search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீர சாவர்க்கர்"

    • கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கர் உருவப்படத்தை அகற்றுவேன் என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை, நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபையில் இருந்து சாவர்க்கரின் உருவப்படத்தை அகற்றுவது சரியானது. அனுமதித்தால் அதை அகற்றுவேன் என தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், சாவர்க்கரின் சித்தாந்தம் வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதால் கர்நாடக சட்டசபையில் அவரது புகைப்படம் இருக்கக் கூடாது என தான் கருதுகிறேன். சாவர்க்கருக்கு வீர் பட்டம் கொடுத்தது யார்? அதில் தெளிவு இல்லை. பா.ஜ.க.வுக்கு தெரிந்தால் சொல்லட்டும். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியம் வாங்கினாரா இல்லையா? மன்னிப்பு கடிதம் எழுதினாரா, இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக மும்பை மற்றும் நாக்பூரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், காங்கிரஸ் நீண்ட காலமாக வீர் சாவர்க்கரையும் புரட்சியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல.
    • சாவர்க்கரின் படத்தை வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும்?

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபையில் பசவண்ணா, வால்மீகி, கனகதாசா, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களை வைக்க, சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து வீர சாவர்க்கரின் படத்தையும் சேர்த்து 6 தலைவர்களின் படங்களை பாஜக அரசு சட்டசபையில் வைத்துள்ளது.

    இந்நிலையில் சாவர்க்கரின் படம் கர்நாடகா சட்டசபையில் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக கூறினார். 


    அதனால்தான் அவர்கள் சாவர்க்கரின் உருவப்படத்தை சட்டசபை அரங்கில் நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக அரசுக்கு எதிராக ஊழல் பிரச்சினைகளை சட்டசபையில் நாங்கள் எழுப்ப போகிறோம் என்பதால் அவர்கள் இந்த புகைப்படத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசாரின் பங்கு மற்றும் தியாகங்கள் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள், ஆனால் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல, இப்போது இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ் என்று குறிப்பிட்டார். 


    அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவர் கூறினார். சாவர்க்கரின் படத்தை சட்டசபையில் வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும் என்பது குறித்து சித்தராமையாவிடம் கேட்குமாறும் அவர் தெரிவித்தார்.

    • ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
    • ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    மும்பை :

    சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பால்தாக்கரேவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் மனைவி ராஷ்மி தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதற்கிடையே வீர சாவர்க்கர் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    ராகுல்காந்தியின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் மீது எங்களுக்கு உள்ள மரியாதை மற்றும் பற்றை யாராலும் அழிக்க முடியாது.

    சுதந்திரத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா) சாவர்க்கர் மீது அன்பு காட்டுவது நகைப்பிற்குரியதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சாவர்க்கர் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லை. சாவர்க்கர் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தார். அந்த சுதந்திரம் இன்று பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. சாவர்க்கருக்கு மத்திய அரசு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் இரவே பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வீர சாவர்க்கர் மீது ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
    • ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார்.

    மும்பை

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி பேசினார்.

    அப்போது அவர், "சாவர்க்கர் பா.ஜனதா மற்றும் ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுத தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் தான் வீரமிக்கவர் என கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்" என்று பேசினார்.

    வீரசாவர்க்கர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. வீர சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தியின் நடைபயணம் 71-வது நாளாக நடந்தது. மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருடன் நடிகை ரியாசென் பங்கேற்றார்.

    நடைபயணத்துக்கு மத்தியில் ராகுல்காந்தி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது வீர சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் வீரசாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை நிருபர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார்.

    "உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்" என்று கடைசி வரியில் வீரசாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்து காட்டினார்.

    மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் வீரசாவர்க்கரை பற்றி கூறிய கருத்துக்களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாக தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங்கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைபயணத்தை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " எந்த சூழ்நிலையிலும் வீரசாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் " என்றார்.

    மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " ராகுல் காந்தி வெட்கமே இல்லாமல் வீரசாவர்க்கர் பற்றி பொய் பேசி வருகிறார். மகாராஷ்டிரா மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுப்பார்கள். வீர சாவர்க்கர் போல எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து உள்ளனர். அந்த கொடுமையிலும் அவர் சுதந்திரத்துக்காக பாடல் எழுதினார். மற்றவர் எழுதி கொடுப்பதை ராகுல்காந்தி வாசிக்கிறார். அந்த முட்டாள்களுக்கு வீர சாவர்க்கர் எத்தனை ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார் என்பது கூட தெரியாது" என கூறினார்.

    வீரசாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் கருத்தில் தான் உடன்படவில்லை என்று மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் கூறியிருக்கிறார்.

    • வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • இந்தக் கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

    இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயேர்களுக்கு உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து கருணை மனு கொடுத்ததாகவும் கூறினார். அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில், நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல் காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார். இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல் காந்தி சொல்வது பொய்யா என சோனியா காந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது என காட்டமாக தெரிவித்தார்.

    மேலும், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவமதித்து விட்டார் எனக்கூறி ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ×