search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நேரம்"

    • ரமேஷ் வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
    • பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி பூங்குழலி (வயது 37) இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த குரு மகன் ரமேஷ் (25) வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் வங்கி வேலை நேரம் முடிந்து விட்டது. நாளைக்கு வந்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

    பின்பு வேலை நேரம் முடிந்து வங்கி துணை மேலாளர் பூங்குழலி மற்றும் கல்விக்கரசி ஆகியோர் பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் இவர்களை வழிமறித்த ரமேஷ் இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துணை மேலாளர் பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை என அமைச்சர் பேச்சு
    • சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்டசபையில் இன்று சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்படும், அதற்கு உரிய சம்பளம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் மசோதாவை தாக்கல் செய்து பேசும்போது, 8 மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் ஊதியம் என்ற ஷரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். தொழிற்சாலை நெகிழ்வுத்தன்மைக்காகவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதற்கு எதிராக அரசு இருக்காது, அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை, தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    8 மணி நேரம் என்பதை இந்த சட்ட மசோதா நீர்த்துப்போகச் செய்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்தார். மசோதா மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசினார்.

    சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த வேலை நேர சீர்திருத்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்தார்.

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×