search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிரிதி இரானி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்
    • பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார்.

    நாக்பூர்:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை குடும்பம் இல்லாதவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சமூக வலை தள பக்கத்தில் தங்களது சுயவிவர குறிப்பில் மோடி குடும்பம் என சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


    பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்த தீவன திருடர் (லாலு பிரசாத் யாதவ்) பிரதமர் மோடிக்கு குடும்பம் எதுவும் இல்லை என கூறி உள்ளார். நான் அவரிடம் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எல்லாம் மோடியின் குடும்பம். 140 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடி குடும்பம்.

    யாராலும் அவரது தலைமுடியை கூட தொட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார்.
    • வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்’ என்று கூறினார்.

    அமேதி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

    அங்கு மீண்டும் போட்டியிட தைரியம் உண்டா? என ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால் விட்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார். ராம் லல்லாவின் அழைப்பை அவரும் அவரது குடும்பமும் நிராகரித்தது. இதனால் அமேதி மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்' என்று கூறினார்.

    அமேதியில் ராகுல் காந்தியின் யாத்திரையை வெறிச்சோடிய தெருக்கள்தான் வரவேற்றதாக கூறிய ஸ்மிரிதி இரானி, இதனால் சுல்தான்பூர் மற்றும் பிரதாப்கரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை வரவழைத்து வந்திருப்பதாகவும் கிண்டல் செய்தார்.

    • ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல்.
    • ஸ்மிரிதி இரானியிடம் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுபாடு.

    பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சொந்த தொகுதிக்கு சென்றுள்ளார்.

    நேற்று அவர்கள் தொகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அவர்கள் நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    ஸ்மிரிதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அதுவும் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

    மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்ய நாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை உடனடியாக பெற வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது.
    • பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும்.

    பெங்களூரு

    மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் ரேஷன் அட்டைகளுக்கு மாதம் 5 கிலோ சிறு தானியங்கள் வழங்கப்படும்.

    கர்நாடகத்தில் 54 லட்சம் விவசாயிகள் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாய விளைபொருட்களை அரசு பஸ்களில் 50 கிலோ வரை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி, ஏழைகளுக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

    பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும். மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி பெண்களை சமமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய்களை உள்ளடக்கியது. தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் எப்போதும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

    • எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது.
    • காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

    பெலகாவி :

    கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது பா.ஜனதா கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்கேவின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பெலகாவி மாவட்டம் இண்டல்காவில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி 100 ஆண்டு வாழவேண்டும் என்று நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே, மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வயதில் மூத்தவர், ஒரு கட்சியின் பெரிய பதவியில் இருப்பவர், பல பொறுப்புகளை வகித்தவர் இவ்வாறு பேசுவது வெட்ககேடானது.

    காங்கிரசின் தலைவராக இருந்தாலும் நீங்கள் ராகுல்காந்திக்கு செருப்பாக தான் இருக்கிறீர்கள். எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது. குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?. பா.ஜனதா பற்றியும், பிரதமர் மோடியை பற்றியும் பேசுவதை நிறுத்திவிட்டு சொந்த கட்சி பிரச்சினைகளை முதலில் பாருங்கள். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியுமா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறியுள்ளது.
    • ஒவ்வொரு குடிமகனும் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான்.

    புதுடெல்லி

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்தில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடப்பதாகவும் கூறினார்.

    அவர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

    இந்தநிலையில் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஸ்மிரிதி இரானி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகள், இந்திய ஜனநாயக அமைப்புகளையும், பாராளுமன்றத்தையும் அவமதிக்கும் செயல்.

    ராகுல்காந்தி குடும்பத்தின் உத்தரவின்பேரில், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தார்களே? இதுவா ஜனநாயகம்?

    ராகுல்காந்தி குடும்பத்தின் உத்தரவின்பேரில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் புத்தகங்களை கிழித்து, மேஜை மீது ஏறி சபைத்தலைவரான துணை ஜனாதிபதியை இழிவுபடுத்தினார்களே? இதுவா ஜனநாயகம்?

    ஒவ்வொரு குடிமகனும் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான். ஏனென்றால் பாராளுமன்றம் என்பது எம்.பி.க்கள் இணைந்த அமைப்பு மட்டுமல்ல. அது இந்திய மக்களின் குரல்.

    எனவே, பாராளுமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்துள்ளார்.

    பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறியுள்ளது.

