search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள்"

    • சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா போட்டியிடுகிறார்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடந்து வரும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். முன்பெல்லாம் அத்திபூத்தார்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர்.

    இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. 'இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே' என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா... அந்த ஃபேனை போடு'என கதறுவார்கள்.

    இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க, என்ன என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் - பாமக கூட்டணி அமைத்துள்ளது

    இந்தியா கூட்டணி, மக்களுக்கான கூட்டணி. இந்தியா கூட்டணிதான், சமூக நீதி கூட்டணி.

    வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி. இட ஒதுக்கீட்டை பறிக்க பா.ஜ.க பல வழிகளில் முயற்சித்து வருகிறது.

    மதச்சார்பின்மை பற்றி மோடி பேசுவதில்லை. பன்முகத்தன்மையை மாற்ற நினைக்கும் மோடி வேண்டாம். பா.ஜ.க-பா.ம.க சந்தர்ப்பவாத கூட்டணி.

    மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மோடி மீண்டும் பிரதமரானால் மக்களை சிந்திக்கவிட மாட்டார்கள்.

    பா.ஜ.க.வின் திட்டங்கள் மிகவும் மோசமானது, ஆபத்தானது.

    இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி என தெரிவித்தார்.

    • விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
    • பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.

    அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெறவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது.

    போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது.

    சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.

    தி.மு.க.விற்கு சமூக நீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது.

    பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது.

    நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.

    எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது. வெள்ளம் வந்தபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என தெரிவித்தார்.

    • திமுக கடந்த முறை போன்று தற்போதும் இரண்டு இடங்கள் வழங்க தயாராக இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் 3 இடங்கள் கேட்டு, அதில் உறுதியாக உள்ளது.

    மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. இந்த குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 3 தொகுதிகள் கேட்கிறது. அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக கடந்த 2019 தேர்தலை போன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மூன்று தொகுதிகள் கேட்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் உள்ளது.

    தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்ய விரும்புகிறார். இதன்காரணமாக திமுக நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தனது முடிவில் உறுதியாக இருந்தால் பேச்சுவார்த்தையில் இழுபறிதான் நீடிக்க வாய்ப்புள்ளது.

    3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் திமுக கூட்டணியில்தான் இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி.
    • எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது.

    சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடஒதுக்கீடு பிரச்சனையில் சுமுகமான முறையில் தீர்வை காண்போம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவுகள் இருக்கும்.

    அ.தி.மு.க. தங்களின் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து முதலில் ஒரு கூட்டணியை உருவாக்கட்டும். தங்களின் நட்பு கட்சிகளான பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

    அதனை எங்கள் மீது உள்ள கரிசனம் என்று புரிந்து கொண்டாலும், அது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் அணுகு முறையில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகத்தெளிவாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அது வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும் தி.மு.க. கூட்டணியில், இந்தியா கூட்டணியில் பயணிப்போம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்படி அரவணைக்கிறார்களோ! அப்படி ஒவ்வொரு கட்சிகளையும், அவர்களின் தேவையை உணர்ந்து அரவணைக்க வேண்டிய பொறுப்பில் தி.மு.க. இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.

    ஒரு கூட்டணியின் அங்கமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அந்த கூட்டணியின் நலன்களை பற்றி கவலைப்படாமல் ஒரு முடிவை எடுக்க முடியாது. எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது. எங்கள் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு கூட்டணி வெற்றியும் முக்கியம். அந்த வயைில் ஒரு பரஸ்பர புரிதலோடுதான் எங்கள் முயற்சிகளும், பேச்சுவார்த்தையும் இருக்கும்.

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    • திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
    • 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலக திறப்பு விழா கலெக்டர் அலுவலகம் எதிரே சண்முகா தெருவில் நடந்தது. விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம். இதன்படி குமரியில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    முதல்-அமைச்சரின் இந்த திட்டம் முன்மாதிரி திட்டமாகும். ஒட்டுமொத்த இந்தியா இந்த திட்டத்தை உற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி இருந்தால் அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வரி சையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகி யோர் சனாதனத்தை தவி ர்த்து வருகின்றனர்.

    சனாதனம் குறித்து அமை ச்சர் உதயநிதி பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து இருப்பது இந்தியா கூட்டணியை உடைக்க மேற்கொள்ளும் சதி ஆகும். அவரது சதி முயற்சி பலிக்காது. சனாதனம் என்பது தீட்டு கொள்கையாகும். இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் நரேந்திர மோடி நடுங்குகிறார். இறுதியாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி வருகின்றனர். அடுத்து பாரத் என்ற பெயரும் நிரந்தரம் இல்லை.

