மத்திய அரசு வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காதது ஏன்?: உத்தவ் தாக்கரே கேள்வி

ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மத்திய அரசு வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காதது ஏன்?: உத்தவ் தாக்கரே கேள்வி
Published on

மும்பை :

சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பால்தாக்கரேவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் மனைவி ராஷ்மி தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே வீர சாவர்க்கர் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

ராகுல்காந்தியின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் மீது எங்களுக்கு உள்ள மரியாதை மற்றும் பற்றை யாராலும் அழிக்க முடியாது.

சுதந்திரத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா) சாவர்க்கர் மீது அன்பு காட்டுவது நகைப்பிற்குரியதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சாவர்க்கர் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லை. சாவர்க்கர் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தார். அந்த சுதந்திரம் இன்று பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. சாவர்க்கருக்கு மத்திய அரசு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை?.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் இரவே பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com