    அவர் சொல்வதுபோல், இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான அவரது செயல்பாடுகளால், காங்கிரசைத்தான் இந்திய மக்கள் அரசியல் அழிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை திருமணம் ஒரு குற்றம்.
    • மக்களும் அரசோடு இணைய வேண்டும்

    புதுடெல்லி :

    2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.

    இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

    • பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதி மற்றும் கல்வி உதவி வழங்கப்படுகிறது.
    • கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தக் குழந்தைகளுக்கு இடம்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளதாவது:

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பால்,பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ், பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    இது போன்ற குழந்தைகள் 23 வயதை எட்டும் வரை கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன. பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் செலுத்தப்படுகிறது.

    இந்த தொகையை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 18 வயது முதல் 23 வயது வரை மாதாந்திர உதவித் தொகையை பெறலாம்.

    உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்யா திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படுவதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

    ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் இந்த குழந்தைகளுக்கு ரூ.20,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின்கீழ் 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ளது.
    • சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

    இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முடங்கின. இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 


    அவரை தொடர்ந்து மத்திய மந்திரி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய மந்திரிகள் இருவர் அடுத்தடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்மிரிதி இரானி மகள் மது விற்பனை பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்.
    • சமூக வலைதள பதிவுகளை அழிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

    மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டூவிட்டர் பதிவுகள், விடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது.
    • ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதிப்பு

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார்.

    இந்த விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரச்சினை எழுப்பி பேசினார். அப்போது அவர், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி முர்முவை ராஷ்டிர பட்னி என கூறி அவமதித்து விட்டார். அவர் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தை, பெண்களை, ஏழைகளை, நலிவுற்றோரை அவமதித்து விட்டார்" என சாடினார்.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

    நண்பகல் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சோனியா காந்தி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் வரிசைக்கு சென்றார். பீகார் பா.ஜ.க. எம்.பி. ரமாதேவியிடம், "இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?" என கேட்டார்.

    அப்போது அங்கே மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வந்து, சோனியா காந்தியை நோக்கி சைகை காட்டினார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் ஸ்மிரிதி இரானியின் எதிர்ப்பை சோனியா காந்தி புறக்கணிக்க முயற்சித்தார். ஆனால் ஏனோ திடீரென ஸ்மிரிதி இரானியை நோக்கி சோனியாவும் சைகை செய்து கோபமாக பேசினார்.

    சோனியாவும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதும், அவர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் சூழ்ந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த மோதலால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டபோது சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலேயும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா பொத்தாரும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

    பின்னர் ரமாதேவி நிருபர்களிடம் பேசுகையில், "இந்த விவகாரத்தில் என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள், நான் என்ன தவறு செய்தேன் என சோனியா கேட்டார். நான் அவரிடம், நீங்கள் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமித்ததுதான் தவறு என்று சொன்னேன்" என குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "பா.ஜ.க. எம்.பி.க்களிடம் மிரட்டும் தொனியில் சோனியா காந்தி பேசினார். என்ன விவாதிக்கப்படுகிறது என தெரிந்து கொள்ள விரும்பிய பா.ஜ.க. எம்.பி.க்களிடம் அவர் நீங்கள் என்னிடம் பேசக்கூடாது என கூறினார்" என்று தெரிவித்தார்.

    "மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என பிரச்சினையை அவர் திசை திருப்பினார்" என்றும் நிர்மலா சீதாராமன் சாடினார்.

    இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் குறிப்பிடுகையில், "இன்று மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் நடத்தை கொடூரமானது, மூர்க்கத்தனமானது. அவரை சபாநாயகர் கண்டிப்பாரா? விதிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா?" என குறிப்பிட்டுள்ளார்.

    சோனியா காந்திக்கு ஆதரவு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மக்களவையில் இருந்தபோது, 75 வயதான மூத்த பெண்மணியை (சோனியாவை) ஓநாய் பாணியில் சுற்றி வளைத்தனர். அவர் செய்ததெல்லாம் மற்றொரு மூத்த பெண் குழு தலைவரிடம் நடந்து சென்று பேசியதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, "ஒரு பெண்ணாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களவையில் உள்ள அவரது சொந்தக் கட்சி தலைவர் அவமதித்ததற்காக நாட்டின் முன் அவர் வந்து, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, "இந்திய நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக யாரும் அவமதிப்பாக பேசக்கூடாது. அத்தகைய கருத்துக்களை கூறுவது தவறு. இது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இது தவறுதான்" என குறிப்பிட்டு பிரச்சினையை முடித்து வைத்தார்.

    ×