    இனிமேல் இதனை இந்து ராஷ்ட்ரா என மாற்றுவார்கள். இதுதான் கோ ல்வால்கர் மற்றும் வீரசவாதரின் கனவு. இதனை தற்போது ஆர்.எஸ்.எஸ். நடைமுறை படுத்த முயல்கி றது. தமிழகத்தில் சனாதனத்திற்கு என்றும் இட மில்லை. அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பகலவன், திருமாவேந்தன், கோபி, தேவகி, சவுத்திரி, பாபு, நாஞ்சில் சுரேஷ், முஜிப் ரகுமான், ரியாஸ், சிராஜுதீன், உமேஷ், யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி பரிசு
    • உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது

    நாகர்கோவில் :

    உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹான்ஸ் ஆச்சார்யா சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை எடுத்தால் ரூ.10 கோடி தருவதாக கூறியுள்ளார்.

    மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினின் படத்தை வாளால் கிழிப்பது போன்றும் சமூக வலைதளங்களில் படம் வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் நிர்வாகிகள் இன்று வடசேரி போலீசில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இரும்பு வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் அவருடைய தலையை வெட்டி கொண்டு வருவதற்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரமஹான்ஸ் ஆச்சார்யா பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.

    தமிழக அமைச்சரின் மீது பொதுவெளியில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த பரமஹான்ஸ் ஆச்சார்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
    • கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.

    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.

    பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

    கடலூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவரத்தில், 2 பழங்குடியின சமுதாயப் பெண்களை நிர்வாண மாக்கி, கற்பழித்ததை கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தியும், மங்கலம்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடசி நகர செயலாளர் அம்பேத் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை,விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், தி.மு.க.நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி குழந்தை சுதந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ந கர துணைச் செயலாளர் தனக்குமார், ம.தி.மு.க.பிரமுகர் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அறிவழகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பிரமுகர் மணிவாசகன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

    • பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டனர்.
    • 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வாசுதேவனூர் பஸ் நிலையம் அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக உள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் க ட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் தாசில்தார் இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தனபால் மீது தாசில்தார் இந்திரா புகார் அளித்தார். அதன் பிறகு நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் பகுதியில் பவுத்த மாநாட்டிற்காக அவ்வழியே வந்த திருமாவளவன் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிவிட்டு சென்றார்.

    அப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட போலீசா ருடன் தாசில்தார் இந்திரா விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமா வளவன் ஏற்றிசென்ற கொடிக் கம்பத்தை அகற்றினார். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு நடந்தது.
    • 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    கள்ளந்திரி, குறிஞ்சி நகர், ஏ.என்.புரம் முகாம் அமைப்பாளர்கள் மணிபாரதி, நொண்டிசாமி, அஜித் ஆகியோரது தலைமையில் 30 பேர், பொய்கைக்கரைப்பட்டி நந்தகோபால் தலைமையில் 10பேர், வெள்ளியங்குன்றம் நொண்டிசாமி தலைமையில் 10பேர், பில்லுச்சேரி தினேஷ் தலைமையில் 10பேர், மாத்தூர், மாத்தூர் காலனி காசி, சின்னையா ஆகியோரது தலைமையில் 20பேர், குருத்தூர் மாரி காளி தலைமையில் 25பேர், மாங்குளம் மீனாட்சி புரம் சபரிநாதன், கண்ணன், செல்வம் ஆகியோரது தலைமையில் 25பேர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ராவணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுத்து வந்தனர். மேற்கு ஒன்றியம் சார்பில் 22 வாகனங்களில் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றியம் சார்பில் 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று மாலை நடக்கிறது.
    • தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை
    • அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு கேபி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. கல்வி நிறுவனங்கள் பஸ்நிறுத்தம் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவிகள், பெண்கள் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் 2 மனுக்கள் தனித்தனியாக அளிக்கப்பட்டன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவத்திலும், துணை ராணுவத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டுக்காக சேவையாற்றி வருகிறோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்கள் நாட்டுக்காக வீர மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், வருங்காலத்தில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஜவான்ஸ் அமைப்பிற்கு நிலம் கொடுக்க வேண்டும். மேலும் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×