search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யாராலும் பிரதமர் மோடியின் தலைமுடியை கூட தொட முடியாது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    "யாராலும் பிரதமர் மோடியின் தலைமுடியை கூட தொட முடியாது"

    • லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்
    • பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார்.

    நாக்பூர்:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை குடும்பம் இல்லாதவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சமூக வலை தள பக்கத்தில் தங்களது சுயவிவர குறிப்பில் மோடி குடும்பம் என சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீது மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


    பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்த தீவன திருடர் (லாலு பிரசாத் யாதவ்) பிரதமர் மோடிக்கு குடும்பம் எதுவும் இல்லை என கூறி உள்ளார். நான் அவரிடம் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எல்லாம் மோடியின் குடும்பம். 140 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடி குடும்பம்.

    யாராலும் அவரது தலைமுடியை கூட தொட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×