search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian workers"

    • ஹமாஸ் அமைப்புடனான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    • இதனால் 6 ஆயிரம் இந்தியர்கள் அடுத்த மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. போரினால் காசா பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்புடனான மோதலால் இஸ்ரேலின் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. இத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. போர் தொடங்கிய பின் அங்கு பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. சமீபத்திய மோதலால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர்

    கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதல்கட்டமாக 64 இந்திய தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மாத இறுதிக்குள் 1,500 தொழிலாளர்களை வரவழைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு சுமார் 6 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் வரவழைக்கப்பட உள்ளனர். சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என இஸ்ரேல் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • கவர்னர் தமிழிசை பாராட்டு
    • உடனடியாக மீட்க உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தேன்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் புதுவை-காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்க உதவுமாறு அவர்களுடைய உறவினர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக மீட்க உதவ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதியிருந்தேன்.

    அதன் பயனாக, சூடான் நாட்டில் சிக்கியிருக்கும் புதுவை-காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்கிறது.

    ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த தொழிலாளர்கள் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்திருப்பது மன நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    மனிதாபிமானமிக்க இந்த செயலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலா ளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×