்த ஐபோனில் iOS 15 வழங்கப்பட்டுள்ளது. 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே 750x1334 ரெஷலியூஷன், 3262ppi பிக்ஸல் டென்சிட்டி, 625 nits வரை பிரைட்னஸ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த போன் இதுவரை உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே கடினமான கண்ணாடியை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏ15 பயோனிக் சிப்பை கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்ஸல் கேமரா சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா டீப் ஃயூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4, போட்டோகிராபிக் ஸ்டைல்ஸ் ஆகியவை உள்ளன. இந்த போன் 60fps வரை 4கே வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. இந்த கேமரா சப்பையர் கிரிஸ்டல் லென்ஸ் கவர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
முன்பக்கத்தில் 7 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி கேமரா நேர்ச்சுரல், ஸ்டூடியோ, ஸ்டேஜ், ஸ்டேஜ் மோனோ, ஹைகீ போனோ உள்ளிட்ட 6 போர்ட்ரைட் லைட்டிங் எஃபெக்ட்ஸ்களை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த கேமராவிலும் டீப் ஃபூஷன், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர் 4 தரப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முன்பக்க கேமராவிக் 1080p ரெக்கார்டிங்கை வழங்கியுள்ளது. இத்துடன் டைம்லேப்ஸ் வீடியோ, நைட்மோட் டைம்லேப்ஸும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் எஸ்இ 2022 பயோமெட்ரிக் ஆந்தண்டிகேஷனுக்கான ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட டச் ஐடியுடன் வருகிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள இன்பில்ட் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 மணி நேர வீடியோ பிளேபேக் நேரத்தையும், 50 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்குகிறது.
இந்த போனுக்கு Qi ஸ்டாண்டர்ட் பேஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. 20W வயர்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சார்ஜர் போனுடன் வராது.
இந்த போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.43,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.48.900-ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனை ஐசிஐசிஐ, கோடக், எஸ்.பி.ஐ கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.

ஐபேட் ஏர், ஐபேட் ஓஎஸ் 15-ல் இயங்குகிறது. இதில் 10.9 இன்ச் எல்.இ.டி லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே, 2360x1640 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுள்ளது. இதன் டிஸ்பிளே 500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ், பி3 வைட் கலர் காமுட், ட்ரூ டோன் வைட் பேலன்ஸ் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஐபேட் ஏர் 2022-ல் ஆக்டாகோர் எம்1 சிப் பிராசஸரை கொண்டுள்ளது. இது இதற்கு முன் இருந்த ஐபேட் ஏரை விட 60 சதவீதம் அதிகமான சிபியூ பெர்ஃபார்மன்ஸ், 2 மடங்கு அதிக கிராபிக்ஸ் பெர்பார்மன்ஸை தருகிறது. இந்த சிப்பில் ஆப்பிள் நியூரல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை கொண்டு செயல்படுவதற்கு உதவுகிறது.
ஐபேட் ஏரில் 12 மெகாபிக்ஸல் வைட் பின்புற கேமரா f/1.8 லென்ஸ் தரப்பட்டுள்ளது. இதில் ஃபோகஸ் பிக்ஸல் கொண்ட ஆட்டோ ஃபோகஸ், பனோரமா, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர், போட்டோ ஜியோடேகிங், இமேஜ் ஸ்டேபிளைஷேசன், பர்ஸ்ட் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி 24,25,30,60 fps 4கே ரெக்கார்டிங்கை தருகிறது. இதில் 120fps-ல் 1080p ஸ்லோமோஷன் சப்போர்ட்டும் இருக்கிறது.
இந்த ஐபேடில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் செல்ஃபி கேமரா, மெஷின் லேர்னிங் பேக்ட் சென்டர் ஸ்டேஜ்ஜுடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்டைம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும்போது கேமராவை அட்ஜெஸ்ட் செய்யும். இந்த முன்பக்க கேமராவில் 122 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீவ், f/2.4 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.
ஐபேட் ஏரில் 28.6Wh லித்தியம் பாலிமர் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 10 மணி நேரம் வெப் பிரவுசிங் அல்லது வைஃபையில் வீடியோ பிளே பேக்கை வழங்குகிறது. வைஃபை+செல்லுலார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் வெப் பிரவுசிங்கிற்கு 9 மணி நேரம் சார்ஜை வழங்கும். இதில் 20W USB-C பவர் அடாப்டர் தரபப்ட்டுள்ளது.
இந்த ஐபேட் ஏரின் வைஃபை மட்டும் உள்ள 64 ஜிபி வேரியாண்டின் விலை ரூ.54,900-ஆகவும், வைஃபை+ செல்லுலார் வசதியுள்ள 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.68,900-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபேடின் 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.82,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐபேட்டை ஐசிஐசிஐ, கோடக், எஸ்.பி.ஐ கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.4000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்ஸல் போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடைசி ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் பிரீவ்வை வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டில் உள்ள ‘டு நாட் டிஸ்டர்ப் மோட்’ பிரையாரிட்டி மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தரப்பட்டுள்ள நோட்டிஃபிகேஷன் பர்மிஷன் எந்தெந்த செயலியின் நோட்டிபிகேஷனகள் வர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது.
குயிக் செட்டிங்க்ஸில் புதிய பிரைவசி ஷார்ட்கட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேமரா, மைக்ரோபோன், லோகேஷன் ஆகியவற்றின் பிரைவசியை எளிதாக மாற்றிகொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 13-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய மீடியா பிளேயர், அவுட்புட் பிக்கர் சிறப்பான டிசைனில் வந்துள்ளன. இதன் யூ.ஐ மூலம் எளிதாக இசை மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை கட்டுப்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 12எல்-ல் நீகப்பட்ட டச் இண்டிகேட்டர்கள் ஆண்ட்ராய்டு 13-ல் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்யும்போதே டச்சை எனாபிள் செய்ய முடியும்.
கூகுள் டிஸ்பிளே மற்றும் ஃபாண்ட் சைஸ் ஆப்ஷன் இரண்டையும் ஒரே மெனுவின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் நாம் சாதனத்தின் டிஸ்பிளே சைஸை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 12எல்-ல் இருந்த ஸ்பிலிட் ஸ்க்ரீன் அம்சம் ஆண்ட்ராய்டு 13-க்கும் தரப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்ஸல் போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.






